பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் தெரியுமா

குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன்

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஒரு உண்மை மறைந்திருக்கும். அப்படிப்பட்ட பழக்க வழக்கங்களுள்  ஒன்று பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது அல்லது பிறந்த முடி எடுப்பது. ஒரு சில குடும்பங்களில் குழந்தை பிறந்த சில மாதங்களிலும், இன்னும் ஒரு குடும்பங்களில் ஒரு வருடத்திற்குள்ளும் குழந்தைகளுக்கு மொட்டை போடுவார்கள். எதற்கு இந்த பழக்கத்தை மேற்கொள்கிறார்கள் என பின்வருமாறு பார்க்கலாம்.

மொட்டை போடுவது ஏன்

ஏன் மொட்டை போடுகிறார்கள்

பிறந்த குழந்தைகளுக்கு மொட்டை போடுவதற்கு முக்கிய காரணம் குழந்தை தாயின் கருவறையில் பத்துமாதம் இருக்கும் என்பது யாவரும் அறிந்ததே. தாயின் கருவறையில் இருக்கும்போது ரத்தம், சிறுநீர் போன்ற சூழ்நிலையில் இருக்கும். குழந்தை பிறக்கும்போது இந்த கழிவுகள் வெளியே வந்துவிட்டாலும், கண்ணுக்கு தெரியாத சில கழிவுகள் குழந்தையின் தலையில் சேரும்.

உடலில் சேரும் இந்த கழிவுகள் தலையில் உள்ள மயிர்கால்கள் வழியாகத்தான் வெளியேற முடியும். இந்த கழிவுகளை மொட்டை போடுவதன் மூலமாகத்தான் வெளியேற்ற முடியும்.

மொட்டை போடாவிட்டால் என்ன ஆகும்

மொட்டை போடாவிட்டால் அந்த கழிவுகள் அப்படியே தலையில் தங்கி அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை உண்டாக்கும். உதாரணமாக சொறி, சிரங்கு, பொடுகு போன்றவை. உடலுக்கு தலையே பிரதானம். தலையை சுத்தமாக வைத்து கொள்ளவிட்டால் அது பல நோய்களுக்கு வழிவகுக்கும். எனவேதான் மொட்டை என்ற பெயரில் நம் முன்னோர்கள் தலையில் உள்ள கழிவுகளை அகற்ற பிறந்த குழந்தைக்கு மொட்டை போடும் பழக்கத்தை கொண்டு வந்தனர்.

ஒரு சில குடும்பங்களில் தங்கள் குழந்தைக்கு சிறிது கால இடைவெளியில் இரண்டாவது மொட்டை போடுவார்கள். இதற்கு காரணம் முதல் மொட்டை போடும்போது வெளியேறாத சில கழிவுகள் இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதால்தான். நம் மக்களிடம் நேரடியாக பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுங்கள் என்று அறிவியல் ரீதியாக சொன்னால் போடமாட்டார்கள். அதனால் தான் சாமிக்கு நேர்த்திகடன் என்ற பெயரில் மக்களிடம் இதை செய்ய சொன்னார்கள். எதையும் ஆன்மிகம் கலந்த அறிவியலுடன் சொல்வதே நம் முன்னோர்களின் வழக்கமாக இருந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஹோட்டல் சுவையில் சிக்கன் சால்னா செய்வது எப்படி

சிக்கன் சால்னா செய்வது எப்படி ஹோட்டல் சுவையில் சிக்கன் சால்னா மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என்பதை பின் வருமாறு காணலாம். வீட்டிலேயே எப்படி செய்வது தேவையான பொருட்கள் கோழிக்கறி - ½ கிலோ ...
சித்தர்களின் சமாதி நிலை

சித்தர்களின் சமாதி நிலை என்றால் என்ன?

சித்தர்களின் சமாதி நிலை பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்த்தல் என்ற செயல் மூன்றும் சேர்ந்த நிலை தான் சமாதி நிலை. சாதாரண மனிதனின் மரணத்துக்கும், இந்த சித்தர்களின் சமாதி நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது....
ஆண் கை பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்

ஆண் கை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் கை மச்ச பலன்கள் உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். மேலும், மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. ஒருவருக்கு மச்சம் இந்த இடத்தில் இருந்தால் இந்த மாதிரியான...
பிரதோஷ சிறப்புகள்

பிரதோஷ வழிபாடும் அதன் சிறப்புகளும்

பிரதோஷம் பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை...
HOW TO MAKE COCONUT POLI

சுவையான தேங்காய் போளி

தேங்காய் போளி தேவையான பொருட்கள் வெல்லம் – 1 கப் மைதா மாவு – 1 கப் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் துருவிய தேங்காய் – 1 கப் நெய் –...
விருட்ச பொருத்தம் என்றால் என்ன?

விருட்ச பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

விருட்ச பொருத்தம் என்றால் என்ன? விருட்சம் என்றால் மரம் என்று அர்த்தம். 27 நட்சத்திரங்களும் பால் உள்ள மரம் மற்றும் பாலற்ற மரம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருத்தம் புத்திர பாக்கியம் அடைய பார்க்கப்படுகிறது....
துவிதியை திதி பலன்கள்

துவிதியை திதி பலன்கள், துவிதியை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

துவிதியை திதி ‘துவி’ என்றால் இரண்டு, இது ஒரு வடமொழி சொல்லாகும். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து இரண்டாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் துவிதியை சுக்கில பட்ச துவிதியை என்றும்,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.