துவிதியை திதி பலன்கள், துவிதியை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

துவிதியை திதி

‘துவி’ என்றால் இரண்டு, இது ஒரு வடமொழி சொல்லாகும். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து இரண்டாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் துவிதியை சுக்கில பட்ச துவிதியை என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் துவிதியை கிருஷ்ண பட்ச துவிதியை என்றும் அழைக்கபடுகிறது. தேய்பிறையில் வரும் துவிதியை இரு கண்ணுள்ள திதி எனவும் அழைப்பார்கள்.

துவிதியை திதி பலன்கள்

துவிதியை திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

துவிதியை திதியில் பிறந்தவர்கள் எதிலும் நேர்மையுடன் நடக்க கூடியவர்கள். கீர்த்தி உடையவர்கள், பொய் சொல்லாதவர்கள், உண்மையை பேச கூடியவர்கள், பொன், பொருள் சேர்ப்பவர்கள், சொன்ன சொல்லை தவறாதவர்கள், தன் முயற்சிகளால் முன்னேற கூடியவர்கள், பொருள் தேடும் திறமை உடையவர்கள், புதிய பொருட்களை பயன்படுத்தும் விருப்பம் உள்ளவர்கள்.

துவிதியை திதியில் என்னென்ன செய்யலாம்

இது படைப்பு கடவுளான பிரம்மாவுக்கு உரிய நாளாகும். கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் போன்றவை இந்த திதியில் செய்ய நன்மை உண்டாகும். மேலும் அனைத்து விதமான சுபகாரியங்களையும் இந்நாளில் செய்யலாம்.

மேலும் அரசு சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் செய்யலாம். திருமணம் செய்யலாம். புதிய ஆடை, நகைகள், பொருட்கள் போன்றவற்றை வாங்கலாம். கடவுளுக்கு விரதம் இருக்கலாம். கோவில்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யலாம். துவிதியை திதியில் புல்லால் செய்யக்கூடிய வேலைகள், வாகனங்கள் வாங்கலாம்.

துவிதியை திதியில் என்ன செய்யகூடாது

புதன்கிழமை வரும் துவிதியை திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அன்று செய்யப்படும் நல்ல காரியங்கள் முழுமையான பலனை தராது. எனவே புதன்கிழமை துவிதியை நாளில் கூடுமானவரை சுபகாரியம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

துவிதியை திதிக்கான திதி சூன்ய ராசிகள்

துவிதியை திதிக்கான திதி சூன்ய ராசிகள் தனுசு மற்றும் மீனம் ஆகும்.

துவிதியை திதிக்கான பரிகாரம்

கடவுளுக்கு சர்க்கரை படைத்து வழிபட வேண்டும். தனுசு, மற்றும் மீனம் ராசியில் பிறந்தவர்கள் இந்த திதியில் கவனமாக செயல்பட வேண்டும். இந்த திதியில் அம்பிகையை வழிபட்டு வருவது நல்லது.

துவிதியை திதியின் தெய்வங்கள்

துவிதியை திதியின் வளர்பிறை தெய்வம் : பிரம்மா

துவிதியை திதியின் தேய்பிறை தெய்வம் : கிருஷ்ணர், மற்றும் வாயு பகவான்.

திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சதுர்த்தசி திதி

சதுர்த்தசி திதி பலன்கள், சதுர்த்தசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

சதுர்த்தசி திதி சதுர்த்தச என்பதற்கு பதினான்கு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 14 வது நாள் சதுர்த்தசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தசியை...
ஆண் உடல் மச்ச பலன்கள்

ஆண் உடல் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் உடல் மச்ச பலன்கள் எல்லோருக்கும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் மச்சங்கள் இருக்கும். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். அந்த வகையில் ஆணின் உடலில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மச்சங்களின்...
நீலக்கல்

எந்த ராசிக்கு எந்த ராசிக்கல் அணிந்தால் அதிஷ்டம் உண்டாகும்

இராசிக்கல் அணிவதால் உண்டாகும் பலன்கள் ஒவ்வொரு ராசியினருக்கும் - ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான  ராசிக்கல்  நாம் அணிய வேண்டும். நம் கைவிரல்களில்  அணியும் ராசிக்கல் மோதிரமானது, நமக்கு கூடுதல் பலம் தந்து  நமக்கு...
கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி

சத்தான கேழ்வரகு முறுக்கு செய்முறை

கேழ்வரகு முறுக்கு தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு – 500 கிராம் அரிசி மாவு - 50 கிராம் உடைத்த கடலை மாவு – 50 கிராம் சீரகம் – 1 ஸ்பூன் வெண்ணை...
அமாவாசையில் ஏன் கோலம் போடக்கூடாது

அமாவாசை அன்று வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது?

அமாவாசையில்  வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது? தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் கோலம் போடுவதை  நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். தினந்தோறும் கோலமிடுவதால் வீட்டில் தெய்வகடாட்சம்  நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். நமது...
ஐப்பசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்கள். தேசபக்தியும் அவர்களிடம் நிறைந்து காணப்படும். ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் அறிவில் சிறந்தவர்கள் மேலும் மிகுந்த பொறுமைசாலிகள்....
ஆண் கால் பகுதி மச்சத்தின் பலன்கள்

ஆண் கால் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் கால்கள் மச்ச பலன்கள் உடலில் ஒவ்வொரு பாகத்தில் தோன்றும் மச்சங்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை மச்ச சாஸ்திரம் என்னும் நூல் விளக்குகிறது. அந்த வகையில் ஆணின் கால் பகுதியில் எந்த இடத்தில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.