தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

தீ விபத்து ஏற்பட்டால்

நாம் எதிர்பார்க்காத நேரங்களில் வீட்டிலோ, அலுவலகத்திலோ, வேறு இடங்களிலோ தீ விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அந்த சமயத்தில் நாம் என்ன மாதிரியான முன் எச்சரிக்கை மற்றும் முதலுதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.

தீ விபத்துக்கான முதலுதவிகள்

1. என்ன வகையான தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பதை பொருத்து நீங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறிய அளவு தீ விபத்து எனில் நீங்களே அதை அணைத்து விடலாம். உங்களால் முடியாத பட்சத்தில் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

2. தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

3. எண்ணெய் அல்லது அமிலம் காரணமாக ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க வேண்டும். மற்ற வகையான தீ விபத்துகளுக்கு நீரை ஊற்றி அணைக்க வேண்டும்.

4. தீ விபத்தின் போது ஒரு நபருக்கு தீ பற்றிக் கொண்டால், கம்பளி அல்லது வேறு துணியால் அந்நபரை சுற்றி, அவர்களை தரையில் உருட்டி தீயை அணைக்க முயற்சி செய்ய வேண்டும்.

5. ஒருவரின் ஆடையில் தீப்பற்றி கொண்டால் பயந்து ஓடக்கூடாது. அப்படி ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பரவும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்து தரையில் உருள வேண்டும்.

6. தீக்காயம் ஏற்பட்ட இடத்தை உடனே குளிர்சியாக்க வேண்டும். இதற்கு அதிகளவு குளிர்ந்த, சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.

7. தீக்காயம் ஏற்பட்ட இடத்தை சுத்தமாகவும் மற்றும் வறட்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தீ காயம் ஏற்பட்ட இடத்தை ஒரு துணியால் தளர்ந்த நிலையில் கட்டி பாதுகாக்க வேண்டும். தீக்காயமானது பெரியதாக இருந்தாலோ அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டு இருந்தாலோ பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். கொப்புளங்களை உடைக்கக் முயற்சிக்க கூடாது.

8. தீ விபத்து ஏற்பட்டு தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை எடுக்க கூடாது. மேலும் குளிர்ந்த நீரைத் தவிர எந்த ஒரு பொருளையும் தீக்காயத்தில் போடக் கூடாது.

9. தீ விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு சிறிய தீக்காயங்கள் இருந்தால் பழச்சாறு அல்லது உப்பு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் போன்ற திரவ உணவுகளைக் குடிக்க கொடுக்க வேண்டும்.

10. சூடான பாத்திரங்களை தொடுவதலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்த்தல், நகத்தால் கிள்ளுதல் போன்றவை கூடாது. அந்தக் கொப்புளங்களின் மீது ‘ஆன்டிசெப்டிக்’ மருந்துகளை வைத்து இறுக்கமில்லாமல் கட்டுப் போடலாம்.

தீ புண்களுக்கான முதலுதவிகள்
12. தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை தீ காயத்தின் மீது தடவலாம். மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை தீ புண்ணின் மீது தடவினால் அது ஒரு படலம் போன்று பரவி கிருமிகள் உள்ளே செல்லாதவாறு தடுக்கும். மேலும் பாதிக்கப்பட்ட இடத்தில் ஏற்படும் எரிச்சலை குறைக்கும்.

13. கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டால் அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலி மற்றும் எரிச்சலை குறைக்கும். இதற்கு வாழை இலை பயன்படுத்துவார்கள்.

14. தீக்காயம் ஏற்பட்டவருக்கு சிறு இடைவெளிகளில் உப்பு கலந்த நீர், எலுமிச்சைசாறு, வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மூளை வறுவல்

மூளை மிளகு வறுவல் செய்வது எப்படி?

மூளை மிளகு வறுவல் மட்டன் உணவுகள் ஆரோக்கியம் நிறைந்தவையாகும். மட்டனை வைத்து விதவிதமாக உணவுகள் சமைக்கப்படுகிறது. மட்டன் மூளை வைத்து செய்யப்படும் உணவுகள் ருசி நிறைந்தவையாகும். அந்தவகையில் மட்டன் மூளை மிளகு வறுவல் எவ்வாறு...
பந்தக்கால் நடுதல்

திருமணத்தில் பந்தக்கால் அல்லது முகூர்த்தகால் நடப்படுவது ஏன்

பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவது ஏன்? பெரும்பாலான இந்து திருமணங்களில் திருமணதிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவார்கள். எதற்கு இந்த பந்தக்கால் நடுகிறார்கள் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. நம்...
அமில பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்

அமில பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

அமில பாதிப்பு ஏற்பட்டால் வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலங்கள் உபயோகப்படுத்துவோம். எவ்வளவுதான் ஜாக்கிரதையாக அமிலத்தை கையாண்டாலும் நம்மை அறியாமல் ஒரு சில விபத்துகள் ஏற்படும். மேலும்...
அழகான பாதங்கள்

உங்கள் பாதங்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்.

பாதங்கள் நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பாதங்களின் அழகும் முக்கியம் தான். ஆனால் பெண்கள் தங்கள் முகம், தலைமுடி,...
Riddles with Answers

Brain Teasers with Answers | Riddles and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி : கன்னி அஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன் அஸ்தம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஆதித்யன் அஸ்தம் நட்சத்திரத்தின் பரிகார...
புலி கனவு பலன்கள்

காட்டு விலங்குகளை கனவில் கண்டால் என்ன பலன்

காட்டு விலங்குகளை கனவில் கண்டால் கனவு என்பது ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருக்கும்போது நம்மை அறியாமல் வருவதாகும். குறிப்பிட்ட சில சமயங்களில், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.