கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கன்னி லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் அடக்கமான சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். எல்லாவற்றிலும் திறமைசாலியாக விளங்குவார்கள். படிப்பில் கெட்டிகாரர்கள். பேச்சாலும், செயலாலும் மற்றவரை புண்படுத்த மாட்டார்கள். எடுக்கும் காரியங்களில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு அதை முடித்து காட்டுவார்கள். எதையும் முன் நின்று முடிக்கும் ஆற்றலும், விவேகமும் இயற்கையாகவே இவர்களுக்கு அமைய பெற்று இருக்கும். சூழ்நிலைக்கு தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்டவர்கள்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

 

 

கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள். ஆதனால் எளிதில் பொன், பொருள் சேர்கை பெற்று பணக்காரர் ஆகிவிடுவார்கள். நல்ல வழியில் மற்றவர்களை நடக்க கற்றுக் கொடுக்கக் கூடியவர்கள். இவர்களின் நட்பு வட்டம் அதிகம். நிறைய சிந்திக்கும் ஆற்றலும், அதை செயல்படுத்துவதில் நிறைய சாதூர்யமும் நிறைந்தவர்கள். பெரும்பாலும் இவர்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். இவர்கள் ஜாதகத்தில் புதன்,சுக்கிரன் நன்றாக இருந்தால் இவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். நயமாக பேசி வசியப்படுத்தும் பேச்சாற்றல் கொண்டவர்கள்.

இவர்களில் பெரும்பாலோனோர் சிவந்த மேனியை கொண்டிருப்பர். இவர்கள் சுறுசுறுப்பான எண்ணம் கொண்டவர்கள். ஒரு இலட்சியத்தை வகுத்துக்கொண்டு அதன்படி வாழ்வார்கள். ஒரு விஷயத்தில் பலன், அல்லது ஆதாயம் இல்லாமல் இறங்க மாட்டார்கள். ஒரு விஷயத்தை பற்றி தெரியவில்லை என்றாலும் அதை கற்று கொள்ளும் ஆர்வம் அதிகம் இருக்கும். இவர்களுக்கு வியாபாரத்திற்கு தேவையான நல்ல தகுதியும் திறமையும் இருக்கும். புது புது யுக்திகளை தாங்கள் செய்யும் வியாபாரத்தில் புகுத்தி கொண்டே இருப்பார்கள். நல்ல பண்பும், பிறர் மெச்சும்படியான நல்ல நடத்தையும் கொண்டவர்களாக விளங்குவார்கள்.

இவர்களிடம் பேச்சை விட செயலில் அதிக வேகம் இருக்கும். யாரையும் சார்ந்து வாழ்வது இவர்களுக்கு பிடிக்காது. கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் ஆர்வம் அதிகம் இருக்கும். தெய்வீக பணிகளில் இவர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். அயல் நாடுகளுக்கு செல்லும் யோகம் இவர்களில் பல பேருக்கு உண்டு. இசை, எழுத்து, ஆடல், பாடல் என்று ஏதேனும் ஒரு கலையில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். யாரேனும் தவறு செய்தால் அதை முகத்திற்கு நேராக சொல்லி விடுவார்கள். யாராவது உங்களுக்கு உதவி செய்தால் அதை காலத்திற்கும் மறக்க மாட்டார்கள்.

இவர்களின் மத்திய பருவத்தை விட குழந்தை பருவம் அதிக மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கை முழுக்க யோகத்துடன் வாழ்வார்கள். இவர்கள் செய்யும் செயல்களில் திறமைசாலிகள் என்று பெயர் எடுப்பார்கள். வாழ்வின் மத்திய பகுதியில் இவர்கள் வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்களை காண்பார்கள். இதனால் நல்ல பேரும், புகழும் பெற்று விளங்குவார்கள். இவர்கள் மனதில் இருக்கும் விஷயங்களை பிறர் அறிந்து கொள்வது கடினம். நெருக்கமானவர்களிடம் மட்டுமே சகஜமாக பேசி பழகுவார்கள்.

இவர்களின் வரக்கூடிய வாழ்க்கை துணை மேற்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து அமையும். இவர்களின் வாழ்க்கைத் துணையானவர் தியாக மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் கணவனாக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவனிடமும் மிகுந்த ஆசையும், ஈடுபாடும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடியவராக இருப்பார். பொருளாதாரம் சம்பந்தமான விஷயத்தில் இவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் நல்ல யோகமான காலம் அமையும். திருமண தடை நீங்க முருகனை வழிபாடு செய்து வருவது நன்மையை தரும்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நகங்களை பராமரிப்பது எப்படி

கை மற்றும் கால் நகங்களை அழகாக வைத்திருக்க சில டிப்ஸ்

அழகான நகங்களை பெற    நம் உடலின் மற்ற பாகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல நகங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நகங்களை அழகாக வைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும். நகங்களை பராமரிப்பதில் ஆண்களை காட்டிலும்...
கன்னி ராசி குணங்கள்

கன்னி ராசி பொது பலன்கள் – கன்னி ராசி குணங்கள்

கன்னி ராசி குணங்கள் கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தின் 2,3,4 ஆம் பாதம், ஹஸ்தம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் மற்றும் சித்திரை நட்சத்திரத்தின் 1, 2...
கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கடக லக்னத்தின் அதிபதி சந்திரன் ஆவார். கடக லக்னத்தில் பிறந்தவர்கள் உடலாலும் மனதாலும் தூய்மையான உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் அழகான மற்றும் கவர்ச்சியான உடல் அமைப்பை கொண்டவர்கள். வாக்கு...
பஞ்சமி திதி பலன்கள்

பஞ்சமி திதி பலன்கள், பஞ்சமி திதியில் செய்ய வேண்டியவை

பஞ்சமி திதி பஞ்ச என்பது ஒரு வடமொழி சொல்லாகும். பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமியை சுக்கில...
ஆண் கால் பகுதி மச்சத்தின் பலன்கள்

ஆண் கால் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் கால்கள் மச்ச பலன்கள் உடலில் ஒவ்வொரு பாகத்தில் தோன்றும் மச்சங்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை மச்ச சாஸ்திரம் என்னும் நூல் விளக்குகிறது. அந்த வகையில் ஆணின் கால் பகுதியில் எந்த இடத்தில்...
அக்கரகாரம் மூலிகை மருத்துவ பயன்கள்

அக்கரகாரம் மூலிகை பயன்கள்

அக்கரகாரம் அக்கரகாரம் என்னும் இந்த மூலிகைச் செடி கருமண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது. இந்த மூலிகை இந்திய மருத்தவத்தில் அதிக மதிப்பு கொண்டது. இதன் இலைகள் 15 செ.மீ. நீளமாகவும், முதலில் இளம்பச்சை நிறத்திலும்,...
திருமணத்தில் அருந்ததி நட்சத்திரம்

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன் தெரியுமா?

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது பெரும்பாலான இந்து திருமணங்கள் பல்வேறு விதமான சடங்கு, சம்பிரதாயங்களை பின்பற்றி நடத்தபடுகிறது. ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயத்துக்கும் ஒவ்வொரு காரண காரியம் உண்டு. நம்மில் பலருக்கு ஏன், எதற்கு இந்த சடங்கு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.