தந்தூரி சிக்கன் பிரியாணி

தந்தூரி சிக்கன் பிரியாணி

எளிமையான முறையில் வீட்டிலேயே மிகவும் சுவையாக தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தந்துரி சிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்

  1. சிக்கன் தொடை பகுதி – 4
  2. தயிர் – ஒரு கப்
  3. இஞ்சி பூண்டு விழுது – 50 கிராம்
  4. கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
  5. எலுமிச்சை சாரு – சிரிதளவு
  6. மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
  7. கரம் மசாலா – 1 ஸ்பூன்
  8. மிளகு தூள் – 1 ஸ்பூன்
  9. சீரகத்தூள் – 1 ஸ்பூன்
  10. கஸ்துரி மேத்தி – ½ ஸ்பூன்
  11. உப்பு – தேவையான அளவு

பிரியாணி செய்ய

  1. பாஸ்மதி அரிசி – ½ கிலோ
  2. வெங்காயம் – 4
  3. தக்காளி – 4
  4. இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  5. பச்சை மிளகாய் – 2
  6. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  7. கரம் மசாலா – 1 ஸ்பூன்
  8.  புதினா – 1 கைப்பிடி
  9.  கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
  10. பட்டை – 1 பெரிய துண்டு
  11. பிரிஞ்சு இலை – 2
  12. இலவங்கம் – 3
  13. ஏலக்காய் – 2
  14. அண்ணாசிப்பூ – 2

செய்முறை

  1. சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பாஸ்மதி அரிசியை ½ மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு மிக்சி ஜாரில் தயிர், கொத்தமல்லி , இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாரு , மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகு தூள், சீரக தூள், கஸ்துரி மேத்தி, சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து அதில் சிக்கனுடன் நன்கு கலந்து ஊற வைக்கவும்.
  4. சிக்கன் 1 மணி நேரம் ஊறிய பின் எண்ணெய் சேர்த்து பொறித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  5. பின்னர் பிரியாணி செய்ய ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.
  6. பிரியாணிக்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
  7. எண்ணெய் சூடானதும் பட்டை, பிரிஞ்சி இலை, இலவங்கம், ஏலக்காய் அன்னாசி பூ சேர்த்து தாளிக்கவும்.
  8. தாளித்தவுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  9. வெங்காயம் வதங்கியதும் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  10. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  11. மிளகாய் தூள், கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  12. மசாலா பச்சை வாசனை போனவுடன் பொறித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து வதக்கவும்.
  13. 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  14. நன்கு கொதித்தவுடன் ஊற வைத்த அரிசியை கலந்து, சிறிதளவு எலுமிச்சை சாறு, கேசரி கலர் சேர்த்து வேக விடவும்.
  15. அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 முதல் 15 நிமிடம் தம்மில் போடவும்.
  16. பின்னர் அடுப்பை அனைத்து ½ மணி நேரம் கழித்து பரிமாறினால் சுவையான தந்தூரி சிக்கன் பிரியாணி தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மச்ச சாஸ்திரம் என்றால் என்ன

மச்ச சாஸ்திரம் என்றால் என்ன? மச்ச பலன்களை எவ்வாறு கணிப்பது

மச்சம் என்றால் என்ன? நமது உடலில் தலையில் இருந்து கால் பாதம் வரை உள்ள தோலில் அமைந்துள்ள சிறு சிறு புள்ளிகள் தான் மச்சங்கள் ஆகும். இது மஞ்சள், நீலம், சிவப்பு, வெளுப்பு, கருப்பு...
riddles in tamil

Most intelligent Puthirgal | Puzzles with Answers | Brain games

மூளைக்கு வேலை தரக்கூடிய கேள்விகள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
நார்ச்சத்துள்ள உணவு வகைகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள் நாம் தினந்தோறும் பல வகையான உணவுப் பொருட்களை சாப்பிடுகிறோம். நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்....
சிம்ம ராசி குணங்கள்

சிம்ம ராசி பொது பலன்கள் – சிம்ம ராசி குணங்கள்

சிம்ம ராசி குணங்கள் சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். சிம்ம ராசியில் மகம், பூரம் நட்சத்திரத்தின் 4 பாதங்களும், உத்திரம் நட்சத்திரத்தின் 1ம் பாதமும் அடங்கியுள்ளன. சிம்ம ராசியானது கால புருஷனின் இதயத்தை...
கனவு பலன்கள் வீடு

கட்டிடங்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

கட்டிடங்கள் கனவில் வந்தால் கனவுகள் காணாதவர் இவ்வுலகில் எவரும் இல்லை. அதற்கேற்றார் போல நாம் நம் தூக்கத்தில் எண்ணற்ற கனவுகளை காண்கிறோம். ஒரு சில சமயங்களில் அதிசயக்க வைக்கும் கனவுகளும் உண்டு. ஆனால் அந்த...
ஜாதிக்காய் மருத்துவ நன்மைகள்

ஜாதிக்காய் மருத்துவ குணங்கள்

ஜாதிக்காய் வரலாறு ஜாதிக்காய் முதன் முதலில் மொலுக்கஸ் தீவுகளில் கண்டுபிடிக்கபட்டது. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் ஜாதிக்காய் பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல்...
6ம் எண் குணநலன்கள்

6ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

6ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 6ம் எண் சுக்கிரன் பகவானுக்குரிய எண்ணாகும். 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். சுக்கிரனை வெள்ளி என்றும் அழைப்பார்கள். 6ம் எண்ணின் ஆதிக்கத்தில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.