அமாவாசை அன்று வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது?

அமாவாசையில்  வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது?

தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் கோலம் போடுவதை  நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். தினந்தோறும் கோலமிடுவதால் வீட்டில் தெய்வகடாட்சம்  நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். நமது முன்னோர்கள், வாழும் இல்லத்தை கடவுளின் இருப்பிடமாகக் கருதினர். இதன் காரணமாகவே குடும்பம் ஒரு கோயில் என்றனர்.

அமாவாசையில் ஏன் கோலம் போடக்கூடாதுஇதனால் வீட்டை புனிதமாக்கும் வகையில் தினமும் காலை, மாலையில் வாசலை சுத்தம் செய்து கோலம் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். கோலம் போடுவதும் வழிபாட்டில் ஒன்றாகும். அதிகாலையில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலமிட்டால் மகாலட்சுமி நம் இல்லம் தேடி வருவாள் என்பது ஐதீகமாகும். ஆனால் அமாவாசை அன்று மட்டும் நாம் கோலம் போடுவதில்லை. அது ஏன் என்பதை பார்க்கலாம்.

அமாவாசை அன்று ஏன் கோலம் போடக்கூடாது? அதற்கான காரணங்கள்

அமாவாசை அன்று கோலமிடாமல் இருத்தலும் தமிழர் பண்பாட்டில் ஒன்றுதான். இறை வழிபாடும், முன்னோர் வழிபாடும் ஒன்றாக ஒரே நேரத்தில் வந்தால் நாம் முன்னோர் வழிபாட்டிற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இக்காரணத்தாலேயே, நாம் அமாவாசையன்று கோலமிடுவதை தவிர்க்கிறோம். இது, முன்னோர்களுக்கு நாம் அளிக்கும் முன்னுரிமையாகும்.

கோலங்கள் தெய்வ வழிபாட்டிற்கு உரியவை என்பதுடன் மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. எனவே முன்னோர்களை இழந்து அவர்கள் பிரிவால் வாடும் நாம் கோலம் போடுவதை தவிர்ப்பது மரபாகும்.

அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கட்டாயம் கோலம் போடக் கூடாது. ஏன் என்றால் அன்றைய தினத்தில் தான் பித்ருக்கள் வீட்டிற்கு வருவதால் கோலம் போட்டு விசேஷமாக கொண்டாடக் கூடாது. எனவே அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபாடு செய்பவர்களும், முன்னோர்களுக்கு பிதுர் காரியங்கள் செய்பவர்களும் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும்.

அமாவாசை அன்று கோலம் போடலாமா அமாவாசை என்பது பித்ருக்களுக்கான தினம். அன்றைய நாளில் தர்ப்பணம் கொடுத்து முடித்ததும், வாசலில் கோலம் போடலாம். அன்றைய தினம் முழுவதுமே வாசலில் கோலம் போடாமல் இருந்தாலும் தவறில்லை.

மறைந்த நமது முன்னோர்களுக்கு உகந்த தினமாக அமாவாசை இருக்கின்றது. அதனால் தான் ஒவ்வொரு மனிதனும் தினமும் இல்லாவிட்டாலும், அமாவாசையன்று மட்டுமாவது தானம் தருமங்களைச் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அமாவாசையன்று செய்கின்ற தர்ப்பணத்தினால், நமது முன்னோர்களின் தாகமும், பசியும் நிவர்த்தியாகும் என்கிறது சாஸ்திரம். அதனால் தான் பிதுர் தர்ப்பணம் செய்யும் பொழுது எள்ளும், தண்ணீரும் இறைக்கிறோம்.

அமாவாசையன்று நம்மை ஆசிர்வதிக்க, நம் இருப்பிடத்தைத் தேடி நம் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களின் பசி, தாகம் தீர எள்ளு கலந்த நீரினால் தர்ப்பணம், சிராத்தம் செய்யும் போது, அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு அவர்களின் பசியையும், தாகத்தையும் தணித்துக் கொண்டு நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்.

அமாவாசையன்று தர்ப்பணமும் கொடுத்து, பித்ருக்களுக்குப் பிடிக்காத சிலவற்றையும் செய்து வந்தால் பலன்கள் கிடையாது. அதனால் தான் அமாவாசையன்று சிலவற்றை  நாம் தவிர்க்க வேண்டும். அதாவது வாசலில் கோலம் போடுவது, மணி அடிக்கும் ஒலி போன்றவற்றையும் நாம் தவிர்க்க வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சதுர்த்தசி திதி

சதுர்த்தசி திதி பலன்கள், சதுர்த்தசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

சதுர்த்தசி திதி சதுர்த்தச என்பதற்கு பதினான்கு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 14 வது நாள் சதுர்த்தசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தசியை...
மட்டன் குருமா குழம்பு வைப்பது எப்படி

மட்டன் குருமா செய்வது எப்படி

மட்டன் குருமா ஆட்டுக்கறி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது, கூடவே ஆரோக்கியமும் நிறைந்தது. மட்டனை வைத்து விதவிதமான உணவுகள் செய்யப்படுகிறது. அதில் ஒன்றுதான் மட்டன் குருமா. இந்த மட்டன் குருமா செய்வதற்கு மணமானது மற்றும் எளிதானது,...
பலாப்பழ பாயாசம்

கேரளா ஸ்பெஷல் பலாப்பழ பாயாசம்

பலாப்பழ பாயாசம் பலாப்பழத்தில் எண்ணற்ற உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளன. சுவையான பலாப்பழ பாயாசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள் பலாப்பழ சுளைகள் - தேவையான அளவு தேங்காய் பால் -...
நவமி திதி

நவமி திதி பலன்கள், நவமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

நவமி திதி நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஒன்பதாவது நாள் நவமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் நவமியை சுக்கில...
கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கடக லக்னத்தின் அதிபதி சந்திரன் ஆவார். கடக லக்னத்தில் பிறந்தவர்கள் உடலாலும் மனதாலும் தூய்மையான உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் அழகான மற்றும் கவர்ச்சியான உடல் அமைப்பை கொண்டவர்கள். வாக்கு...
பிரதோஷ சிறப்புகள்

பிரதோஷ வழிபாடும் அதன் சிறப்புகளும்

பிரதோஷம் பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை...
தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்முறை

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி பொதுவாக எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்றால் அது பிரியாணிதான். அதிலும் தலப்பாக்கட்டு பிரியாணியின் சுவையும், மணமும் ஆளை சுண்டி இழுக்கும். அப்படிபட்ட தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை வீட்டில் எப்படி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.