திருமணத்தில் கூறைப்புடவை அணிவது ஏன்?

கூறைப்புடவை அணிவது ஏன்?

திருமணத்தில் இருக்கும் பல்வேறு சடங்களில் ஒன்று மணமகள் கூறைப்புடவை அணிவது. எத்தனையோ விலை உயர்ந்த சேலைகள் இருக்கும்போது ஏன் கூறைப்புடவையை மட்டும் திருமணத்தில் அணிகின்றனர் என்ற கேள்வி பலருக்கும் எழாமல் இல்லை. அதற்கான பதிலை இந்த பதிவில் காண்போம்.

நமது திருமண கலாச்சாரத்தில் இன்றும் கடைபிடிக்கப்படும் ஒரு முக்கிய விஷயம் திருமணத்தின்போது மணமகன் வீட்டார் மணமகளுக்கு கூறைப்புடவையை அளிப்பது. திருமணங்களில் மாங்கல்யம் கட்டுவதற்கு முன்பு மணமகன் வீட்டார் மணமகளுக்கு முகூர்த்த புடவையான கூறைப்புடவையை அளிக்கின்றனர். அதை மணமகள் உடுத்திக் கொள்வதற்கு தேவையான உதவும் உரிமைகள் அனைத்தும் மணமகனின் சகோதரிக்கு மட்டுமே தர வேண்டும் என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

கூறைபுடவை அணிவது ஏன்

இது ஏன் என்றால் மணமகனான, தன் சகோதரன் இல்லற சுகங்களை அனுபவித்து மகிழ இந்த மணமகள் ஏற்றவள் தானா என்பதை அறிய அந்த நேரத்தில் உறுதி செய்யவே மணமகனின் சகோதரிக்கு இந்த உரிமையை சாஸ்திரம் வழங்குகிறது. மணமகளுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் இதன் மூலம் தெரிய வரும்.

இந்த முகூர்த்தப்புடவையை தான் கூறைப்புடவை என்று அழைக்கின்றனர். அப்படிப்பட்ட இந்த முகூர்த்தப்புடவையான கூறைபுடவையை திருமணம் முடிந்த பின், திருமண மந்திரத்தின் பொருளும், மகிமையும் அறிந்த ஒருவருக்கு தானமாக அளித்துவிட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், இன்று யாரும் இதை கடைபிடிப்பதில்லை.

திருமணத்தில் பட்டுப்புடவை ஏன் தவிர்க்கபடுகிறது?

இன்றைய காலத்தில் மணமகன் வீட்டார் தங்கள் வசதி, மற்றும் அந்தஸ்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முகூர்த்த புடவையாக விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை வாங்குவதால், அதை மற்றவர்களுக்கு தானமாக வழங்க மனம் வருவதில்லை. மேலும் பட்டுத்துணிகள் அனைத்தும் உயிர் வதையால் உருவாக்கப்படுகிறது. மேலும், பலவிதமான ரசாயன நூல்களால் செய்யப்பட்ட துணிகள் இயற்கைக்கு உகந்தது அல்ல.

பருத்தி புடவை ஏன்?

இயற்கையாக உருவாகும் பருத்தி நூலால் ஆன புடவையே சாஸ்திர சம்பிரதாயம். இப்படி சுத்தமான பருத்தி நூலால் நெய்யப்பட்ட புடவையை மஞ்சள் நீரில் நனைத்து பின்பு அதை உலர்த்தி மங்களமாக்கி, அதை முகூர்த்தப் புடவையாக(கூறைபுடைவையாக) பயன்படுத்தும் வழக்கம் இன்றும் பல கிராமங்களில் பரவலாக பின்பற்றப்படுகிறது.

கூறைப்புடவை அணிவதன் அர்த்தம்

ஏன் புடவையை தானம் செய்ய வேண்டும்?

திருமண நிகழ்ச்சியில் பலரும் மணமகளை, அவளது சிறப்பை பார்த்தவாறு அமர்ந்திருப்பார்கள். அதனால் மணமகள் மீது திருஷ்டி படிந்திருக்கும். ஆகையால், அனைவரும் தங்களின் திருமணத்தில் முகூர்த்தப் புடவையாக பருத்தியால் நெய்யப்பட்ட புடவையையே பயன்படுத்தி, அதை திருமணத்திற்கு பின் தானமும் செய்தால், தம்பதிகளின் வாழ்வு மேன்மை அடையும்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சருமம் அழகாக

உங்கள் சருமம் பால் போன்று வெண்மையாக வேண்டுமா?

சருமத்தை வெண்மையாக மாற்றும் பால் பால் நம் தினசரி வாழக்கையில் இடம்பெரும் ஒரு முக்கிய பொருளாகும். பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு அதிக அளவிலான ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததாகும். பாலில்...

மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதம் மார்கழி மாதமாகும். மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என கூறியுள்ளார்....
பிரதோஷ சிறப்புகள்

பிரதோஷ வழிபாடும் அதன் சிறப்புகளும்

பிரதோஷம் பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை...
திருமண சடங்குகள்

திருமணத்தின்போது பால், பழம் கொடுப்பது எதற்காக?

திருமணத்தின்போது பால், பழம் கொடுப்பது எதற்காக? திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள் நிறைந்திருக்கும். ஒவ்வொரு திருமணத்திலும் அவரவர் குடும்ப வழக்கதிற்கு ஏற்ப சடங்குகள் வேறுபடும். குறிப்பாக இந்து மத திருமணத்தில் பல வகையான...
குங்குமம் வைப்பதின் நன்மைகள்

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்? திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை மேம்படுத்தும். ஆனால் திருமணம் ஆகாத பெண்கள் குங்குமத்தை வகிட்டில் இடுதல் அவசியம் அற்றது. அபத்தமானதும் கூட....
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூரம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் பூரம் நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பூரம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சிம்மம் : சூரியன் பூரம் நட்சத்திரத்தின் நட்சத்திர தேவதை : பார்வதி பூரம்...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கும்ப லக்னத்தின் அதிபதி சனி பகவனாவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் சற்று உயரமாக இருப்பார்கள். இவர்கள் நல்ல கவர்ச்சியான, மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். தெய்வ பக்தியும்,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.