ஆட்டுக்கால் சூப் வைப்பது எப்படி

ஆட்டுக்கால் சூப்

ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி தேவையான பொருட்கள்

  1. ஆட்டுக்கால் – 4
  2. தனியா தூள் – 2 ஸ்பூன்
  3. மிளகு தூள் – 2 ஸ்பூன்
  4. சீரகத் தூள் – 2 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
  6. பூண்டு பல்(தோலுடன்) – 10
  7. இஞ்சி – 1 துண்டு
  8. பச்சை மிளாகாய் – 1
  9. சின்ன வெங்காயம் 100 கிராம்
  10. தக்காளி – 1
  11. நல்லெண்ணெய் – தேவையான அளவு
  12. உப்பு – தேவையான அளவு
  13. கொத்தமல்லி தழை – சிறிதளவு
  14. கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

  1. முதலில் ஆட்டுக்கால்களை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  2. சுத்தம் செய்த ஆட்டுக்கால்களை குக்கரில் சேர்த்துக் கொள்ளவும். ஆட்டுக்காலுடன் 100 கிராம் சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1 பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  3. இஞ்சி, பூண்டு இரண்டையும் தட்டி சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டை அரைத்து சேர்க்காமல் தட்டி சேர்ப்பதால் சூப்பின் சுவை அதிகரிக்கும்.
  4. பின்னர் எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளவும்.
  5. தனியா தூள், மிளகு தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் , ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
  6. இவை அனைத்தையும் சேர்த்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  7. குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு வேக வைக்கவும்.
  8. விசில் அடங்கியவுடன் குக்கரை திறக்கவும்.
  9. இப்போது ஆட்டுக்கால் சூப் தாளிப்பதற்கு ஒரு சின்ன கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  10. எண்ணெய் சூடானவுடன் சிறிதளவு கடுகு , சிறிதளவு சீரகம், 2 சின்ன  வெங்காயத்தை நன்றாக இடித்து  சேர்த்துக்  கொள்ளவும்.
  11. சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.
  12. தாளித்தவற்றை சூப்பில் சேர்த்துக் கொள்ளவும்.
  13. கடைசியாக கொஞ்சம் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் சுவையான ஆட்டுக்கால் சூப் தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பூக்கள் கனவு பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் பலருக்கும் பலவிதமான வித்தியாசமான கனவுகள் ஒவ்வொரு நாளும் வரும். அதில் ஒரு சில விசித்திரமான கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது,...
வெந்தயக்கீரை மருத்துவ குணங்கள்

வெந்தயக்கீரை மருத்துவ பயன்கள்

வெந்தய கீரை வெந்தயம் கீரை மற்றும் வெந்தயம் உணவுப்பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயம் தமிழர்களின் சமையலில் தவறாமல் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருளாகும். இதன் செடி கீரையாகவும், இதன் விதைகளான வெந்தயம் உணவுகளில் சுவையூட்டியாகவும்...
கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி

சத்தான கேழ்வரகு முறுக்கு செய்முறை

கேழ்வரகு முறுக்கு தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு – 500 கிராம் அரிசி மாவு - 50 கிராம் உடைத்த கடலை மாவு – 50 கிராம் சீரகம் – 1 ஸ்பூன் வெண்ணை...
சர்ப்ப தோஷங்களின் வகைகள்

சர்ப்ப தோஷங்கள் என்றால் என்ன? சர்ப்ப தோஷங்களின் வகைகள்

சர்ப்ப தோஷங்கள் நம்முடைய ஜாதகத்தில் ஏதாவது இரு இடங்களில் ராகுவும், கேதுவும் இடம் பெற்றிருப்பார்கள். அனைத்து கிரகங்களும் ராகு - கேதுக்களுக்கு இடையில் அமைந்து, ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால், அது பூரண...
அழகான பாதங்கள்

உங்கள் பாதங்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்.

பாதங்கள் நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பாதங்களின் அழகும் முக்கியம் தான். ஆனால் பெண்கள் தங்கள் முகம், தலைமுடி,...
தவளை கனவு பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் உண்டாகும் பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் நூல் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....
ஊர்வன விலங்குகள் கனவு பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் புத்தகம் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.