துவிதியை திதி பலன்கள், துவிதியை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

துவிதியை திதி

‘துவி’ என்றால் இரண்டு, இது ஒரு வடமொழி சொல்லாகும். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து இரண்டாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் துவிதியை சுக்கில பட்ச துவிதியை என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் துவிதியை கிருஷ்ண பட்ச துவிதியை என்றும் அழைக்கபடுகிறது. தேய்பிறையில் வரும் துவிதியை இரு கண்ணுள்ள திதி எனவும் அழைப்பார்கள்.

துவிதியை திதி பலன்கள்

துவிதியை திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

துவிதியை திதியில் பிறந்தவர்கள் எதிலும் நேர்மையுடன் நடக்க கூடியவர்கள். கீர்த்தி உடையவர்கள், பொய் சொல்லாதவர்கள், உண்மையை பேச கூடியவர்கள், பொன், பொருள் சேர்ப்பவர்கள், சொன்ன சொல்லை தவறாதவர்கள், தன் முயற்சிகளால் முன்னேற கூடியவர்கள், பொருள் தேடும் திறமை உடையவர்கள், புதிய பொருட்களை பயன்படுத்தும் விருப்பம் உள்ளவர்கள்.

துவிதியை திதியில் என்னென்ன செய்யலாம்

இது படைப்பு கடவுளான பிரம்மாவுக்கு உரிய நாளாகும். கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் போன்றவை இந்த திதியில் செய்ய நன்மை உண்டாகும். மேலும் அனைத்து விதமான சுபகாரியங்களையும் இந்நாளில் செய்யலாம்.

மேலும் அரசு சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் செய்யலாம். திருமணம் செய்யலாம். புதிய ஆடை, நகைகள், பொருட்கள் போன்றவற்றை வாங்கலாம். கடவுளுக்கு விரதம் இருக்கலாம். கோவில்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யலாம். துவிதியை திதியில் புல்லால் செய்யக்கூடிய வேலைகள், வாகனங்கள் வாங்கலாம்.

துவிதியை திதியில் என்ன செய்யகூடாது

புதன்கிழமை வரும் துவிதியை திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அன்று செய்யப்படும் நல்ல காரியங்கள் முழுமையான பலனை தராது. எனவே புதன்கிழமை துவிதியை நாளில் கூடுமானவரை சுபகாரியம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

துவிதியை திதிக்கான திதி சூன்ய ராசிகள்

துவிதியை திதிக்கான திதி சூன்ய ராசிகள் தனுசு மற்றும் மீனம் ஆகும்.

துவிதியை திதிக்கான பரிகாரம்

கடவுளுக்கு சர்க்கரை படைத்து வழிபட வேண்டும். தனுசு, மற்றும் மீனம் ராசியில் பிறந்தவர்கள் இந்த திதியில் கவனமாக செயல்பட வேண்டும். இந்த திதியில் அம்பிகையை வழிபட்டு வருவது நல்லது.

துவிதியை திதியின் தெய்வங்கள்

துவிதியை திதியின் வளர்பிறை தெய்வம் : பிரம்மா

துவிதியை திதியின் தேய்பிறை தெய்வம் : கிருஷ்ணர், மற்றும் வாயு பகவான்.

திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பூக்கள் கனவு பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் பலருக்கும் பலவிதமான வித்தியாசமான கனவுகள் ஒவ்வொரு நாளும் வரும். அதில் ஒரு சில விசித்திரமான கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது,...
முடக்கத்தான் மருத்துவ பயன்கள்

முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள்

முடக்கத்தான் கீரை முடக்கத்தான் ஒரு கொடி வகையைச் சேர்ந்த மருத்துவ மூலிகை கீரையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. இதன் இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிறத்தில்...
உடைந்த மண் பாண்டங்கள்

வறுமை நீங்க வீட்டில் வைத்திருக்க கூடாத சில பொருட்கள்

வீட்டில் வைத்திருக்க கூடாத பொருட்கள்? வீட்டில் என்றும் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டும், லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்று தான் நாம் அனைவருமே விரும்புவோம். அவ்வாறு நம் வீடு இருக்க நாம் நல்ல...
அஷ்டமி திதி பலன்கள்

அஷ்டமி திதி பலன்கள், அஷ்டமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

அஷ்டமி திதி அஷ்ட என்றால் எட்டு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை நாளிலிருந்து அல்லது பவுர்ணமி நாளிலிருந்து வரும் எட்டாவது நாள் அஷ்டமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் அஷ்டமியை...
பிரம்மஹத்தி தோஷம் விலக

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? பிரம்மஹத்தி தோஷ பரிகாரங்கள்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? ஒருவரின் சுய ஜாதகத்தில் குரு மற்றும் சனி கிரகங்கள் சேர்க்கை பெற்றாலும், குருவை சனி எங்கிருந்து பார்த்தாலும், குருவின் சாரத்தில் சனியும், அதே போல சனியின் சாரத்தில் குருவும்...
ஆடாதொடை இலையின் பயன்கள்

நுரையீரல் பிரச்சனைகளை தீர்க்கும் ஆடாதோடா இலை

ஆடாதோடா இலை மக்கள் ஆரோக்கியமாக வாழ நம் சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப...
வியர்வை துர்நாற்றம் வராமல் இருக்க

வியர்வை வாடை வராமல் தவிர்க்க என்ன வழி

வியர்வை வாடையை தவிர்க்க என்ன வழி நாம் என்னதான் தினசரி இரண்டு வேளை சுத்தமாக தேய்த்து குளித்தாலும் சில மணி நேரங்களுக்கு பின் வியர்வை வாடை வீச தொடங்கும். இதனால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். வியர்வை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.