மின்சார விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

மின்சார விபத்து

மழைக் காலங்களில் மின்சார விபத்து ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. புயல், மழை காலங்களில் பொது இடங்களிலும், வீடுகளிலும் மின்சார விபத்து பல்வேறு விதங்களில் ஏற்படுகிறது. அந்த எதிர்பாராத நேரத்தில்  மின்சார விபத்து ஏற்பட்டால் எப்படி கையாள்வது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

ஷாக் அடித்தால் என்ன செய்ய வேண்டும்

மின்சார விபத்துக்கான முதலுதவிகள்

மரத்தால் ஆன பொருளை உபயோகிக்கவும்

ஒருவர் மின் தாக்குதலுக்கு உள்ளானால் அவரை காப்பாற்ற போகிறவர்கள், முதலில் அவரை கண்டிப்பாக நேரடியாகத் தொட்டு விடக் கூடாது. மெயின் ஸ்விட்சை அணைத்து விட்டு மின் இணைப்பைத் முற்றிலுமாக துண்டிக்க வேண்டும். மின் இணைப்பை துண்டிக்க மரத்தாலான பொருட்களைத் தான் உபயோகப்படுத்த வேண்டும். ஏனெனில் மரக்கட்டை மின்சாரத்தை கடத்தாது.

தண்ணீர் இருக்க கூடாது

மின்சார விபத்துக்கு உள்ளனவரை சுற்றி தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தண்ணீரில் மின்சாரம் பரவும் வேகம் அதிகரிக்கும். மேலும் உயரமான இடங்களில் இருந்து மின் விபத்துக்கு உள்ளானவர் கீழே விழும்போது, கழுத்துப் பகுதியில் அடிபட வாய்ப்பு உள்ளது. எனவே, உயரமான இடங்களில் இருந்து மின்சாரம் தாக்கி கீழே விழுந்தவரின் கழுத்து பகுதியை அசைக்காமல் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

சுய நினைவு உள்ளதா என பரிசோதிக்க வேண்டும்

மின் விபத்துக்கு உள்ளனவருக்கு சுயநினைவு இருக்கிறதா? அவரால் எந்தவித சிரமமும் இல்லாமல் சுவாசிக்க முடிகிறதா? இதையெல்லாம் பரிசோதனை செய்ய வேண்டும். மின்சாரம் தாக்கி சுயநினைவு இழந்தவர்கள், சுவாசிக்க மிகவும் சிரமப்படுபவர்கள், மேலும் நெஞ்சுவலி, படபடப்பு, தீக்காயம் போன்றவை ஏற்பட்டிருக்கும். எனவே மின்சார தாக்குதலுக்கு ஆளானவரை சீக்கிரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

சாப்பிட கொடுக்க கூடாது

பொது இடங்களில் யாராவது மின்சாரம் தாக்கப்பட்டு கிடந்தால், உடனே அவசர ஊர்தியை (Ambulance) வரவழைத்து மருத்துவமனையில் உடனடியாக சேர்க்க வேண்டும். மின்சார விபத்து ஏற்பட்டவருக்கு சுவாசம் மற்றும் நாடித்துடிப்பு சீராக இல்லையென்றால், முதலுதவி செய்ய தெரிந்தவர்கள் நெஞ்சை அழுத்திவிடுதல் என்ற C.P.R. முதலுதவி சிகிச்சையை செய்வது அவசியம். மேலும் மின் விபத்து ஏற்பட்டு மயக்கமானவர்களுக்கு சாப்பிட எதுவும் கொடுக்கக்கூடாது. அவ்வாறு கொடுக்கப்படும் உணவுப் பொருளால் சுவாசக் குழாய்க்குள் அடைப்பு ஏற்பட்டு நிலைமை இன்னும் விபரீதமாகும்.

எந்த பொருளையும் கொடுக்கக் கூடாது

மின் விபத்து காரணமாக உடலில் ஏற்பட்ட தீக்காயங்களை துணியால் சுற்றக்கூடாது. தீப்புண்கள் மீது ஐஸ்கட்டி வைக்கலாம், மேலும் குளிர்ந்த நீரை மெதுவாக ஊற்றலாம். மின் விபத்தால் உள்ளுறுப்புகள் பாதிப்பு அடைய வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, இதயம், மூளை, சதைப் பகுதிகள் பாதிப்பு அடையும். கிட்னியும் பாதிக்கப்படலாம். மின்சார தாக்குதலுக்கு உள்ளானவர்களின் முகத்தில் தண்ணீர் தெளிக்கக் கூடாது. வலிப்பு ஏற்பட்டால், இரும்புப் பொருள் எதையும் கொடுக்கக் கூடாது.

மின் விபத்துக்கான முதலுதவிகள்

மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்

மின் விபத்து காரணமாக கை, கால்களை உதறும்போது கை, மற்றும் கால்களில் எலும்புகள் உடையாவே, சிராய்ப்புகள் ஏற்படவே வாய்ப்புகள் அதிகம். மின் விபத்தால் பாதிக்கப்ட்டவரின் கை, கால்கள் இயல்புக்கு மாறான நிலையில் இருந்தால் அவை அசையாமல் இருக்கும்படி நீளமான பொருளுடன் சேர்த்து கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது நல்லது.

மின்விபத்தால் பாதிக்கப்பட்டவரை எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியுமோ, அவ்வளவு விரைவாக நேரத்தை வீணாக்காமல் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது மிகவும் அவசியம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கார்த்திகையில் பிறந்தவர்களின் குணநலன்கள்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில் 8வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் கற்றது கள்ளவு...
மகர லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகர லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகர லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மகர லக்னத்தின் அதிபதி சனி பகவனாவார். மகர லக்கினத்தில் பிறந்தவர்கள் சாமர்த்தியசாலிகளாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். மனதிடம் அதிகம் உள்ளவர்கள். கடினமாக உழைக்ககூடியவர்கள். எப்போதும் கம்பீரமும் புன்னகையுமாக வலம் வருவார்கள்....
சாத்துக்குடி பழம் மருத்துவ நன்மைகள்

மருத்துவ குணங்கள் நிறைந்த சாத்துக்குடி பழம்

சாத்துக்குடி பழம் சாத்துக்குடி பழம் சிட்ரஸ் வகை பழங்களில் ஒன்றாகும். தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில், சாத்துக்குடி தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் மத்திய தரைக்கடல் பகுதியின் பிராந்தியங்களில் சாத்துக்குடி வளர்க்கப்பட்டது. இது மெக்ஸிகோ...
HOW TO MAKE COCONUT POLI

சுவையான தேங்காய் போளி

தேங்காய் போளி தேவையான பொருட்கள் வெல்லம் – 1 கப் மைதா மாவு – 1 கப் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் துருவிய தேங்காய் – 1 கப் நெய் –...
மீன் குழம்பு செய்வது எப்படி

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு தேவையான பொருட்கள் மீன் – ½  கிலோ புளி – எலுமிச்சை அளவு பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 ...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சிம்ம லக்னத்தின் அதிபதி சூரிய பகவானவார். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். மற்றவர்கள் இவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்களை கண்டு பிறர்...
நவமி திதி

நவமி திதி பலன்கள், நவமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

நவமி திதி நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஒன்பதாவது நாள் நவமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் நவமியை சுக்கில...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.