திதிகள் என்றால் என்ன? அவை யாவை?

பஞ்சாங்கமும், திதிகளும்

நமது தினசரி வாழ்க்கையில், ஒரு நாளை துவங்கும் போதே அந்த நாள் இனிய நாளாக அமைய வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் எல்லா நாட்களும் அவ்வாறு இனிய நாளாக அமைவதில்லை. ஒவ்வொரு நாளின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் தினமும் அன்றைய தினத்தின் பஞ்ச அங்கங்களைத் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். நவக்கிரகங்களின் ஆதார செயல்களுக்கு அன்றாட திதி, வார, நட்சத்திர, யோக, காரணங்களே அடிப்படை ஆதாரமாக உள்ளன.

இந்த ஐந்து அங்கங்களையும் அடிப்படையாகக் கொண்டதே ‘பஞ்சாங்கம்’ ஆகும். ஆனால் எல்லோருக்கும் பஞ்சாங்கம் பார்க்க தெரியுமா என்றால் தெரியாது. இவை நம் தினசரி காலண்டரில் அன்றைய திதி, நட்சத்திரம் என்ன என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் அன்றைய திதிகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு நாளின் பலன்களும் குறிப்பிடபடுகிறது.

திதிகள் என்றால் என்ன

திதி என்றால் என்ன?

திதி என்பது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் ஆகும். அமாவாசை தினத்தன்று சூரியனும், சந்திரனும் சேர்ந்து இருக்கும். அதற்குபின் வரும் நாட்களில் சந்திரன் தினமும் சூரியனில் இருந்து விலகிச் சென்று கொண்டே இருக்கும். இந்த விலகலானது தினமும் சுமார் 12 டிகிரி வரை இருக்கும். பௌர்ணமி தினத்தன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் சந்திரன் இருக்கும். அதாவது அப்போது சூரியனில் இருந்து 7-வது ராசியில் சந்திரன் இருக்கும். சூரியன் இருந்த இடத்தையும் சேர்த்து எண்ணினால் சந்திரன் நின்ற இடம் 7-வது இடமாக இருக்கும்.

அமாவாசையில் இருந்து பௌர்ணமி முடிய 15 நாட்கள் ஆகும். அதேபோல் பௌர்ணமியில் இருந்து திரும்ப அமாவாசைக்கு வர 15 நாட்கள் ஆகும். ஆக மொத்தம் 30 நாட்கள். சந்திரன் சூரியனை ஒரு சுற்றுச் சுற்றி விட்டு 30 நாட்களில் திரும்பவும் சூரியனுடன் வந்து சேர்ந்து விடும். அந்த பதினைந்து நாட்களும் ஒவ்வொரு திதியாக குறிப்பிடபடுகிறது. அவை முறையே,

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பௌர்ணமி, அமாவாசை

ஒவ்வொரு திதியை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ள அந்த குறிப்பிட்ட திதியை க்ளிக் செய்யவும்.

வளர்பிறை, தேய்பிறை திதிகள்

சந்திரன் அமாவாசையில் இருந்து ஒவ்வொரு நாளாக சிறிது, சிறிதாக வளர்வதால் இவை எல்லாம் வளர்பிறைத் திதிகள் என அழைக்கபடுகின்றன. இந்தப் 15 நாட்களை ‘சுக்கில பக்ஷ்க்ஷம்’ என்பார்கள்.

திதிகள் மொத்தம் எத்தனை

பௌர்ணமி திதியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாகத் தேய்ந்து கொண்டே வரும், அதன்படி,  முதல் நாள் பெயர் பிரதமையில் இருந்து கடைசி நாளான அம்மாவாசை முடிய வரும், இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை தேய்பிறைத் திதிகள் எனக் கூறுவார்கள். இந்த 15 நாட்களை ‘கிருஷ்ணபக்ஷ்க்ஷம்’ என்பார்கள். இவை எல்லாம் நாள், நேரம் பார்க்க உதவும்.

வளர்பிறை காலங்களில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும். தேய் பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதாக இருந்தால் அதை பஞ்சமி திதிக்குள் செய்வது சிறந்ததாகும். ஏனெனில் தேய்பிறை காலமாக இருந்தாலும் பஞ்சமி திதி வரையில் வளர்பிறை காலத்தில் என்ன பலன் கிடைக்குமே அதே போன்ற பலன் கிடைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

திதி பலன்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

pregnancy food

குழந்தை ஆரோக்கியமாக பிறக்க கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

குழந்தை ஆரோக்கியமாக பிறக்க கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் கர்ப்ப காலத்தில், வயிற்றில் உள்ள குழந்தையின் மூளை மற்றும் உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்க, பெண்கள் தங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் மிகவும் எச்சரிக்கையாக...
கனவு பலன்கள் வீடு

கட்டிடங்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

கட்டிடங்கள் கனவில் வந்தால் கனவுகள் காணாதவர் இவ்வுலகில் எவரும் இல்லை. அதற்கேற்றார் போல நாம் நம் தூக்கத்தில் எண்ணற்ற கனவுகளை காண்கிறோம். ஒரு சில சமயங்களில் அதிசயக்க வைக்கும் கனவுகளும் உண்டு. ஆனால் அந்த...
வேதை பொருத்தம் என்றால் என்ன

வேதைப் பொருத்தம் என்றால் என்ன? எப்படி பார்ப்பது

வேதைப் பொருத்தம் என்றால் என்ன? வேதை என்கிற சொல்லுக்கு ஒன்றுக்கொன்று தாக்குதல் என்று அர்த்தம். வேதைப் பொருத்தம் என்பது வேதனையில்லாத வாழ்க்கையை அமைக்கக்கூடிய பொருத்தம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திரம் மட்டும் வேதையாக...

திருமண தடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

திருமண தடை  நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இரு மணங்கள் இணையும் வைபவமே திருமணமாகும். அந்த திருமணம் சரியான காலத்திலும் சரியான வயதிலும் நடைபெறுவது முக்கியமானதாகும்.  சிலரது ஜாதகத்தில் இருக்கும்...
உதட்டை சிவப்பாக்க இயற்கை முறைகள்

இயற்கையான முறையில் உங்கள் உதடுகள் சிவப்பாக மாற

லிப்ஸ்டிக் போடாமல் உங்கள் உதடுகள் சிவப்பாக வேண்டுமா? பெண்கள் பயன்படுத்தும் பல அழகுசாதன பொருட்களில் லிப்ஸ்டிக் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் உதடுகளும் அழகாக இருந்தால் தான் நமது தோற்றம்...
யோகங்களின் வகைகள்

ஜாதக யோகங்கள் எவை? யோகங்கள் பகுதி # 3

ஜாதக யோகங்கள் யோகங்கள் என்பது நமது ஜாதகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைந்து இருப்பதால் ஏற்படும் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். இந்த கிரக இணைப்புகள் அமைந்துள்ள இடத்தை பொருத்து நற்பலன்...
கனவு பலன்கள் நாய்

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால் என்ன பலன்

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால் பூனை கனவில் வந்தால் 1. வீட்டு அடுபாங்கரையில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு வந்தால் அது நல்ல சகுனம் அல்ல என்று அர்த்தம். 2. பூனை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.