துவிதியை திதி பலன்கள், துவிதியை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

துவிதியை திதி

‘துவி’ என்றால் இரண்டு, இது ஒரு வடமொழி சொல்லாகும். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து இரண்டாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் துவிதியை சுக்கில பட்ச துவிதியை என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் துவிதியை கிருஷ்ண பட்ச துவிதியை என்றும் அழைக்கபடுகிறது. தேய்பிறையில் வரும் துவிதியை இரு கண்ணுள்ள திதி எனவும் அழைப்பார்கள்.

துவிதியை திதி பலன்கள்

துவிதியை திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

துவிதியை திதியில் பிறந்தவர்கள் எதிலும் நேர்மையுடன் நடக்க கூடியவர்கள். கீர்த்தி உடையவர்கள், பொய் சொல்லாதவர்கள், உண்மையை பேச கூடியவர்கள், பொன், பொருள் சேர்ப்பவர்கள், சொன்ன சொல்லை தவறாதவர்கள், தன் முயற்சிகளால் முன்னேற கூடியவர்கள், பொருள் தேடும் திறமை உடையவர்கள், புதிய பொருட்களை பயன்படுத்தும் விருப்பம் உள்ளவர்கள்.

துவிதியை திதியில் என்னென்ன செய்யலாம்

இது படைப்பு கடவுளான பிரம்மாவுக்கு உரிய நாளாகும். கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் போன்றவை இந்த திதியில் செய்ய நன்மை உண்டாகும். மேலும் அனைத்து விதமான சுபகாரியங்களையும் இந்நாளில் செய்யலாம்.

மேலும் அரசு சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் செய்யலாம். திருமணம் செய்யலாம். புதிய ஆடை, நகைகள், பொருட்கள் போன்றவற்றை வாங்கலாம். கடவுளுக்கு விரதம் இருக்கலாம். கோவில்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யலாம். துவிதியை திதியில் புல்லால் செய்யக்கூடிய வேலைகள், வாகனங்கள் வாங்கலாம்.

துவிதியை திதியில் என்ன செய்யகூடாது

புதன்கிழமை வரும் துவிதியை திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அன்று செய்யப்படும் நல்ல காரியங்கள் முழுமையான பலனை தராது. எனவே புதன்கிழமை துவிதியை நாளில் கூடுமானவரை சுபகாரியம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

துவிதியை திதிக்கான திதி சூன்ய ராசிகள்

துவிதியை திதிக்கான திதி சூன்ய ராசிகள் தனுசு மற்றும் மீனம் ஆகும்.

துவிதியை திதிக்கான பரிகாரம்

கடவுளுக்கு சர்க்கரை படைத்து வழிபட வேண்டும். தனுசு, மற்றும் மீனம் ராசியில் பிறந்தவர்கள் இந்த திதியில் கவனமாக செயல்பட வேண்டும். இந்த திதியில் அம்பிகையை வழிபட்டு வருவது நல்லது.

துவிதியை திதியின் தெய்வங்கள்

துவிதியை திதியின் வளர்பிறை தெய்வம் : பிரம்மா

துவிதியை திதியின் தேய்பிறை தெய்வம் : கிருஷ்ணர், மற்றும் வாயு பகவான்.

திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பிறந்த தேதி பலன்

நீங்கள் இந்த தேதியில் பிறந்தவரா, உங்கள் பிறந்த தேதி பலன்கள் இதோ

பிறந்த தேதி பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதிரியான குணநலன்கள் இருக்கும் என்பது போல், குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் குணநலன்கள் மாறுபடும். அதன்படி அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும்...
ஆவணியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சிம்மராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஆவணி மாதமாகும். இது தமிழ் மாதங்களில் ஐந்தாவது மாதம் ஆகும். ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும், வேங்கை மாதம் என்றும் சித்தர்கள்...
பஞ்சமி திதி பலன்கள்

பஞ்சமி திதி பலன்கள், பஞ்சமி திதியில் செய்ய வேண்டியவை

பஞ்சமி திதி பஞ்ச என்பது ஒரு வடமொழி சொல்லாகும். பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமியை சுக்கில...
கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்முறை

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ மிளகாய் தூள் - 1  தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் மிளகு தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் -...
சிக்கன் வறுவல் செய்வது எப்படி

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல்

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனில் பல வகைகள் உள்ளன. அதில் நாம் இன்று...
திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்? பொன்னுருக்குதல் என்றால் என்ன?

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்? திருமணத்தின் போது ஐயர் மாப்பிள்ளை கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். அதே போல மாப்பிள்ளை, மணப்பெண் கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். எதற்காக இதை செய்கிறார்கள் என பலருக்கும்...
கனவு பலன் திருமணம்

பொதுவான கனவு பலன்கள்

பொதுவான கனவு பலன்கள் நாம் தூக்கத்தில் காணும் எல்லா கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. சிலர் நமக்கு வரும் கனவுகள் நம் நினைவுகளின் கற்பனை வடிவம் என கூறுகின்றனர். அதாவது மனிதர்களின் ஆழ்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.