சுப நிகழ்ச்சிகளில் மாவிலை தோரணம் பயன்படுத்துவது ஏன்?

மாவிலை தோரணம்

வீட்டின் தலைவாசலை நாம் எப்போதும் மங்களகரமாகவும். அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாவிலை தோரணம் என்பது  லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த ஒன்றாகும்.

மாவிலை தோரணம் கட்டும் முறை வீட்டில் நடக்கும் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளிலும், சடங்குகளிலும், பண்டிகைகளிலும், பூஜைகளிலும், கோயில் திருவிழாக்களிலும் இப்படி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மாவிலைத் தோரணம் இல்லாமல் இருப்பதில்லை. பல சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றக்கூடிய நாம், மாவிலை வீட்டு வாசலில் தோரணமாகவும், பூஜைகளின் போதும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

மாவிலை அழகிற்காக மட்டும் நாம் வாசலில் கட்டுவதில்லை. அறிவியல் ரீதியாகவும் மாவிலையை வாசலில் , சுப நிகழ்ச்சிகளில் போன்ற பல இடங்களில் கட்டுவது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும். மாவிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் நிறைந்துள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நம் வீட்டிற்கு வருவதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளை சரிசெய்ய மாவிலை பயன்படுகிறது. மாவிலைக்கு எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் என்பதை பார்ப்போம்.

மாவிலையை ஏன் பயன்படுத்த வேண்டும்

தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று மாவிலை தோரணம் முக்கியமான ஒன்றாகும்.

மாவிலையில் மகாலட்சுமி வசிப்பதால், துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு என்பது ஐதீகம்.

மாவிலையை வாசலில் 11 அல்லது 21 இலைகள் என்ற எண்ணிக்கையில் கட்டுவது சிறந்தது.

மாவிலை தோரணம் கட்டுவது ஏன்மாவிலைத் தோரணம் கட்டப்பட்ட வீடுகளில் தேவர்கள் நுழைவதால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் பிறக்கும்.

மாவிலைகளில் மஞ்சள், குங்குமம் இடுவதால் ஏற்படும் ஒருவித காந்த சக்தியானது கெட்ட சக்திகளை தடுத்து தெய்வீக சக்திகளை வீட்டில் பரவச் செய்யும் தன்மை கொண்டது. அதனால்தான் சுப நிகழ்ச்சிகளில் மாவிலை பயன்படுத்தப்படுகிறது.

விழாக்களின் போது மாவிலை தோரணம் கட்டுவதால், விழாவுக்கு வரும் பக்தர்களின் எதிர்மறை எண்ணங்கள் நீக்கி புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். காய்ந்த மாவிலையாக இருந்தாலும் அதன் சக்தி குறைவது இல்லை.

மாவிலையானது கரியமில வாயுவான கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.

அதனால்தான் மாவிலைகளை வீட்டில் தோரணங்களாகவும். பூஜைகளிலும், மக்கள் ஒன்று கூடும் இடங்களிலும் தோரணமாக கட்டி பயன்படுத்துகின்றனர்.

மேலும் மாவிலைகள் காற்றை சுத்தம் செய்து நமக்கு புதிய உற்சாகத்தை கொடுக்கிறது.

மாவிலை காய்ந்த பிறகும் வெகு நேரம் ஆக்சிஜனை வெளியிட்டுக் கொண்டிருக்கும்.

மாவிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு நம்மை நோயிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

வாஸ்து கடவுளான மயனுக்கு உகந்த மரம் மாமரமாகும். வீட்டில் ஏதேனும் வாஸ்து குறைபாடு இருந்தால் அதனை முற்றிலும் அழிக்கும் சக்தி மாவிலைக்கு உண்டு என்பதன் காரணமாகவே மாவிலையானது அனைத்து நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தார தோஷம் நீங்க

தார தோஷம் என்றால் என்ன? தார தோஷத்திற்கான பரிகாரம்

தார தோஷம் என்றால் என்ன? தாரம் என்றால் வாழ்க்கை துணையை குறிக்கும். அதாவது மனைவியையோ அல்லது கணவனையோ குறிப்பது ஆகும். ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2வது ஸ்தானத்திலோ அல்லது 7வது ஸ்தானமான கணவன்...
மாங்கல்ய தோஷம் பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? பெண்ணின் ஜாதகத்தில் உள்ள சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணங்களால் திருமணம் நடைபெறுவது தாமதமாகும் அல்லது அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காமல்...
நவராத்திரி வழிபாடு

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் 

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் மாகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை வரக்கூடிய 9 நாட்களை தான் நாம் நவராத்திரி என்று அழைக்கிறோம். நாளை...
puzzles

Puzzles with Answers | Puthirgal | Brain teasers

புதிர்களும் விடைகளும்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள் மற்றும் விடைகளுடனும்...
3ம் எண்ணின் பொதுவான குணம்

3ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

3ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 3ம் எண் தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியதாகும். 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்க எண்ணான 3ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 3ம் எண்ணில்...
potato uses in tamil

உடலை உறுதியாக்கும் உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு சோலானம் டியூபரோசம் என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படுத்தபடும், ஒருவகைக் கிழங்கு வகையாகும். உருளைக்கிழங்கு தாவரம் நிழற்செடி குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம்...
மட்டன் சுக்கா வறுவல்

செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் செய்வது எப்படி

செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் தேவையான பொருட்கள் மட்டன் கால் – ½ கிலோ  ( எலும்பில்லாதது ) சோம்பு - ½ ஸ்பூன் பட்டை – 1 துண்டு கிராம்பு – 2 ...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.