சிக்கன் ரோல் செய்வது எப்படி

சிக்கன் ரோல்

சிக்கனை பயன்படுத்தி ஒரு அருமையான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி சிக்கன் ரோல் சுலபமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

chickken chappathi roll

தேவையான பொருட்கள்

  1. சிக்கன் – ¼  கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது –  1  ஸ்பூன்
  3. ஜீரகத் தூள் – ½ ஸ்பூன்
  4. தனியா தூள் – 1 ஸ்பூன்
  5. தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  6. சாட் மசாலா – ¼  ஸ்பூன்
  7. மிளகு தூள் – ½ ஸ்பூன்
  8. உப்பு – தேவையான அளவு
  9. கொத்தமல்லி – சிறிதளவு
  10. கொத்தமல்லி சட்னி – ¼ கப்
  11. மைதா – 150 கிராம்

செய்முறை

  1. முதலில் சிக்கனில் உள்ள எலும்புகளை நீக்கி விட்டு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  2. சுத்தம் செய்த சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  3. சிக்கனுடன் சிறிதளவு உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்திருக்கவும்.
  4. பின்னர்  150 gram மைதாவை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்க்கவும்.
  5. அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு 10 நிமிடத்திற்கு ஊற விடவும்.
  6. 10 நிமிடத்திற்கு பிறகு மாவை சப்பாத்தியாக தேய்த்து சுட்டு வைத்துக் கொள்ளவும்.
  7. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு வதக்கவும்.
  8. சிக்கன் கொஞ்சம் வதங்கியவுடன்  அதில் சீரகத் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள், சாட் மசாலா ஆகிய எல்லாவற்றையும் போட்டு பிரட்டி விட்டு நன்கு வேக விடவும்.
  9. சிக்கன் நன்கு வெந்ததும் சிறிதளவு மிளகு தூள் கொஞ்சம் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி வைக்கவும்.
  10. அதன் பிறகு செய்து வைத்திருக்கும் சப்பாத்தியின் மேல் கொத்தமல்லி சட்னியை தடவி விடவும்.
  11. கொத்தமல்லி சட்னிக்கு பதில் தக்காளி சாஸ் கூட பயன்படுத்தாலம்.
  12. சட்னி தடவிய பின்  அதில் வதக்கி வைத்திருக்கும் சிக்கனை வைத்து சப்பாத்தியை அப்படியே ரோலாக சுருட்டவும். சுவையான சிக்கன் ரோல் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பஞ்சமி திதி பலன்கள்

பஞ்சமி திதி பலன்கள், பஞ்சமி திதியில் செய்ய வேண்டியவை

பஞ்சமி திதி பஞ்ச என்பது ஒரு வடமொழி சொல்லாகும். பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமியை சுக்கில...
செம்பருத்திப் பூ டீ

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை டீ வகைகள்

ஆரோக்கியமான  மூலிகை டீ வகைகள் தண்ணீருக்கு பிறகு நாம் அதிக அளவில் குடிக்க கூடிய பானம் என்ன என்றால் அது டீ தான். டீ குடிக்காமல் அன்றைய நாளே முழுமை பெறாது என்று நினைப்பவர்களும்...
5ம் எண்ணின் குணநலன்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 5ம் எண் புதன் பகவானுக்குரிய எண்ணாகும். 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். 5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் இவர்கள் பின்னால் நடக்க போவதை முன்கூட்டியே...
சதுர்த்தி திதி

சதுர்த்தி திதி பலன்கள், சதுர்த்தி திதியில் செய்ய வேண்டியவை

சதுர்த்தி திதி சதுர் என்பது வடமொழி சொல்லாகும். சதுர் என்றால் நான்கு என்று பொருள். கடவுளின் நான்கு கைகளை ‘சதுர்புஜம்’ என்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். அமாவாசைக்கு...
சிக்கன் சூப் செய்வது எப்படி

சிக்கன் சூப் எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் சூப் உடல் நலிவுற்றவர்கள் காய்கறிகள் மற்றும் சூப்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சூப் குடிப்பதால் உடல் பலப்படும், பசியை தூண்டும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், இளைத்த உடலை தேற்றும்....
கோவில் குளத்தில் காசு போடுவது

கோவில் குளத்தில் காசு போடலாமா?

கோவில் குளத்தில் காசு ஏன் போடுகிறார்கள் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களுக்கு நாம் சென்றால் அந்த கோவில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஒரு சிலர் அதில் காசு போடுவதையும்...
மூச்சுபயிற்சி

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்

உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் நம் அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆசை. ஆனால் பலருக்கும் அது நடப்பதில்லை. காரணம் நாம் வாழும் வாழக்கை முறை, உணவு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.