செட்டிநாடு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

செட்டிநாடு சிக்கன் பிரியாணி

செட்டிநாடு உணவுகள் என்றாலே பாரம்பரிய சுவையும், மணமும் கொண்டதாகும். செட்டிநாடு உணவு வகைகளில் சேர்க்கப்படும் பிரத்தியேக மசாலாக்களால் உணவுகள் மிகுந்த சுவையும், மணமும், ஆரோக்கிய குணமும் கொண்டதாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் செட்டிநாடு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

செட்டிநாடு சிக்கன் பிரியாணி எளிதாக செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

1. கோழிக்கறி – ½ கிலோ
2. அரிசி – 4 கப் அளவு
3. பெரிய வெங்காயம் – 3 ( பொடியாக நறுக்கியது)
4. தக்காளி 3
5. புதினா – 1 கைப்பிடி அளவு
6. கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு
7. மிளகாய் தூள் – ½ மேஜைக்கரண்டி
8. மஞ்சள் தூள் ½ மேஜைக்கரண்டி
9. தயிர் – ¼ கப்
10. தேங்காய் பால் – 2 கப்
11. வறுத்த முந்திரி – சிறிதளவு
12. தண்ணீர் – 7 கப்
13. பிரியாணி இலை – 2
14. எண்ணெய் – தேவையான அளவு
15. வெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
16. எலுமிச்சை சாறு – 1 மேஜைக்கரண்டி

மசாலா அரைப்பதற்கு

1. பச்சை மிளகாய் – 5
2. இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜைக்கரண்டி
3. பட்டை – 2 துண்டு
4. ஏலக்காய் – 3
5. கிராம்பு – 4
6. தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

1. முதலில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.

2. பிரியாணி அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி ½ மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

3. பின்பு கோழிக்கறியை நன்கு கழுவி விட்டு, அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவை, புதினா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

4. குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும், அதில் பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி கொள்ள வேண்டும்.

5. பின்பு அதில் ஊற வைத்துள்ள கோழிக்கறி துண்டுகளை சேர்த்து கறியின் நிறம் மாறும் வரை நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.

6. பின்பு அதனுடன் தக்காளி, புளித்த தயிர், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பிரட்டி கொள்ள வேண்டும்.

7. பின்பு குக்கரை சிறிது நேரம் மூடி வைத்து, தீயை குறைத்து, 10 நிமிடம் கோழிக்கறியை நன்கு வேக வைத்து கொள்ள வேண்டும்.

8. பின்பு அதனுடன் தேங்காய் பாலை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தண்ணீரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

9. தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை சேர்த்து 8 கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் போட்டு குக்கரை மூடி, 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

10. இரண்டு விசில் வந்ததும் குக்கரை இறக்கி விட்டு, பிரியாணியின் மேல் கொத்தமல்லி, வறுத்த முந்திரி, எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவையான செட்டிநாடு சிக்கன் பிரியாணி தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அமாவாசையில் ஏன் கோலம் போடக்கூடாது

அமாவாசை அன்று வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது?

அமாவாசையில்  வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது? தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் கோலம் போடுவதை  நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். தினந்தோறும் கோலமிடுவதால் வீட்டில் தெய்வகடாட்சம்  நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். நமது...
அழகான பாதங்கள்

உங்கள் பாதங்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்.

பாதங்கள் நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பாதங்களின் அழகும் முக்கியம் தான். ஆனால் பெண்கள் தங்கள் முகம், தலைமுடி,...
ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி

ஆட்டுக்கால் சூப் வைப்பது எப்படி

ஆட்டுக்கால் சூப் தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் - 4 தனியா தூள் – 2 ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் சீரகத் தூள் - 2 ஸ்பூன் மஞ்சள் தூள் –...
ஆப்பிள் மருத்துவ பயன்கள்

ஆப்பிள் பழத்தின் மருத்துவ குணங்கள் | ஆப்பிள் பயன்கள் மற்றும் நன்மைகள்

ஆப்பிள் ஆப்பிள் அல்லது குமுளிப்பழம் குளிர்ப் பிரேதேசத்தில் வளரக்கூடிய பழமாகும். இது வருடத்திற்கு ஒரு முறை இலையுதிரும் ரோசாசிடே என்ற குடும்பத் தாவரமாகும். ஆப்பிள் பழத்தினுடைய தோல் பகுதியானது மெல்லியதாயும், பழச்சதை உறுதியானதாகவும் இருக்கும்....
pineapple kesari recipe

பைனாப்பிள்  கேசரி செய்முறை

பைனாப்பிள்  கேசரி செய்முறை  தேவையான பொருட்கள் ரவை – 1 கப் சர்க்கரை – ¾ கப் தண்ணீர் – 2 கப் கேசரி கலர் - சிறிதளவு அன்னாசிபழத் துண்டுகள் – ½...
இறால் சீஸ் ரோல்

இறால் சீஸ் ரோல் – Prawn Cheese Roll

இறால் சீஸ் ரோல் இறால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறால் உணவு பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காரணம் இது சுவை, மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாகவும் திகழ்கிறது....
சுப யோகங்கள்

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் உள்ளதா? யோகங்கள் பகுதி #2

யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் ஒன்றினைவதால் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். அவ்வாறான சில கிரக சேர்க்கைகள் நல்ல பலனையும் தரலாம், அல்லது தீய பலனையும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.