திருமணத்தில் கூறைப்புடவை அணிவது ஏன்?

கூறைப்புடவை அணிவது ஏன்?

திருமணத்தில் இருக்கும் பல்வேறு சடங்களில் ஒன்று மணமகள் கூறைப்புடவை அணிவது. எத்தனையோ விலை உயர்ந்த சேலைகள் இருக்கும்போது ஏன் கூறைப்புடவையை மட்டும் திருமணத்தில் அணிகின்றனர் என்ற கேள்வி பலருக்கும் எழாமல் இல்லை. அதற்கான பதிலை இந்த பதிவில் காண்போம்.

நமது திருமண கலாச்சாரத்தில் இன்றும் கடைபிடிக்கப்படும் ஒரு முக்கிய விஷயம் திருமணத்தின்போது மணமகன் வீட்டார் மணமகளுக்கு கூறைப்புடவையை அளிப்பது. திருமணங்களில் மாங்கல்யம் கட்டுவதற்கு முன்பு மணமகன் வீட்டார் மணமகளுக்கு முகூர்த்த புடவையான கூறைப்புடவையை அளிக்கின்றனர். அதை மணமகள் உடுத்திக் கொள்வதற்கு தேவையான உதவும் உரிமைகள் அனைத்தும் மணமகனின் சகோதரிக்கு மட்டுமே தர வேண்டும் என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

கூறைபுடவை அணிவது ஏன்

இது ஏன் என்றால் மணமகனான, தன் சகோதரன் இல்லற சுகங்களை அனுபவித்து மகிழ இந்த மணமகள் ஏற்றவள் தானா என்பதை அறிய அந்த நேரத்தில் உறுதி செய்யவே மணமகனின் சகோதரிக்கு இந்த உரிமையை சாஸ்திரம் வழங்குகிறது. மணமகளுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் இதன் மூலம் தெரிய வரும்.

இந்த முகூர்த்தப்புடவையை தான் கூறைப்புடவை என்று அழைக்கின்றனர். அப்படிப்பட்ட இந்த முகூர்த்தப்புடவையான கூறைபுடவையை திருமணம் முடிந்த பின், திருமண மந்திரத்தின் பொருளும், மகிமையும் அறிந்த ஒருவருக்கு தானமாக அளித்துவிட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், இன்று யாரும் இதை கடைபிடிப்பதில்லை.

திருமணத்தில் பட்டுப்புடவை ஏன் தவிர்க்கபடுகிறது?

இன்றைய காலத்தில் மணமகன் வீட்டார் தங்கள் வசதி, மற்றும் அந்தஸ்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முகூர்த்த புடவையாக விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை வாங்குவதால், அதை மற்றவர்களுக்கு தானமாக வழங்க மனம் வருவதில்லை. மேலும் பட்டுத்துணிகள் அனைத்தும் உயிர் வதையால் உருவாக்கப்படுகிறது. மேலும், பலவிதமான ரசாயன நூல்களால் செய்யப்பட்ட துணிகள் இயற்கைக்கு உகந்தது அல்ல.

பருத்தி புடவை ஏன்?

இயற்கையாக உருவாகும் பருத்தி நூலால் ஆன புடவையே சாஸ்திர சம்பிரதாயம். இப்படி சுத்தமான பருத்தி நூலால் நெய்யப்பட்ட புடவையை மஞ்சள் நீரில் நனைத்து பின்பு அதை உலர்த்தி மங்களமாக்கி, அதை முகூர்த்தப் புடவையாக(கூறைபுடைவையாக) பயன்படுத்தும் வழக்கம் இன்றும் பல கிராமங்களில் பரவலாக பின்பற்றப்படுகிறது.

கூறைப்புடவை அணிவதன் அர்த்தம்

ஏன் புடவையை தானம் செய்ய வேண்டும்?

திருமண நிகழ்ச்சியில் பலரும் மணமகளை, அவளது சிறப்பை பார்த்தவாறு அமர்ந்திருப்பார்கள். அதனால் மணமகள் மீது திருஷ்டி படிந்திருக்கும். ஆகையால், அனைவரும் தங்களின் திருமணத்தில் முகூர்த்தப் புடவையாக பருத்தியால் நெய்யப்பட்ட புடவையையே பயன்படுத்தி, அதை திருமணத்திற்கு பின் தானமும் செய்தால், தம்பதிகளின் வாழ்வு மேன்மை அடையும்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சீத்தாபழம் மருத்துவ பயன்கள்

உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும் சீத்தாப்பழம்

சீத்தாப்பழம் சீத்தாப்பழம் அல்லது சீதாப்பழம் அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளை தாயகமாகக் கொண்டது. சீத்தாப்பழம் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், அதனுள் உள்ள சதைப்பகுதி மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் இதர...
துளசி மருத்துவ நன்மைகள்

துளசி மருத்துவ குணங்கள்

துளசி துளசி மூலிகைகளின் ராணி என அழைக்கபடுகிறது. துளசியில் உள்ள மருத்துவ குணங்களால் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசியின் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. துளசி...
மருதாணி இலை பயன்கள்

மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி இலை

மருதாணி இலை மருதாணியை விரும்பாத பெண்களே இல்லை எனலாம். பெண்மை என்பதே அழகுதான். அந்த அழகுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பது மருதாணியாகும். மருதாணியானது மைலாஞ்சி, மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் என வேறு பெயர்களாலும்...
இஞ்சி துவையல் செய்வது எப்படி

இஞ்சி துவையல் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

இஞ்சி துவையல் இஞ்சி துவையல் ஜீரண சக்தியை தூண்டுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைத்து, நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி...
ஊர்வன விலங்குகள் கனவு பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் புத்தகம் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....
திணை இட்லி

திணை அரிசி இட்லி

திணை இட்லி திணை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற ஏரளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட மிகவும் சிறந்த உணவு திணையாகும். திணை இட்லி எப்படி செய்வது...
நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி

பித்தத்தை தணிக்கும் நெல்லிக்காய் துவையல்

நெல்லிக்காய் துவையல் தேவையான பொருட்கள் பெரிய நெல்லிக்காய் – தேவையான அளவு தேங்காய் துருவல் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயத்தூள் – ¼...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.