ஆட்டுக்கால் சூப் வைப்பது எப்படி

ஆட்டுக்கால் சூப்

ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி தேவையான பொருட்கள்

  1. ஆட்டுக்கால் – 4
  2. தனியா தூள் – 2 ஸ்பூன்
  3. மிளகு தூள் – 2 ஸ்பூன்
  4. சீரகத் தூள் – 2 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
  6. பூண்டு பல்(தோலுடன்) – 10
  7. இஞ்சி – 1 துண்டு
  8. பச்சை மிளாகாய் – 1
  9. சின்ன வெங்காயம் 100 கிராம்
  10. தக்காளி – 1
  11. நல்லெண்ணெய் – தேவையான அளவு
  12. உப்பு – தேவையான அளவு
  13. கொத்தமல்லி தழை – சிறிதளவு
  14. கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

  1. முதலில் ஆட்டுக்கால்களை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  2. சுத்தம் செய்த ஆட்டுக்கால்களை குக்கரில் சேர்த்துக் கொள்ளவும். ஆட்டுக்காலுடன் 100 கிராம் சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1 பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  3. இஞ்சி, பூண்டு இரண்டையும் தட்டி சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டை அரைத்து சேர்க்காமல் தட்டி சேர்ப்பதால் சூப்பின் சுவை அதிகரிக்கும்.
  4. பின்னர் எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளவும்.
  5. தனியா தூள், மிளகு தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் , ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
  6. இவை அனைத்தையும் சேர்த்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  7. குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு வேக வைக்கவும்.
  8. விசில் அடங்கியவுடன் குக்கரை திறக்கவும்.
  9. இப்போது ஆட்டுக்கால் சூப் தாளிப்பதற்கு ஒரு சின்ன கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  10. எண்ணெய் சூடானவுடன் சிறிதளவு கடுகு , சிறிதளவு சீரகம், 2 சின்ன  வெங்காயத்தை நன்றாக இடித்து  சேர்த்துக்  கொள்ளவும்.
  11. சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.
  12. தாளித்தவற்றை சூப்பில் சேர்த்துக் கொள்ளவும்.
  13. கடைசியாக கொஞ்சம் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் சுவையான ஆட்டுக்கால் சூப் தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி அசைவ உணவில் சிறியவர்  முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். பிரியாணியின் சுவையும் மணமும் தான் நாம் விரும்பி சாப்பிட ஒரு...
அஷ்டமி திதி பலன்கள்

அஷ்டமி திதி பலன்கள், அஷ்டமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

அஷ்டமி திதி அஷ்ட என்றால் எட்டு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை நாளிலிருந்து அல்லது பவுர்ணமி நாளிலிருந்து வரும் எட்டாவது நாள் அஷ்டமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் அஷ்டமியை...
riddles and brain teasers

Riddles and Puzzles with answers | Riddles and Brain Teasers with Answers

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
தொடை கறி

ஆற்காடு தொடை கறி

ஆற்காடு தொடை கறி தேவையான பொருட்கள் மட்டன்  (தொடை கறி) - ½ கிலோ வினிகர் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மிளகுத் தூள் - 2 ஸ்பூன் ...
பஞ்சபூதங்கள் கனவில் வந்தால்

பஞ்சபூதங்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பஞ்சபூதங்கள் கனவில் வந்தால் கனவு என்பது குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும். எந்த மாதிரியான கனவுக்கு என்ன பலன்கள் ஏற்படும் என்று பெரியோர்கள் முற்காலங்களில் சொல்லி வைத்துள்ளனர். அந்த வகையில் பஞ்சபூதங்கள்...

ஏலக்காய் தண்ணீர் குடிப்பதினால் உண்டாகும் நன்மைகள்

ஏலக்காய் தண்ணீர் பயன்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த ஒரு அறிய மருந்து தான் ஏலக்காய். ஏலக்காய் நம் அனைவரின் வீட்டிலும் இருக்கக் கூடிய ஒரு அறிய மருத்துவ குணம்...
இறால் கிரேவி செய்முறை

இறால் கிரேவி செய்வது எப்படி

இறால் கிரேவி செய்வது எப்படி இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இந்த கடல் உணவை தாரளமாக சாப்பிடலாம்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.