சிக்கன் சூப் எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் சூப்

உடல் நலிவுற்றவர்கள் காய்கறிகள் மற்றும் சூப்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சூப் குடிப்பதால் உடல் பலப்படும், பசியை தூண்டும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், இளைத்த உடலை தேற்றும். மேலும் மழை மற்றும் பனி காலங்களில் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளை போக்க சூப்கள் உதவி புரிகின்றன. பல வகையான சூப்கள் இருந்தாலும் சிக்கன் சூப் விலை மலிவானது மற்றும் ஆரோக்கியமானது. அந்த வகையில் சிக்கன் சூப் எவ்வாறு எளிதாக வீட்டிலேயே செய்வது என்பதை பார்ப்போம்.

சிக்கன் சூப் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

1. கோழிக்கறி (எலும்புடன்) – 1/4 கிலோ
2. வெங்காயம் – 1
3. தக்காளி – 1
4. இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
5. கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
6. மஞ்சள்தூள் – ¼ மேஜைக்கரண்டி
7. உப்பு – தேவையான அளவு
8. சீரகம் – ½ மேஜைக்கரண்டி
9. மிளகு தூள் – ½ மேஜைக்கரண்டி

செய்முறை

1. வெங்காயம், தக்காளி, மற்றும் கொத்தமல்லியை நன்றாக பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

2. கோழிக்கறியை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.

3. குக்கரில் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு தாளிக்கவும்.

4. வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, சீரகம், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்.

5. மேற்கூறியவை நன்றாக வதங்கிய பிறகு அதனுடன் வெட்டி வைத்த கோழிக்கறி மற்றும் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பின்னர் மூடி போட்டு 2 விசில் வரும் வரை நன்கு வேக விடவும்.

6. 2 விசில் வந்ததும் குக்கரை திறந்து அதனுடன் கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும். சுவையான சிக்கன் சூப் தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மூன்று முடிச்சு போடுவதின் அர்த்தம்

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ?

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ? திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள், நம்பிக்கைகள் நிறைந்ததாகும். திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. சில சடங்குகள் ஏன், எதற்காக செய்கிறோம்...
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூரட்டாதி நட்சத்திரத்தின் இராசி : கும்பம் மற்றும் மீனம் பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி : குரு பூரட்டாதி நட்சத்திரத்தின் 1, 2 மற்றும் 3ம் பாதத்தின் இராசி அதிபதி (கும்பம்) :...
நாக தோஷ பரிகார தலங்கள்

சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் என்றால் என்ன? சர்ப்ப தோஷ பரிகாரங்கள்

சர்ப்ப தோஷம் என்றால் என்ன? திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது ஜாதகத்தில் நன்றாக இருக்கிறதா, அல்லது எதாவது தோஷம் இருக்கிறதா என கேட்பார்கள். அப்படிப்பட்ட தோஷங்களில் ஒன்று சர்ப்ப தோஷம், அல்லது நாக தோஷம் ஆகும்....
தந்துரி சிக்கன் பிரியாணி

தந்தூரி சிக்கன் பிரியாணி

தந்தூரி சிக்கன் பிரியாணி எளிமையான முறையில் வீட்டிலேயே மிகவும் சுவையாக தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் சிக்கன் தொடை பகுதி – 4 தயிர் - ஒரு கப் ...
இனிப்பு சாப்பிடுவது போல கனவு வந்தால்

உணவு பொருட்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

உணவு பொருட்கள் கனவில் வந்தால் மனித வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. மனிதனால் உணவு இல்லாமல் வாழ முடியாது. அப்படிப்பட்ட உணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை...
மூச்சுபயிற்சி

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்

உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் நம் அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆசை. ஆனால் பலருக்கும் அது நடப்பதில்லை. காரணம் நாம் வாழும் வாழக்கை முறை, உணவு...
கார்த்திகையில் பிறந்தவர்களின் குணநலன்கள்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில் 8வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் கற்றது கள்ளவு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.