செல்வம் கொழிக்கும் லக்ஷ்மி குபேர பூஜை

செல்வம் கொழிக்கும் லக்ஷ்மி குபேர பூஜை

லக்ஷ்மி குபேர பூஜை செய்ய சிறந்த நாள் வியாழக்கிழமை. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி அன்று மாலை லக்ஷ்மி குபேர பூஜை செய்வதால் மகாலக்ஷ்மியின் அருளை முழுமையாக நாம் பெற முடியும். அந்த வகையில் இந்த ஆண்டு (04.11.2021) அன்று வியாழக்கிழமை தீபாவளி , அமாவாசை, லக்ஷ்மி குபேர பூஜை ஆகிய மூன்று வழிபாடும் ஒன்றுசேர வந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

தீபாவளி அன்று அதிகாலை கங்காஸ்நானம் செய்து விட்டு புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து, பலகாரங்கள் பல வைத்து படைத்து பின் மாலை நேரத்தில் தான் லக்ஷ்மி குபேர பூஜையை தொடங்க வேண்டும். லக்ஷ்மி குபேர பூஜை செய்ய சிறந்த நேரம் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஆகும். இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.

லக்ஷ்மி குபேர பூஜை

இந்த பூஜையை தொடர்ந்து 48 நாட்களுக்கு செய்வது மிகவும் சிறப்பானதாகும். 48 நாட்கள் இந்த பூஜையை செய்ய முடியாதவர்கள் தீபாவளி அன்று மட்டும் செய்து வழிபடலாம். ஒருநாள் பூஜை செய்தாலும் மகாலக்ஷ்மியின் அருளை பெற முடியும்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். இந்த நேரத்தில் கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டமடைந்தோர், புதிதாக தொழில் தொடங்குவோர், தொழில் விருத்தி அடைய விரும்புபவர்கள் ஐந்து வியாழக்கிழமை மாலையில் குபேர தீபம் ஏற்றி லக்ஷ்மி குபேர நாமம் சொல்லி வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.

லக்ஷ்மி குபேர பூஜை முறைகள்

லக்ஷ்மி பூஜை என்பது அன்னை மகாலக்ஷ்மியை நம் இல்லத்திற்கு அழைக்கும் வழிபாடாகும். மகாவிஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலக்ஷ்மி தீபாவளி தினத்தில் நமது இல்லம் தேடி வந்து அருள்பாலிக்கிறாள்.

  1. இந்நாளில் நமது இல்லம் மகாலட்சுமியை வரவேற்க சுத்தம் செய்து அலங்காரம் செய்ய வேண்டும்.
  2. வாசலில் வண்ண கோலமிட்டு பூஜையறையில் குபேர கோலம் இட வேண்டும்.
  3. பூஜை அறையில் லக்ஷ்மி குபேரர் படம் மற்றும் சிலை வைத்திருப்பவர்கள் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் பார்த்தபடி வைத்து, பூஜை அறை முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.
  4. லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.
  5. சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, முழு முதற் கடவுளான விநாயகரை வணங்கும் விதமாக மஞ்சளில் விநாயகர் பிடித்து வைக்க வேண்டும்.
  6. விநாயகருக்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும்.
  7. பச்சரிசி மற்றும் நவதானியங்களை பரப்பி வைக்க வேண்டும். அதன் நடுவில் ஒரு கலச சொம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். லக்ஷ்மி குபேர பூஜை எவ்வாறு செய்ய வேண்டும்
  8. அந்த தண்ணீரில் மகாலக்ஷ்மிக்கு பிடித்தமான வாசனை பொருட்களை சேர்க்க வேண்டும். மஞ்சள் தூள், எலுமிச்சை, ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம், சேர்த்து அதில் மாவிலை வைத்து அதன் மேல் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி குங்குமம் வைத்து கலசத்தில் வைக்க வேண்டும்.
  9. வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் நெய்வேத்தியமாக பால் பாயாசம் செய்து வைக்கலாம்.
  10. தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களை கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.
  11. கலசத்தின் முன் குபேர எந்திரத்தை வரைய வேண்டும். கட்டத்தை அரிசிமாவினாலும், எண்களை குங்குமத்தாலும், கட்டத்தை சுற்றி மகாலக்ஷ்மிக்குரிய ஸ்ரீ என்னும் எழுத்தை மஞ்சளினாலும் வரைய வேண்டும்.
  12. குபேர விளக்கு இருந்தால் ஏற்றி வைக்கலாம். இல்லாதவர்கள் காமாட்சி விளக்கு மற்றும் குத்து விளக்கு ஏற்றி வழிபடலாம்.
  13. குபேர எந்திரத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே மாதிரியான நாணயங்களை வைத்து அதில் பூக்களையும் வைக்க வேண்டும்.
  14. லக்ஷ்மி குபேரருக்கு மிகவும் பிடித்தமான 5 ரூபாய் நாணயங்கள் 108 நாணயங்களை வைத்து ஒவ்வொன்றையும் மகாலக்ஷ்மியின் பாதத்தில் வைத்து பின் ஒரு பாத்திரத்தில் அந்த நாணயத்தை போட வேண்டும்.
  15. அவ்வாறு போடும்போது நாணயத்தின் ஒலி கேட்குமாறு போட வேண்டும்.
  16. ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்றால் அந்த நாணயத்தின் ஒலி லக்ஷ்மி குபேரருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.
  17. குபேர பகவானின் 108 போற்றிகளை பாடி வணங்கி கற்பூர தீபாராதனை காணும் போது உள்ளன்போடு வழிபட்டோமேயானால் மகாலக்ஷ்மியின் அருள் முழுமையாக கிடைக்கும். வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம் நன்மைகள் மற்றும் பயன்கள்

மங்குஸ்தான் பழம் மங்குஸ்தான் மரம் ‘குளுசியாசியே’ தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா. இது பழங்களின் அரசி என அழைக்கபடுகிறது. இந்த பழம் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மியன்மார், தாய்லாந்து...
ஆட்டுக்கால் பாயா குருமா

ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி

ஆட்டுக்கால் பாயா ஆட்டுக்கால் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் மிக பிரபலம். அதிலும் ஆட்டுகாலை வைத்து செய்யப்படும் பாயா டிபன் வகைகளுக்கு சிறந்த சைடுடிஷ் ஆகும். ஆட்டுகால் எப்படி செய்வது என்பதை பின்வருமாறு பார்ப்போம். ஆட்டுக்கால்...
சிக்கன் சுக்கா செய்யும் முறை

சிக்கன் சுக்கா வறுவல் செய்வது இவ்வளவு சுலபமா

சிக்கன் சுக்கா வறுவல் சிக்கனின் சுவையே அலாதிதான். அதிலும் சிக்கனை விதவிதமாக செய்து சாப்பிடுவதை மிகவும் விரும்புவார்கள் சிக்கன் பிரியர்கள். அந்த வகையில் இன்று நாம் காண இருப்பது காரசாரமான சிக்கன் சுக்கா வறுவல்,...
மின் விபத்துக்கான முதலுதவிகள்

மின்சார விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

மின்சார விபத்து மழைக் காலங்களில் மின்சார விபத்து ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. புயல், மழை காலங்களில் பொது இடங்களிலும், வீடுகளிலும் மின்சார விபத்து பல்வேறு விதங்களில் ஏற்படுகிறது. அந்த எதிர்பாராத நேரத்தில்  மின்சார விபத்து ஏற்பட்டால்...
திணை இட்லி

திணை அரிசி இட்லி

திணை இட்லி திணை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற ஏரளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட மிகவும் சிறந்த உணவு திணையாகும். திணை இட்லி எப்படி செய்வது...
வில்வ இலை பயன்கள்

வில்வம் மருத்துவ குணங்கள்

வில்வம் வில்வம் இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். சைவ சமய மரபுகளில் வில்வ மரத்திற்கு என்று தனிசிறப்பு உண்டு. இம்மரம் 15 அடி முதல் 25 அடி...
pineapple kesari recipe

பைனாப்பிள்  கேசரி செய்முறை

பைனாப்பிள்  கேசரி செய்முறை  தேவையான பொருட்கள் ரவை – 1 கப் சர்க்கரை – ¾ கப் தண்ணீர் – 2 கப் கேசரி கலர் - சிறிதளவு அன்னாசிபழத் துண்டுகள் – ½...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.