செல்வம் கொழிக்கும் லக்ஷ்மி குபேர பூஜை

செல்வம் கொழிக்கும் லக்ஷ்மி குபேர பூஜை

லக்ஷ்மி குபேர பூஜை செய்ய சிறந்த நாள் வியாழக்கிழமை. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி அன்று மாலை லக்ஷ்மி குபேர பூஜை செய்வதால் மகாலக்ஷ்மியின் அருளை முழுமையாக நாம் பெற முடியும். அந்த வகையில் இந்த ஆண்டு (04.11.2021) அன்று வியாழக்கிழமை தீபாவளி , அமாவாசை, லக்ஷ்மி குபேர பூஜை ஆகிய மூன்று வழிபாடும் ஒன்றுசேர வந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

தீபாவளி அன்று அதிகாலை கங்காஸ்நானம் செய்து விட்டு புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து, பலகாரங்கள் பல வைத்து படைத்து பின் மாலை நேரத்தில் தான் லக்ஷ்மி குபேர பூஜையை தொடங்க வேண்டும். லக்ஷ்மி குபேர பூஜை செய்ய சிறந்த நேரம் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஆகும். இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.

லக்ஷ்மி குபேர பூஜை

இந்த பூஜையை தொடர்ந்து 48 நாட்களுக்கு செய்வது மிகவும் சிறப்பானதாகும். 48 நாட்கள் இந்த பூஜையை செய்ய முடியாதவர்கள் தீபாவளி அன்று மட்டும் செய்து வழிபடலாம். ஒருநாள் பூஜை செய்தாலும் மகாலக்ஷ்மியின் அருளை பெற முடியும்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். இந்த நேரத்தில் கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டமடைந்தோர், புதிதாக தொழில் தொடங்குவோர், தொழில் விருத்தி அடைய விரும்புபவர்கள் ஐந்து வியாழக்கிழமை மாலையில் குபேர தீபம் ஏற்றி லக்ஷ்மி குபேர நாமம் சொல்லி வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.

லக்ஷ்மி குபேர பூஜை முறைகள்

லக்ஷ்மி பூஜை என்பது அன்னை மகாலக்ஷ்மியை நம் இல்லத்திற்கு அழைக்கும் வழிபாடாகும். மகாவிஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலக்ஷ்மி தீபாவளி தினத்தில் நமது இல்லம் தேடி வந்து அருள்பாலிக்கிறாள்.

  1. இந்நாளில் நமது இல்லம் மகாலட்சுமியை வரவேற்க சுத்தம் செய்து அலங்காரம் செய்ய வேண்டும்.
  2. வாசலில் வண்ண கோலமிட்டு பூஜையறையில் குபேர கோலம் இட வேண்டும்.
  3. பூஜை அறையில் லக்ஷ்மி குபேரர் படம் மற்றும் சிலை வைத்திருப்பவர்கள் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் பார்த்தபடி வைத்து, பூஜை அறை முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.
  4. லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.
  5. சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, முழு முதற் கடவுளான விநாயகரை வணங்கும் விதமாக மஞ்சளில் விநாயகர் பிடித்து வைக்க வேண்டும்.
  6. விநாயகருக்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும்.
  7. பச்சரிசி மற்றும் நவதானியங்களை பரப்பி வைக்க வேண்டும். அதன் நடுவில் ஒரு கலச சொம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். லக்ஷ்மி குபேர பூஜை எவ்வாறு செய்ய வேண்டும்
  8. அந்த தண்ணீரில் மகாலக்ஷ்மிக்கு பிடித்தமான வாசனை பொருட்களை சேர்க்க வேண்டும். மஞ்சள் தூள், எலுமிச்சை, ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம், சேர்த்து அதில் மாவிலை வைத்து அதன் மேல் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி குங்குமம் வைத்து கலசத்தில் வைக்க வேண்டும்.
  9. வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் நெய்வேத்தியமாக பால் பாயாசம் செய்து வைக்கலாம்.
  10. தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களை கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.
  11. கலசத்தின் முன் குபேர எந்திரத்தை வரைய வேண்டும். கட்டத்தை அரிசிமாவினாலும், எண்களை குங்குமத்தாலும், கட்டத்தை சுற்றி மகாலக்ஷ்மிக்குரிய ஸ்ரீ என்னும் எழுத்தை மஞ்சளினாலும் வரைய வேண்டும்.
  12. குபேர விளக்கு இருந்தால் ஏற்றி வைக்கலாம். இல்லாதவர்கள் காமாட்சி விளக்கு மற்றும் குத்து விளக்கு ஏற்றி வழிபடலாம்.
  13. குபேர எந்திரத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே மாதிரியான நாணயங்களை வைத்து அதில் பூக்களையும் வைக்க வேண்டும்.
  14. லக்ஷ்மி குபேரருக்கு மிகவும் பிடித்தமான 5 ரூபாய் நாணயங்கள் 108 நாணயங்களை வைத்து ஒவ்வொன்றையும் மகாலக்ஷ்மியின் பாதத்தில் வைத்து பின் ஒரு பாத்திரத்தில் அந்த நாணயத்தை போட வேண்டும்.
  15. அவ்வாறு போடும்போது நாணயத்தின் ஒலி கேட்குமாறு போட வேண்டும்.
  16. ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்றால் அந்த நாணயத்தின் ஒலி லக்ஷ்மி குபேரருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.
  17. குபேர பகவானின் 108 போற்றிகளை பாடி வணங்கி கற்பூர தீபாராதனை காணும் போது உள்ளன்போடு வழிபட்டோமேயானால் மகாலக்ஷ்மியின் அருள் முழுமையாக கிடைக்கும். வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூரட்டாதி நட்சத்திரத்தின் இராசி : கும்பம் மற்றும் மீனம் பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி : குரு பூரட்டாதி நட்சத்திரத்தின் 1, 2 மற்றும் 3ம் பாதத்தின் இராசி அதிபதி (கும்பம்) :...
முதலுதவியின் பயன்கள்

முதலுதவி என்றால் என்ன? முதலுதவியின் வரலாறு

முதலுதவி என்றால் என்ன முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் சிகிச்சையாகும். தேவையான முழு மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயம்பட்ட நபர்க்கு கொடுக்கபடும்....
அபிஜித் நட்சத்திர நேரம்

தொட்டதெல்லாம் துலங்கும் அபிஜித் நட்சத்திர நேரம்

அபிஜித் நட்சத்திரம் வெற்றி, முன்னேற்றம், செல்வம் இவற்றை அடைய சிறந்த நேரம் அபிஜித் நட்சத்திர நேரமாகும். ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் பழங்காலத்தில் முதல் நட்சத்திரம்...
தந்தூரி சிக்கன் செய்வது எப்படி

தந்தூரி சிக்கன் வீட்டிலேயே செய்வது எப்படி

தந்தூரி சிக்கன் தந்தூரி சிக்கன் நல்ல காரசாமான சுவையை கொண்டது. தந்தூரி சிக்கன் உணவகங்களில் மட்டுமே செய்ய முடியும் என பலரும் நினைத்திருப்போம். இந்த பதவில் தந்தூரி சிக்கன் எளிமையாக எப்படி வீட்டிலேயே செய்வது...
tamil puzzles with answers

Riddles with Answers | Brain Teasers and Puzzles | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
குழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம்

எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்

எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் குழந்தை பிறப்பதே அதிஷ்டம் தான்,கிழமை என்பது உறவுகள் என்று பொருள். அனைத்து கிழமைகளும் ஒவ்வொரு கடவுளுடைய தொடர்புடையது என்று கூறப்படுகிறது. இருந்தாலும் குழந்தை எந்த கிழமைகளில் பிறந்தால்...
அமாவாசை திதி

அமாவாசை திதி பலன்கள், அமாவாசை திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

அமாவாசை திதி அமாவாசை திதியானது திதிகளின் வரிசையில் 15வது இடத்தை பிடிக்கிறது. திதிகளின் வரிசையில் அமாவாசை முக்கிய இடத்தை பிடிக்கிறது. அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அன்றைய தினத்தில் இந்த...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.