திதிகள் என்றால் என்ன? அவை யாவை?

பஞ்சாங்கமும், திதிகளும்

நமது தினசரி வாழ்க்கையில், ஒரு நாளை துவங்கும் போதே அந்த நாள் இனிய நாளாக அமைய வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் எல்லா நாட்களும் அவ்வாறு இனிய நாளாக அமைவதில்லை. ஒவ்வொரு நாளின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் தினமும் அன்றைய தினத்தின் பஞ்ச அங்கங்களைத் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். நவக்கிரகங்களின் ஆதார செயல்களுக்கு அன்றாட திதி, வார, நட்சத்திர, யோக, காரணங்களே அடிப்படை ஆதாரமாக உள்ளன.

இந்த ஐந்து அங்கங்களையும் அடிப்படையாகக் கொண்டதே ‘பஞ்சாங்கம்’ ஆகும். ஆனால் எல்லோருக்கும் பஞ்சாங்கம் பார்க்க தெரியுமா என்றால் தெரியாது. இவை நம் தினசரி காலண்டரில் அன்றைய திதி, நட்சத்திரம் என்ன என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் அன்றைய திதிகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு நாளின் பலன்களும் குறிப்பிடபடுகிறது.

திதிகள் என்றால் என்ன

திதி என்றால் என்ன?

திதி என்பது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் ஆகும். அமாவாசை தினத்தன்று சூரியனும், சந்திரனும் சேர்ந்து இருக்கும். அதற்குபின் வரும் நாட்களில் சந்திரன் தினமும் சூரியனில் இருந்து விலகிச் சென்று கொண்டே இருக்கும். இந்த விலகலானது தினமும் சுமார் 12 டிகிரி வரை இருக்கும். பௌர்ணமி தினத்தன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் சந்திரன் இருக்கும். அதாவது அப்போது சூரியனில் இருந்து 7-வது ராசியில் சந்திரன் இருக்கும். சூரியன் இருந்த இடத்தையும் சேர்த்து எண்ணினால் சந்திரன் நின்ற இடம் 7-வது இடமாக இருக்கும்.

அமாவாசையில் இருந்து பௌர்ணமி முடிய 15 நாட்கள் ஆகும். அதேபோல் பௌர்ணமியில் இருந்து திரும்ப அமாவாசைக்கு வர 15 நாட்கள் ஆகும். ஆக மொத்தம் 30 நாட்கள். சந்திரன் சூரியனை ஒரு சுற்றுச் சுற்றி விட்டு 30 நாட்களில் திரும்பவும் சூரியனுடன் வந்து சேர்ந்து விடும். அந்த பதினைந்து நாட்களும் ஒவ்வொரு திதியாக குறிப்பிடபடுகிறது. அவை முறையே,

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பௌர்ணமி, அமாவாசை

ஒவ்வொரு திதியை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ள அந்த குறிப்பிட்ட திதியை க்ளிக் செய்யவும்.

வளர்பிறை, தேய்பிறை திதிகள்

சந்திரன் அமாவாசையில் இருந்து ஒவ்வொரு நாளாக சிறிது, சிறிதாக வளர்வதால் இவை எல்லாம் வளர்பிறைத் திதிகள் என அழைக்கபடுகின்றன. இந்தப் 15 நாட்களை ‘சுக்கில பக்ஷ்க்ஷம்’ என்பார்கள்.

திதிகள் மொத்தம் எத்தனை

பௌர்ணமி திதியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாகத் தேய்ந்து கொண்டே வரும், அதன்படி,  முதல் நாள் பெயர் பிரதமையில் இருந்து கடைசி நாளான அம்மாவாசை முடிய வரும், இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை தேய்பிறைத் திதிகள் எனக் கூறுவார்கள். இந்த 15 நாட்களை ‘கிருஷ்ணபக்ஷ்க்ஷம்’ என்பார்கள். இவை எல்லாம் நாள், நேரம் பார்க்க உதவும்.

வளர்பிறை காலங்களில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும். தேய் பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதாக இருந்தால் அதை பஞ்சமி திதிக்குள் செய்வது சிறந்ததாகும். ஏனெனில் தேய்பிறை காலமாக இருந்தாலும் பஞ்சமி திதி வரையில் வளர்பிறை காலத்தில் என்ன பலன் கிடைக்குமே அதே போன்ற பலன் கிடைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

திதி பலன்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆடாதொடை இலையின் பயன்கள்

நுரையீரல் பிரச்சனைகளை தீர்க்கும் ஆடாதோடா இலை

ஆடாதோடா இலை மக்கள் ஆரோக்கியமாக வாழ நம் சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப...
பருப்பு கீரை பயன்கள்

பலவித மருத்துவ பயன்கள் கொண்ட பருப்பு கீரை

பருப்பு கீரை இந்த கீரையை பருப்புடன் சமைத்து சாப்பிடும் பழக்கம் பழங்காலத்தில் இருந்தே இருந்து வருவதால் இதற்குப் பருப்புக் கீரை என்ற பெயர் ஏற்பட்டது. பருப்பு கீரை ‘பெண்களின் கீரை’ என்றும் அழைக்கபடுகிறது. பருப்பு...
சஷ்டி திதி பலன்கள்

சஷ்டி திதி பலன்கள், சஷ்டி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

சஷ்டி திதி சஷ்டி என்றால் ஆறு. இது முருகப் பெருமானுக்குரிய திதியாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஆறாவது நாள் சஷ்டி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சஷ்டியை சுக்கில பட்ச சஷ்டி...
துவாதசி திதி

துவாதசி திதி பலன்கள், துவாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

துவாதசி திதி துவாதச என்பதற்கு பன்னிரண்டு என்று அர்த்தம். துவாதசி என்பது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 12 வது நாள் துவாதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும்...
how to make somas

சுவையான மொறு மொறு சோமாஸ் செய்வது எப்படி ?

சோமாஸ் தேவையான பொருட்கள் மைதா - 1 கப் உப்பு - சிறிதளவு உருக்கிய டால்டா (அ) நெய் - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு பூரணம் செய்ய ரவை...
பந்தக்கால் நடுதல்

திருமணத்தில் பந்தக்கால் அல்லது முகூர்த்தகால் நடுவது ஏன்?

பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவது ஏன்? பெரும்பாலான இந்து திருமணங்களில் திருமணதிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவார்கள். எதற்கு இந்த பந்தக்கால் நடுகிறார்கள் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. நம்...
காகம் கரையும் பலன்கள்

காகம் சொல்லும் சகுனங்கள்

காகம் உணர்த்தும் சகுனம் காகம் இந்தியாவில் அதிக அளவில் காணப்படும் பறவை இனம் ஆகும். இந்து சமயத்தில் காகம் அதிக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. எம லோகத்தின் வாயிலில் காகம் வீற்று இருப்பதாக ஒரு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.