சிக்கன் ரோல் செய்வது எப்படி

சிக்கன் ரோல்

சிக்கனை பயன்படுத்தி ஒரு அருமையான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி சிக்கன் ரோல் சுலபமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

chickken chappathi roll

தேவையான பொருட்கள்

  1. சிக்கன் – ¼  கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது –  1  ஸ்பூன்
  3. ஜீரகத் தூள் – ½ ஸ்பூன்
  4. தனியா தூள் – 1 ஸ்பூன்
  5. தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  6. சாட் மசாலா – ¼  ஸ்பூன்
  7. மிளகு தூள் – ½ ஸ்பூன்
  8. உப்பு – தேவையான அளவு
  9. கொத்தமல்லி – சிறிதளவு
  10. கொத்தமல்லி சட்னி – ¼ கப்
  11. மைதா – 150 கிராம்

செய்முறை

  1. முதலில் சிக்கனில் உள்ள எலும்புகளை நீக்கி விட்டு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  2. சுத்தம் செய்த சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  3. சிக்கனுடன் சிறிதளவு உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்திருக்கவும்.
  4. பின்னர்  150 gram மைதாவை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்க்கவும்.
  5. அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு 10 நிமிடத்திற்கு ஊற விடவும்.
  6. 10 நிமிடத்திற்கு பிறகு மாவை சப்பாத்தியாக தேய்த்து சுட்டு வைத்துக் கொள்ளவும்.
  7. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு வதக்கவும்.
  8. சிக்கன் கொஞ்சம் வதங்கியவுடன்  அதில் சீரகத் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள், சாட் மசாலா ஆகிய எல்லாவற்றையும் போட்டு பிரட்டி விட்டு நன்கு வேக விடவும்.
  9. சிக்கன் நன்கு வெந்ததும் சிறிதளவு மிளகு தூள் கொஞ்சம் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி வைக்கவும்.
  10. அதன் பிறகு செய்து வைத்திருக்கும் சப்பாத்தியின் மேல் கொத்தமல்லி சட்னியை தடவி விடவும்.
  11. கொத்தமல்லி சட்னிக்கு பதில் தக்காளி சாஸ் கூட பயன்படுத்தாலம்.
  12. சட்னி தடவிய பின்  அதில் வதக்கி வைத்திருக்கும் சிக்கனை வைத்து சப்பாத்தியை அப்படியே ரோலாக சுருட்டவும். சுவையான சிக்கன் ரோல் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

திதியும் நெய்வேத்தியமும்

எந்த திதிக்கு என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்

திதி என்றால் என்ன ? இறை வழிபாடு என்பது நாம் அனைவரும் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும். இறைவழிபாடு செய்யும்போது மனம் அமைதி அடையும், மன நிம்மதி உண்டாகும், புத்தி தெளிவடையும், எதிர்மறை எண்ணங்கள்...
மீன் குழம்பு செய்வது எப்படி

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு தேவையான பொருட்கள் மீன் – ½  கிலோ புளி – எலுமிச்சை அளவு பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 ...
குழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம்

எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்

எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் குழந்தை பிறப்பதே அதிஷ்டம் தான்,கிழமை என்பது உறவுகள் என்று பொருள். அனைத்து கிழமைகளும் ஒவ்வொரு கடவுளுடைய தொடர்புடையது என்று கூறப்படுகிறது. இருந்தாலும் குழந்தை எந்த கிழமைகளில் பிறந்தால்...
மொட்டை போடுவது ஏன்

பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் தெரியுமா

குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஒரு உண்மை மறைந்திருக்கும். அப்படிப்பட்ட...
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூரட்டாதி நட்சத்திரத்தின் இராசி : கும்பம் மற்றும் மீனம் பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி : குரு பூரட்டாதி நட்சத்திரத்தின் 1, 2 மற்றும் 3ம் பாதத்தின் இராசி அதிபதி (கும்பம்) :...
சிம்ம ராசி குணங்கள்

சிம்ம ராசி பொது பலன்கள் – சிம்ம ராசி குணங்கள்

சிம்ம ராசி குணங்கள் சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். சிம்ம ராசியில் மகம், பூரம் நட்சத்திரத்தின் 4 பாதங்களும், உத்திரம் நட்சத்திரத்தின் 1ம் பாதமும் அடங்கியுள்ளன. சிம்ம ராசியானது கால புருஷனின் இதயத்தை...
பூர்வ ஜென்ம கர்மா

கர்மவினை எப்படி ஏற்படும்?

கர்மவினை எப்படி ஏற்படும்? நாம் முற்பிறவியில் செய்த பாவ , புண்ணியங்களை வைத்து தான் இப்பிறவியில் அதற்க்கான கர்ம பலன்களை அனுபவிக்கிறோம். உலகில் ஒரே நேரத்தில் பிறக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளில் ஒரு சில குழந்தைகள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.