மார்கழியில் சுபகாரியங்கள் ஏன் செய்வது இல்லை

மார்கழியில் சுபகாரியங்கள்

மார்கழி மாதம் என்றால் நமது நினைவுக்கு முதன் முதலில் வருவது ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் போடப்பட்டிருக்கும் வண்ணமயமான அழகிய கோலங்கள் தான். மார்கழி மாதத்தின் பெருமையை ஆண்டாள், “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!” என்ற பாடலில் விளக்குகிறார்.

ஆண்டாள் நோன்புஆண்டாள் மட்டும் அல்ல, மாணிக்கவாசகரும் கூட திருவெம்பாவையில் மார்கழியின் அருமைகளை இவ்வாறு கூறுகிறார், “போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்” என்று மார்கழி மாத நீராடலுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடுகிறார்.

சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதமே மார்கழி மாதம் ஆகும். அந்த வகையில் ஜோதிடத்தின் அடிப்படையில் கால புருஷ தத்துவத்தின்படி மார்கழி 9 ஆவது மாதம் ஆகும். மார்க்கண்டேயர் மார்கழி மாதத்தில் பிறந்தவர். அதன்படி மார்க்கண்டேய புராணத்தின் படி மரணத்தை வெல்லக் கூடிய மாதமாகவே மார்கழி மாதம் பார்க்கப்படுகிறது. சிவ புராணத்தின் அடிப்படையில் ம்ருத்யுஞ்ச ஹோமம் செய்ய சிறந்த மாதம் மார்கழி. தேவ குருவான பிரகஸ்பதியின் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால், இம்மாதம் தேவ லோகத்தில் காலைப் பொழுதாகும்.

கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர், “மாதங்களில் நான் மார்கழி என்கிறார்”. அந்த வகையில், சாஸ்திரங்களின் அடிப்படையில் மார்கழி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் வாசுதேவன் என்றும், ஒருவேளை பெண் குழந்தை பிறந்தால், வாக்தேவி என்றும் பெயர் சூட்டுவது சிறப்பு.

கடவுளின் மாதம்

மார்கழி மாதம், இறைவனுக்கான மாதம். அதனால், தான் மார்கழி மாதத்தில் திருமணங்களில் செய்யப்படுவது இல்லை வாஸ்து பூஜைக்கும் கூட இடம் இல்லை.

மார்கழி மாதமும், கன்னிப் பெண்களும்

முன்பெல்லாம் கன்னிப்பெண்கள் மார்கழி மாதத்தில் நல்ல வாழ்க்கை துணையை வேண்டி பாவை நோன்பு இருப்பார்கள். அத்தகைய நோன்பின் பலனாக தை மாதத்தில் அவர்களின் நல்வாழ்வுக்கான வழி அமையும் என்பதை மனதில் கொண்டு “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்னும் பழமொழியும் வழக்கில் வந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

மார்கழி மாத பாவை நோன்பு

ஆயர்பாடியில் கோபியர்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆற்றிற்குச் சென்று குளித்து விட்டு மண்ணால் செய்த காத்யாணி தேவியை வழிபட்டு தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர். பெண்கள் கடைப்பிடித்த விரதமாயின் இவ்விரதம் பாவை நோன்பு என்று வழங்கலாயிற்று. ஆண்டாள் பாவை நோன்பினை மேற்கொண்டே அந்த திருவரங்கனை கணவனாக அடைந்தாள். ஆண்டாள் பாவை நோன்பின்போது புறஅழகில் நாட்டம் செலுத்தாமல் இறைநாட்டத்தில் மட்டும் மனதினைச் செலுத்தி பாவை நோன்பினை மேற்கொண்டாள்.

எனவே கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்று ஆண்டாள் எழுதிய திருப்பாவையைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர். திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரத்தினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

மார்கழி மாத கோலம்

தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது. இது சூரியனின் தெற்கு இயக்கம் முடிவடையும் காலம். இந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் எழுந்து நீராடி இறைவனை வழிபடுகிறோம். கோலமிட்டு மகாலக்ஷ்மியை வீட்டிற்கு அழைக்கிறோம்.

மார்கழி மாத சிறப்புகள்அப்படியாக, இறைவனை வழிபடுவதால் நாடி, நரம்புகள் வலுவடையும். நீண்ட ஆயுள் கிடைக்கப்பெறும். இந்த மாதத்தை சிலர் சூன்ய மாதம் என்றும் சொல்கின்றனர். திருமணம் போன்ற சுப காரியங்களை கூட இந்த மாதத்தில் செய்வதில்லை. இதற்கு காரணம், இறைவனை வழிபடுவதற்காகவே பெரியோர்கள் கொடுத்த மாதம் “மார்கழி மாதம்”. இந்த மாதத்தில் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் மனம் மற்றும் உடலில் சாதகமான அதிர்வுகளைக் கொடுக்கும். இறைவனுக்காகவே ஒதுக்க வேண்டிய மார்கழி மாதத்தை திருமணம் போன்ற லௌகீக வாழ்க்கைக்கு தேவையான காரியங்களில் செலவிடுவது இறை பக்திக்கு ஏற்றது அல்ல என்பதற்காகவே மார்கழி மாதத்தை சூன்ய மாதம் என்கின்றனர். இது முற்றிலும் இறைவனுக்கான மாதம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆட்டு தல கறி குழம்பு

தலைக் கறிக்குழம்பு

தலைக் கறிக்குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுத்தலை – 1 தேங்காய் – ½ கப் சின்ன வெங்காயம் – 1 கப் தக்காளி – 2 உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள்...
பழங்கள்

கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

கருவுற்றிருக்கும் பெண்களின் உணவு முறைகள்  ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கருவுறுதலை வேகமாக்கும். ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவுகள் பெண்களின் கருமுட்டையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கருவுருதலுக்கு ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். இளந்தம்பதியர்...
யோகம் மற்றும் தோஷம்

ஜாதகத்தில் யோகங்கள் மற்றும் தோஷங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் மற்றும் தோஷங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்திருக்கும் இடங்களை பொருத்து அந்த ஜாதகர் யோகம் மற்றும் அதிர்ஷ்டம் உள்ளவராகவும், யோகமற்றவராகவும், தோஷமுள்ளவராகவும் ஆக்குகிறது. யோகங்களும், தோஷங்களும் பொதுவாக எல்லாருடைய ஜாதகத்திலும் காணப்படுகின்ற ஒன்றாகும். ஜாதகத்தில்...
ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது எப்படி

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? பத்து பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தமாக கருதப்படுவது ரஜ்ஜூ பொருத்தமாகும். கணவராக வரபோகிறவரின் ஆயுள் நிலையை அறிந்து கொள்வதற்கு ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், பெண்ணின்...
செல்வம் பெருக

கணவன் வெளியே கிளம்பும் பொழுது இதை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்

செல்வம் பெருக கணவன் வெளியே கிளம்பும் பொழுது  இதை செய்தால் போதும்  நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். மாத சம்பளம் வாங்குபவர்கள் விட தினந்தோறும்...
திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?

திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?

திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்? உலகிலேயே இந்தியாவில் உள்ள மணமான பெண்கள் மட்டும் தான் மெட்டி அணியும் கலாச்சாரத்தை காலங்காலமாக வழக்கமாக வைத்துள்ளனர். மெட்டி அணிவது வெறும் திருமணம் ஆனதற்கான அடையாளம்...
வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? வாய் துர்நாற்றதிற்க்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது ? காலை இரவு என இரண்டு வேளையும் பல் துலக்கினாலும் சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் வாயில் ஒரு வித துர்நாற்றம் ஏற்படும். நன்றாக பல்லை துலக்கினால் வாய் துர்நாற்றம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.