பஞ்சமி திதி பலன்கள், பஞ்சமி திதியில் செய்ய வேண்டியவை

பஞ்சமி திதி

பஞ்ச என்பது ஒரு வடமொழி சொல்லாகும். பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமியை சுக்கில பட்ச பஞ்சமி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் பஞ்சமி தினம் கிருஷ்ண பட்ச பஞ்சமி என்றும் அழைக்கபடுகிறது. பஞ்சமி திதி என்பது ஒரு மகத்தான திதியாகும்.

பஞ்சமி திதி பலன்கள்

பஞ்சமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் வேத ஆராய்ச்சி உடையவர்கள், எதிர் பாலினத்தின் மேல் அதிக பிரியமுள்ளவர்கள், சிறிது கஞ்சத்தனம் உடையவர்கள். கலைகளின் மேல் ஆர்வம் உள்ளவர்கள், எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படகூடியவர்கள், கற்பனை வளம் அதிகம் உடையவர்கள், இரக்கம் மற்றும் கருணை உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திப்பார்கள், வீடு, மனை யோகம் கொண்டவர்கள்.

பஞ்சமி திதியில் என்னென்ன செய்யலாம்

இது நாகதேவரின் நாளாகும். இந்த நாளில் வாகனம் வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், விஷத்தை முரித்தல், மருத்துவம் செய்தல், அறுவை சிகிச்சை செய்தல், மற்றும் எல்லாவித சுபகாரியங்களையும் செய்யலாம். சீமந்தம் செய்வதற்கு சிறந்த திதி பஞ்சமி திதியாகும். இந்த நாளில் மருந்துகள் சாப்பிட நோய்கள் விரைவில் மறையும்.

பஞ்சமி திதி வழிபாடு

பஞ்சமி திதியில் வராஹி தேவியை வழிபட்டு வரலாம். பஞ்சமி திதியன்று பஞ்சமி தீப வழிபாடு செய்யலாம். பஞ்சமி சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். பஞ்சமி திதி வரும் தினத்தன்று குத்துவிளக்கில் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி வழிபட வேண்டும். நம்முடைய வேண்டுல்தல்களை மனதில் நினைத்து “ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி கற்கண்டு மற்றும் பழம் வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.

இதை செய்து வருவதன் மூலம் ஏவல், பில்லி, சூனியம் போன்றவைகளால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த கடன் தொல்லை, வறுமை போன்றவை ஒழியும். வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி என எந்த பஞ்சமி திதியிலும் விரதம் இருந்து வழிபடலாம்.

பஞ்சமி திதிக்கான திதி சூன்ய ராசிகள்

பஞ்சமி திதிக்கான திதி சூன்ய ராசிகள் மிதுனம் மற்றும் கன்னி ஆகும்.

பஞ்சமி திதிக்கான தெய்வங்கள்

பஞ்சமி திதிக்கான வளர்பிறை தெய்வங்கள் : திரிபுரசுந்தரி, மற்றும் நாகர்.

பஞ்சமி திதிக்கான தேய்பிறை தெய்வங்கள் : இந்திரன், மற்றும் நாக தேவதைகள்.

திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அவல் லட்டு செய்வது எப்படி

ஆரோக்கியமான அவல் லட்டு செய்வது எப்படி

அவல் லட்டு தேவையான பொருட்கள் அவல் – 1 கப் வெல்லம் – 1 கப் முந்திரி, திராட்சை – தேவையான அளவு நெய் – தேவையான அளவு ஏலக்காய் – சிறிதளவு ...
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இராசி : மீனம் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி : சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு உத்திரட்டாதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை- : காமதேனு உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பரிகார...
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரேவதி நட்சத்திரத்தின் இராசி : மீனம் ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி : புதன் ரேவதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு ரேவதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஈஸ்வரன் ரேவதி நட்சத்திரத்தின் பரிகாரத்...
அமுக்கிராகிழங்கின் மருத்துவ பயன்கள்

அமுக்கிராக்கிழங்கு என்கிற அஸ்வகந்தாவின் மருத்துவ பயன்கள்

அமுக்கிராக்கிழங்கு என்கிற அஸ்வகந்தா அமுக்கிராக்கிழங்கின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவாகும். இது அஸ்வகந்தா, அசுவகந்தம், அசுவகந்தி, அமுக்குரவு, இருளிச் செவி, அசுவம் போன்ற வேறு பல பெயர்களாலும் அழைக்கபடுகிறது. இதன் இலை, வேர்,...
பொடுகு பிரச்சனையை தீர்க்க

பொடுகை விரட்ட இந்த ஹேர் மாஸ்கை ட்ரை பண்ணுங்க

பொடுகை விரட்ட எளிய டிப்ஸ்  தலையில் உருவாகும் பூஞ்சைத் தொற்று மற்றும் வறட்சி காரணமாக பொடுகு ஏற்படுகிறது. இது தலையில் அரிப்பு, முகத்தில் பருக்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. எண்ணெய் வடியும் சருமம், வறண்ட...
சதுர்த்தசி திதி

சதுர்த்தசி திதி பலன்கள், சதுர்த்தசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

சதுர்த்தசி திதி சதுர்த்தச என்பதற்கு பதினான்கு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 14 வது நாள் சதுர்த்தசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தசியை...
சுப ஓரைகள் என்றால் என்ன

ஓரைகள் என்றால் என்ன ? எந்த ஓரையில் என்னென்ன செய்யலாம்?

ஓரைகள் என்றால் என்ன? தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதுவே, அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.