கார்த்திகை தீபம் விளக்கேற்றும் முறை மற்றும் பலன்கள்

கார்த்திகை தீபம்

கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றும் முறை நமது தமிழகத்தில் இருந்து வருகின்றது. கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் நம் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டால் தீய சக்திகள் நம்மை நெருங்காது.

கார்த்திகை தீபத்தன்று நமது வீட்டில் 27 விளக்குகள் ஏற்றுவது வழக்கம். 27 விளக்குகள் 27 நட்சத்திரங்களை குறிக்கும். 27 விளக்குகள் ஏற்றி வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றி வழிபட்டால் நம் இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் நாம் பெற முடியும்.

கார்த்திகை தீபம் விளகேற்றும் முறை

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திக்கை தீப திருவிழா மிகவும் பிரசித்தியாக நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. கார்த்திகை தீபம் அன்று அதிகாலை 4 மணி அளவில் கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அதை தொடர்ந்து மாலை 6 மணி அளவில்‌ அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகாதீபம் ஏற்றப்படும்‌.

இந்த வருடம் திருக்கார்த்திகை வரும் டிசம்பர் 6 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை தீபம் ஏற்றும் முறை

  • கார்த்திகை தீப திருநாள் அன்று ஏற்றக்கூடிய அகல் விளக்குகள் புதிதாக தான் வாங்கி ஏற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
    நீங்கள் முன்பு பயன்படுத்திய விளக்குகளை நன்கு சுத்தம் செய்து துடைத்து பின் பயன்படுத்தலாம்.
  • புதிய விளக்கு ஏற்ற வேண்டும் என்று விரும்புபவர்கள் தலைவாசலில் ஏற்றக் கூடிய 2 விளக்குகளை மட்டும் புதிதாக வாங்கிக் கொள்ளலாம்.
  • விளக்கில் விரிசல் எதுவும் இல்லாமல் நல்ல விளக்காக இருப்பது நல்லது.
  • பித்தளை, வெள்ளி போன்ற பிற விளக்குகளை ஏற்றுவதைக் காட்டிலும் மண்ணால் செய்யபட்ட அகல் விளக்குகளை ஏற்றுவது சிறந்தது.
  • அகல் விளக்குகளை மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரித்துக் கொண்டு பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தி ஏற்ற வேண்டும்.
  • கார்த்திகை தீபத்தன்று ஒரு அகல் விளக்கினை முதலில் ஏற்றி விட்டு அதிலுருந்து மற்ற விளக்குகளை ஏற்றுவது நல்லது.
  • கார்த்திகை தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்
  • கார்த்திகை திருநாளன்று தலைவாசலில் 2 தீபங்களும், பூஜை அறையில் 5 தீபங்களும் ஏற்ற வேண்டும். இந்த 5 தீபங்களையும் வட்டமாக எல்லா திசைகளிலும் வெளிச்சம் படும்படி ஏற்ற வேண்டும்.
  • வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் தீபம் ஏற்ற வேண்டும். குறிப்பாக சமயலறையிலும் விளக்கேற்ற வேண்டும்.
  • வாசலில் அரிசி மாவினால் கோலமிட்டு அந்த கோலத்தின் நடுவில் ஒரு விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும்.
  • உங்கள் வீட்டில் துளசி செடி , நெல்லி மரம் , மாதுளை மரம் போன்றவை இருந்தால் அங்கும் விளக்கேற்றி வைக்க வேண்டும். ஏன் என்றால் இந்த மூன்றிலும் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

கார்த்திகை தீபம் எந்த திசை நோக்கி ஏற்ற வேண்டும்?

  • கிழக்கு திசை நோக்கி விளக்கேற்றினால் துன்பம் நீங்கும், குடும்ப அபிவிருத்தி ஏற்படும்.
  • மேற்கு திசை நோக்கி விளக்கேற்றினால் கடன், தோஷம் நீங்கும்.
  • வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் திருமணத்தடை அகலும்.
  • தெற்கு திசை நோக்கி ஏற்றுவது குடும்பத்திற்கு நல்லதல்ல.
  • கார்த்திகை தீப விளக்கு
  • நம் வீட்டு பூஜையறையில்‌ ஒரு முக தீபம்‌ ஏற்றினால்‌ மத்திம பலன்‌ தரும்‌.
  • இரண்டு முக தீபம்‌ ஏற்றினால்‌ குடும்பம்‌ ஒற்றுமை தரும்‌.
  • மூன்று முக தீபம்‌ ஏற்றினால்‌ புத்திர சுகம்‌ தரும்‌.
  • நான்கு முக தீபம்‌ ஏற்றினால்‌ பசு, பூமி சுகம்‌ தரும்‌.
  • ஐந்து முக தீபம்‌ ஏற்றினால்‌ செல்வம்‌ பெருகும்‌ என்பது ஐதீகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அக்கரகாரம் மூலிகை மருத்துவ பயன்கள்

அக்கரகாரம் மூலிகை பயன்கள்

அக்கரகாரம் அக்கரகாரம் என்னும் இந்த மூலிகைச் செடி கருமண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது. இந்த மூலிகை இந்திய மருத்தவத்தில் அதிக மதிப்பு கொண்டது. இதன் இலைகள் 15 செ.மீ. நீளமாகவும், முதலில் இளம்பச்சை நிறத்திலும்,...
ஆட்டுக்கால் பாயா குருமா

ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி

ஆட்டுக்கால் பாயா ஆட்டுக்கால் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் மிக பிரபலம். அதிலும் ஆட்டுகாலை வைத்து செய்யப்படும் பாயா டிபன் வகைகளுக்கு சிறந்த சைடுடிஷ் ஆகும். ஆட்டுகால் எப்படி செய்வது என்பதை பின்வருமாறு பார்ப்போம். ஆட்டுக்கால்...
aarkadu makkan beda

ஆற்காடு மக்கன் பேடா செய்வது எப்படி

ஆற்காடு மக்கன் பேடா தேவையான பொருட்கள் மைதா - 1 கப் இனிப்பு இல்லாத கோவா - 150 கிராம் வெண்ணெய்  - 1 ஸ்பூன் சமையல் சோடா - 1 சிட்டிகை எண்ணெய்...
பங்குனியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பனிரெண்டு தமிழ் மாதங்களில் பங்குனி மாதம் கடைசி மாதமாகும். சூரியன் மீன ராசியில் பிரவேசிக்கும் காலம் பங்குனி மாதமாகும். இந்த பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தமிழ்கடவுள்...
யோனி பொருத்தம் என்றால் என்ன

யோனிப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

யோனிப் பொருத்தம் என்றால் என்ன? திருமணத்தைப் பொருத்தவரை யோனிப் பொருத்தம் என்பது மிக மிக முக்கியமான பொருத்தம் ஆகும். திருமணத்தின் முக்கிய குறிக்கோளே வம்சத்தை விருத்தி செய்வது ஆகும். ஆண், மற்றும் பெண்ணின் தாம்பத்திய...

ஆட்டு தலைக்கறி குழம்பு செய்வது எப்படி

ஆட்டு தலைக்கறி குழம்பு ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகளவில் உள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் பல்வேறு வித பலன்களை தருகிறது. சிலருக்கு ஆட்டின் தலைக்கறி மிகவும் விருப்ப உணவாக இருக்கும். தலைக்கறியை சாப்பிட்டால் இதயநோய்கள்...
கரிசலாங்கன்னி கீரை

கரிசலாங்கண்ணி மருத்துவ குணங்கள்

கரிசலாங்கண்ணி கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை என்பது ஒரு மருத்துவ மூலிகைச் மற்றும் கீரை செடியாகும். கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உள்ளன. அவை மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி ஆகும். மஞ்சள் நிற பூக்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.