கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகள்

கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகள்

முருகப்பெருமானை வழிபட சிறந்த நாள் என்றால் அது கந்த சஷ்டி நாளாகும். இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். முக்கியமாக குழந்தை பாக்கியம் வேண்டி முருகனை நினைத்து விரதம் இருந்தால் அந்த கந்தனே குழந்தையாக பிறப்பார் என்பது நம்பிக்கை.

கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை அந்த வகையில் இந்த ஆண்டு 04.11.2021 தீபாவளி அன்று கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து 6 நாட்கள் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. 6 ஆம் நாள் சூரசம்ஹாரம், 7 ஆம் நாள் முருகனுக்கு அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடைபெறும்.

சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

இந்த சஷ்டி விரதம் வீட்டிலும் கோவிலுக்கு சென்றும் இருக்கலாம். முடிந்த வரை முருகன் கோயிலில் இருப்பது விசேஷமானது.

வீட்டில் விரதம் இருப்பவர்கள் காலையில் குளித்து முடித்து முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலையத்திற்கு சென்று வரலாம். வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம் கந்த சஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலைப் படிக்கலாம்.

சஷ்டி விரதம் ஒரு சிலர் ஆறு நாட்கள் விரதம் இருந்து, இந்த கந்தசஷ்டியை அனுஷ்டிப்பார்கள். ஆறு நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள், கந்தசஷ்டி கடைசி தினத்தன்று ஒரு நாள் மட்டும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடலாம்.

இந்த விரதம் இருப்பதன் மூலம் முருகனிடம் நாம் வேண்டிய வரம் கிடைக்கும். நீங்கள் அடைய நினைக்கும் அத்தனை செல்வமும் வந்து சேரும். சூரபத்மனை சம்ஹாரம் செய்து, முருகப்பெருமான் வெற்றிவாகை சூடிய தினமாக கந்தசஷ்டி அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் முருகனை வழிபட்டால், நாமும் வாழ்வில் வெற்றியைப் பெறலாம்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. அதாவது சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை நினைத்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பிள்ளைப் பேறு உண்டாகும். குழந்தைச் செல்வத்தை வழங்கும் மகத்தான விரதங்களில், அதிமுக்கியத்துவம் வாய்ந்தது ‘கந்தசஷ்டிவிரதம்’ ஆகும். கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்வதன் மூலம் பதினாறு வகையான செல்வங்களையும் பெற முடியும்.

விரத நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் பாட வேண்டும். முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல், முருகனின் திருவிளையாடல் கதைகளைப் படிப்பது நல்லது. கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கன்னி லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் அடக்கமான சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். எல்லாவற்றிலும் திறமைசாலியாக விளங்குவார்கள். படிப்பில் கெட்டிகாரர்கள்....
27 நட்சத்திரங்கள் பெயர்கள்

27 நட்சத்திரங்கள் பற்றிய விரிவான ஒரு பார்வை

27 நட்சத்திரங்கள் ஒரு பார்வை ஜோதிடத்தில் மிக முக்கியமானது நட்சத்திரங்கள் ஆகும். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒருவருடைய பிறந்த ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது. ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ...
சாலை விபத்து ஏற்பட்டால்

சாலை விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

சாலை விபத்து ஏற்பட்டால் முதலுதவி சாலை விபத்து எதிர்பாரதவிதமாக ஏற்படுவது. மற்ற வாகனங்களை காட்டிலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தான் அதிகம் விபத்தில் சிக்குகின்றனர். விபத்து ஏற்பட்டவுடன் என்ன செய்வது என்று பலருக்கும்...
சாக்லெட் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

சாக்லெட் உடலுக்கு நல்லதா ? கெட்டதா ?

சாக்லெட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா ? குட்டீஸ் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே சாக்லெட் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். கடைக்கு அழைத்து சென்றால், அவர்களது கை சாக்லெட்டை பார்த்து...
தரை பசலை கீரை நன்மைகள்

தரை பசலை கீரையின் மகத்தான மருத்துவ பயன்கள்.

தரை பசலை என்கிற சிறு பசலை தரையில் படரும் கீரை வகைகளுள் பசலை கீரை முக்கியமான ஒன்றாகும். இதற்கு சிறு பசலை, தரை பசலை என்ற வேறு பெயர்களும் உண்டு. உடலின் நோய் எதிர்ப்பு...

கீழாநெல்லி மருத்துவ குணங்கள்

கீழாநெல்லி கீழாநெல்லி என்பது ஒரு மருத்துவ குணமுடைய மூலிகை செடியாகும். இந்த செடி முழுவதும் மருத்துவப் பயன்பாடு கொண்டதாகும். இது வெப்பமண்டல பகுதிகளில் வளரும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்தது. கீழாநெல்லி செடி சுமார்...
கரிசலாங்கன்னி கீரை

கரிசலாங்கண்ணி மருத்துவ குணங்கள்

கரிசலாங்கண்ணி கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை என்பது ஒரு மருத்துவ மூலிகைச் மற்றும் கீரை செடியாகும். கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உள்ளன. அவை மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி ஆகும். மஞ்சள் நிற பூக்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.