தந்தூரி சிக்கன் வீட்டிலேயே செய்வது எப்படி

தந்தூரி சிக்கன்

தந்தூரி சிக்கன் நல்ல காரசாமான சுவையை கொண்டது. தந்தூரி சிக்கன் உணவகங்களில் மட்டுமே செய்ய முடியும் என பலரும் நினைத்திருப்போம். இந்த பதவில் தந்தூரி சிக்கன் எளிமையாக எப்படி வீட்டிலேயே செய்வது என பார்க்கலாம்.

தந்தூரி சிக்கன் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

1. கோழி கறி – 4 (தொடை பகுதி)
2. எண்ணெய் – தேவையான அளவு
3. கேசரி பவுடர் – அரை சிட்டிகை
4. மைதா மாவு – 50 கிராம் அளவு
5. கடலை மாவு – 50 கிராம் அளவு
6. தந்தூரி சிக்கன் மசாலா – 50 கிராம்
7. எலுமிச்சை பழம் – 1
8. இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
9. உப்பு – தேவையான அளவு
10. முட்டை – 1 (வெள்ளை கரு மட்டும் போதும்)
11. மிளகுதூள் – 1 மேஜைக்கரண்டி
12. கரம் மசாலா – 1 மேஜைக்கரண்டி

செய்முறை

1. கோழி கறியை (தொடை பகுதி) நன்கு சுத்தம் செய்து அதில் கத்தியை வைத்து சிறிது கீறல் போடவும். அப்போதுதான் கறியில் மசாலா நன்கு சேரும்.

2. ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, தந்தூரி சிக்கன் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு, மிளகுதூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

3. மேலே சொன்ன கலவையில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அதனுடன் சிறிது கேசரி பவுடரை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த மசாலா கலவையில் சுத்தம் செய்த கோழி கறியை சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

4. பின்பு அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானவுடன் கறியை அதில் போட்டு சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.

5. கறியை அவ்வப்போது இருபக்கமும் திருப்பி திருப்பி போட வேண்டும். இதை செய்யும்போது குறைவான தீ இருப்பது மிகவும் முக்கியம். இல்லையேல் கறி கருகிவிட வாய்ப்பு உண்டு.

6. கறி நன்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் அடுப்பை அனைத்து கறியை எடுத்து விடவும்.

7. இப்போது சுவையான தந்தூரி சிக்கன் தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆண் கை பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்

ஆண் கை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் கை மச்ச பலன்கள் உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். மேலும், மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. ஒருவருக்கு மச்சம் இந்த இடத்தில் இருந்தால் இந்த மாதிரியான...

மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதம் மார்கழி மாதமாகும். மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என கூறியுள்ளார்....
27 நட்சத்திரங்களும் கோவில்களும்

27 நட்சத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும்

27 நக்ஷத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும் நக்ஷத்திரங்கள் 27 என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ல் ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் ஒரு கோயில் உண்டு. மேற்படி அவரவர் நக்ஷத்திரத்திற்கு உரிய கோயிலை தரிசித்தால் எண்ணற்ற நன்மைகளை வாழ்வில்...

ஏலக்காய் தண்ணீர் குடிப்பதினால் உண்டாகும் நன்மைகள்

ஏலக்காய் தண்ணீர் பயன்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த ஒரு அறிய மருந்து தான் ஏலக்காய். ஏலக்காய் நம் அனைவரின் வீட்டிலும் இருக்கக் கூடிய ஒரு அறிய மருத்துவ குணம்...
கனவு பலன்கள் நாய்

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால் என்ன பலன்

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால் பூனை கனவில் வந்தால் 1. வீட்டு அடுபாங்கரையில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு வந்தால் அது நல்ல சகுனம் அல்ல என்று அர்த்தம். 2. பூனை...
துலாம் ராசி பலன்கள்

துலாம் ராசி பொது பலன்கள் – துலாம் ராசி குணங்கள்

துலாம் ராசி குணங்கள் துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரத்தின் 3, 4 ஆம் பாதங்களும், சுவாதி நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், விசாகம் நட்சத்திரத்தின் 1, 2,...
அப்பம் செய்யும் முறை

இனிப்பு அப்பம் செய்வது எப்படி

அப்பம் இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியங்களில் முக்கியமான ஒன்று இனிப்பு அப்பம் ஆகும். இந்த அப்பம் சுவையானது மட்டுமல்லாமல் செய்வதும் மிகவும் எளிதான ஒரு பலகாரம் ஆகும். சுவையான இனிப்பு அப்பம் எப்படி செய்வது என்பதை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.