சுப நிகழ்ச்சிகளில் மாவிலை தோரணம் பயன்படுத்துவது ஏன்?

மாவிலை தோரணம்

வீட்டின் தலைவாசலை நாம் எப்போதும் மங்களகரமாகவும். அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாவிலை தோரணம் என்பது  லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த ஒன்றாகும்.

மாவிலை தோரணம் கட்டும் முறை வீட்டில் நடக்கும் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளிலும், சடங்குகளிலும், பண்டிகைகளிலும், பூஜைகளிலும், கோயில் திருவிழாக்களிலும் இப்படி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மாவிலைத் தோரணம் இல்லாமல் இருப்பதில்லை. பல சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றக்கூடிய நாம், மாவிலை வீட்டு வாசலில் தோரணமாகவும், பூஜைகளின் போதும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

மாவிலை அழகிற்காக மட்டும் நாம் வாசலில் கட்டுவதில்லை. அறிவியல் ரீதியாகவும் மாவிலையை வாசலில் , சுப நிகழ்ச்சிகளில் போன்ற பல இடங்களில் கட்டுவது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும். மாவிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் நிறைந்துள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நம் வீட்டிற்கு வருவதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளை சரிசெய்ய மாவிலை பயன்படுகிறது. மாவிலைக்கு எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் என்பதை பார்ப்போம்.

மாவிலையை ஏன் பயன்படுத்த வேண்டும்

தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று மாவிலை தோரணம் முக்கியமான ஒன்றாகும்.

மாவிலையில் மகாலட்சுமி வசிப்பதால், துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு என்பது ஐதீகம்.

மாவிலையை வாசலில் 11 அல்லது 21 இலைகள் என்ற எண்ணிக்கையில் கட்டுவது சிறந்தது.

மாவிலை தோரணம் கட்டுவது ஏன்மாவிலைத் தோரணம் கட்டப்பட்ட வீடுகளில் தேவர்கள் நுழைவதால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் பிறக்கும்.

மாவிலைகளில் மஞ்சள், குங்குமம் இடுவதால் ஏற்படும் ஒருவித காந்த சக்தியானது கெட்ட சக்திகளை தடுத்து தெய்வீக சக்திகளை வீட்டில் பரவச் செய்யும் தன்மை கொண்டது. அதனால்தான் சுப நிகழ்ச்சிகளில் மாவிலை பயன்படுத்தப்படுகிறது.

விழாக்களின் போது மாவிலை தோரணம் கட்டுவதால், விழாவுக்கு வரும் பக்தர்களின் எதிர்மறை எண்ணங்கள் நீக்கி புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். காய்ந்த மாவிலையாக இருந்தாலும் அதன் சக்தி குறைவது இல்லை.

மாவிலையானது கரியமில வாயுவான கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.

அதனால்தான் மாவிலைகளை வீட்டில் தோரணங்களாகவும். பூஜைகளிலும், மக்கள் ஒன்று கூடும் இடங்களிலும் தோரணமாக கட்டி பயன்படுத்துகின்றனர்.

மேலும் மாவிலைகள் காற்றை சுத்தம் செய்து நமக்கு புதிய உற்சாகத்தை கொடுக்கிறது.

மாவிலை காய்ந்த பிறகும் வெகு நேரம் ஆக்சிஜனை வெளியிட்டுக் கொண்டிருக்கும்.

மாவிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு நம்மை நோயிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

வாஸ்து கடவுளான மயனுக்கு உகந்த மரம் மாமரமாகும். வீட்டில் ஏதேனும் வாஸ்து குறைபாடு இருந்தால் அதனை முற்றிலும் அழிக்கும் சக்தி மாவிலைக்கு உண்டு என்பதன் காரணமாகவே மாவிலையானது அனைத்து நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஈரல் வறுவல் செய்வது எப்படி

ஈரல் மிளகு வறுவல் செய்வது எப்படி

ஈரல் மிளகு வறுவல் தேவையான பொருட்கள் ஈரல் – ½ கிலோ பட்டை - 1 கிராம்பு - 2 வெங்காயம் – 1 கப் ( பொடியாக நறுக்கியது ) பச்சை மிளகாய்...
பலாப்பழ பாயாசம்

கேரளா ஸ்பெஷல் பலாப்பழ பாயாசம்

பலாப்பழ பாயாசம் பலாப்பழத்தில் எண்ணற்ற உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளன. சுவையான பலாப்பழ பாயாசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள் பலாப்பழ சுளைகள் - தேவையான அளவு தேங்காய் பால் -...

30 வயதை கடந்த பெண்களா நீங்கள் ?  அப்போ இந்த பதிவை கண்டிப்பா பாருங்க.

பெண்களின் வாழ்க்கை முறை   பெண்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் பல வேலைகளை செய்கின்றனர். குழந்தைகளை கவனித்துக்கொள்வது, வீட்டு வேலைகளை செய்வது, சமைப்பது, வீட்டை நிர்வகிப்பது என பல்வேறு பொறுப்புகளை சுமந்து செல்கின்றனர். அதிலும் வேலைக்கு...
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அனுஷம் நட்சத்திரத்தின் இராசி : விருச்சிகம் அனுஷம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி அனுஷம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் அனுஷம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : லக்ஷ்மி அனுஷம் நட்சத்திரத்தின் பரிகார...
துவாதசி திதி

துவாதசி திதி பலன்கள், துவாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

துவாதசி திதி துவாதச என்பதற்கு பன்னிரண்டு என்று அர்த்தம். துவாதசி என்பது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 12 வது நாள் துவாதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும்...
சித்தர்களின் சமாதி நிலை

சித்தர்களின் சமாதி நிலை என்றால் என்ன?

சித்தர்களின் சமாதி நிலை பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்த்தல் என்ற செயல் மூன்றும் சேர்ந்த நிலை தான் சமாதி நிலை. சாதாரண மனிதனின் மரணத்துக்கும், இந்த சித்தர்களின் சமாதி நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது....
மின் விபத்துக்கான முதலுதவிகள்

மின்சார விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

மின்சார விபத்து மழைக் காலங்களில் மின்சார விபத்து ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. புயல், மழை காலங்களில் பொது இடங்களிலும், வீடுகளிலும் மின்சார விபத்து பல்வேறு விதங்களில் ஏற்படுகிறது. அந்த எதிர்பாராத நேரத்தில்  மின்சார விபத்து ஏற்பட்டால்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.