செல்வம் கொழிக்கும் லக்ஷ்மி குபேர பூஜை

செல்வம் கொழிக்கும் லக்ஷ்மி குபேர பூஜை

லக்ஷ்மி குபேர பூஜை செய்ய சிறந்த நாள் வியாழக்கிழமை. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி அன்று மாலை லக்ஷ்மி குபேர பூஜை செய்வதால் மகாலக்ஷ்மியின் அருளை முழுமையாக நாம் பெற முடியும். அந்த வகையில் இந்த ஆண்டு (04.11.2021) அன்று வியாழக்கிழமை தீபாவளி , அமாவாசை, லக்ஷ்மி குபேர பூஜை ஆகிய மூன்று வழிபாடும் ஒன்றுசேர வந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

தீபாவளி அன்று அதிகாலை கங்காஸ்நானம் செய்து விட்டு புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து, பலகாரங்கள் பல வைத்து படைத்து பின் மாலை நேரத்தில் தான் லக்ஷ்மி குபேர பூஜையை தொடங்க வேண்டும். லக்ஷ்மி குபேர பூஜை செய்ய சிறந்த நேரம் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஆகும். இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.

லக்ஷ்மி குபேர பூஜை

இந்த பூஜையை தொடர்ந்து 48 நாட்களுக்கு செய்வது மிகவும் சிறப்பானதாகும். 48 நாட்கள் இந்த பூஜையை செய்ய முடியாதவர்கள் தீபாவளி அன்று மட்டும் செய்து வழிபடலாம். ஒருநாள் பூஜை செய்தாலும் மகாலக்ஷ்மியின் அருளை பெற முடியும்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். இந்த நேரத்தில் கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டமடைந்தோர், புதிதாக தொழில் தொடங்குவோர், தொழில் விருத்தி அடைய விரும்புபவர்கள் ஐந்து வியாழக்கிழமை மாலையில் குபேர தீபம் ஏற்றி லக்ஷ்மி குபேர நாமம் சொல்லி வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.

லக்ஷ்மி குபேர பூஜை முறைகள்

லக்ஷ்மி பூஜை என்பது அன்னை மகாலக்ஷ்மியை நம் இல்லத்திற்கு அழைக்கும் வழிபாடாகும். மகாவிஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலக்ஷ்மி தீபாவளி தினத்தில் நமது இல்லம் தேடி வந்து அருள்பாலிக்கிறாள்.

  1. இந்நாளில் நமது இல்லம் மகாலட்சுமியை வரவேற்க சுத்தம் செய்து அலங்காரம் செய்ய வேண்டும்.
  2. வாசலில் வண்ண கோலமிட்டு பூஜையறையில் குபேர கோலம் இட வேண்டும்.
  3. பூஜை அறையில் லக்ஷ்மி குபேரர் படம் மற்றும் சிலை வைத்திருப்பவர்கள் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் பார்த்தபடி வைத்து, பூஜை அறை முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.
  4. லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.
  5. சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, முழு முதற் கடவுளான விநாயகரை வணங்கும் விதமாக மஞ்சளில் விநாயகர் பிடித்து வைக்க வேண்டும்.
  6. விநாயகருக்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும்.
  7. பச்சரிசி மற்றும் நவதானியங்களை பரப்பி வைக்க வேண்டும். அதன் நடுவில் ஒரு கலச சொம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். லக்ஷ்மி குபேர பூஜை எவ்வாறு செய்ய வேண்டும்
  8. அந்த தண்ணீரில் மகாலக்ஷ்மிக்கு பிடித்தமான வாசனை பொருட்களை சேர்க்க வேண்டும். மஞ்சள் தூள், எலுமிச்சை, ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம், சேர்த்து அதில் மாவிலை வைத்து அதன் மேல் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி குங்குமம் வைத்து கலசத்தில் வைக்க வேண்டும்.
  9. வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் நெய்வேத்தியமாக பால் பாயாசம் செய்து வைக்கலாம்.
  10. தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களை கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.
  11. கலசத்தின் முன் குபேர எந்திரத்தை வரைய வேண்டும். கட்டத்தை அரிசிமாவினாலும், எண்களை குங்குமத்தாலும், கட்டத்தை சுற்றி மகாலக்ஷ்மிக்குரிய ஸ்ரீ என்னும் எழுத்தை மஞ்சளினாலும் வரைய வேண்டும்.
  12. குபேர விளக்கு இருந்தால் ஏற்றி வைக்கலாம். இல்லாதவர்கள் காமாட்சி விளக்கு மற்றும் குத்து விளக்கு ஏற்றி வழிபடலாம்.
  13. குபேர எந்திரத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே மாதிரியான நாணயங்களை வைத்து அதில் பூக்களையும் வைக்க வேண்டும்.
  14. லக்ஷ்மி குபேரருக்கு மிகவும் பிடித்தமான 5 ரூபாய் நாணயங்கள் 108 நாணயங்களை வைத்து ஒவ்வொன்றையும் மகாலக்ஷ்மியின் பாதத்தில் வைத்து பின் ஒரு பாத்திரத்தில் அந்த நாணயத்தை போட வேண்டும்.
  15. அவ்வாறு போடும்போது நாணயத்தின் ஒலி கேட்குமாறு போட வேண்டும்.
  16. ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்றால் அந்த நாணயத்தின் ஒலி லக்ஷ்மி குபேரருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.
  17. குபேர பகவானின் 108 போற்றிகளை பாடி வணங்கி கற்பூர தீபாராதனை காணும் போது உள்ளன்போடு வழிபட்டோமேயானால் மகாலக்ஷ்மியின் அருள் முழுமையாக கிடைக்கும். வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

sandal powder

தழும்பை மறையவைக்கும் எளிய இயற்கை மருத்துவம்

தழும்புகள் மறைய வைப்பது எப்படி ? தழும்புகள் பொதுவாக இறுக்கமான ஆடைகள் அணிவதால், அம்மை தழும்புகள், பிரசவத் தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தினால் ஏற்படும் தழும்புகள், விபத்தினால் ஏற்படும் தழும்புகள்,...
தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்முறை

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி பொதுவாக எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்றால் அது பிரியாணிதான். அதிலும் தலப்பாக்கட்டு பிரியாணியின் சுவையும், மணமும் ஆளை சுண்டி இழுக்கும். அப்படிபட்ட தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை வீட்டில் எப்படி...
புகைப்படம் மாட்ட சிறந்த திசை

புகைப்படங்களை இந்த திசையில் மட்டும் மாட்டி வைக்காதீர்கள்

புகைப்படங்களை இந்த திசையில் மட்டும் மாட்டி வைக்காதீர்கள் நம் அனைவரது  வீட்டிலும் கட்டாயம் இடம்பெறும் ஒரு முக்கிய பொருளாக இருப்பது புகைப்படம். புகைப்படம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நல்ல நினைவுகளை நினைவூட்டக்கூடிய அழகிய...

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் – 4 கால்கள் கத்திரிக்காய் - 4 புளி - ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப் ...
சித்தர்களின் சமாதி நிலை

சித்தர்களின் சமாதி நிலை என்றால் என்ன?

சித்தர்களின் சமாதி நிலை பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்த்தல் என்ற செயல் மூன்றும் சேர்ந்த நிலை தான் சமாதி நிலை. சாதாரண மனிதனின் மரணத்துக்கும், இந்த சித்தர்களின் சமாதி நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது....
prawn recipes

இறால் குழம்பு

இறால் குழம்பு தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ உருளைக்கிழங்கு -  1 ( பெரியது ) முருங்கைக்காய் - 1 கொத்தமல்லி – சிறிதளவு மிளகாய் தூள் -  2 ஸ்பூன் ...
ஆடியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், தங்கள் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டு இருப்பார்கள். ஆனால் பாசத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் கற்பனை சக்தி கொண்டவர்கள். அந்த...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.