திருமணத்தில் கூறைப்புடவை அணிவது ஏன்?

கூறைப்புடவை அணிவது ஏன்?

திருமணத்தில் இருக்கும் பல்வேறு சடங்களில் ஒன்று மணமகள் கூறைப்புடவை அணிவது. எத்தனையோ விலை உயர்ந்த சேலைகள் இருக்கும்போது ஏன் கூறைப்புடவையை மட்டும் திருமணத்தில் அணிகின்றனர் என்ற கேள்வி பலருக்கும் எழாமல் இல்லை. அதற்கான பதிலை இந்த பதிவில் காண்போம்.

நமது திருமண கலாச்சாரத்தில் இன்றும் கடைபிடிக்கப்படும் ஒரு முக்கிய விஷயம் திருமணத்தின்போது மணமகன் வீட்டார் மணமகளுக்கு கூறைப்புடவையை அளிப்பது. திருமணங்களில் மாங்கல்யம் கட்டுவதற்கு முன்பு மணமகன் வீட்டார் மணமகளுக்கு முகூர்த்த புடவையான கூறைப்புடவையை அளிக்கின்றனர். அதை மணமகள் உடுத்திக் கொள்வதற்கு தேவையான உதவும் உரிமைகள் அனைத்தும் மணமகனின் சகோதரிக்கு மட்டுமே தர வேண்டும் என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

கூறைபுடவை அணிவது ஏன்

இது ஏன் என்றால் மணமகனான, தன் சகோதரன் இல்லற சுகங்களை அனுபவித்து மகிழ இந்த மணமகள் ஏற்றவள் தானா என்பதை அறிய அந்த நேரத்தில் உறுதி செய்யவே மணமகனின் சகோதரிக்கு இந்த உரிமையை சாஸ்திரம் வழங்குகிறது. மணமகளுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் இதன் மூலம் தெரிய வரும்.

இந்த முகூர்த்தப்புடவையை தான் கூறைப்புடவை என்று அழைக்கின்றனர். அப்படிப்பட்ட இந்த முகூர்த்தப்புடவையான கூறைபுடவையை திருமணம் முடிந்த பின், திருமண மந்திரத்தின் பொருளும், மகிமையும் அறிந்த ஒருவருக்கு தானமாக அளித்துவிட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், இன்று யாரும் இதை கடைபிடிப்பதில்லை.

திருமணத்தில் பட்டுப்புடவை ஏன் தவிர்க்கபடுகிறது?

இன்றைய காலத்தில் மணமகன் வீட்டார் தங்கள் வசதி, மற்றும் அந்தஸ்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முகூர்த்த புடவையாக விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை வாங்குவதால், அதை மற்றவர்களுக்கு தானமாக வழங்க மனம் வருவதில்லை. மேலும் பட்டுத்துணிகள் அனைத்தும் உயிர் வதையால் உருவாக்கப்படுகிறது. மேலும், பலவிதமான ரசாயன நூல்களால் செய்யப்பட்ட துணிகள் இயற்கைக்கு உகந்தது அல்ல.

பருத்தி புடவை ஏன்?

இயற்கையாக உருவாகும் பருத்தி நூலால் ஆன புடவையே சாஸ்திர சம்பிரதாயம். இப்படி சுத்தமான பருத்தி நூலால் நெய்யப்பட்ட புடவையை மஞ்சள் நீரில் நனைத்து பின்பு அதை உலர்த்தி மங்களமாக்கி, அதை முகூர்த்தப் புடவையாக(கூறைபுடைவையாக) பயன்படுத்தும் வழக்கம் இன்றும் பல கிராமங்களில் பரவலாக பின்பற்றப்படுகிறது.

கூறைப்புடவை அணிவதன் அர்த்தம்

ஏன் புடவையை தானம் செய்ய வேண்டும்?

திருமண நிகழ்ச்சியில் பலரும் மணமகளை, அவளது சிறப்பை பார்த்தவாறு அமர்ந்திருப்பார்கள். அதனால் மணமகள் மீது திருஷ்டி படிந்திருக்கும். ஆகையால், அனைவரும் தங்களின் திருமணத்தில் முகூர்த்தப் புடவையாக பருத்தியால் நெய்யப்பட்ட புடவையையே பயன்படுத்தி, அதை திருமணத்திற்கு பின் தானமும் செய்தால், தம்பதிகளின் வாழ்வு மேன்மை அடையும்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தரை பசலை கீரை நன்மைகள்

தரை பசலை கீரையின் மகத்தான மருத்துவ பயன்கள்.

தரை பசலை என்கிற சிறு பசலை தரையில் படரும் கீரை வகைகளுள் பசலை கீரை முக்கியமான ஒன்றாகும். இதற்கு சிறு பசலை, தரை பசலை என்ற வேறு பெயர்களும் உண்டு. உடலின் நோய் எதிர்ப்பு...
தவளை கனவு பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் உண்டாகும் பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் நூல் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....
திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்? பொன்னுருக்குதல் என்றால் என்ன?

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்? திருமணத்தின் போது ஐயர் மாப்பிள்ளை கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். அதே போல மாப்பிள்ளை, மணப்பெண் கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். எதற்காக இதை செய்கிறார்கள் என பலருக்கும்...
பதினெட்டு படிகளின் சிறப்புகள்

பதினெட்டு படிகளின் தத்துவம்

பதினெட்டு படிகளின் தத்துவம் ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு தனிப்பட்ட சிறப்பு உண்டு. அந்த வகையில், பதினெட்டு என்ற எண்ணிற்கு பல்வேறு வரலாற்று சிறப்புகள் உள்ளன. பாரதப் போர் நடைபெற்றது 18 நாட்கள். இராமயணப் போர் நடைபெற்றது...
செரிமானம் சீராக நடைபெற

செரிமான கோளாறு ஏன் ஏற்படுகிறது ? அதற்கான தீர்வுகள்.

உணவு செரிமான கோளாறால்  உண்டாகும் பாதிப்புகள்  சராசரி மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும், மனநல வளர்ச்சிக்கும் நல்ல சீரான உணவு முறை அவசியமாகின்றது. உணவை சாப்பிடும்போது, அவசர, அவசரமாக சாப்பிடுகின்றோம். அதனால், உடலானது பல பிரச்சனைகளை...
பற்கள் பலம் பெற

பற்கள் வெண்மையாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டுமா?

பற்கள் வெண்மையாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டுமா? நம் முகத்தோற்றத்தை அழகாக காட்டுவதில் பற்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அனைவருக்குமே பற்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். அனால் அப்படி இருப்பதில்லை. பற்கள்...
திரிதியை திதி

திரிதியை திதி பலன்கள், திரிதியை திதியில் செய்ய வேண்டியவை

திரிதியை திதி திரிதியை என்பது வடமொழி சொல்லாகும். திரிதியை என்றால் மூன்று என்று பொருள். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் மூன்றாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரிதியை சுக்கில...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.