கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகள்

கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகள்

முருகப்பெருமானை வழிபட சிறந்த நாள் என்றால் அது கந்த சஷ்டி நாளாகும். இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். முக்கியமாக குழந்தை பாக்கியம் வேண்டி முருகனை நினைத்து விரதம் இருந்தால் அந்த கந்தனே குழந்தையாக பிறப்பார் என்பது நம்பிக்கை.

கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை அந்த வகையில் இந்த ஆண்டு 04.11.2021 தீபாவளி அன்று கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து 6 நாட்கள் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. 6 ஆம் நாள் சூரசம்ஹாரம், 7 ஆம் நாள் முருகனுக்கு அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடைபெறும்.

சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

இந்த சஷ்டி விரதம் வீட்டிலும் கோவிலுக்கு சென்றும் இருக்கலாம். முடிந்த வரை முருகன் கோயிலில் இருப்பது விசேஷமானது.

வீட்டில் விரதம் இருப்பவர்கள் காலையில் குளித்து முடித்து முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலையத்திற்கு சென்று வரலாம். வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம் கந்த சஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலைப் படிக்கலாம்.

சஷ்டி விரதம் ஒரு சிலர் ஆறு நாட்கள் விரதம் இருந்து, இந்த கந்தசஷ்டியை அனுஷ்டிப்பார்கள். ஆறு நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள், கந்தசஷ்டி கடைசி தினத்தன்று ஒரு நாள் மட்டும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடலாம்.

இந்த விரதம் இருப்பதன் மூலம் முருகனிடம் நாம் வேண்டிய வரம் கிடைக்கும். நீங்கள் அடைய நினைக்கும் அத்தனை செல்வமும் வந்து சேரும். சூரபத்மனை சம்ஹாரம் செய்து, முருகப்பெருமான் வெற்றிவாகை சூடிய தினமாக கந்தசஷ்டி அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் முருகனை வழிபட்டால், நாமும் வாழ்வில் வெற்றியைப் பெறலாம்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. அதாவது சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை நினைத்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பிள்ளைப் பேறு உண்டாகும். குழந்தைச் செல்வத்தை வழங்கும் மகத்தான விரதங்களில், அதிமுக்கியத்துவம் வாய்ந்தது ‘கந்தசஷ்டிவிரதம்’ ஆகும். கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்வதன் மூலம் பதினாறு வகையான செல்வங்களையும் பெற முடியும்.

விரத நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் பாட வேண்டும். முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல், முருகனின் திருவிளையாடல் கதைகளைப் படிப்பது நல்லது. கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சில்லி சிக்கன் வீட்டில் செய்வது எப்படி

சில்லி சிக்கன் வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி

சில்லி சிக்கன் அசைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனை வித விதமாக சாப்பிட அதிக ஆர்வம் காட்டுவார்கள். தற்போதைய நவீன உலகில் வித விதமான சிக்கன்...
வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? வாய் துர்நாற்றதிற்க்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது ? காலை இரவு என இரண்டு வேளையும் பல் துலக்கினாலும் சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் வாயில் ஒரு வித துர்நாற்றம் ஏற்படும். நன்றாக பல்லை துலக்கினால் வாய் துர்நாற்றம்...
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூராடம் நட்சத்திரத்தின் இராசி : தனுசு பூராடம் நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பூராடம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு பூராடம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : வருணன் பூராடம் நட்சத்திரத்தின் பரிகார...
நீலக்கல்

எந்த ராசிக்கு எந்த ராசிக்கல் அணிந்தால் அதிஷ்டம் உண்டாகும்

இராசிக்கல் அணிவதால் உண்டாகும் பலன்கள் ஒவ்வொரு ராசியினருக்கும் - ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான  ராசிக்கல்  நாம் அணிய வேண்டும். நம் கைவிரல்களில்  அணியும் ராசிக்கல் மோதிரமானது, நமக்கு கூடுதல் பலம் தந்து  நமக்கு...
how to reduce belly fat

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சில உணவுகள்

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சில உணவுகள் உடலை ஆரோக்கியமாகவும் உடல் எடையை சரியான முறையில் வைத்திருக்கவும் உணவு முறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் எந்த வகையான உணவுகளை...

சதாவரி என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கு-ன் மருத்துவ பயன்கள்

சதாவரி என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கு சதாவரி என்பது இந்தியா, இலங்கை, இமயமலை ஆகிய இடங்களில் காணப்படும் அஸ்பராகஸ் இனத் தாவரம் ஆகும். இது பல வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதை வடமொழியில் சதாவரி...
சாலை விபத்து ஏற்பட்டால்

சாலை விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

சாலை விபத்து ஏற்பட்டால் முதலுதவி சாலை விபத்து எதிர்பாரதவிதமாக ஏற்படுவது. மற்ற வாகனங்களை காட்டிலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தான் அதிகம் விபத்தில் சிக்குகின்றனர். விபத்து ஏற்பட்டவுடன் என்ன செய்வது என்று பலருக்கும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.