ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், தங்கள் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டு இருப்பார்கள். ஆனால் பாசத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் கற்பனை சக்தி கொண்டவர்கள். அந்த கற்பனையை செயல்படுத்துவதில் வல்லவர்கள். ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கு தங்கள் தாய்நாடு மற்றும் தாய்மொழி மீது அதிக நாட்டம் இருக்கும்.

ஆடியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆடி மாதத்தில் பிறந்தவர்களை, யாராவது கடிந்து கொண்டால் அதை மனதில் வைத்துக் கொண்டு தக்க சமயத்தில் அதற்கு பதிலடி கொடுப்பார்கள். இவர்களுக்கு ஆபார ஞாபக சக்தி இருக்கும். இவர்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால் அவர்களுடன் விரைவில் நட்பு ஏற்படுத்தி கொள்வார்கள். அதே நேரம் அவர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டால் விரக்தியின் உச்சத்திற்கே சென்று விடுவார்கள். அதனால் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், நண்பர்களை பொறுத்தவரை அளவோடு இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

ஆடி மாதத்தில் பிறந்தவர்களிடம் பேசுவதற்கு முன் நன்கு யோசித்து பேச வேண்டும். ஏனெனில் இவர்கள் பேச்சாற்றலில் சிறந்தவர்கள். அதேசமயம் இவர்கள் எளிதில் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு பிரச்சனை ஏற்படும் என தெரிந்தால் அதில் எளிதில் அகப்பட்டு கொள்ளாமல் நழுவி ஒதுங்கிக் கொள்வார்கள்.

எந்த ஒரு விஷயத்திலும் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதவாறு இவர்கள் எதையும் திட்டமிட்டுச் அந்த செயலை செய்வார்கள். சொந்த, பந்தங்கள் சிலருடன் இவர்களுக்கு ஒத்துபோகாது. அவர்கள் மூலம் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள், அக்கம்பக்கத்தவர்கள் மூலம் பிரச்னைகள் வரும் வாய்ப்பு குறைவு.

இவர்கள் அரசியலில் ஈடுபட்டால் முந்தைய  தலைவர்களின் புகழை பாடியே நிறைய பணம் சம்பாதித்து விடுவார்கள். இவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயலில் தீவிரமாக இறங்கினால், இவர்கள் எளிதில் அதில் வெற்றி பெறுவார்கள். அதேநேரம் சோம்பேறியாக இருந்தால் இவர்கள் பிற்காலத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். ஆடி மாதத்தில் பிறந்த பெண்களிடம் மனம் கோணாமல் நடக்க முயற்சி செய்தால், வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி விடுவார்கள்.

இவர்கள் எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். கடிந்து பேசினாலும், தூற்றினாலும், வசை பாடினாலும் எதற்கும் உடனுக்குடன், நேரடியாக பதிலளிக்க மாட்டார்கள். பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவார்கள். இவர்கள் இடம், பொருள் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள்.

எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். சில சமயங்களில் பிடிவாத குணம் காரணமாக சொந்தபந்தங்கள், நண்பர்களிடையே மனக்கசப்பு ஏற்படும். அடிக்கடி தங்கள் குணத்தையும், முடிவுகளையும் மாற்றிக் கொள்வார்கள். சந்தேகம் இவர்களின் உடன்பிறந்த ஒன்றாகும். பிடிவாதம் கொண்டவர்கள். சுவையான, சத்தான உணவுகளை விரும்பி உண்பார்கள். தங்கள் ஒரு விஷயத்தில் லாபம் அடைவதாக இருந்தால் அதற்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மூளை வறுவல்

மூளை மிளகு வறுவல் செய்வது எப்படி?

மூளை மிளகு வறுவல் மட்டன் உணவுகள் ஆரோக்கியம் நிறைந்தவையாகும். மட்டனை வைத்து விதவிதமாக உணவுகள் சமைக்கப்படுகிறது. மட்டன் மூளை வைத்து செய்யப்படும் உணவுகள் ருசி நிறைந்தவையாகும். அந்தவகையில் மட்டன் மூளை மிளகு வறுவல் எவ்வாறு...
தந்தூரி சிக்கன் செய்வது எப்படி

தந்தூரி சிக்கன் வீட்டிலேயே செய்வது எப்படி

தந்தூரி சிக்கன் தந்தூரி சிக்கன் நல்ல காரசாமான சுவையை கொண்டது. தந்தூரி சிக்கன் உணவகங்களில் மட்டுமே செய்ய முடியும் என பலரும் நினைத்திருப்போம். இந்த பதவில் தந்தூரி சிக்கன் எளிமையாக எப்படி வீட்டிலேயே செய்வது...
பெண் உடல் மச்ச பலன்கள்

பெண் உடல் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் உடல் மச்ச பலன்கள் மச்சம் ஒருவரின் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று கூறுவார்கள். பெண்களுக்கு எந்த இடத்தில் மச்சம் இருந்தால் எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும் என்று மச்ச சாஸ்திரம் என்னும் நூல் கூறுகிறது....
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி : கன்னி அஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் அஸ்தம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன் அஸ்தம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஆதித்யன் அஸ்தம் நட்சத்திரத்தின் பரிகார...
சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால்...
கிரீன் டீ செய்முறை

கிரீன் டீ குடிப்பது நல்லதா கெட்டதா ?

கிரீன் டீ பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி ,டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கிரீன்...
கறிவேப்பிலை நன்மைகள்

கறிவேப்பிலை மருத்துவ குணங்கள்

கறிவேப்பிலை கறிவேப்பிலை கறியில் போடப்படும் இலை என்பதாலும், அந்த கறிவேப்பிலை இலை அமைப்பு வேப்பிலையின் அமைப்பு போன்றே இருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றது. கறிவேப்பிலை பல்வேறு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.