முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட்

முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட்

இயற்கையான அழகை பெற விரும்பும் பெண்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த தீர்வாகும். பீட்ரூட்டில் நம் உடலுக்கும், உள்ளுருப்புகளுக்கும் மிகவும் தேவையான ஒன்றாகும். நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் காய் வகையில் ஒன்று தான் பீட்ரூட்.

இந்த பீட்ரூட் பல நன்மைகள் தரக்கூடியவை. உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, வைட்டமின் 12 என இரத்த அணுக்கள் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்களை கொண்டுள்ளது.பீட்ரூட்டை சமைத்தும் சாப்பிடலாம், முகத்திற்கும் பயன்படுத்தலாம். பீட்ரூட்டின் நிறம் மற்றும் சுவை பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் அதில் இல்லாத சத்துக்களே இல்லை.

பீட்ரூட் அழகு குறிப்புகள்

நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை பெருக்குவதில் பீட்ரூட் மிகவும் பயன்படுகிறது. செயற்கையான க்ரீம்களை பயன்படுத்தி நம்மை அழகுபடுத்திக் கொள்வது நிரந்தரமனாது அல்ல. பீட்ரூட் இயற்கை நமக்கு கொடுத்த மிக அற்புதமான அழகுசாதன பொருளாகும். பீட்ரூட்டில் நார்ச்சத்தும் , நீர்ச்சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளது.

முகத்தை அழகுபடுத்தும் பீட்ரூட்

  • பீட்ரூட்டை தோல் சீவி அதை அரைத்து சாறை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் கடலை மாவு அல்லது பாசிப்பருப்பு மாவு சேர்த்து கலந்து முகத்தில் பயன்படுத்தலாம்.
  • பீட்ரூட்டின் சாருடன் கற்றாழை சாறு,பன்னீர் அல்லது பால் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவடையும்.
  • பீட்ருட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
  • தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னை களைத் தவிர்க்கலாம். முகப்பரு மற்றும் கட்டிகள் வராது. இது ரத்தத்தை தூய்மையாக்கி சருமத்தைப் பளபளப்பாக்கும்.
  • பீட்ரூட்டை தோல் சீவி, துருவி, விழுதாக அரைத்து கைகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் 3 முறை செய்து வந்தால் கைகள் மென்மையாகும். முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட்

பீட்ரூட் ஃபேஸியல்

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட் – 1
  • அரிசி மாவு – 2 ஸ்பூன்
  • தேன் – 2 ஸ்பூன்

செய்முறை

  • ஒரு பீட்ரூட்டினை எடுத்து அதில் உள்ள தோல் பகுதியை நீக்கி நன்றாக துருவி எடுத்து கொள்ள வேண்டும்.
  • பின் துருவிய பீட்ரூட்டை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து பீட்ரூட் ஜூஸினை எடுத்துக் கொள்ளவும்.
  • பின் இந்த பீட்ரூட் சாறுடன் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, இரண்டு ஸ்பூன் தேன்  இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • இந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக அப்ளை செய்து கொள்ளவும்.
  • பின் 20 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
  • இந்த ஃபேஸ் பேக்கினை வாரத்தில் 2 இரண்டு முறை செய்து வரலாம். இவ்வாறு செய்வதினால் சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் பருக்களினால் ஏற்படும் தழும்புகள் அனைத்து நீங்கி முகம் பளிச்சென்று ஜொலிக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சர்ப்ப தோஷங்களின் வகைகள்

சர்ப்ப தோஷங்கள் என்றால் என்ன? சர்ப்ப தோஷங்களின் வகைகள்

சர்ப்ப தோஷங்கள் நம்முடைய ஜாதகத்தில் ஏதாவது இரு இடங்களில் ராகுவும், கேதுவும் இடம் பெற்றிருப்பார்கள். அனைத்து கிரகங்களும் ராகு - கேதுக்களுக்கு இடையில் அமைந்து, ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால், அது பூரண...
தனுசு ராசி குணநலன்கள்

தனுசு ராசி பொது பலன்கள் – தனுசு ராசி குணங்கள்

தனுசு ராசி குணங்கள் தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். தனுசு ராசியில் மூலம், மற்றும் பூராடம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், உத்திராடம் நட்சத்திரத்தின் 1-ம் பாதமும் இதில் அடங்கியுள்ளன. இந்த ராசி...
ஐப்பசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்கள். தேசபக்தியும் அவர்களிடம் நிறைந்து காணப்படும். ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் அறிவில் சிறந்தவர்கள் மேலும் மிகுந்த பொறுமைசாலிகள்....

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள்

கண்களை பாதுகாக்கும் உணவுகள்  ஒருவரின் கண்களை பார்த்தே அவர்களின் உடல் ஆரோக்கியத்தை நாம் கணித்து விடலாம். மனித உடலில் இருக்கும் அனைத்து பாகங்களுமே மிக முக்கியமானதுதான். அதில் எந்த ஒரு உறுப்பு பழுதடைந்தாலும் முதலில்...
முசுமுசுக்கை கீரை பயன்கள்

சுவாச பிரச்சனைகளை நீக்கும் அற்புத சக்தி கொண்ட முசுமுசுக்கை கீரை

முசுமுசுக்கை கீரை முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக படர்ந்து வளர்ந்திருக்கும். முசுமுசுக்கை செடியின் இலை, மற்றும் தண்டுகளில் சிறிய...
பித்ரு தோஷம் ஏன் ஏற்படுகிறது

பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷம் நீக்கும் பரிகாரம்

பித்ரு தோஷம் தோஷங்களில் மிக கடுமையான தோஷம் பித்ரு தோஷம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 ஆகிய இடங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரியன், மற்றும் சந்திர கிரகங்கள் ராகு அல்லது...
பல்லி விழும் தோஷம்

பல்லி விழுந்தால் தோஷமா? பல்லி தோஷத்திற்கான வழிபாடு

பல்லி விழுந்தால் தோஷமா? மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் ஏற்படும். மனிதர்களுக்கு நல்லது கெட்டது எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் பல்லிக்கு உண்டு. நல்ல விஷயங்களை பற்றி பேசும்போது பல்லி கத்தினால்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.