தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

தீ விபத்து ஏற்பட்டால்

நாம் எதிர்பார்க்காத நேரங்களில் வீட்டிலோ, அலுவலகத்திலோ, வேறு இடங்களிலோ தீ விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அந்த சமயத்தில் நாம் என்ன மாதிரியான முன் எச்சரிக்கை மற்றும் முதலுதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.

தீ விபத்துக்கான முதலுதவிகள்

1. என்ன வகையான தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பதை பொருத்து நீங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறிய அளவு தீ விபத்து எனில் நீங்களே அதை அணைத்து விடலாம். உங்களால் முடியாத பட்சத்தில் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

2. தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

3. எண்ணெய் அல்லது அமிலம் காரணமாக ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க வேண்டும். மற்ற வகையான தீ விபத்துகளுக்கு நீரை ஊற்றி அணைக்க வேண்டும்.

4. தீ விபத்தின் போது ஒரு நபருக்கு தீ பற்றிக் கொண்டால், கம்பளி அல்லது வேறு துணியால் அந்நபரை சுற்றி, அவர்களை தரையில் உருட்டி தீயை அணைக்க முயற்சி செய்ய வேண்டும்.

5. ஒருவரின் ஆடையில் தீப்பற்றி கொண்டால் பயந்து ஓடக்கூடாது. அப்படி ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பரவும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்து தரையில் உருள வேண்டும்.

6. தீக்காயம் ஏற்பட்ட இடத்தை உடனே குளிர்சியாக்க வேண்டும். இதற்கு அதிகளவு குளிர்ந்த, சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.

7. தீக்காயம் ஏற்பட்ட இடத்தை சுத்தமாகவும் மற்றும் வறட்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தீ காயம் ஏற்பட்ட இடத்தை ஒரு துணியால் தளர்ந்த நிலையில் கட்டி பாதுகாக்க வேண்டும். தீக்காயமானது பெரியதாக இருந்தாலோ அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டு இருந்தாலோ பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். கொப்புளங்களை உடைக்கக் முயற்சிக்க கூடாது.

8. தீ விபத்து ஏற்பட்டு தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை எடுக்க கூடாது. மேலும் குளிர்ந்த நீரைத் தவிர எந்த ஒரு பொருளையும் தீக்காயத்தில் போடக் கூடாது.

9. தீ விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு சிறிய தீக்காயங்கள் இருந்தால் பழச்சாறு அல்லது உப்பு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் போன்ற திரவ உணவுகளைக் குடிக்க கொடுக்க வேண்டும்.

10. சூடான பாத்திரங்களை தொடுவதலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்த்தல், நகத்தால் கிள்ளுதல் போன்றவை கூடாது. அந்தக் கொப்புளங்களின் மீது ‘ஆன்டிசெப்டிக்’ மருந்துகளை வைத்து இறுக்கமில்லாமல் கட்டுப் போடலாம்.

தீ புண்களுக்கான முதலுதவிகள்
12. தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை தீ காயத்தின் மீது தடவலாம். மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை தீ புண்ணின் மீது தடவினால் அது ஒரு படலம் போன்று பரவி கிருமிகள் உள்ளே செல்லாதவாறு தடுக்கும். மேலும் பாதிக்கப்பட்ட இடத்தில் ஏற்படும் எரிச்சலை குறைக்கும்.

13. கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டால் அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலி மற்றும் எரிச்சலை குறைக்கும். இதற்கு வாழை இலை பயன்படுத்துவார்கள்.

14. தீக்காயம் ஏற்பட்டவருக்கு சிறு இடைவெளிகளில் உப்பு கலந்த நீர், எலுமிச்சைசாறு, வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி

சத்தான கேழ்வரகு முறுக்கு செய்முறை

கேழ்வரகு முறுக்கு தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு – 500 கிராம் அரிசி மாவு - 50 கிராம் உடைத்த கடலை மாவு – 50 கிராம் சீரகம் – 1 ஸ்பூன் வெண்ணை...
காகம் கரையும் பலன்கள்

காகம் சொல்லும் சகுனங்கள்

காகம் உணர்த்தும் சகுனம் காகம் இந்தியாவில் அதிக அளவில் காணப்படும் பறவை இனம் ஆகும். இந்து சமயத்தில் காகம் அதிக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. எம லோகத்தின் வாயிலில் காகம் வீற்று இருப்பதாக ஒரு...
தரை பசலை கீரை நன்மைகள்

தரை பசலை கீரையின் மகத்தான மருத்துவ பயன்கள்.

தரை பசலை என்கிற சிறு பசலை தரையில் படரும் கீரை வகைகளுள் பசலை கீரை முக்கியமான ஒன்றாகும். இதற்கு சிறு பசலை, தரை பசலை என்ற வேறு பெயர்களும் உண்டு. உடலின் நோய் எதிர்ப்பு...
அத்திப்பழம் நன்மைகள்

அத்திப்பழம் பயன்கள் | அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்

அத்திப்பழம் அத்திப்பழம் மரம் ‘மோரேசி’ Moraceae என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. அத்தியின் அறிவியல் பெயர் Ficus glomerata மற்றும் Ficus auriculate ஆகும். அத்திப்பழம் ஆங்கிலத்தில் 'fig' என அழைக்கபடுகிறது. அத்திமரம் களிமண்...
செட்டிநாடு பெப்பர் சிக்கன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி

செட்டிநாடு பெப்பர் சிக்கன் வறுவல் நம் பாரம்பரிய உணவு முறைகளில் செட்டிநாடு உணவு முறைகென்று ஒரு தனி இடம் உண்டு. செட்டிநாடு உணவுகளின் மணமும், சுவையும் இதற்க்கு சான்று. செட்டிநாடு உணவு முறைகளில் அசைவு...
tamil puzzles with answers

Riddles with Answers | Brain Teasers and Puzzles | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
புரட்டாசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள் புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவு மற்றும் திறமையுடன் ஞான மிக்கவராக இருப்பார்கள். இவர்கள் எளிதில் எவற்றையும் கற்கும் திறமை கொண்டவர்கள். சாமர்த்தியமாக பேசுவதில் வல்லவர்கள். இம்மாதத்தில் பிறந்தவர்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.