கார்த்திகை தீபம் விளக்கேற்றும் முறை மற்றும் பலன்கள்

கார்த்திகை தீபம்

கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றும் முறை நமது தமிழகத்தில் இருந்து வருகின்றது. கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் நம் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டால் தீய சக்திகள் நம்மை நெருங்காது.

கார்த்திகை தீபத்தன்று நமது வீட்டில் 27 விளக்குகள் ஏற்றுவது வழக்கம். 27 விளக்குகள் 27 நட்சத்திரங்களை குறிக்கும். 27 விளக்குகள் ஏற்றி வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றி வழிபட்டால் நம் இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் நாம் பெற முடியும்.

கார்த்திகை தீபம் விளகேற்றும் முறை

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திக்கை தீப திருவிழா மிகவும் பிரசித்தியாக நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. கார்த்திகை தீபம் அன்று அதிகாலை 4 மணி அளவில் கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அதை தொடர்ந்து மாலை 6 மணி அளவில்‌ அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகாதீபம் ஏற்றப்படும்‌.

இந்த வருடம் திருக்கார்த்திகை வரும் டிசம்பர் 6 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை தீபம் ஏற்றும் முறை

  • கார்த்திகை தீப திருநாள் அன்று ஏற்றக்கூடிய அகல் விளக்குகள் புதிதாக தான் வாங்கி ஏற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
    நீங்கள் முன்பு பயன்படுத்திய விளக்குகளை நன்கு சுத்தம் செய்து துடைத்து பின் பயன்படுத்தலாம்.
  • புதிய விளக்கு ஏற்ற வேண்டும் என்று விரும்புபவர்கள் தலைவாசலில் ஏற்றக் கூடிய 2 விளக்குகளை மட்டும் புதிதாக வாங்கிக் கொள்ளலாம்.
  • விளக்கில் விரிசல் எதுவும் இல்லாமல் நல்ல விளக்காக இருப்பது நல்லது.
  • பித்தளை, வெள்ளி போன்ற பிற விளக்குகளை ஏற்றுவதைக் காட்டிலும் மண்ணால் செய்யபட்ட அகல் விளக்குகளை ஏற்றுவது சிறந்தது.
  • அகல் விளக்குகளை மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரித்துக் கொண்டு பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தி ஏற்ற வேண்டும்.
  • கார்த்திகை தீபத்தன்று ஒரு அகல் விளக்கினை முதலில் ஏற்றி விட்டு அதிலுருந்து மற்ற விளக்குகளை ஏற்றுவது நல்லது.
  • கார்த்திகை தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்
  • கார்த்திகை திருநாளன்று தலைவாசலில் 2 தீபங்களும், பூஜை அறையில் 5 தீபங்களும் ஏற்ற வேண்டும். இந்த 5 தீபங்களையும் வட்டமாக எல்லா திசைகளிலும் வெளிச்சம் படும்படி ஏற்ற வேண்டும்.
  • வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் தீபம் ஏற்ற வேண்டும். குறிப்பாக சமயலறையிலும் விளக்கேற்ற வேண்டும்.
  • வாசலில் அரிசி மாவினால் கோலமிட்டு அந்த கோலத்தின் நடுவில் ஒரு விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும்.
  • உங்கள் வீட்டில் துளசி செடி , நெல்லி மரம் , மாதுளை மரம் போன்றவை இருந்தால் அங்கும் விளக்கேற்றி வைக்க வேண்டும். ஏன் என்றால் இந்த மூன்றிலும் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

கார்த்திகை தீபம் எந்த திசை நோக்கி ஏற்ற வேண்டும்?

  • கிழக்கு திசை நோக்கி விளக்கேற்றினால் துன்பம் நீங்கும், குடும்ப அபிவிருத்தி ஏற்படும்.
  • மேற்கு திசை நோக்கி விளக்கேற்றினால் கடன், தோஷம் நீங்கும்.
  • வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் திருமணத்தடை அகலும்.
  • தெற்கு திசை நோக்கி ஏற்றுவது குடும்பத்திற்கு நல்லதல்ல.
  • கார்த்திகை தீப விளக்கு
  • நம் வீட்டு பூஜையறையில்‌ ஒரு முக தீபம்‌ ஏற்றினால்‌ மத்திம பலன்‌ தரும்‌.
  • இரண்டு முக தீபம்‌ ஏற்றினால்‌ குடும்பம்‌ ஒற்றுமை தரும்‌.
  • மூன்று முக தீபம்‌ ஏற்றினால்‌ புத்திர சுகம்‌ தரும்‌.
  • நான்கு முக தீபம்‌ ஏற்றினால்‌ பசு, பூமி சுகம்‌ தரும்‌.
  • ஐந்து முக தீபம்‌ ஏற்றினால்‌ செல்வம்‌ பெருகும்‌ என்பது ஐதீகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய

சரும அழகை பராமரிக்க சில எளிய அழகு குறிப்புகள்

சரும அழகை பராமரிக்க சில எளிய அழகு குறிப்புகள் சரும அழகை மேம்படுத்த நாம் செய்யும் சில விஷயங்கள் சருமத்திற்கு அழகு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் சரும நோய்கள் ஏற்படாமலும் தடுக்கிறது. இரவில் தயிருடன் சிறிதளவு...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மிதுன லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் அழகானவர்கள், மற்றும் அறிவாளிகள் என்பதால் சாதுரியமான செயல்களை செய்வார்கள். நல்ல பேச்சாற்றல் மிக்கவராகவும், கணக்கில் ஆர்வம் மிக்கவராகவும்...
brain games in tamil

Puthirgal with Answers | Vidukathaigal | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
how to make aval payasam in tamil

அவல் பாயாசம் செய்வது எப்படி ?

அவல் பாயாசம் தேவையான பொருட்கள் அவல் – 1 கப் வெல்லம் – ½ கப் பால் - 2 கப் ஏலக்காய் தூள்  - சிறிதளவு முந்திரிப்பருப்பு – தேவையான அளவு நெய்...
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரேவதி நட்சத்திரத்தின் இராசி : மீனம் ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி : புதன் ரேவதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு ரேவதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஈஸ்வரன் ரேவதி நட்சத்திரத்தின் பரிகாரத்...
சப்தமி திதி பலன்கள்

சப்தமி திதி பலன்கள், சப்தமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

சப்தமி திதி சப்தம் என்றால் ஏழு என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஏழாவது நாள் சப்தமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சப்தமியையை சுக்கில பட்ச சப்தமி என்றும், பௌர்ணமிக்கு...
6ம் எண் குணநலன்கள்

6ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

6ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 6ம் எண் சுக்கிரன் பகவானுக்குரிய எண்ணாகும். 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். சுக்கிரனை வெள்ளி என்றும் அழைப்பார்கள். 6ம் எண்ணின் ஆதிக்கத்தில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.