துவிதியை திதி பலன்கள், துவிதியை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

துவிதியை திதி

‘துவி’ என்றால் இரண்டு, இது ஒரு வடமொழி சொல்லாகும். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து இரண்டாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் துவிதியை சுக்கில பட்ச துவிதியை என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் துவிதியை கிருஷ்ண பட்ச துவிதியை என்றும் அழைக்கபடுகிறது. தேய்பிறையில் வரும் துவிதியை இரு கண்ணுள்ள திதி எனவும் அழைப்பார்கள்.

துவிதியை திதி பலன்கள்

துவிதியை திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

துவிதியை திதியில் பிறந்தவர்கள் எதிலும் நேர்மையுடன் நடக்க கூடியவர்கள். கீர்த்தி உடையவர்கள், பொய் சொல்லாதவர்கள், உண்மையை பேச கூடியவர்கள், பொன், பொருள் சேர்ப்பவர்கள், சொன்ன சொல்லை தவறாதவர்கள், தன் முயற்சிகளால் முன்னேற கூடியவர்கள், பொருள் தேடும் திறமை உடையவர்கள், புதிய பொருட்களை பயன்படுத்தும் விருப்பம் உள்ளவர்கள்.

துவிதியை திதியில் என்னென்ன செய்யலாம்

இது படைப்பு கடவுளான பிரம்மாவுக்கு உரிய நாளாகும். கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் போன்றவை இந்த திதியில் செய்ய நன்மை உண்டாகும். மேலும் அனைத்து விதமான சுபகாரியங்களையும் இந்நாளில் செய்யலாம்.

மேலும் அரசு சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் செய்யலாம். திருமணம் செய்யலாம். புதிய ஆடை, நகைகள், பொருட்கள் போன்றவற்றை வாங்கலாம். கடவுளுக்கு விரதம் இருக்கலாம். கோவில்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யலாம். துவிதியை திதியில் புல்லால் செய்யக்கூடிய வேலைகள், வாகனங்கள் வாங்கலாம்.

துவிதியை திதியில் என்ன செய்யகூடாது

புதன்கிழமை வரும் துவிதியை திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அன்று செய்யப்படும் நல்ல காரியங்கள் முழுமையான பலனை தராது. எனவே புதன்கிழமை துவிதியை நாளில் கூடுமானவரை சுபகாரியம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

துவிதியை திதிக்கான திதி சூன்ய ராசிகள்

துவிதியை திதிக்கான திதி சூன்ய ராசிகள் தனுசு மற்றும் மீனம் ஆகும்.

துவிதியை திதிக்கான பரிகாரம்

கடவுளுக்கு சர்க்கரை படைத்து வழிபட வேண்டும். தனுசு, மற்றும் மீனம் ராசியில் பிறந்தவர்கள் இந்த திதியில் கவனமாக செயல்பட வேண்டும். இந்த திதியில் அம்பிகையை வழிபட்டு வருவது நல்லது.

துவிதியை திதியின் தெய்வங்கள்

துவிதியை திதியின் வளர்பிறை தெய்வம் : பிரம்மா

துவிதியை திதியின் தேய்பிறை தெய்வம் : கிருஷ்ணர், மற்றும் வாயு பகவான்.

திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி : கன்னி அஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன் அஸ்தம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஆதித்யன் அஸ்தம் நட்சத்திரத்தின் பரிகார...
மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?எவ்வாறு பார்க்க வேண்டும்

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன? திருமணம் ஆகப்போகும் மணமகன், மணமகள் இருவருக்கும் இடையே மகேந்திர பொருத்தம் இருப்பது மிகவும் முக்கியமாகும். மகேந்திர பொருத்தம் என்பது புத்திர பாக்கியத்தை நிலைக்க செய்வது, அதாவது இந்த மகேந்திர...
மூட்டு வலிக்கான தீர்வு

மூட்டு வலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்

மூட்டு வலி பெரும்பாலானோர் மூட்டு வலி பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டு வலி என்பது நமது தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக அமைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பலருக்கும் ஏற்படும் பாதிப்பாக அமைந்துள்ளது. மூட்டுகளில் வலி...
சிவராத்திரி பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மற்றும் பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் மஹா சிவராத்திரி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை மார்ச் 1 ஆம் தேதி மஹா சிவராத்திரி...
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூரம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் பூரம் நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பூரம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சிம்மம் : சூரியன் பூரம் நட்சத்திரத்தின் நட்சத்திர தேவதை : பார்வதி பூரம்...
திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்? திருமண வாழ்க்கை என்பது ஒரு மனிதனுக்கு முக்கியமான ஒன்றாகும். அதில் அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை போன்றவை இல்வாழ்க்கையில் பரஸ்பரம் கணவன், மனைவி இடையே...
சோம்பு தண்ணீர் நன்மைகள்

தினமும் சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் சித்த மருத்துவத்தில் சோம்பு ஒரு சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. சோம்பை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடித்து வந்தால் இரத்தில் இருக்கக்கூடிய அழுத்தத்தையும்,  இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.