தார தோஷம் என்றால் என்ன? தார தோஷத்திற்கான பரிகாரம்

தார தோஷம் என்றால் என்ன?

தாரம் என்றால் வாழ்க்கை துணையை குறிக்கும். அதாவது மனைவியையோ அல்லது கணவனையோ குறிப்பது ஆகும். ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2வது ஸ்தானத்திலோ அல்லது 7வது ஸ்தானமான கணவன் அல்லது மனைவி ஸ்தானத்திலோ அல்லது லாப ஸ்தானத்தையும் மற்றும் களத்திரகாரகனோடு எத்தனை கிரகங்கள் உள்ளதோ அத்தனை நபர்கள் அதில் சம்பந்தப்படுவார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதைத்தான் தார தோஷம் என கூறுகிறார்கள் ஜோதிடர்கள்.

தார தோஷம் நீங்க

தார தோஷத்தை எவ்வாறு அறிவது?

ஒருவருடைய ஜாதகத்தில் 8 மற்றும் 9-ம் இடம் வாழக்கை துணைக்கான ஸ்தானம் ஆகும். அந்த இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலோ, சுக்கிரனை பாவ கிரகங்கள் பார்த்துக் கொண்டிருந்தாலோ அந்த ஜாதகம் தார தோஷம் கொண்ட ஜாதகமாகும். இந்த தார தோஷமானது நாம் முற்பிறவியில் செய்த கர்ம வினைகளை கொண்டே இந்த ஜென்மத்தில் ஏற்படுகிறது.

தார தோஷம் என்ன செய்யும்?

தார தோஷம் உள்ள ஜாதகக்காரர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படும். திருமணமானவர்களுக்கு தங்களின் துணையிடம் காரணமே இல்லாமல் கருத்து வேறுபாடு ஏற்படும். மேலும் திருமணமான சில நாட்களிலேயே விவாகரத்து ஏற்படும் என்பன போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

தார தோஷத்திற்கான பரிகாரம்

வாழை மரத்திற்கு தாலி கட்டுதல் :

வாழை மரத்திற்கு தெய்வீக குணமும், பெண்களின் குணமும் ஒருங்கே அமைந்து உள்ளது. அதனால்தான் வாழைக்கு தாலி கட்டினால் தார தோஷம் நீங்கிவிடும் என்று ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. வாழை மரத்தை ஒரு பெண்ணாக நினைத்து தாலி கட்டினால் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும்போது அதில் மண முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம். ஒரு சிலருக்கு ஜாதகத்தில் இரண்டு திருமணம் நடைபெறும் அமைப்புகள் காணப்படும்.

இரு தார தோஷம் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயனை வணங்கி வந்தால் தார தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

தார தோஷம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய கோவில்கள்

1. தார தோஷம் விலக புதுக்கோட்டை மாவட்டம் மூலங்குடியில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்யலாம்.

நவகிரக தோஷம் விலக

2. திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள புளியறை எனும் கிராமத்தில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் சமேத சதாசிவமூர்த்தி கோவிலுக்கு தார தோஷமுள்ளவர்கள் வியாழன் தோறும் சாமியை வந்து தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும். தாலி பாக்கியம் கிட்டும். தார தோஷம் நீங்கும்.

3. ஜாதகத்தில் எந்தவிதத்தில் இருதார தோஷம் இருந்தாலும் அவர்கள் ஸ்ரீ ரங்க நாயகி ஸமேத ரங்கநாதரை தரிசித்தால் தோஷம் நிவர்த்தியாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

how to reduce belly fat

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சில உணவுகள்

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சில உணவுகள் உடலை ஆரோக்கியமாகவும் உடல் எடையை சரியான முறையில் வைத்திருக்கவும் உணவு முறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் எந்த வகையான உணவுகளை...
riddles and brain teasers

Riddles and Puzzles with answers | Riddles and Brain Teasers with Answers

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பரணி நட்சத்திரத்தின் இராசி : மேஷம் பரணி நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பரணி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை – துர்க்கை பரணி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...
பந்தக்கால் நடுதல்

திருமணத்தில் பந்தக்கால் அல்லது முகூர்த்தகால் நடுவது ஏன்?

பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவது ஏன்? பெரும்பாலான இந்து திருமணங்களில் திருமணதிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவார்கள். எதற்கு இந்த பந்தக்கால் நடுகிறார்கள் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. நம்...
சிக்கன் 65 செய்வது எப்படி

சிக்கன் 65 எப்படி செய்வது ?

சிக்கன் 65 செய்வது எப்படி? சிக்கன் உணவு வகைகளில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு உணவு வகை என்றால் அது சிக்கன் 65 தான். அதன் ருசியும், சிக்கனின் மணமும் சிறியவர் முதல் பெரியவர்...
அழகான பாதங்கள்

உங்கள் பாதங்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்.

பாதங்கள் நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பாதங்களின் அழகும் முக்கியம் தான். ஆனால் பெண்கள் தங்கள் முகம், தலைமுடி,...
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவவர்களாக இருப்பார்கள். கம்பீரமான தோற்றம் உடையவராக இருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். மெலிந்த தேகம், அறிவு, அழகு, மன உறுதி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.