ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்கள். தேசபக்தியும் அவர்களிடம் நிறைந்து காணப்படும். ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் அறிவில் சிறந்தவர்கள் மேலும் மிகுந்த பொறுமைசாலிகள். குறிப்பிட்ட காரியங்களை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கும் ஆற்றல் உடையவர்கள். அலங்கார பிரியர்கள். ஆடை, அணிகலன்கள் அணிவதில் அதிக விருப்பம் கொண்டவர்கள். அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். கவர்ச்சிகரமான தோற்றத்திற்குச் சொந்தக்காரர்கள்.

ஐப்பசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

இவர்கள் பிறந்தவர்கள் எந்த கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உடையவர்கள். மற்றும் நேர்மையானவர்கள். இம்மாதத்தில் பிறந்த ஆண்களும், பெண்களும் எந்த காரியத்திலும் வல்லவர்கள். இவர்கள் சிறு விஷயங்களுக்குக்கூட உணர்ச்சி வசப்படும் குணம் கொண்டிருப்பார்கள். இவர்களில் ஒரு சிலர் கர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடத்தில் பெருந்தன்மையும், மன்னிக்கும் மனோபாவமும் நிறைந்திருக்கும்.

இவர்கள் பிறர் செய்த உதவியை மறக்க மாட்டார்கள். இவர்கள் எந்த துறையை எடுத்துகொண்டாலும் அதில் தங்கள் தனித்திறமையை பதிப்பர். கலைத்துறை, எழுத்துத் துறை, ஆடை, ஆபரண, அலங்காரப் பொருள் விற்பனை நிலையம் போன்ற தொழில் துறைகளில் இவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். இவர்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதனால் இவர்கள் சிறு உடல் உபாதைகளைக் கூட நெருங்க விட மாட்டார்கள், அப்படி வந்தால் அதை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஐப்பசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள, கண்ணன் வெண்ணெய் உண்ணும் படம் வீட்டில் வைத்து வழிபடலாம். இவர்கள் கண்ணனை வழிபட்டால் செய்யும் காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அஷ்ட லட்சுமியின் அருளுக்குப் பாத்திரமானவர்களாக இருப்பீர்கள்.

இவர்கள் நீதியையும்,நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் பார்ப்பதற்கு பசுபோல் இருந்தாலும் கோபம் வரும் பொழுது கொந்தளித்துப் பின் விளைவுகளை சிந்திக்காமல் பேசி விடுவார்கள். இவர்களுக்கு நிரந்தரப் பகை என்பதுமில்லை. ஒருவரோடு சிநேகம் வைத்துக்கொண்டால் ‘ஓகோ’ என்று புகழ்ந்து சொல்வார்கள்.

கவர்ச்சிகரமான தோற்றத்திற்குச் சொந்தக்காரர்களாக விளங்கும் இவர்கள், பஞ்சாயத்துக்களில் தலைமைப் பொறுப்பேற்றால் பக்குவமாகப் பேசி நீதியை நிலைநாட்டுவார்கள். உணவு உட்கொள்வதில் அதிக விருப்பம் இவர்களுக்கு  உண்டு. குறிப்பாக விதவிதமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். வித்தியாசமான சீதோஷ்ண நிலைகளில் வசிக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் இளம் வயதிலேயே இவர்களுக்கு உருவாகும்.

கந்த சஷ்டி விழாக்காலத்தில் ஆறுநாட்களும் முடிந்தவரை விரதமிருந்து முத்தமிழால் முருகன் புகழ்பாடி செந்தூர் வழிபாட்டையும் மேற்கொண்டால் எந்தநாளும் இவர்களுக்கு இனிய நாளாக மாறும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

pineapple kesari recipe

பைனாப்பிள்  கேசரி செய்முறை

பைனாப்பிள்  கேசரி செய்முறை  தேவையான பொருட்கள் ரவை – 1 கப் சர்க்கரை – ¾ கப் தண்ணீர் – 2 கப் கேசரி கலர் - சிறிதளவு அன்னாசிபழத் துண்டுகள் – ½...
raagi recipes

உடலுக்கு வலுசேர்க்கும் கேழ்வரகு பர்பி

கேழ்வரகு பர்பி தேவையான பொருட்கள் ராகி மாவு – 1 கப் ரவை – ¼ கப் வெல்லம் – 1 கப் நெய் – தேவையான அளவு முந்திரி – தேவையான அளவு ...
prawn recipes

இறால் குழம்பு

இறால் குழம்பு தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ உருளைக்கிழங்கு -  1 ( பெரியது ) முருங்கைக்காய் - 1 கொத்தமல்லி – சிறிதளவு மிளகாய் தூள் -  2 ஸ்பூன் ...
3ம் எண்ணின் பொதுவான குணம்

3ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

3ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 3ம் எண் தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியதாகும். 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்க எண்ணான 3ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 3ம் எண்ணில்...
நவராத்திரி வழிபாடு

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் 

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் மாகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை வரக்கூடிய 9 நாட்களை தான் நாம் நவராத்திரி என்று அழைக்கிறோம். நாளை...
சிக்கன் சூப் செய்வது எப்படி

சிக்கன் சூப் எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் சூப் உடல் நலிவுற்றவர்கள் காய்கறிகள் மற்றும் சூப்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சூப் குடிப்பதால் உடல் பலப்படும், பசியை தூண்டும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், இளைத்த உடலை தேற்றும்....
சிக்கன் பக்கோடா செய்வது எப்படி

சிக்கன் பக்கோடா எளிதாக செய்வது எப்படி

சிக்கன் பக்கோடா சிக்கன் என்றாலே அனைவருக்குமே மிகவும் பிடித்த உணவுதான். சிக்கன் பக்கோடா என்றால் சொல்லவே வேண்டாம் நினைக்கும் போதே நாவில் உமிழ் நீர் சுரக்கும். அதிலும் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் சிக்கன்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.