சுப நிகழ்ச்சிகளில் மாவிலை தோரணம் பயன்படுத்துவது ஏன்?

மாவிலை தோரணம்

வீட்டின் தலைவாசலை நாம் எப்போதும் மங்களகரமாகவும். அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாவிலை தோரணம் என்பது  லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த ஒன்றாகும்.

மாவிலை தோரணம் கட்டும் முறை வீட்டில் நடக்கும் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளிலும், சடங்குகளிலும், பண்டிகைகளிலும், பூஜைகளிலும், கோயில் திருவிழாக்களிலும் இப்படி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மாவிலைத் தோரணம் இல்லாமல் இருப்பதில்லை. பல சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றக்கூடிய நாம், மாவிலை வீட்டு வாசலில் தோரணமாகவும், பூஜைகளின் போதும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

மாவிலை அழகிற்காக மட்டும் நாம் வாசலில் கட்டுவதில்லை. அறிவியல் ரீதியாகவும் மாவிலையை வாசலில் , சுப நிகழ்ச்சிகளில் போன்ற பல இடங்களில் கட்டுவது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும். மாவிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் நிறைந்துள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நம் வீட்டிற்கு வருவதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளை சரிசெய்ய மாவிலை பயன்படுகிறது. மாவிலைக்கு எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் என்பதை பார்ப்போம்.

மாவிலையை ஏன் பயன்படுத்த வேண்டும்

தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று மாவிலை தோரணம் முக்கியமான ஒன்றாகும்.

மாவிலையில் மகாலட்சுமி வசிப்பதால், துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு என்பது ஐதீகம்.

மாவிலையை வாசலில் 11 அல்லது 21 இலைகள் என்ற எண்ணிக்கையில் கட்டுவது சிறந்தது.

மாவிலை தோரணம் கட்டுவது ஏன்மாவிலைத் தோரணம் கட்டப்பட்ட வீடுகளில் தேவர்கள் நுழைவதால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் பிறக்கும்.

மாவிலைகளில் மஞ்சள், குங்குமம் இடுவதால் ஏற்படும் ஒருவித காந்த சக்தியானது கெட்ட சக்திகளை தடுத்து தெய்வீக சக்திகளை வீட்டில் பரவச் செய்யும் தன்மை கொண்டது. அதனால்தான் சுப நிகழ்ச்சிகளில் மாவிலை பயன்படுத்தப்படுகிறது.

விழாக்களின் போது மாவிலை தோரணம் கட்டுவதால், விழாவுக்கு வரும் பக்தர்களின் எதிர்மறை எண்ணங்கள் நீக்கி புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். காய்ந்த மாவிலையாக இருந்தாலும் அதன் சக்தி குறைவது இல்லை.

மாவிலையானது கரியமில வாயுவான கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.

அதனால்தான் மாவிலைகளை வீட்டில் தோரணங்களாகவும். பூஜைகளிலும், மக்கள் ஒன்று கூடும் இடங்களிலும் தோரணமாக கட்டி பயன்படுத்துகின்றனர்.

மேலும் மாவிலைகள் காற்றை சுத்தம் செய்து நமக்கு புதிய உற்சாகத்தை கொடுக்கிறது.

மாவிலை காய்ந்த பிறகும் வெகு நேரம் ஆக்சிஜனை வெளியிட்டுக் கொண்டிருக்கும்.

மாவிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு நம்மை நோயிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

வாஸ்து கடவுளான மயனுக்கு உகந்த மரம் மாமரமாகும். வீட்டில் ஏதேனும் வாஸ்து குறைபாடு இருந்தால் அதனை முற்றிலும் அழிக்கும் சக்தி மாவிலைக்கு உண்டு என்பதன் காரணமாகவே மாவிலையானது அனைத்து நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பொடுகு பிரச்சனையை தீர்க்க

பொடுகை விரட்ட இந்த ஹேர் மாஸ்கை ட்ரை பண்ணுங்க

பொடுகை விரட்ட எளிய டிப்ஸ்  தலையில் உருவாகும் பூஞ்சைத் தொற்று மற்றும் வறட்சி காரணமாக பொடுகு ஏற்படுகிறது. இது தலையில் அரிப்பு, முகத்தில் பருக்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. எண்ணெய் வடியும் சருமம், வறண்ட...
விருச்சிக ராசி பலன்கள்

விருச்சிக ராசி பொது பலன்கள் – விருச்சிக ராசி குணங்கள்

விருச்சிக ராசி குணங்கள் விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். விருச்சிக ராசியில் விசாகம் நட்சத்திரத்தின் 4 ஆம் பாதம், அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் அடங்கியுள்ளன. இவர்களுக்கு எத்தனை...
நகங்களை பராமரிப்பது எப்படி

கை மற்றும் கால் நகங்களை அழகாக வைத்திருக்க சில டிப்ஸ்

அழகான நகங்களை பெற    நம் உடலின் மற்ற பாகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல நகங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நகங்களை அழகாக வைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும். நகங்களை பராமரிப்பதில் ஆண்களை காட்டிலும்...
மனிதர்கள் பற்றிய கனவு

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் கனவு காணாத மனிதர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகளை காண்கின்றனர். ஆனால் அந்த கனவுக்கான அர்த்தம் தெரியாமல் பல்வேறு குழப்பத்துக்கு ஆளாகின்றனர். அந்த...
avoidable food in the morning

காலையில் இந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

காலையில் சாப்பிடக்கூடாத உணவுகள் காலையில் நாம் சாப்பிடக்கூடிய முதல் உணவு என்ன என்பதை தேர்வு செய்வதில் அலட்சியம் காட்டக் கூடாது. நாம் முதலில் சாப்பிடக் கூடிய உணவு நம் உடலுக்கும், உள்ளுறுப்புகளுக்கும் அந்த நாள்...
கிரீன் டீ செய்முறை

கிரீன் டீ குடிப்பது நல்லதா கெட்டதா ?

கிரீன் டீ பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி ,டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கிரீன்...
சோம்பு தண்ணீர் நன்மைகள்

தினமும் சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் சித்த மருத்துவத்தில் சோம்பு ஒரு சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. சோம்பை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடித்து வந்தால் இரத்தில் இருக்கக்கூடிய அழுத்தத்தையும்,  இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.