இந்த 4 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும், இரத்த சர்க்கரை அளவை நீங்களே சுலபமாக குறைக்கலாம்

சர்க்கரை நோய் 

இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது வீட்டில்  ஒருவருக்கு கண்டிப்பாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம்.

நாகரீகம் என்ற பெயரில் நம் முன்னோர்கள் நமக்கு சொன்ன பல நல்ல வழிமுறைகளை நாம் இன்று பின்பற்றுவதே இல்லை. இதுவே தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நீரிழிவு நோய் வர காரணமாகிவிட்டது.

சர்க்கரை நோய் வர காரணம் இது ஒரு பொதுவான நோயாக கருதப்பட்டாலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அதன் கஷ்டம் என்னவென்பதை உணர முடியும்.  இந்நோய் உடலின் இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது, கணையத்தால் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் போகிறது.

நீரிழிவு நோய் வருவதற்கு காரணம் நமது உணவுமுறை, உடல் உழைப்பின்மை, மரபணு போன்ற பல காரணிகள் காரணங்களாக அமைகின்றது.  நீரிழிவு நோய் உயிருக்கு ஆபத்து என்று கருதப்பட்டாலும் நாம் இதனை திறம்பட கையாள்வதன் நோயை குணப்படுத்தி நமது ஆயுளை நீட்டிக்க முடியும்.

ஆயுர்வேதத்தில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், அவை வராமல் தடுக்கவும் பல மூலிகை சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகிறது. நமது உணவில் சில மூலிகை பொருட்களை சேர்த்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைத்து நோயிலிருந்து மீள முடியும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் 4 பொருட்கள்

சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் திரிபலா 1. திரிபலா

ஆயுர்வேதத்தில் திரிபலாவின் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் கூறப்பட்டுள்ளது, அதில் முக்கியமானது உடலின் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.  இது கணையத்தின் செயல்திறனை தூண்டி இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது.

இன்சுலின் அளவை கட்டுபடுத்தும் வேப்பிலை2. வேம்பு

பழங்காலம் முதல் வேப்பிலையை பல நோய்களை தீர்க்கும் மருந்தாக மக்கள் கருதி வருகின்றனர். வேப்பிலை மரத்தின் ஒவ்வொரு பாகமும் நமக்கு பலவித நன்மைகளை தருகிறது.  வேப்ப இலைகளை சுத்தமாக அலசி அதனை சற்று நசுக்கி தண்ணீரில் சேர்த்து கொதிக்கவைத்து சாறை வடிகட்டி அந்த சாரை குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு படிப்படியாக குறைய தொடங்கும். குளுக்கோஸால் ஏற்படும் ஹைப்பர் கிளைசீமியாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான மிகச் சிறந்த சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகும்.

நெல்லிக்காய் ஜூஸ்3. நெல்லிக்காய்

நெல்லிக்காய் மருத்துவ உலகிற்கு கிடைத்த ஒரு அறிய பொக்கிஷமாகும். நெல்லிக்காய் அனைத்து வயதினரும் சாப்பிடக்கூடிய ஒரு சிறந்த மருத்துவ குணம் நிறைந்த கனியாகும். நெல்லிக்காய் சாப்பிடுவது இளமை தோற்றம், அடர்த்தியான முடி மற்றும் நோயெதிர்ப்பு சக்தி போன்றவற்றை ஊக்குவிப்பதாக அறிந்திருக்கிறோம்.  நெல்லிக்காயில் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியான வைட்டமின் சி சத்து நிறைய இருப்பதால், ஆயுர்வேத மருத்துவர்கள் இதனை நீரிழிவு சிகிச்சைக்கு பரிந்துரைக்கின்றனர். நெல்லிக்காயை நேரடியாகவோ அல்லது ஜூஸாகவோ தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது.

பாகற்க்காய் நன்மைகள் 4. பாகற்காய் 

இயற்கையிலேயே இனிப்பான உணவுப்பொருட்களை விட கசப்பான உணவுப்பொருட்கள் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.  அதிலும் குறிப்பாக பாகற்காய் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது, டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் சாறு சிறந்த மருந்தாக பயன்படுகிறது என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஓரிதழ்த்தாமரை மருத்துவ பயன்கள்

ஓரிதழ்த்தாமரை மருத்துவ பயன்கள்

ஓரிதழ்த்தாமரை ஓரிதழ்த்தாமரை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. வயல்வெளிகள், பாழ் நிலங்கள், களர் நிலங்களிலும் சாதாரணமாகக் வளரும். ஈரப்பதம் மிக்க இடங்களில் வளரும். இது நீளமான இலைகளை உடையது. ஓரிதழ்த்தாமரை இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை. இது...
மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை

திருமணத்தில் ஏழு அடி பிரார்த்தனை ஏன் செய்யபடுகிறது?

மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை திருமணத்தில் பல விதமான சடங்குகள் செய்யபட்டாலும் அதன் முழுமையான அர்த்தம் பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று தான் மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை. ஏழு அடி பிரார்த்தனை என்றால்...
தண்ணீர்

ஸ்லிம்மான அழகிய உடல் அமைப்பை பெற சில எளிய டிப்ஸ்

அழகான உடல் அமைப்பை பெற எளிய டிப்ஸ்  உடல் எடை அதிகரிப்பால் இன்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாம் அனைவரும் எதிர்ப்பார்ப்பது மெலிந்த அழகான உடல் அமைப்பை தான். நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை...
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரேவதி நட்சத்திரத்தின் இராசி : மீனம் ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி : புதன் ரேவதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு ரேவதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஈஸ்வரன் ரேவதி நட்சத்திரத்தின் பரிகாரத்...
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் தனுசு லக்னத்தின் அதிபதி குரு பகவனாவார். தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவாளிகளாகவும், விவேகம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் வயதில் மூத்தவர்களையும், படித்தவர்களையும் மதித்து மரியாதை செலுத்துவார்கள். சுறுசுறுப்பான...
கிரீன் டீ செய்முறை

கிரீன் டீ குடிப்பது நல்லதா கெட்டதா ?

கிரீன் டீ பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி ,டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கிரீன்...
ஜாதக யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #9

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து ஜோதிடரால் கணிக்கப்படுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.