சைனீஸ் கார்லிக் சிக்கன்

சைனீஸ் கார்லிக் சிக்கன்

chinese garlic chickenதேவையான பொருட்கள்

1. சிக்கன் – ½  கிலோ ( எலும்பில்லாதது )
2. மைதா – 3 ஸ்பூன்
3. சோள மாவு – 3 ஸ்பூன்
4. உப்பு – தேவையான அளவு
5. மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
6. சோயா சாஸ் – 1 ஸ்பூன்
7. இஞ்சி பூண்டு விழுது  – 2 ஸ்பூன்
8. தண்ணீர் – தேவையான அளவு
9. எண்ணெய் – தேவையான அளவு

கிரேவி செய்ய தேவையான பொருட்கள்

1. எண்ணெய் – சிறிதளவு
2. வெண்ணெய் – 1 ஸ்பூன்
3. இஞ்சி – 1 துண்டு ( பொடியாக நறுக்கியது )
4. பூண்டு – 20 பல் ( பொடியாக நறுக்கியது )
5. வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
6. தக்காளி சாஸ் – 1 ஸ்பூன்
7. சோயா சாஸ் – 1 ஸ்பூன்
8. சில்லி சாஸ் – 1 ஸ்பூன்
9. வினிகர் – ½  ஸ்பூன்
10. உப்பு – தேவையான அளவு
11. சர்க்கரை – 1 ஸ்பூன்
12. மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
13. சோள மாவு – 1 ஸ்பூன்
14. வெங்காயத் தாள் – சிறிதளவு
15. தண்ணீர் – தேவையான அளவு

சைனீஸ் கார்லிக் சிக்கன்செய்முறை

  1.    முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.       சுத்தம் செய்த சிக்கனை  ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்துக்    கொள்ளவும்.
  2. சிக்கனுடன் மைதா, சோள மாவு, மிளகு தூள், சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  3. சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிரட்டி வைத்துக் கொள்ளவும்.
    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
  4. எண்ணெய் காய்ந்ததும் ஊற வைத்துள்ள  சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
    பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  5. வெண்ணெய் உருகியதும்  அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  6. இஞ்சி பூண்டு வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  7. வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  8. பின்னர் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், வினிகர், 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  9. ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் சோள மாவினை சேர்த்துக் கொள்ளவும்.
  10. அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் எதுவும் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
  11. கலந்த சோள மாவு கலவையை வாணலியில் சேர்த்துக் கொள்ளவும்.
  12. சோள மாவு சேர்த்து கைவிடாமல் கலந்து விடவும்.
  13. பின்னர் பொறித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி 2 நிமிடத்திற்கு மூடி பொட்டு வேக விடவும்.
  14. கடைசியாக பொடியாக நறுக்கிய வேங்கயத்தாளினை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சைனீஸ் கார்லிக் சிக்கன் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அத்திப்பழம் நன்மைகள்

அத்திப்பழம் பயன்கள் | அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்

அத்திப்பழம் அத்திப்பழம் மரம் ‘மோரேசி’ Moraceae என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. அத்தியின் அறிவியல் பெயர் Ficus glomerata மற்றும் Ficus auriculate ஆகும். அத்திப்பழம் ஆங்கிலத்தில் 'fig' என அழைக்கபடுகிறது. அத்திமரம் களிமண்...
4ம் எண்ணின் குணநலன்கள்

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 4ம் எண் ராகு பகவானுக்குரிய எண்ணாகும். இந்த எண் எங்கும், எதையும் பிரம்மாண்டமாகவும், பெரிதுப்படுத்தி எண்ணக்கூடிய மாபெரும் ஆற்றல் கொண்ட எண்ணாகும். 4, 13, 22, 31 ஆகிய...
பிறந்த தேதி பலன்

நீங்கள் இந்த தேதியில் பிறந்தவரா, உங்கள் பிறந்த தேதி பலன்கள் இதோ

பிறந்த தேதி பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதிரியான குணநலன்கள் இருக்கும் என்பது போல், குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் குணநலன்கள் மாறுபடும். அதன்படி அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும்...

மார்கழியில் சுபகாரியங்கள் ஏன் செய்வது இல்லை

மார்கழியில் சுபகாரியங்கள் மார்கழி மாதம் என்றால் நமது நினைவுக்கு முதன் முதலில் வருவது ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் போடப்பட்டிருக்கும் வண்ணமயமான அழகிய கோலங்கள் தான். மார்கழி மாதத்தின் பெருமையை ஆண்டாள், "மார்கழித் திங்கள் மதிநிறைந்த...
சித்திரையில் பிறந்தவர்களின் குணநலன்கள்

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பன்னிரண்டு தமிழ் மாதங்களில் முதல் மாதம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். முன்வைத்த காலை எதிலும் பின் வைக்க மாட்டார்கள்....
மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை

திருமணத்தில் ஏழு அடி பிரார்த்தனை ஏன் செய்யபடுகிறது?

மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை திருமணத்தில் பல விதமான சடங்குகள் செய்யபட்டாலும் அதன் முழுமையான அர்த்தம் பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று தான் மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை. ஏழு அடி பிரார்த்தனை என்றால்...
மட்டன் குருமா குழம்பு வைப்பது எப்படி

மட்டன் குருமா செய்வது எப்படி

மட்டன் குருமா ஆட்டுக்கறி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது, கூடவே ஆரோக்கியமும் நிறைந்தது. மட்டனை வைத்து விதவிதமான உணவுகள் செய்யப்படுகிறது. அதில் ஒன்றுதான் மட்டன் குருமா. இந்த மட்டன் குருமா செய்வதற்கு மணமானது மற்றும் எளிதானது,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.