பஞ்சமி திதி பலன்கள், பஞ்சமி திதியில் செய்ய வேண்டியவை

பஞ்சமி திதி

பஞ்ச என்பது ஒரு வடமொழி சொல்லாகும். பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமியை சுக்கில பட்ச பஞ்சமி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் பஞ்சமி தினம் கிருஷ்ண பட்ச பஞ்சமி என்றும் அழைக்கபடுகிறது. பஞ்சமி திதி என்பது ஒரு மகத்தான திதியாகும்.

பஞ்சமி திதி பலன்கள்

பஞ்சமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் வேத ஆராய்ச்சி உடையவர்கள், எதிர் பாலினத்தின் மேல் அதிக பிரியமுள்ளவர்கள், சிறிது கஞ்சத்தனம் உடையவர்கள். கலைகளின் மேல் ஆர்வம் உள்ளவர்கள், எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படகூடியவர்கள், கற்பனை வளம் அதிகம் உடையவர்கள், இரக்கம் மற்றும் கருணை உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திப்பார்கள், வீடு, மனை யோகம் கொண்டவர்கள்.

பஞ்சமி திதியில் என்னென்ன செய்யலாம்

இது நாகதேவரின் நாளாகும். இந்த நாளில் வாகனம் வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், விஷத்தை முரித்தல், மருத்துவம் செய்தல், அறுவை சிகிச்சை செய்தல், மற்றும் எல்லாவித சுபகாரியங்களையும் செய்யலாம். சீமந்தம் செய்வதற்கு சிறந்த திதி பஞ்சமி திதியாகும். இந்த நாளில் மருந்துகள் சாப்பிட நோய்கள் விரைவில் மறையும்.

பஞ்சமி திதி வழிபாடு

பஞ்சமி திதியில் வராஹி தேவியை வழிபட்டு வரலாம். பஞ்சமி திதியன்று பஞ்சமி தீப வழிபாடு செய்யலாம். பஞ்சமி சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். பஞ்சமி திதி வரும் தினத்தன்று குத்துவிளக்கில் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி வழிபட வேண்டும். நம்முடைய வேண்டுல்தல்களை மனதில் நினைத்து “ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி கற்கண்டு மற்றும் பழம் வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.

இதை செய்து வருவதன் மூலம் ஏவல், பில்லி, சூனியம் போன்றவைகளால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த கடன் தொல்லை, வறுமை போன்றவை ஒழியும். வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி என எந்த பஞ்சமி திதியிலும் விரதம் இருந்து வழிபடலாம்.

பஞ்சமி திதிக்கான திதி சூன்ய ராசிகள்

பஞ்சமி திதிக்கான திதி சூன்ய ராசிகள் மிதுனம் மற்றும் கன்னி ஆகும்.

பஞ்சமி திதிக்கான தெய்வங்கள்

பஞ்சமி திதிக்கான வளர்பிறை தெய்வங்கள் : திரிபுரசுந்தரி, மற்றும் நாகர்.

பஞ்சமி திதிக்கான தேய்பிறை தெய்வங்கள் : இந்திரன், மற்றும் நாக தேவதைகள்.

திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மூளை வறுவல்

மூளை மிளகு வறுவல் செய்வது எப்படி?

மூளை மிளகு வறுவல் மட்டன் உணவுகள் ஆரோக்கியம் நிறைந்தவையாகும். மட்டனை வைத்து விதவிதமாக உணவுகள் சமைக்கப்படுகிறது. மட்டன் மூளை வைத்து செய்யப்படும் உணவுகள் ருசி நிறைந்தவையாகும். அந்தவகையில் மட்டன் மூளை மிளகு வறுவல் எவ்வாறு...
சுப ஓரைகள் என்றால் என்ன

ஓரைகள் என்றால் என்ன ? எந்த ஓரையில் என்னென்ன செய்யலாம்?

ஓரைகள் என்றால் என்ன? தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதுவே, அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை...

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் புனர்பூசம் நட்சத்திரத்தின் இராசி : மிதுனம் மற்றும் கடகம் புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி : குரு புனர்பூசம் 1 முதல் 3 பாத நட்சத்திரத்தின் இராசி அதிபதி - மிதுனம் :...
மாரடைபிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள்

மாரடைப்பு இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது இளம்வயதினர் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் வேலை மற்றும் குடும்ப சுழல் மற்றும் மாறி வரும் உணவு பழக்க முறையே ஆகும். ஒருவருக்கு...
மீன் வறுவல்

சுவையான மீன் மிளகு வறுவல் செய்வது எப்படி ?

மீன் மிளகு வறுவல் மீன் ஒரு சத்தான ஆரோக்கியமான உணவாகும். மீனில் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. மீனை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் கண் பார்வை குறைபாடு,...
புத்திர தோஷம் நீங்க

புத்திர தோஷம் ஏன் ஏற்படுகிறது? புத்திர தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் திருமணமான அனைவருமே தங்களுக்கு ஒரு வாரிசு பிறக்க வேண்டும் என விரும்புவர். ஒரு சிலருக்கு திருமணமான ஒரு வருடத்திற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு சிலருக்கு சற்று தாமதமாக குழந்தை பேறு...
நவராத்திரி வழிபாடு

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் 

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் மாகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை வரக்கூடிய 9 நாட்களை தான் நாம் நவராத்திரி என்று அழைக்கிறோம். நாளை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.