விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விருச்சிக லக்னத்தின் அதிபதி செவ்வாய் பகவனாவார். விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் கல்வி கேள்விகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர்களாய் இருப்பார்கள். இவர்கள் சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். முன் கோபம் அதிகம் கொண்டவர்கள் இவர்கள். அவசரகுணம் அதிகம் கொண்டவர்கள். எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற இருப்பார்கள். பொறுமை என்பது இவர்களுக்கு இருக்காது. இவர்களில் பெரும்பாலானோருக்கு தந்தையின் ஆதரவு கிடைப்பதில்லை.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

யாரையும் ஏமாற்றாமல் தனது சுய சம்பாத்தியத்தில் விருப்பம் உள்ளவர்கள். இவர்கள் தற்புகழ்ச்சி அதிகம் கொண்டவர்கள். யாருக்காவது காரியம் ஆகவேண்டும் என்றால் இவர்களை புகழ்ந்தால் போதும், காரியம் தன்னால் முடியும். தனக்கு எல்லாம் தெரியும் என்பது .போல பேசுவார்கள். எதையும் எடுத்த எடுப்பில் முடிக்க நினைப்பார்கள். விருச்சிக லக்னத்துக்கு சந்திரன் 5,9 ஆம் இடங்களில் இருந்தால் நல்ல வசதி வாய்ப்புகளும், செல்வமும், செல்வாக்கும், நிறைய சொத்துக்களும் இவர்களுக்கு அமையும். இவர்களது வாழ்கையில் சுலபமான விஷயங்கள் கூட மிகுந்த போராட்டத்திற்கு பிறகே நடக்கும்.

இவர்களை அவ்வளவு எளிதில் யாரும் ஏமாற்ற முடியாது. அப்படியே யாரவது ஏமாற்றினாலும் அவர்களை தகுந்த நேரம் பார்த்து பழிவாங்குவார்கள். பிறரை கேலியும் கிண்டலும் செய்வதில் வல்லவர்கள். தன்னுடைய கருத்தை எல்லோரும் ஏற்றுகொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். இவர்களின் கணிப்பு பெரும்பாலும் சரியாகவே இருக்கும். வாழ்வில் வெற்றி பெறுவதற்காக எல்லா வழிகளிலும் முயற்சி செய்வார்கள். இவர்களுக்கு ஆரோக்கியமான உடலமைப்பும், தீர்க்கமான கண்களும் இருக்கும்.

இவர்களுக்கு பணவரவு எந்த வகையிலாவது இருந்து கொண்டே இருக்கும். இவர்களின் சொல்லுக்கு செல்வாக்கு அதிகம். எதிரிகள் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். பிறரை அதிகாரம் செய்யும் வேலையே இவர்களுக்கு பிடித்ததாகும். வாழ்க்கையின் முற்பகுதியை விட பிற்பகுதியில் தான் இவர்கள் நன்றாக இருப்பார்கள். இவர்கள் யாருடனும் நெருக்கமாக பழக மாட்டார்கள். சந்தேக புத்தி கொண்டவர்கள். எதாவது ஒரு இலட்சியத்தை நிர்ணயித்து அதை அடைய கடுமையாக உழைப்பார்கள்.

இவர்கள் சற்று முர்க்கத்தனம் மிகுந்தவர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்புவார்கள். சோம்பேறித்தனமாக இருப்பது என்பது இவர்களுக்கு பிடிக்காது. இவர்களுக்கு சில சமயங்களில் இனம் புரியாத மனக் கவலைகளும் பதட்டமும் வந்து போகும். இவர்கள் தங்களுடைய கடுமையான உழைப்பு, அறிவாற்றல், முயற்சிகளில், முன்னேற்றம் அடைவார்கள். இவர்கள் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவர்கள். கலகம் உண்டு பண்ணும் மனப்பான்மை இவர்களுக்கு இருக்கும். கொண்ட குறிக்கோளை அடையும் வரை விடா முயற்சியுடன் செயல்படுவார்கள். சகோதரர்களிடமிருந்து விலகி வாழ்வார்கள்.

இவர்களின் வாழ்க்கைத்துணை கிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருந்து வருவார். பெரியவர்கள் சொல்படி கேட்டு நடக்கக்கூடிய வாழ்க்கைத் துணை இவர்களுக்கு அமையும். எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் பெரியவர்களிடமும், நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுப்பார்கள். விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய வாழ்க்கைத் துணை இவர்களுக்கு அமையும். பொருளாதாரத்தில் நல்ல நிலை திருமணத்திற்குப் பிறகு தான் ஏற்படும். திருமண தடை நீங்க சிவபெருமானையும், பெருமாளையும் வணங்கி வந்தால் நன்மை வந்து சேரும்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நாடி பொருத்தம் என்றால் என்ன

நாடி பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

நாடி பொருத்தம் என்றால் என்ன? நாடி பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும். ஆண், பெண் இருவருக்கும் நாடி பொருத்தம் பார்த்து திருமணம் செய்து முடித்தால் நோய் நொடி...
உடல் எடையை குறைக்கும் தேநீர்

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ உடல் எடை அதிகரிப்பு இன்று அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாக உருவாகியுள்ளது. உடல் எடை அதிகரிப்பால் உடல் சோர்வு, மந்த நிலை, இரத்த அழுத்த்தம், சர்க்கரை...
கிரகமாலிகா யோகங்கள்

அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் கிரகமாலிகா யோகம்

கிரகமாலிகா யோகம் (Graha Malika Yogam) ராகு, கேதுக்களைத் தவிர மற்ற 7 கிரகங்களும் வரிசையாக 7 வீடுகளில் இருந்தால் மாலை போல அமைய பெற்று இருந்தால் அதற்கு கிரக மாலிகா யோகம் என்று...
சித்தர்களின் சமாதி நிலை

சித்தர்களின் சமாதி நிலை என்றால் என்ன?

சித்தர்களின் சமாதி நிலை பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்த்தல் என்ற செயல் மூன்றும் சேர்ந்த நிலை தான் சமாதி நிலை. சாதாரண மனிதனின் மரணத்துக்கும், இந்த சித்தர்களின் சமாதி நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது....
ஆவாரம் பூ மருத்துவ நன்மைகள்

அற்புத பலன்களை அள்ளி வழங்கும் ஆவாரம் பூ

ஆவாரம் பூ ஆவாரம் உடலுக்கு பலம் அளிக்கும் மற்றும் குளிர்ச்சி தரும். எல்லா வகை இடங்களிலும் வளரும் தன்மையுடையது. இது மஞ்சள் நிறப் பூக்களையுடையது மற்றும் மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டைத் தோல்...
ஜாதக யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #12

ஜாதக யோகங்கள் : யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது கெடு பலனையும்...
வயிறு மச்ச பலன் பெண்கள்

ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பொதுவான மச்ச பலன்கள்

ஆண் பெண் இருவருக்கும் பொதுவான மச்ச பலன்கள் ஆண் மற்றும் பெண்ணின் கழுத்தின் முன் பக்கம், பின் பக்கம் போன்ற இடங்களில் இருக்கும் மச்சம் நீண்ட ஆயுளைத் தரும். இவர்கள் மந்தமான போக்கு கொண்டவர்களாக...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.