தந்தூரி சிக்கன் வீட்டிலேயே செய்வது எப்படி

தந்தூரி சிக்கன்

தந்தூரி சிக்கன் நல்ல காரசாமான சுவையை கொண்டது. தந்தூரி சிக்கன் உணவகங்களில் மட்டுமே செய்ய முடியும் என பலரும் நினைத்திருப்போம். இந்த பதவில் தந்தூரி சிக்கன் எளிமையாக எப்படி வீட்டிலேயே செய்வது என பார்க்கலாம்.

தந்தூரி சிக்கன் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

1. கோழி கறி – 4 (தொடை பகுதி)
2. எண்ணெய் – தேவையான அளவு
3. கேசரி பவுடர் – அரை சிட்டிகை
4. மைதா மாவு – 50 கிராம் அளவு
5. கடலை மாவு – 50 கிராம் அளவு
6. தந்தூரி சிக்கன் மசாலா – 50 கிராம்
7. எலுமிச்சை பழம் – 1
8. இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
9. உப்பு – தேவையான அளவு
10. முட்டை – 1 (வெள்ளை கரு மட்டும் போதும்)
11. மிளகுதூள் – 1 மேஜைக்கரண்டி
12. கரம் மசாலா – 1 மேஜைக்கரண்டி

செய்முறை

1. கோழி கறியை (தொடை பகுதி) நன்கு சுத்தம் செய்து அதில் கத்தியை வைத்து சிறிது கீறல் போடவும். அப்போதுதான் கறியில் மசாலா நன்கு சேரும்.

2. ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, தந்தூரி சிக்கன் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு, மிளகுதூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

3. மேலே சொன்ன கலவையில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அதனுடன் சிறிது கேசரி பவுடரை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த மசாலா கலவையில் சுத்தம் செய்த கோழி கறியை சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

4. பின்பு அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானவுடன் கறியை அதில் போட்டு சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.

5. கறியை அவ்வப்போது இருபக்கமும் திருப்பி திருப்பி போட வேண்டும். இதை செய்யும்போது குறைவான தீ இருப்பது மிகவும் முக்கியம். இல்லையேல் கறி கருகிவிட வாய்ப்பு உண்டு.

6. கறி நன்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் அடுப்பை அனைத்து கறியை எடுத்து விடவும்.

7. இப்போது சுவையான தந்தூரி சிக்கன் தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம் வரகரிசியில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் உண்டாவதில்லை. நார்ச்சத்தும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும் குறைக்கிறது. உடல் எடை குறையவும் அதிலும் ஆரோக்கியமான...
தேங்காயில் குடுமி ஏன் வைக்க வேண்டும்

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா?

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா நாம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பதற்கு தேங்காய், பூ, பழம், கொண்டு முதலானவற்றைக் கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு சாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும்போது தேங்காயை...
இரத்தத்தை சுத்தப்படுத்துவது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள் நம் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் உடலின் செயல்பாடுகள் சரியாக நடக்கும். இரத்தம் சுத்தமில்லாமல்...

சீந்தில் கொடியின் மருத்துவ பயன்கள்

சீந்தில் கொடி சீந்தில் என்பது மரங்களில் பற்றி படரும் ஒரு வகை மூலிகைத் தாவரமாகும். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் போன்ற மூடி இருக்கும். தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலம்...
சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி

சிக்கன் நூடுல்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் நூடுல்ஸ் பலரும் விதவிதமாக சிக்கனை சமைத்து சாப்பிட விரும்புவர். அதில் ஒன்றுதான் சிக்கன் நூடுல்ஸ். தற்போது பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு கடைகளில் இந்த சிக்கன் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். சிறுவர்கள்...

சகட தோஷம் என்றால் என்ன? சகட தோஷ பரிகாரங்கள்

சகட தோஷம் சகட அல்லது சகடை என்றால் சக்கரம் என்று அர்த்தம். சக்கரம் எப்படி கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் செல்கிறதோ அது போல் இந்த சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கமாகச்...
வீட்டில் திருஷ்டி கழிப்பது எப்படி

வீட்டில் இருக்கும் திருஷ்டி கழிப்பது எப்படி?

திருஷ்டி கழிப்பது எப்படி வீட்டில் எதிர்மறை தீய சக்திகள் அதாவது எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் இருந்தால் அவற்றை திருஷ்டி என்கிறார்கள். வீட்டில் திருஷ்டி ஏற்பட்டிருந்தால் கஷ்டங்கள், பொருளாதார இழப்புகள், மன சஞ்சலம் போன்றவை ஏற்படும்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.