முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட்

முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட்

இயற்கையான அழகை பெற விரும்பும் பெண்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த தீர்வாகும். பீட்ரூட்டில் நம் உடலுக்கும், உள்ளுருப்புகளுக்கும் மிகவும் தேவையான ஒன்றாகும். நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் காய் வகையில் ஒன்று தான் பீட்ரூட்.

இந்த பீட்ரூட் பல நன்மைகள் தரக்கூடியவை. உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, வைட்டமின் 12 என இரத்த அணுக்கள் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்களை கொண்டுள்ளது.பீட்ரூட்டை சமைத்தும் சாப்பிடலாம், முகத்திற்கும் பயன்படுத்தலாம். பீட்ரூட்டின் நிறம் மற்றும் சுவை பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் அதில் இல்லாத சத்துக்களே இல்லை.

பீட்ரூட் அழகு குறிப்புகள்

நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை பெருக்குவதில் பீட்ரூட் மிகவும் பயன்படுகிறது. செயற்கையான க்ரீம்களை பயன்படுத்தி நம்மை அழகுபடுத்திக் கொள்வது நிரந்தரமனாது அல்ல. பீட்ரூட் இயற்கை நமக்கு கொடுத்த மிக அற்புதமான அழகுசாதன பொருளாகும். பீட்ரூட்டில் நார்ச்சத்தும் , நீர்ச்சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளது.

முகத்தை அழகுபடுத்தும் பீட்ரூட்

  • பீட்ரூட்டை தோல் சீவி அதை அரைத்து சாறை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் கடலை மாவு அல்லது பாசிப்பருப்பு மாவு சேர்த்து கலந்து முகத்தில் பயன்படுத்தலாம்.
  • பீட்ரூட்டின் சாருடன் கற்றாழை சாறு,பன்னீர் அல்லது பால் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவடையும்.
  • பீட்ருட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
  • தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னை களைத் தவிர்க்கலாம். முகப்பரு மற்றும் கட்டிகள் வராது. இது ரத்தத்தை தூய்மையாக்கி சருமத்தைப் பளபளப்பாக்கும்.
  • பீட்ரூட்டை தோல் சீவி, துருவி, விழுதாக அரைத்து கைகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் 3 முறை செய்து வந்தால் கைகள் மென்மையாகும். முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட்

பீட்ரூட் ஃபேஸியல்

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட் – 1
  • அரிசி மாவு – 2 ஸ்பூன்
  • தேன் – 2 ஸ்பூன்

செய்முறை

  • ஒரு பீட்ரூட்டினை எடுத்து அதில் உள்ள தோல் பகுதியை நீக்கி நன்றாக துருவி எடுத்து கொள்ள வேண்டும்.
  • பின் துருவிய பீட்ரூட்டை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து பீட்ரூட் ஜூஸினை எடுத்துக் கொள்ளவும்.
  • பின் இந்த பீட்ரூட் சாறுடன் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, இரண்டு ஸ்பூன் தேன்  இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • இந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக அப்ளை செய்து கொள்ளவும்.
  • பின் 20 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
  • இந்த ஃபேஸ் பேக்கினை வாரத்தில் 2 இரண்டு முறை செய்து வரலாம். இவ்வாறு செய்வதினால் சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் பருக்களினால் ஏற்படும் தழும்புகள் அனைத்து நீங்கி முகம் பளிச்சென்று ஜொலிக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது எப்படி

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? பத்து பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தமாக கருதப்படுவது ரஜ்ஜூ பொருத்தமாகும். கணவராக வரபோகிறவரின் ஆயுள் நிலையை அறிந்து கொள்வதற்கு ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், பெண்ணின்...
வீட்டில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும்

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்?

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்? தீபம் ஏற்றி வழிபடுவது இந்துக்களின் வழிபாட்டில் முக்கியமான ஒன்றாகும். ஒளி நிறைந்துள்ள இடத்தில் தான் அதிக நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும். தினந்தோறும் வீட்டில் காலையும், மாலையும் விளக்கேற்றி...
நீண்ட அடர்த்தியான கூந்தலை பெற

கூந்தலை பராமரிக்க சின்ன சின்ன ஆலோசனைகள்

கூந்தல் பராமரிப்பு  பெண்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களின் கூந்தல் தான். அதிலும் நீளமான கூந்தலை உடைய பெண்கள் பார்க்க மிகவும் அழகாகவும் இருப்பார்கள். நீண்ட கூந்தலை உடைய பெண்களுக்கு இயல்பாகவே தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக...
prawn recipes

இறால் குழம்பு

இறால் குழம்பு தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ உருளைக்கிழங்கு -  1 ( பெரியது ) முருங்கைக்காய் - 1 கொத்தமல்லி – சிறிதளவு மிளகாய் தூள் -  2 ஸ்பூன் ...
ஆண் மலட்டு தன்மையை நீக்கும் உணவுகள்

ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும் உணவுகள்

ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும் உணவுகள் நவீன வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப மாறிவரும் உணவுப்பழக்கம், இரவு - பகல் பார்க்காமல் தொடர் வேலை போன்றவற்றின் காரணமாக ஆண்களுக்குகூட மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இதன் தாக்கத்தால் உடலில் உயிர்...
அமாவாசையில் ஏன் கோலம் போடக்கூடாது

அமாவாசை அன்று வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது?

அமாவாசையில்  வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது? தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் கோலம் போடுவதை  நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். தினந்தோறும் கோலமிடுவதால் வீட்டில் தெய்வகடாட்சம்  நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். நமது...
சர்க்கரை நோய் வர காரணம்

இந்த 4 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும், இரத்த சர்க்கரை அளவை நீங்களே சுலபமாக குறைக்கலாம்

சர்க்கரை நோய்  இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது வீட்டில்  ஒருவருக்கு கண்டிப்பாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம். நாகரீகம் என்ற பெயரில் நம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.