பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் தெரியுமா

குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன்

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஒரு உண்மை மறைந்திருக்கும். அப்படிப்பட்ட பழக்க வழக்கங்களுள்  ஒன்று பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது அல்லது பிறந்த முடி எடுப்பது. ஒரு சில குடும்பங்களில் குழந்தை பிறந்த சில மாதங்களிலும், இன்னும் ஒரு குடும்பங்களில் ஒரு வருடத்திற்குள்ளும் குழந்தைகளுக்கு மொட்டை போடுவார்கள். எதற்கு இந்த பழக்கத்தை மேற்கொள்கிறார்கள் என பின்வருமாறு பார்க்கலாம்.

மொட்டை போடுவது ஏன்

ஏன் மொட்டை போடுகிறார்கள்

பிறந்த குழந்தைகளுக்கு மொட்டை போடுவதற்கு முக்கிய காரணம் குழந்தை தாயின் கருவறையில் பத்துமாதம் இருக்கும் என்பது யாவரும் அறிந்ததே. தாயின் கருவறையில் இருக்கும்போது ரத்தம், சிறுநீர் போன்ற சூழ்நிலையில் இருக்கும். குழந்தை பிறக்கும்போது இந்த கழிவுகள் வெளியே வந்துவிட்டாலும், கண்ணுக்கு தெரியாத சில கழிவுகள் குழந்தையின் தலையில் சேரும்.

உடலில் சேரும் இந்த கழிவுகள் தலையில் உள்ள மயிர்கால்கள் வழியாகத்தான் வெளியேற முடியும். இந்த கழிவுகளை மொட்டை போடுவதன் மூலமாகத்தான் வெளியேற்ற முடியும்.

மொட்டை போடாவிட்டால் என்ன ஆகும்

மொட்டை போடாவிட்டால் அந்த கழிவுகள் அப்படியே தலையில் தங்கி அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை உண்டாக்கும். உதாரணமாக சொறி, சிரங்கு, பொடுகு போன்றவை. உடலுக்கு தலையே பிரதானம். தலையை சுத்தமாக வைத்து கொள்ளவிட்டால் அது பல நோய்களுக்கு வழிவகுக்கும். எனவேதான் மொட்டை என்ற பெயரில் நம் முன்னோர்கள் தலையில் உள்ள கழிவுகளை அகற்ற பிறந்த குழந்தைக்கு மொட்டை போடும் பழக்கத்தை கொண்டு வந்தனர்.

ஒரு சில குடும்பங்களில் தங்கள் குழந்தைக்கு சிறிது கால இடைவெளியில் இரண்டாவது மொட்டை போடுவார்கள். இதற்கு காரணம் முதல் மொட்டை போடும்போது வெளியேறாத சில கழிவுகள் இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதால்தான். நம் மக்களிடம் நேரடியாக பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுங்கள் என்று அறிவியல் ரீதியாக சொன்னால் போடமாட்டார்கள். அதனால் தான் சாமிக்கு நேர்த்திகடன் என்ற பெயரில் மக்களிடம் இதை செய்ய சொன்னார்கள். எதையும் ஆன்மிகம் கலந்த அறிவியலுடன் சொல்வதே நம் முன்னோர்களின் வழக்கமாக இருந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சூரிய தோஷம்

நான்கு முக்கிய தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும்

தோஷங்களும் பரிகாரங்களும் இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான ஜாதகங்களில் கீழ்கண்ட இந்த நான்கு தோஷங்கள் தான் அதிகம் காணப்படுகிறது. அந்த நான்கு தோஷங்கள் என்னென்ன? அதற்கான பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். செவ்வாய் தோஷம் ஜாதக கட்டத்தில்...
அமுக்கிராகிழங்கின் மருத்துவ பயன்கள்

அமுக்கிராக்கிழங்கு என்கிற அஸ்வகந்தாவின் மருத்துவ பயன்கள்

அமுக்கிராக்கிழங்கு என்கிற அஸ்வகந்தா அமுக்கிராக்கிழங்கின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவாகும். இது அஸ்வகந்தா, அசுவகந்தம், அசுவகந்தி, அமுக்குரவு, இருளிச் செவி, அசுவம் போன்ற வேறு பல பெயர்களாலும் அழைக்கபடுகிறது. இதன் இலை, வேர்,...
துலாம் ராசி பலன்கள்

துலாம் ராசி பொது பலன்கள் – துலாம் ராசி குணங்கள்

துலாம் ராசி குணங்கள் துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரத்தின் 3, 4 ஆம் பாதங்களும், சுவாதி நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், விசாகம் நட்சத்திரத்தின் 1, 2,...
உடல் சூட்டை குறைக்க வழிகள்

உடல் சூட்டினால் ஏற்படும் பாதிப்புகளும் அதற்கான தீர்வுகளும்

உடல் சூடு எதனால் ஏற்படுகிறது? இன்றைக்கு பலருக்கும் உடலில் பல்வேறு விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று உடலில் சூடு. உடல் குளிர்ச்சியாக இருந்தாலே பல நோய்களில் இருந்து நாம் தப்பித்து விடலாம்....
வயிறு மச்ச பலன் பெண்கள்

ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பொதுவான மச்ச பலன்கள்

ஆண் பெண் இருவருக்கும் பொதுவான மச்ச பலன்கள் ஆண் மற்றும் பெண்ணின் கழுத்தின் முன் பக்கம், பின் பக்கம் போன்ற இடங்களில் இருக்கும் மச்சம் நீண்ட ஆயுளைத் தரும். இவர்கள் மந்தமான போக்கு கொண்டவர்களாக...
கம்பு குழி பணியாரம் செய்முறை

இனிப்பு கம்பு குழி பணியாரம்

இனிப்பு கம்பு குழி பணியாரம் செய்வது எப்படி  கம்பு சத்து மிகுந்ததும், ஆரோக்கியத்தை அள்ளித் தரும் தானியமாகும்.  கம்பினை அடிக்கடி நம் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லதாகும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க...
மூச்சுத்திணறல் வர காரணம்

மூச்சிரைப்பு ஏன் ஏற்படுகிறது? அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்

மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல் நம் இதயத்துக்கு தேவையான அளவு ஆக்சிஜனை நுரையிரலால் அனுப்ப முடியாதபோது மூச்சிரைப்பு மூச்சு திணறல் போன்றவைகள் ஏற்படுகிறது. இது ஒரு வகையான ஒவ்வாமை நோய். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள சில தூசுகளால்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.