முதலுதவி என்றால் என்ன? முதலுதவியின் வரலாறு

முதலுதவி என்றால் என்ன

முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் சிகிச்சையாகும். தேவையான முழு மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயம்பட்ட நபர்க்கு கொடுக்கபடும். இது மருத்துவத்துறையில் சிறப்புபெற்ற நபர் மூலம் அளிக்கப்படும்.

ஒரு சில சாதாரண நோய்கள் மற்றும் சிறு காயங்களுக்கு முதலுதவி மட்டுமே போதுமானது. முதலுதவி என்பது சில சமயங்களில் உயிரை காப்பாற்றுகிற திறன்களை உள்ளடக்கியது. இவைகளை ஒருவர் குறைந்த அளவிலான உபகரணங்களைக் கொண்டு செயல்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.

முதலுதவியின் பயன்கள்

முதலுதவி அனைத்து மனிதர்களுக்கும், மற்றும் விலங்குகளுக்கும் கொடுக்கப்படலாம் என்றாலும், பொதுவாக முதலுதவி மனிதர்களுக்கு தரும் கவனிப்பையே குறிக்கிறது.

முதலுதவியின் வரலாறு

முதலுதவி செய்யும் பழக்கம் முதன்முதலில் பதினோராம் நூற்றாண்டில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதன் பழக்கம் நடுவில் வெகுவாக கைவிடப்பட்டது. அதன் பிறகு 1859 இல் தான் ஜீன் ஹென்ரி டுனன்ட் என்பவர், சல்பிரினோ என்னும் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய கிராமவாசிகளை திரட்டினார். அவர்களும் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்தனர். நான்கு வருடங்களுக்கு பின்பு, நான்கு நாடுகள் ஜெனீவாவில் சந்தித்து, போரால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு சங்கத்தை உருவாக்கினார்கள். அதுதான் செஞ்சிலுவை சங்கமாக வளர்ந்தது.

அதன் பிறகு புனித ஜான் அவசர ஊர்தி ஒன்று 1877 இல் தொடங்கப்பட்டது. அது முதலுதவியை பற்றி சொல்லி கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. மேலும் அதனுடன் நிறைய சங்கங்கள் இணைந்தன. இது போன்ற செயல்களால் முதலுதவி என்னும் சொல் 1878 இல் முதன் முதலில் வழக்கத்தில் வந்தது.

பல தொடர்வண்டி நிலையங்களிலும், சுரங்கங்களிலும் அவசர ஊர்தி சேவைகளானது முதல் சிகிச்சை (first aid treatment) என்ற பெயரிலும் தேசிய சேவை (national aid) என்ற பெயரிலும் செய்யப்பட்டன. 1878 இல் அறுவை சிகிச்சை நிபுணர் ‘பீட்டர் ஷெபர்ட்’ என்பவர் பொதுமக்களுக்கு முதல் உதவி சிகிச்சைகள் பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். அவர் டாக்டர் கோல்மன் என்பவருடன் இணைந்து உருவாக்கிய பாடத்திட்டத்தை கொண்டு வுல்விச் என்னும் இடத்திலுள்ள பிரஸ்பைடிரியன் பள்ளியில் பாடங்கள் நடத்தினார். ஷெபர்ட் தான் முதன் முதலில் காயப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் முறைக்கு முதலுதவி என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இச்செயல்களுக்குப் பிறகு முதலுதவியின் பயிற்சி வகுப்புகள் வெகுவாக ஆங்காங்கே நடத்தப்பட்டது.

இவ்வாறு முதலுதவி இயக்கங்கள் உலகமெங்கும் தொடங்கபெற்று இன்று பல கோடி பேரை ஒவ்வொரு ஆண்டும் காப்பாற்றி வருகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அத்திப்பழம் நன்மைகள்

அத்திப்பழம் பயன்கள் | அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்

அத்திப்பழம் அத்திப்பழம் மரம் ‘மோரேசி’ Moraceae என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. அத்தியின் அறிவியல் பெயர் Ficus glomerata மற்றும் Ficus auriculate ஆகும். அத்திப்பழம் ஆங்கிலத்தில் 'fig' என அழைக்கபடுகிறது. அத்திமரம் களிமண்...
கனவுகளின் அர்த்தங்கள்

உங்களை பற்றிய கனவு பலன்கள்

உங்களை பற்றிய கனவு பலன்கள் கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. மனிதர்கள் முதல் விலங்குகள் வரை எல்லோருக்கும் கனவுகள் வருகின்றன. சில கனவுகள் நம் அனைவருக்கும் ஒரே விதமாக, ஒரே மாதிரியாக வந்திருக்கலாம். அவற்றுக்கு...
அமாவாசையில் ஏன் கோலம் போடக்கூடாது

அமாவாசை அன்று வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது?

அமாவாசையில்  வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது? தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் கோலம் போடுவதை  நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். தினந்தோறும் கோலமிடுவதால் வீட்டில் தெய்வகடாட்சம்  நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். நமது...
பெண்கள் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகள்

பெண்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

பெண்கள் தினசரி  சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள் தங்களை கவனிக்க தவறிவிடுகின்றனர். ஒரு வீட்டின் பெண் ஆரோக்கியமாக இருந்தால் தான் அந்த குடும்பத்தில் உள்ள...
வல்லாரை கீரை நன்மைகள்

வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்

வல்லாரை கீரை வல்லாரை கீரை என்பது ஒரு பல்வேறு மருத்துவ மூலிகைப் பயன்பாட்டுடைய கீரை வகைத் தாவரமாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகளை உணவாகப் பயன்படுத்துவதால்...
மொட்டை போடுவது ஏன்

பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் தெரியுமா

குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஒரு உண்மை மறைந்திருக்கும். அப்படிப்பட்ட...
அப்பம் செய்யும் முறை

இனிப்பு அப்பம் செய்வது எப்படி

அப்பம் இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியங்களில் முக்கியமான ஒன்று இனிப்பு அப்பம் ஆகும். இந்த அப்பம் சுவையானது மட்டுமல்லாமல் செய்வதும் மிகவும் எளிதான ஒரு பலகாரம் ஆகும். சுவையான இனிப்பு அப்பம் எப்படி செய்வது என்பதை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.