திருமணத்தில் தாரை வார்த்தல் என்றால் என்ன?

தாரை வார்த்தல் என்றால் என்ன?

திருமணம் செய்வதில் பல சடங்குகள் இருந்தாலும் அதில் மிகவும் முக்கியமானது தாரைவார்த்தல் சடங்காகும். ‘தாரை’ என்றால் நீர் என அர்த்தம். நீருக்குத் தீட்டில்லை. நீர் மந்திரநாத ஒலியின் அதிர்வை கிரககிக்ககூடியது. இப்படி தெய்வத்தன்மை வாய்ந்த நீரை இந்த சடங்கிற்கு பயன்படுத்துகின்றனர்.

தாரை வார்த்த பின் தான் மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டும் உரிமையை பெறுகின்றான். என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கட்டி கொடுக்க சம்மதிக்கிறேன் என மணமகளின் பெற்றோர், தாரை வார்த்து கொடுக்க, மணமகனின் பெற்றோர் இனி உங்கள் மகளை எங்களது மருமகளாக ஏற்றுக் கொள்கின்றோம் என்பதற்கான உறுதியே இந்த தாரை வார்த்தல் சடங்காகும்.

தாரை வார்த்தல் என்றால் என்ன

எனவேதான், மணமகனின் தாயார் இதை கை ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க, அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை, மணமகனின் கை, மணப்பெண்ணின் கை, மணப்பெண்ணின் தந்தையின் கை, அதற்கு மேல் மணப்பெண்ணின் தாய் கை இருக்கும். இந்த வரிசையில் கைகளை வைத்து இந்த தாரை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். உரிமையை விட்டுக் கொடுப்பதற்கு அடையாளமாக செய்யப்படும் இந்த சடங்கு தாரை வார்த்தல் எனப்படும்.

திருமணத்தில் கும்பம் ஏன் வைக்கிறார்கள்?

திருமணத்தில் கும்பம் வைத்து பார்த்திருப்போம். ஏன் கும்பம் வைக்கிறார்கள்? கும்பமானது இறைவனின் திருமேனியின் அடையாளம். இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம். இறைவனது திருமேனி, கும்பத்தில் பாவிக்கப்படும் கும்ப வஸ்திரமானது உடம்பின் தோலாகவும், நூலனது நாடி நரம்புகளாகவும், குடமானது தசையாகவும், தண்ணீரானது இரத்தமாகவும், நவரத்தினங்கள் எலும்புகளாகவும், தேங்காயானது தலையாகவும், மாவிலையானது தலைமுடியாகவும், தருப்பையானது குடுமியாகவும், மந்திரமானது உயிராகவும் குறிப்பிடபடுகிறது. இறைவனே கும்ப வடிவில் சாட்சியாக இருந்து இந்த திருமணத்தை நல்ல படியாக நடத்தி தருவார் என்பது நம்பிக்கை.

திருமணத்தில் ஹோமம் ஏன் வளர்க்கிறார்கள்?

திருமணத்தில் ஹோமம் ஏன்

நம்முடைய வேதங்களில் கூறப்பட்டுள்ளபடி, அக்னி சாட்சியாக திருமணங்கள் நடைபெற வேண்டும். ஹோமம் செய்வதன் மூலம் நவகிரகங்களைத் திருப்திப்படுத்த வேண்டும். ஹோமத்தில் போடப்படும் பொருட்கள் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது. ஹோமம் செய்யும் போது எழும் புகையானது உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும். எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான் சாஸ்திரப்படி சரியாக இருக்கும் என்பது நம்பிக்கை.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கெட்ட கனவு வந்தால் என்ன செய்ய வேண்டும்

கெட்ட கனவுகள் ஏற்படாமல் தடுக்க பரிகாரம்

கெட்ட கனவுகள் மற்றும் அதற்கான பரிகாரங்கள் மனிதனின் ஆயுட்காலத்தில் பெரும்பான்மையான நேரம் தூக்கத்தில் தான் கழிகிறது. அந்த தூக்கத்தில் ஒரு சில கெட்ட கனவுகள் வந்து வந்து நம்மை பாடாய்படுத்திவிடும். அந்த கெட்ட கனவுக்கான...
வில்வ இலை பயன்கள்

வில்வம் மருத்துவ குணங்கள்

வில்வம் வில்வம் இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். சைவ சமய மரபுகளில் வில்வ மரத்திற்கு என்று தனிசிறப்பு உண்டு. இம்மரம் 15 அடி முதல் 25 அடி...
உடல் எடையை குறைக்கும் தேநீர்

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ உடல் எடை அதிகரிப்பு இன்று அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாக உருவாகியுள்ளது. உடல் எடை அதிகரிப்பால் உடல் சோர்வு, மந்த நிலை, இரத்த அழுத்த்தம், சர்க்கரை...

மார்கழியில் சுபகாரியங்கள் ஏன் செய்வது இல்லை

மார்கழியில் சுபகாரியங்கள் மார்கழி மாதம் என்றால் நமது நினைவுக்கு முதன் முதலில் வருவது ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் போடப்பட்டிருக்கும் வண்ணமயமான அழகிய கோலங்கள் தான். மார்கழி மாதத்தின் பெருமையை ஆண்டாள், "மார்கழித் திங்கள் மதிநிறைந்த...
திப்பிலி மருத்துவ குணங்கள்

திப்பிலி மருத்துவ பயன்கள்

திப்பிலி திப்பிலி ஒரு மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இது ஆங்கிலத்தில் ‘Long Pepper’ என அழைக்கபடுகிறது. இது இந்தியாவின் வெப்பமான...
கரிநாள் பரிகாரம்

கரிநாட்கள் என்றால் என்ன? கரிநாளில் சுபகாரியம் செய்வதை ஏன் தவிர்க்க வேண்டும்

கரிநாட்கள் என்றால் என்ன நமது கலெண்டர்களில் சில குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் கரிநாள் என்று குறிபிடபட்டிருக்கும். அப்படி கரிநாட்கள் என குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சூரிய கதிர் வீச்சின் தாக்கம் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் சற்று...
யோகங்களின் வகைகள்

ஜாதக யோகங்கள் எவை? யோகங்கள் பகுதி # 3

ஜாதக யோகங்கள் யோகங்கள் என்பது நமது ஜாதகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைந்து இருப்பதால் ஏற்படும் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். இந்த கிரக இணைப்புகள் அமைந்துள்ள இடத்தை பொருத்து நற்பலன்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.