நட்சத்திர தோஷங்களும், பரிகார முறைகளும்

நட்சத்திர தோஷங்களும், பரிகாரங்களும்

ஜோதிடத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும், ஒரு நட்சத்திரத்துக்கு 4 பாதங்களும் உண்டு. இவ்வுலகில் பிறக்கும் எந்த ஒரு மனிதனும் இந்த மேற்கண்ட ராசி, நட்சத்திரம் மற்றும் நட்சத்திர பாதத்தில் பிறப்பான். பிறக்கும்போது உள்ள ஜெனன ஜாதகத்தில் பல்வேறு யோககங்களும், தோஷங்களும் உண்டு. இந்த கட்டுரையில் 27 நட்சத்திரத்திரங்களில் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரங்கள் விரிவாக கூறப்பட்டுள்ளது. அந்த பரிகாரங்களை முறையாக செய்து வந்தால் தோஷங்களின் பாதிப்பு குறைந்து வளமான வாழ்வு வாழலாம்.

நட்சத்திர தோஷம்

அஸ்வினி நட்சத்திரம்

அஸ்வினி முதல் பாதத்தில் பிறந்த குழந்தையின் தந்தைக்கு மூன்று மாதங்களுக்கு இன்னல்களும், பொருள் நஷ்டமும் உண்டாகும். அதற்கு சொர்ணம் தானமளிக்க வேண்டும். மற்ற மூன்று பாதங்களில் பிறந்தால் சிறிது தோஷமுண்டு. இதற்கு வஸ்திர தானம் செய்ய வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூத்தனூரில் எழுந்தருளியுள்ள கலைவாணியை வழிபட்டு வந்தால் எல்லா சிறப்புகளையும் பெறலாம்.

பரணி நட்சத்திரம்

பரணி 1ம் பாதத்தில் பிறந்தால் தோஷமில்லை. 2வது பாதத்தில் பிறந்தால் தோஷமுண்டு. 3வது பாதம் மிகுந்த துன்பத்தை தரும். 4வது பாதம் முதல் 8 நாழிகைக்குள் பிறந்தால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். இதற்கு பரிகாரமாக துர்க்கை அல்லது காளி தேவிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டும். பொன் அல்லது எருமை தானம் செய்யலாம். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பட்டீஸ்வரம் சென்று துர்க்கையை வழிபட்டால் வளம் பெருகும்.

கிருத்திகை நட்சத்திரம்

கிருத்திகை நட்சத்திரத்தின் 1 மற்றும் 2ம் பாதங்கள் தோஷமில்லை. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்திருந்தால் பெற்றோர்களுக்கு இன்னல்களும், இடையூறுகளும் உண்டாகும். இதற்கு ஆட்டை தானம் செய்வது சிறந்தது. சூரிய ஆராதனையும், திருவண்ணாமலையில் உள்ள அக்னி லிங்க வழிபாடுகளும் மன அமைதியையும், பொருள் வளமையையும் தரும்.

ரோகிணி நட்சத்திரம்

ரோகினி நட்சத்திரத்தின் 1ம் பாதம் அக்குழந்தைக்கும், தாய்மாமனுக்கும், 2ம் பாதம் தந்தைக்கும், 3ம் பாதம் தாயாருக்கும் தோஷத்தை உண்டாக்கும். 4ம் பாதம் சாதாரணமானது ஆனாலும் நான்கு பாதத்திற்கும் தோஷம் உண்டு. மேலும் தாய்மாமனுக்கும் கண்டம் ஏற்படும் என நூல்கள் கூறுகின்றன. எனவே சாந்தி ஹோமங்கள் செய்வதுடன், வெள்ளியைத் தானமளிக்கலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் திருவருணை கோவிலில் பிரம்ம தீர்த்தம் எதிரில் உள்ள பிரம்ம லிங்கத்தை வழிபட்டு வந்தால் திரண்ட செல்வமும், நிறைந்த ஞானமும் பெறலாம்.

மிருகசீரிடம் நட்சத்திரம்

மிருகசீரிடம் நட்சத்திரத்தின் நான்கு 4 தோஷமில்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பௌர்ணமி விரதமிருந்து சந்திரனை வழிபட்டு வந்தால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். மேலும் திங்களூர் சென்று சந்திரனை வழிபட்டு வந்தால் தீராத குறைகளெல்லாம் தீரும்.

பிரம்மஹத்தி தோஷம் விலக

திருவாதிரை நட்சத்திரம்

திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் 3 பாதங்கள் தோஷமில்லை. 4வது பாதத்தில் முதல் எட்டு நாழிகை வரையில் பிறந்தால் தாயாருக்கு கண்டம் ஏற்படும். இதற்கு பசு நெய் தானமளிக்க வேண்டும். செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தை சார்ந்தவர்கள் விஷ்ணு ஸகஸ்ர நாமம், ருத்ர ஜபம் செய்து வந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

புனர்பூசம் நட்சத்திரம்

புனர்பூசம் நட்சத்திரத்தின் முதல் 4 பாதங்களும் தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூரிய ஆராதனை செய்வது சாலச்சிறந்தது. மேலும் திருவண்ணாமலையில் உள்ள சூரிய லிங்க ஆராதனை மிகவும் புகழையும், பொருளையும் வழங்கும்.

பூசம் நட்சத்திரம்

பூசம் நட்சத்திரத்தின் 1ம் பாதம் தாய்மாமனுக்கும், 2 மற்றும் 3ம் பாதம் பெற்றோர்களுக்கு துன்பமும், 4ம் பாதம் தோஷமற்றதும் ஆகும். 2ம் பாதமும், கடக லக்னமும் கூடிய ஆண்குழந்தை தந்தைக்கு கண்டத்தை ஏற்படுத்தும். இரவு நேரங்களில் பிறந்த பெண்குழந்தையால் தாயாருக்கு கெடுதி ஏற்படும். இதற்கு பரிகாரமாக பசுவை தானம் செய்ய வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தட்ஷினாமூர்த்தியையோ, ஹயக்ரீவரையோ வழிபட்டு வருவது நன்மையை உண்டாக்கும்.

ஆயில்யம் நட்சத்திரம்

ஆயில்யம் நட்சத்திரத்தின் 1ம் பாதம் சாதாரணமானது ஆகும். 2வது பாதம் அக்குழந்தைக்கும், தந்தைக்கும் தோஷத்தை உண்டாக்கும். 3வது பாதம் தாயாருக்கு கெடுதியை உண்டாக்கும். 4ம் பாதம் அக்குழந்தைக்கும், தந்தைக்கும் துன்பத்தை தரும். இதற்கு கிரக சாந்திகள், ஜபம், தானங்கள் செய்ய வேண்டும். 4ம் பாதத்தில் பிறந்த குழந்தைக்கு ஆயுஷ் ஹோமம் செய்வதும், ஏழை எளியவர்களுக்கு வாஸ்திரம் மற்றும் அன்னதானம் செய்வதும் மிகவும் அவசியம். இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் சர்பேஸ்வரனை வணங்குவது நல்ல பலன்களை தரும். ஸ்ரீகாளகஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்வது சிறந்தது.

மகம் நட்சத்திரம்

மகம் நட்சத்திரத்தின் முதல் பாதம், குழந்தையின் தந்தைக்கு தன நஷ்டத்தையும், அக்குழந்தை பிறந்து முதல் 5 மாதம் வரை உண்டாக்கும். சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள், கிரக சாந்திகள், தானங்கள் செய்திடலாம். 2 மற்றும் 4ம் பாதங்களில் சிறிது தோஷம் உண்டு. 3வது பாதத்தில் பிறந்த குழந்தை ஆண் என்றால் தந்தைக்கும், பெண் என்றால் தாயாருக்கும் தோஷத்தை ஏற்படுத்தும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பித்ரு தேவதைகளை தவறமால் ஆராதனை செய்வது, திருக்கடையூர், ஸ்ரீவாஞ்சியம், திருமீச்சூர், திருப்பைஞ்சீலி ஆகிய திருத்தலங்களில் வழிபாடுகள் செய்வது பெரும் நன்மையை அளிக்கும்.

பூரம் நட்சத்திரம்

பூரம் நட்சத்திரத்தின் 4 பாதங்களும் சிறிதளவு தோஷமுள்ளது. இதற்கு பரிகாரமாக ருத்ராபிஷேகம் செய்வது மிகச் சிறந்தது. இந்த நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அருணம் அல்லது மஹாஸரைம் பாராயணம் செய்வது மற்றும் ஆதித்ய ஹருத்யம் நாள்தோறும் படிப்பது, சூரியனை வழிபடுவது போன்றவற்றை செய்து வந்தால் நன்மை உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரம்

உத்திரம் நட்சத்திரத்தின் முதல் பாதம், முதல் இரண்டு நாழிகைக்குள் பிறந்த குழந்தை ஆண் என்றால தந்தைக்கும், பெண் என்றால தாயாருக்கும் தோஷம் உண்டாகும். 2 மற்றும் 3ம் பாதம் சாதாரணமானது. 4ம் பாதத்தில் பிறந்திருந்தால் தந்தையின் சகோதரர்களுக்கு தோஷத்தை உண்டாக்கும். இதற்குப் பரிகாரமாக தைலம் தானம் செய்ய வேண்டும். இந்த நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் பன்னிரண்டு ஆதித்யர்தனை சேர்ந்த ‘ஆர்யமன்” என்னும் சூரியனை வழிபடல் வேண்டும்.

நட்சத்திர தோஷ பரிகாரங்கள்

அஸ்தம் நட்சத்திரம்

அஸ்தம் நட்சத்திரத்தின் 1, 2 மற்றும் 4ம் பாதம் தோஷமற்றது. 3ம் பாதத்தில் முதல் நான்கு நாழிகைக்குள், ஆண் குழந்தை பிறந்தால் தந்தைக்கும், பெண் குழந்தை என்றால் தாய்க்கும் தோஷமுண்டு இது குழந்தை பிறந்த ஒன்பது மாதங்கள் வரை நீடிக்கும். இத்தோஷத்தை ஸ்ரீவர்ணம் என்று கூறுவார்கள். பொன் தானம் செய்வதன் மூலம் இதை நீக்கிக்கொள்ள முடியும். ஆதித்ய ஹ்ருதயம் பாராயணமும், சூரிய வழிபாடும் மேற்கொள்ள எல்லா நன்மைகளும் விளையும்.

சித்திரை நட்சத்திரம்

சித்திரை நட்சத்திரத்தின் முதல் 3 பாதங்கள் தாய், தந்தை மற்றும் சகோதரர்களுக்கு தோஷத்தை உண்டாக்கும். 2வது பாதத்தில் முதல் ஆறு நாழிகைக்குள் என்றால் குழந்தையின் தாய்க்கு மிகவும் தோஷம். முதலிரண்டு பாதங்களுக்குரிய கன்னி ராசியில் பகலில் பிறக்கும் ஆண் குழந்தையால் தந்தைக்கும், பெண் குழந்தையால் தாயாருக்கும் தோஷமுண்டாகும். இது பிறந்த ஆறுமாத காலத்திற்கு நீடிக்கும்.

4ம் பாதம் பிறந்த குழந்தை தந்தைக்கு துயரத்தை உண்டாக்கும். இதற்கு வஸ்திர தானம் சிறந்த பரிகாரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்திரனை வழிபட வேண்டும். திருவண்ணாமலையில் கிழக்கு திசையில் உள்ள அஷ்ட லிங்கங்களில் முதல் லிங்கமான இந்திர லிங்க வழிபாடு செய்வது செல்வம், செல்வாக்கு, பதவி உயர்வு போன்றவற்றை தரும்.

சுவாதி நட்சத்திரம்

சுவாதி நட்சத்திரத்தின் 4 பாதங்களிலும் தோஷமில்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாயு பகவானை வணங்குவது நல்லது. அருணையிலுள்ள வாயுலிங்க வழிபாடு செய்யலாம். திருமகளையும் வணங்கி வரலாம்.

விசாகம் நட்சத்திரம்

விசாகம் நட்சத்திரத்தின் 4ம் பாதம் தோஷமாகும். மற்ற பாதங்களில் தோஷமில்லை. செவ்வாய்கிழமை, சஷ்டி, கிருத்திகை போன்ற முருக பெருமானுக்குரிய நாட்களில் செந்நிற ஆடைச் சாற்றி சிவப்பு மலர்கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்வதும், துவரை மற்றும் கோதுமை தானிய தானங்கள் செய்வதும் சிறப்பான பலன்களை தரும்.

அனுஷம் நட்சத்திரம்

அனுஷம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மித்ர என்னும் துவாதச ஆதித்யர்களில் ஒருவரான சூரியனை வழிபட்டு வர வேண்டும். வருண பகவானையும், திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் வருணலிங்கத்தையும் வழிபட்டு வருவது சிறந்த பலன்களை தரும்.

கேட்டை நட்சத்திரம்

கேட்டை நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் தோஷத்தை தரும். முதல் பாதத்தில் பிறந்தது, ஆண் குழந்தையாயின் மூத்த சகோதரனுக்கும், பெண் குழந்தை என்றால் மூத்த சகோதரிக்கும், 2ஆம் பாதம் மற்ற சகோதரர்களுக்கும், உறவினர்களுக்கும், 3ஆம் பாதம் அக்குழந்தையின் தாய்க்கும், செல்வத்திற்கும், 4ஆம் பாதம் அக்குழந்தை மற்றும் அதன் தாயாருக்கும் கண்டத்தை ஏற்படுத்தும். பசு அல்லது தங்கத்தால் செய்த பசுவினை தானமாக அளிக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்திரனை வழிபட்டு வரலாம்.

மூலம் நட்சத்திரம்

மூலம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்தில் ஆண்குழந்தை பிறந்தால் தந்தைக்கு துன்பம். பெண் குழந்தையாக இருந்தால் கால்நடைகள் (பசுக்கள்) நஷ்டமாகும். 2-ஆம் பாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அதன் தாய்க்கு துன்பம். 3-ஆம் பாதம் ஆண் குழந்தையால் பொருள் நஷ்டம், சகோதரர்களுக்குத் துன்பங்களும் ஏற்படும். 3-ஆம் பாதம் பெண் குழந்தையினால் தந்தையின் வம்சத்திற்கே நஷ்டம். 3-ஆம் பாதம் பகலில் பிறந்தால், அதன் தந்தைக்கும், மாலைப்பொழுதில் பிறந்தால் அக்குழந்தையின் தாய் மாமனுக்கும், இரவில் பிறந்தால் தாய்க்கும், உதயவேளை அல்லது காலை எனின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்குத் தீங்காகும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தோர் பிரஜாபதியை வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் எல்லா நலன்களும், வளங்களும் பெறுவார்கள்.

பூராடம் நட்சத்திரம்

பூராடம் நட்சத்திரத்தின் 1, 2 மற்றும் 4-ஆம் பாதங்களில் பிறந்தால் சிறிதளவு தோஷம் உண்டு. 3ம் பாதத்தில் பிறந்த குழந்தை ஆண் என்றால் தந்தைக்கும், பெண் என்றால் தாய்க்கும் தோஷமாகும். இத்தோஷம் எட்டு மாதம் வரையில் இருக்கும். தனுசு ராசியில் உள்ள இந்த நட்சத்திரத்தில் சூரிய உதய வேளையிலும், அஸ்தமிக்கும் வேளையிலும், நடு இரவிலும் புத்ர ஜனனமானது அதன் தந்தைக்கும் மற்றும் அச்சிசுவிற்கும் பெரும் தோஷமாகும்.

நாக தோஷ பரிகார தலங்கள்

திருவானைக்காவல் இறைவனையும், திருவண்ணாமலையில் உள்ள வருணலிங்கத்தையும் வழிபட்டால் நல்ல செல்வமும், செல்வாக்கும் பெறலாம். பௌர்ணமி விரதம் ஏற்றது. தேங்காய், நெய் தீப வழிபாடு சிறந்தது.

உத்திராடம் நட்சத்திரம்

உத்திராடம் நட்சத்திரத்தின் 4 பாதங்களிலும் தோஷமில்லை. செவ்வாய்க்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தால் ‘விஷ கன்னியா” யோகம் உண்டாகும். அப்பெண் திருமணமாகி, கணவன் வீடு செல்லும் வரையில் பிறந்த வீட்டில் இன்னல்கள், இடையூறுகள் உண்டாகும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விஸ்வதேவதைகளையும், விநாயகரையும் வழிபட்டால் வாழ்க்கையில் வளமும், பலமும் பெறலாம். பாண்டிச்சேரி மணக்குள விநாயகர், திருப்பாதிரிப்புலியூர் பாதிரி விநாயகர், திருவண்ணாமலை ஆநிறை கணபதி ஆகியோரின் வழிபாடு சிறப்பை தரும்.

திருவோணம் நட்சத்திரம்

திருவோணம் நட்சத்திரத்தின் 4 பாதங்களிளும் தோஷமில்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் ஏகாதசி விரதம் இருந்து, திருமாலை வழிபட்டால் பொன்னும், பொருளும் கிடைக்கும். சிரவண விரதம் மேற்கொண்டு திருவேங்கடமுடையானை ஆராதித்து, லஷ்மி குபேர திருவுருவப் படத்தை – குபேர யந்திரம் – மந்திரம் கொண்டு பூஜித்து, திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள குபேரலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்தால் பெரும் பொருளும், புகழும் பெறுவார்கள்.

அவிட்டம் நட்சத்திரம்

அவிட்டம் நட்சத்திரத்தின் 4 பாதங்களும் தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஷ்டஸூக்களை ஆராதிக்க வேண்டும். பித்ரு முக்தி ஸ்தலங்களில் இராமேஸ்வரம், காசி, கயா, மூர்த்திகளை ஆராதனை செய்வதும் மிகுந்த நன்மை தரும்.

சதயம் நட்சத்திரம்

சதயம் நட்சத்திரம் தோஷமில்லாதது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவானைக்காவல் இறைவனையோ, திருமீச்சூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமேக நாதரையோ, திருவணையில் உள்ள வருணலிங்கத்தையோ வழிப்பட்டால் இடர்கள் நீங்கி எல்லா வளமும் கிடைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரம்

பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் 3 பாதங்களில் சிறிது தோஷம் உள்ளது. 4வது பாதத்தில் முதல் 8 நாளிகைக்குள் பிறந்தால் சிசுவின் தாய்க்கு கண்டம் ஏற்படும். அதுவும் முதல் குழந்தை என்றால் தோஷம் அதிகம். இவர்கள் பொன் தானம் கொடுக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வத்தில் சிறக்க லஷ்மி குபேர பூஜையை மேற்கொள்ள வேண்டும். இவர்கள் திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள குபேரலிங்கத்தையும் சீர்காழி அருகிலுள்ள ஸ்ரீலஷ்மி புரீஸ்வரரையும் வழிபடுவது சிறந்தது.

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகாரம்

உத்திரட்டாதி நட்சத்திரம்

உத்திரட்டாதி நட்சத்திரம் தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காமதேமனுவை பூஜித்து வந்தாலும், பட்டீஸ்வரத்திலுள்ள தேனுபுரீஸ்வரரை வழிபட்டாலும் இடையூறுகள் ஏதுமின்றி வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

ரேவதி நட்சத்திரம்

ரேவதி நட்சத்திரத்தின் முதல் 3 பாதங்களில் பிறந்தால் சிறிதளவு தோஷம் உண்டு. 4ம் பாதத்தில் பிறந்தால் குழந்தையின் தந்தைக்கு தோஷம் உண்டு. இத்தோஷம் விலக தங்கத்தாலான பசு உருவம் மற்றும் பசும் நெய் தானமளிக்க வேண்டும். சூரியனார் கோவிலில் எழுந்தருளியுள்ள சூரிய நாராயணமூர்த்தியையோ அல்லது திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சூரிய லிங்கத்தையோ வழிபட்டாலும் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று சிறந்த முறையில் புகழுடன் வாழலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

sandal powder

தழும்பை மறையவைக்கும் எளிய இயற்கை மருத்துவம்

தழும்புகள் மறைய வைப்பது எப்படி ? தழும்புகள் பொதுவாக இறுக்கமான ஆடைகள் அணிவதால், அம்மை தழும்புகள், பிரசவத் தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தினால் ஏற்படும் தழும்புகள், விபத்தினால் ஏற்படும் தழும்புகள்,...
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பரணி நட்சத்திரத்தின் இராசி : மேஷம் பரணி நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பரணி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை – துர்க்கை பரணி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...
போட்டிக் குழம்பு

ஆட்டுக்கறி குடல் குழம்பு செய்வது எப்படி 

ஆட்டுக்கறி குடல் குழம்பு செய்வது எப்படி ஆட்டுக் குடல் நம் வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆட்டுக் குடலை அடிக்கடி நாம் சமைத்து சாப்பிடும் போது உடல் சூட்டினால் உண்டாகும்...
அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள்

அரிசி கழுவிய தண்ணீரில் மறைந்திருக்கும் அற்புத பயன்கள்

அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள்  நம் சமையலைறையில் உள்ள பல பொருட்கள் நமது அழகை தக்கவைத்துக் கொள்ள பயன்படுகிறது. உதாரணமாக மஞ்சள் தூள், தயிர், அரிசி மாவு, தக்காளி, வெள்ளரிக்காய், இன்னும் பல உள்ளன....
அமாவாசை திதி

அமாவாசை திதி பலன்கள், அமாவாசை திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

அமாவாசை திதி அமாவாசை திதியானது திதிகளின் வரிசையில் 15வது இடத்தை பிடிக்கிறது. திதிகளின் வரிசையில் அமாவாசை முக்கிய இடத்தை பிடிக்கிறது. அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அன்றைய தினத்தில் இந்த...
வல்லாரை கீரை நன்மைகள்

வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்

வல்லாரை கீரை வல்லாரை கீரை என்பது ஒரு பல்வேறு மருத்துவ மூலிகைப் பயன்பாட்டுடைய கீரை வகைத் தாவரமாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகளை உணவாகப் பயன்படுத்துவதால்...
நாக தோஷ பரிகார தலங்கள்

சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் என்றால் என்ன? சர்ப்ப தோஷ பரிகாரங்கள்

சர்ப்ப தோஷம் என்றால் என்ன? திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது ஜாதகத்தில் நன்றாக இருக்கிறதா, அல்லது எதாவது தோஷம் இருக்கிறதா என கேட்பார்கள். அப்படிப்பட்ட தோஷங்களில் ஒன்று சர்ப்ப தோஷம், அல்லது நாக தோஷம் ஆகும்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.