திருமணத்தின்போது பால், பழம் கொடுப்பது எதற்காக?

திருமணத்தின்போது பால், பழம் கொடுப்பது எதற்காக?

திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள் நிறைந்திருக்கும். ஒவ்வொரு திருமணத்திலும் அவரவர் குடும்ப வழக்கதிற்கு ஏற்ப சடங்குகள் வேறுபடும். குறிப்பாக இந்து மத திருமணத்தில் பல வகையான சடங்குகள் இருக்கும். அவற்றில் முக்கியமானது திருமணத்தின் போது மணமக்களுக்கு பால், பழம் கொடுப்பது. இந்து திருமணத்தில் இந்த சம்ப்ரதாயம் மிக முக்கியமானதாகும்.

இந்து மதத்தின் ஒவ்வொரு சடங்கிற்கும், ஒவ்வொரு அர்த்தம் உள்ளதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு காரியத்தையும், காரண காரியத்தோடு தான் செய்திருக்கிறார்கள். அதையடுத்து, இந்து மதத்தினர் இல்லங்களில் நடைபெறும் திருமணத்தின் போது எதற்காக பால், பழம் கொடுக்கப்படுகின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.

திருமண சடங்குகள்திருமண சடங்குகள்

எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் சாஸ்திர சாம்பிரதாயம் என்று பல்வேறு சடங்குகளை செய்வது உலகிலேயே இந்து மதத்தினர் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அந்த சடங்குகள் ஒவ்வொன்றுக்கும், ஒரு அர்த்தங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவைகள் வாழையடி வாழையாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு ஒரு குழந்தை பிறந்தது முதல் இறப்பது வரை, அதேபோல் காலையில் எழுந்து குளிப்பது முதல் இரவு படுத்து தூங்குவது வரை என்னென்ன செய்யவேண்டும்? எப்படி தூங்க வேண்டும் என சுமார் நூற்றுக்கும் மேலான விஷயங்களை, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் நாம் கடைபிடித்து வருகிறோம்.

மேலும், அவற்றை ஆன்மிகத்துடன் இணைத்து கூறும்போது, மக்கள் அதை மீறாமல், தங்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பார்கள் என்பதற்காகவே அவ்வாறு கட்டாயப்படுத்தி உள்ளனர்.

பால், பழம் கொடுப்பது எதற்காக ?

திருமணம் என்பது மணமகன் மணமகள் இருவரும் இனைந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும், அன்பையும் நம்பிக்கையையும் பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்க ஏற்பத்தப்படும் பந்தமாகும். மேலும், வாழ்க்கை பாடத்தில் அனுபவித்து தெரிந்து கொள்வதை விட, சடங்கு, சம்பிரதாயங்களை அன்றாடம் சரியாக கடைபிடிக்கும்போது ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

மனிதர்களின் வாழ்வில் ஒவ்வொருவருக்கும், அவர்களின் திருமண நாள் மிகவும் மறக்க முடியாததாகும். ஏனெனில், ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் குடும்பம் என்ற பந்தத்திற்குள் இணைந்து சமூகத்தால் அங்கீகரிக்கப்படுகின்றனர். இதில், பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு, புதிய சூழ்நிலையில் வாழ வருவதால் அவளுக்கு அனைத்துமே புதிதாக இருக்கும்.

பால் பழம் கொடுப்பது ஏன் அதனால், கணவர் வீட்டில் இருப்பவர்களுடன் அனுசரித்து இணக்கமாக நடந்து கொள்ளவேண்டும். எக்காரணத்தை கொண்டும், கணவனுடன் சரிக்கு சமமாக நின்று பேசுவதால் மட்டும் பெண் வெற்றி அடைந்து விட முடியாது என்பதை உணர்த்தும் விதமாக, திருமணத்தின்போது புது மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும் பால், பழம் கொடுக்கப்படுகின்றது.

மணமகளுக்கு 

ஒருபசு மாடு எத்தகைய கெடுதலான உணவை சாப்பிட்டாலும், அது தரும் பால் மிக சுத்தமாகவே இருக்கும். அதில் துளி அளவு கூட மாசு, தீங்கு என்பதே இருக்காது. அதுபோல் கணவன் வீட்டில் இருப்பவர்கள், உனக்கு தீமையே செய்தாலும், உன்னால் அவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே பால் கொடுக்கப்படுகின்றது.

வாழைபழத்தில் விதையே இல்லாவிட்டாலும், மூலமரத்தை சார்ந்து அது கன்றை ஈனுகின்றது. அது போல், கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தர வேண்டும் என்பதை குறிப்பதற்காக பழம் கொடுக்கின்றனர்.

மணமகனுக்கு

பாலில் எப்படி தயிரும், நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும், ஆற்றலும் உள்ளது. பாலில் பக்குவமாக உறையிட்டு அதை கடைந்து அதில் இருக்கும் வெண்ணைய் மற்றும் நெய்யை எடு, பாலை கெட்டுப்போக வைத்துவிடாதே என்று குறிப்பதற்காக பால் கொடுக்கின்றனர்.

வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுகின்றோமோ, அது போல் இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம். அதை பட்டுப்போக விடாமல் பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி, வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என்பதை உணர்த்துவதற்காகவே பழம் கொடுக்கிறார்கள்.

இவ்வாறாக திருமணத்தில் பால் பழம் கொடுப்பதற்கு நம் முன்னோர்கள் இப்படி ஒரு அர்த்தத்தை கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

Puzzles with Answers | Tamil Puthirgal | Brain games in Tamil | Brain Teasers...

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
இனிப்பு சாப்பிடுவது போல கனவு வந்தால்

உணவு பொருட்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

உணவு பொருட்கள் கனவில் வந்தால் மனித வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. மனிதனால் உணவு இல்லாமல் வாழ முடியாது. அப்படிப்பட்ட உணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை...
prawn recipes

இறால் குழம்பு

இறால் குழம்பு தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ உருளைக்கிழங்கு -  1 ( பெரியது ) முருங்கைக்காய் - 1 கொத்தமல்லி – சிறிதளவு மிளகாய் தூள் -  2 ஸ்பூன் ...
வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது

வாய் துர்நாற்றம் நீங்க நிரந்தர தீர்வு

வாய் துர்நாற்றம் வாய்துர்நாற்றம் பாதிப்பு இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாகும். இதனால் தனது நெருங்கிய துணையுடன் கூட பேச முடியாமல் சங்கடத்திற்கு உள்ளாகின்றனர். சிலருக்கு வாய் சுகாதாரமாக இருந்தாலும் உண்ணும் உணவில் உள்ள...
கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை

கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகள்

கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகள் முருகப்பெருமானை வழிபட சிறந்த நாள் என்றால் அது கந்த சஷ்டி நாளாகும். இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். முக்கியமாக குழந்தை பாக்கியம் வேண்டி முருகனை...
திரிதியை திதி

திரிதியை திதி பலன்கள், திரிதியை திதியில் செய்ய வேண்டியவை

திரிதியை திதி திரிதியை என்பது வடமொழி சொல்லாகும். திரிதியை என்றால் மூன்று என்று பொருள். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் மூன்றாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரிதியை சுக்கில...
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ஆயில்யம் நட்சத்திரத்தின் இராசி : கடகம் ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி : புதன் ஆயில்யம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சந்திரன் ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிதேவதை : ஆதிசேஷன் ஆயில்யம் நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.