திருமணத்தில் அம்மி மிதித்தல் சடங்கு ஏன் நடத்தபடுகிறது தெரியுமா

திருமணத்தில் அம்மி மிதித்தல்

இந்து திருமணங்களில் பல்வேறு சடங்கு, சம்பிரயதயங்கள் அந்த காலம் முதல் தற்போது வரை வழக்கத்தில் உள்ளன. அவற்றில் பல சடங்கு சம்பிரதாயம் தற்போது வழக்கில் இல்லா விட்டாலும் முக்கியமான ஒரு சில சடங்குகளை மக்கள் இன்றளவும் தம் குடும்ப திருமணங்களில் செய்து வருகின்றனர். அவற்றில் முக்கியமான ஒன்று ‘திருமணத்தில் அம்மி மிதித்தல்’ மற்றும் அருந்ததி பார்த்தல். இந்த சடங்கை ஏன் செய்கிறார்கள் என்பது பல பேருக்கு இன்று வரை தெரிவதில்லை. இந்த அம்மி மிதித்தல் சடங்கை ஏன் செய்கிறார்கள் என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அம்மி மிதித்தல் அருந்ததி பார்த்தல்

நான்கு வாழ்கை முறைகள்  

இந்து மதத்தில் ‘பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம், என்று நான்கு வாழ்க்கை முறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதில் கிரகஸ்தம் என்னும் இல்லறமே மிகவும் சிறந்ததென்று கௌதம முனிவர் கூறியுள்ளார். சிறப்புமிக்க கணவன் மனைவி எனும் பந்தத்தை வலுப்படுத்த திருமணத்தில் சில சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் அம்மி மிதித்தல் ஆகும். அதன்படி திருமண சடங்கில் மணமகன் ஆனவன்  மணமகளின் வலது கால் கட்டை விரலைப் பிடித்து, அம்மிக்கு வலது புறம் அம்மி மீது ஏற்றி வைக்கிறார்.

இதன் அர்த்தம் இந்த கல்லின் மீது நீ ஏறி நிற்பாயாக, இந்தக் கல்லைப் போல் நீ மனம் கலங்காமல் திருமண வாழ்வில் உறுதியாக இருக்க வேண்டும். இல்லற வாழ்வில் உனக்கு ஏற்படும் இடர்களை பொறுத்து கொள்ள வேண்டும். இன்பமோ, துன்பமோ வாழ்வில் எது வந்தாலும் அசையாமல் ஏற்றுக் கொள் என்று கூறி மனோதத்துவ அடிப்படையில் மணமகன், மணமகளுக்கு மனோபலம் அளிக்கிறான்.

அம்மியை ஏன் உபயோகிக்க வேண்டும்

திருமணத்தில் அம்மியை ஏன் மிதிக்கிறார்கள்

எந்த ஓர் உலோகத்தையும் விடவும் கல்லானது மிகவும் உறுதியானது. கல்லை உலோகம் போல வளைக்கவோ, உருக்கவோ முடியாது. மணமகளுக்கு கல் போன்று உறுதியான நெஞ்சம் வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சடங்கிற்கு மிக உறுதியான கல்லால் செய்த அம்மியை உபயோகிக்கிறார்கள்.

இந்து மதத்தில் எந்த ஒரு காரியமும் காரணமின்றி செய்வதில்லை. அதன் உண்மையான அர்த்தம் தெரியாதலால் நாம் அவற்றை மூடநம்பிக்கை என்கிறோம். ஆனால் எல்லா விதமான காரியத்திற்கு பின்னாலும் ஒரு வலுவான காரணம் உண்டு என்பது மறுப்பதற்கில்லை.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சதாவரி என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கு-ன் மருத்துவ பயன்கள்

சதாவரி என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கு சதாவரி என்பது இந்தியா, இலங்கை, இமயமலை ஆகிய இடங்களில் காணப்படும் அஸ்பராகஸ் இனத் தாவரம் ஆகும். இது பல வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதை வடமொழியில் சதாவரி...

30 வயதை கடந்த பெண்களா நீங்கள் ?  அப்போ இந்த பதிவை கண்டிப்பா பாருங்க.

பெண்களின் வாழ்க்கை முறை   பெண்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் பல வேலைகளை செய்கின்றனர். குழந்தைகளை கவனித்துக்கொள்வது, வீட்டு வேலைகளை செய்வது, சமைப்பது, வீட்டை நிர்வகிப்பது என பல்வேறு பொறுப்புகளை சுமந்து செல்கின்றனர். அதிலும் வேலைக்கு...
பல்லி விழும் தோஷம்

பல்லி விழுந்தால் தோஷமா? பல்லி தோஷத்திற்கான வழிபாடு

பல்லி விழுந்தால் தோஷமா? மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் ஏற்படும். மனிதர்களுக்கு நல்லது கெட்டது எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் பல்லிக்கு உண்டு. நல்ல விஷயங்களை பற்றி பேசும்போது பல்லி கத்தினால்...

கடக ராசி பொது பலன்கள் – கடக ராசி குணங்கள்

கடக ராசி குணங்கள் கடக ராசியின் அதிபதி சந்திர பகவானாவார். கடக ராசியில் புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களின் அனைத்து பாதங்களும் அடங்கியுள்ளன. 12 ராசிகளில் இது 2வது சர...
சிக்கன் கிரேவி

ஹோட்டல் சுவையில் தக்காளி சிக்கன் கிரேவி

தக்காளி சிக்கன் கிரேவி இட்லி , தோசை, ஆப்பம், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடக்கூடிய ருசியான தக்காளி சிக்கன் கிரேவி சுலபமாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ வெங்காயம்...
brain games in tamil

Puthirgal with Answers | Vidukathaigal | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
சுப ஓரைகள் என்றால் என்ன

ஓரைகள் என்றால் என்ன ? எந்த ஓரையில் என்னென்ன செய்யலாம்?

ஓரைகள் என்றால் என்ன? தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதுவே, அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.