வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்?

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்?

தீபம் ஏற்றி வழிபடுவது இந்துக்களின் வழிபாட்டில் முக்கியமான ஒன்றாகும். ஒளி நிறைந்துள்ள இடத்தில் தான் அதிக நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும். தினந்தோறும் வீட்டில் காலையும், மாலையும் விளக்கேற்றி வழிபட்டால் ஆரோக்கியம், செல்வம், நன்மை, சுபம் மற்றும் தெளிவான அறிவு போன்றவை கிடைக்கும் என்று இந்து மதத்தில் நம்பப்படுகிறது.

வீட்டில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும் மேலும், விளக்கேற்றி வழிபடுவதால் தீய சிந்தனைகள், எதிர்மறை ஆற்றல்கள் போன்றவை விலகி அமைதியும், ஆனந்தமும் ஏற்படும்  என்பது ஐதீகம்.

விளக்கேற்றுவதால் வீட்டில் நல்ல வெளிச்சமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மின்சாரம் கண்டுபிடிக்காத காலங்களில் கோயில்களில் அதிகளவில் விளக்கேற்றி வழிபட்டதால் தான் அங்கு இறைசக்தி நிலைகொண்டு நம் அனைவருக்கும் அருள் புரிகிறது. தற்போதும், அதே நடைமுறை கடைபிடிக்கப்படுவதை கோயில்களில் இன்றும் காணலாம். இந்நிலையில், நமது வீடுகளில் எங்கெங்கு விளக்கு ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

வீட்டில் எந்த இடத்தில் விளக்கேற்ற வேண்டும்

  • வீட்டு வாசலில் சாணம் தெளித்து , கோலமிட்டு அதன் நடுவில் விளக்கு ஏற்ற வேண்டும். அவ்வாறு ஏற்றுவதால், அந்த வீட்டிற்குள் தெய்வ சக்தியை ஈர்க்கும் தன்மை கிடைக்கும்.
  • வீட்டிற்கு முன்பு நுழைவாயிலின் இரண்டு புறங்களிலும் இருக்கும் விளக்கு மாடத்தில் விளக்கேற்ற வேண்டும். அவ்வாறு ஏற்றுவதால் அந்த வீட்டிற்கு தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும்.
  • வீட்டில் விளக்கு மாடம் இல்லாதவர்கள் வீட்டின் நிலைப்படியில் 2 பக்கம் விளக்கு ஏற்ற வேண்டும். அவ்வாறு ஏற்றுவதால் அந்த வீட்டில் தெய்வ சக்தி நிலைத்து நிற்கும்.
  • திருமண தோஷம்அடுக்குமாடி குடியிருப்பு, காம்பவுண்ட் வீடு, குடிசை வீடு என எந்த வீடாக இருந்தாலும் வீட்டின் நிலைப்படியில் கண்டிப்பாக விளக்கு ஏற்றுவது நல்லது.
  • அதையடுத்து வீட்டின் முற்றம் என அழைக்கப்படும் பெரிய இடத்தில் விளக்கு ஏற்றுவதால் அங்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
  • அதன் பின்னர், வீட்டின் சமையல் அறையில் விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது. அங்கு விளக்கு ஏற்றுவதால், அந்த வீட்டிற்கு அன்ன தோஷம் எதுவும் ஏற்படாது.
  • வீட்டில் பல இடங்களில் விளக்கேற்றி வழிபட வசதி இல்லாதவர்கள் கண்டிப்பாக பூஜை அறையில் விளக்கு ஏற்றுவதால் சர்வ மங்களத்தையும் கொடுக்கும். அனைத்து பலன்களும் கிடைக்கும். எனவே, அவசியம் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவது அந்த வீட்டிற்கு நன்மையை கொடுக்கும்.
  • வீட்டிற்கு பின் பகுதியில் அதாவது, கொல்லைப்புறத்தில் விளக்கேற்றி வழிபட ஆயுள் அதிகரிக்கும்.
  • மாட்டு தொழுவத்தில் விளக்கேற்றி வழிபடுவது பெரும் புண்ணியத்தை கொடுக்கும். ஏனெனில், அங்கே தான் லட்சுமி வாசம் செய்வதால் லட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மேலும், பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும் குடியிருப்பதால், அனைத்து தெய்வங்களின் அருளும், குல தெய்வ அருளும் சேர்ந்து கிடைக்கும்.
  • குப்பை போடும் இடத்தில் விளக்கு ஏற்றினால், துர் தேவதைகள் வாசம் இருக்காது
  • துளசி மாடத்தில் விளக்கேற்றி வழிபட விஷ்ணு பகவானின் அருளால் செழிப்பான வாழ்க்கை நிலை கிடைக்கும்.
  • இதை தவிர வீட்டின் திண்ணை, நடை மற்றும் தோட்டம் போன்ற இடங்களிலும் விளக்கேற்றி வழிபடுவதால் பெரும் சிறப்பு கிடைக்கும்.
  • ஒரு வீட்டில் இருக்கும் அனைத்து இடங்களிலும் இவ்வாறாக தினந்தோறும் விளக்கேற்றி வழிபடுவது என்பது சாத்தியமில்லாததாகும் என்பதால், வருடத்திற்கு ஒரு முறையாவது அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சதுர்த்தி திதி

சதுர்த்தி திதி பலன்கள், சதுர்த்தி திதியில் செய்ய வேண்டியவை

சதுர்த்தி திதி சதுர் என்பது வடமொழி சொல்லாகும். சதுர் என்றால் நான்கு என்று பொருள். கடவுளின் நான்கு கைகளை ‘சதுர்புஜம்’ என்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். அமாவாசைக்கு...
fruits kanavil vanthal

பழங்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பழங்கள் கனவில் வந்தால் கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. தூக்கத்தில் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விடை தெரியாத கனவுகள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த...
உடல் கழிவுகள் நீங்க

உடல் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளும் வெளியேற்றும் வழிகளும்

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் அற்புத வழிகள் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்ட பின் அதன் கழிவுகள் மலம் மற்றும் சிறுநீர் கழித்தலின் மூலம் வெளியேறி விடும். சில...
riddles and brain teasers

Riddles and Puzzles with answers | Riddles and Brain Teasers with Answers

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
சர்க்கரை நோய் வர காரணம்

இந்த 4 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும், இரத்த சர்க்கரை அளவை நீங்களே சுலபமாக குறைக்கலாம்

சர்க்கரை நோய்  இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது வீட்டில்  ஒருவருக்கு கண்டிப்பாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம். நாகரீகம் என்ற பெயரில் நம்...
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சுவாதி நட்சத்திரத்தின் இராசி : துலாம் சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி : ராகு சுவாதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சுக்கிரன் சுவாதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : வாயு பகவான் சுவாதி நட்சத்திரத்தின்...
செல்வம் பெருக

கணவன் வெளியே கிளம்பும் பொழுது இதை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்

செல்வம் பெருக கணவன் வெளியே கிளம்பும் பொழுது  இதை செய்தால் போதும்  நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். மாத சம்பளம் வாங்குபவர்கள் விட தினந்தோறும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.