குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் உணவுகள்

குழந்தைகளை சுறுசுறுப்பாக்கும் உணவுகள்

குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்கவும், அவர்கள் அனைத்திலும் சிறப்பாக கவனம் செலுத்தவும்,  சரியான சீரான உணவு அவசியமாகிறது. குறிப்பாக துருதுருவென சுறுசுறுப்பாக இருக்கும்  குழந்தைகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.

துருதுருவென இருக்கும் குழந்தைகளுக்குகுழந்தையின் அறிவாற்றல் மற்றும் செயல்திறனில் மூளையின் வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமானது. குழந்தைகள் எப்பொழுதுமே சத்தான ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் குழந்தையின் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தான் மூளையின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாக அமைகிறது.

எனவே அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கொடுப்பது அவசியமாகும். அவர்களின் உணவில் வைட்டமின்க, தாதுக்கள், மினரல்கள் , கல்சியம், புரதம் போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும்.

குழந்தைகளின் ஆரோக்கியம் சிறு வயதில் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்ட குழந்தைகளின் ஐக்யூ நன்றாக இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். ஒரு குழந்தையின் மூளையானது 5 வயது வரை 90 % வரை வளர்ச்சி அடைகிறது. எனவே இந்த கால கட்டத்தில் குழந்தைக்கு ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை வழங்க வேண்டும்.

மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் உணவுகள்

  • பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மை நிறைந்துள்ளது. வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
  • தேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. தேனை அடிக்கடி சாப்பிடுவது புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுவதுடன் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
  • நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும், மூளை வளர்ச்சிக்கும் நல்லது.
  • மூளை சுறுசுறுப்பாக இருக்க தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால், மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச் செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.
  • கடல் உணவுகளான மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது.  இந்த ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டிற்கும் சிறந்தது. மூளையின் செயல்பாட்டிற்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மிகவும் முக்கியமானது.
  • குழந்தைகளுக்கு காலை உணவாக ஓட்ஸ் உண்பது மூளையை சுறுசுறுப்பாக்க உதவுகிறது. வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும்.  நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது.
  • பீன்ஸில் புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. சிறுநீரக பீன்ஸ் மற்றும் பிண்டோ பீன்ஸ் மற்ற பீன்ஸ் வகைகளை விட அதிகளவு ஓமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளது. எனவே இந்த பீன்ஸை குழந்தைகளுக்கு அவித்து சாப்பிட கொடுக்கலாம்.
  • பால் மற்றும் பாலில் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. அதுவும் வளரும் குழந்தைகளுக்கு இந்த உணவு நல்ல ஒரு உடல் வளர்ச்சியைத் தருவதோடு, மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது.
  • முட்டையில் இல்லாத ஊட்டச்சத்தே இல்லை என்று கூறலாம். இதில் கார்ப்ஸ், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் என நிறைய சத்துக்கள் காணப்படுகிறது. உங்க குழந்தை நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது. முட்டையில் உள்ள அதிகளவு புரோட்டீன் மற்றும் கோலின் போன்றவை குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
  • காய்கறிகள் மற்றும் கீரைகளை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது வளரும் குழந்தைகள் சாப்பிட வேண்டிய உணவுகளில் மிகவும் முக்கியமானது. இதில் உள்ள சத்துக்கள் குழந்தைகளுக்கு பலத்தை கொடுக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

புத்திர தோஷம்

புத்திர தோஷம் என்றால் என்ன? புத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் என்றால் என்ன நமக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நாம் முற்பிறவியில் செய்த கர்மவினைகளை பொறுத்தே அமைகிறது. முற்பிறவியில் பெற்றோர்களை மதிக்காமல் கொடுமைபடுத்தியிருந்தால், அவர்கள் கொடுத்த சாபத்தால் இந்த ஜென்மத்தில் புத்திர தோஷம்...
1ம் எண்ணில் பிறந்தவர்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 1ம் எண் சூரிய பகவானுக்கு உரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். முதலாம் எண்ணில்...
சித்த மருத்துவம் பயன்கள்

சித்த மருத்துவம் என்றால் என்ன? சித்த மருத்துவ பயன்கள்

சித்த மருத்துவம் சித்த மருத்துவம் (Siddha Medicine) என்பது பழங்காலத்தில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ முறையாகும். சித்த வைத்தியத்தை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை...
திருமண தோஷம்

எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்

எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஜாதகத்தில் இருக்கிற கிரகங்கள் தான் ஒருவரை யோகம் உள்ளவராகவும், யோகம் அற்றவராகவும் மாற்றுகிறது. அதே போல தான் ஒவ்வொரு ஜாதகருக்கும் தோஷம் அமைகிறது. நாம் முந்தைய பிறப்பில் செய்த...
சிக்கன் சுக்கா செய்யும் முறை

சிக்கன் சுக்கா வறுவல் செய்வது இவ்வளவு சுலபமா

சிக்கன் சுக்கா வறுவல் சிக்கனின் சுவையே அலாதிதான். அதிலும் சிக்கனை விதவிதமாக செய்து சாப்பிடுவதை மிகவும் விரும்புவார்கள் சிக்கன் பிரியர்கள். அந்த வகையில் இன்று நாம் காண இருப்பது காரசாரமான சிக்கன் சுக்கா வறுவல்,...
அஷ்டமி நவமி திதிகள்

அஷ்டமி, நவமி திதிகள் ஏன் மக்களால் புறகணிக்கப்டுகின்றன

அஷ்டமி, நவமி திதிகள் அமாவாசை, மற்றும் பௌர்ணமி நாட்களுக்கு பிறகு வரும் 8வது நாள் அஷ்டமி, 9வது நாள் நவமி ஆகும். அஷ்டமி, நவமி வரும் திதிகளில் நல்ல காரியங்கள் செய்ய கூடாது, அல்லது...
சேமியா கேசரி செய்முறை

கல்யாண வீட்டு சேமியா கேசரி

சேமியா கேசரி தேவையான பொருட்கள் சேமியா – 1 கப் சர்க்கரை – 1/2  கப் நெய் – தேவையான அளவு முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு ஏலக்காய்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.