ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தின் இராசி : மீனம்
ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி : புதன்
ரேவதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு
ரேவதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஈஸ்வரன்
ரேவதி நட்சத்திரத்தின் பரிகாரத் தெய்வம் : பெருமாள்
ரேவதி நட்சத்திரத்தின் நட்சத்திர குணம் : தேவ கணம்
ரேவதி நட்சத்திரத்தின் விருட்சம் : இலுப்பை
ரேவதி நட்சத்திரத்தின் மிருகம் : பெண் யானை
ரேவதி நட்சத்திரத்தின் பட்சி : வல்லூறு
ரேவதி நட்சத்திரத்தின் கோத்திரம் : அகத்தியர்

ரேவதி நட்சத்திரத்தின் வடிவம்

ரேவதி நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 27வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘தோணி’ என்ற பெயரும் உண்டு. ரேவதி நட்சத்திரம் வான் மண்டலத்தில் ‘மீன், படகு’ போன்ற வடிவங்களில் காணப்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை கவர்வதில் வல்லவர்கள். இவர்கள் நல்ல சுபாவம் உடையவராகவும், பணக்காரராகவும், தன்னம்பிக்கையும், அறிவாற்றலும் படைத்தவராகவும், நியாயமான வழிகளில் பணம் சம்பாதிப்பவராகவும் விளங்குவார்கள். பெரியவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பணிந்து நடப்பதுடன், மரியாதையும் அளிப்பார்கள். அழகிய விழிகளை கொண்டவர்கள். பேச்சில் அனைவரையும் கவரக்கூடியவர்கள். தேவை இல்லாமல் பேச மாட்டார்கள். மற்றவர்கள் பேச்சைக் காது கொடுத்துக் கேட்கவும் மாட்டார்கள்.

இவர்கள் மனம் போகிற போக்கில் நடப்பவர்கள். தனக்கு சரி என்று பட்டதை துணிந்து செய்வார்கள். மற்றவர்களின் அபிப்ராயங்களைப் பற்றி யோசிக்கமாட்டார்கள். தன்னுடைய அனுபவங்களை மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக சொல்லி எப்படி வாழ வேண்டும் என புரிய வைப்பார்கள். இவர்கள் சரியான சந்தேக பேர்விழிகள். மற்றவர்கள் எவ்வளவுதான் உயிருக்கு உயிராக பழகினாலும அவ்வளவு எளிதில் நம்ப மாட்டார்கள். நம்பி விட்டால் அவர்களை விட்டு விலகுவதே இல்லை. பழி பாவத்திற்கு பயந்தவர்கள். சமயோகித புத்திசாலித்தனம் கொண்டவர்கள்.

தன் சுய முயற்சியில் முன்னுக்கு வருவார்கள். புத்திசாலித்தனமும், சாமர்த்தியமும் இவர்கள் கூடப் பிறந்தது. வாழ்க்கை சுமாராக அமையும். உணவை ருசித்து சாப்பிடுவதில் வல்லவர்கள். புகழுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். நெடுந்தூர பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள். குருமார்களிடம் நல்ல மதிப்பை பெற்றவர்கள். எதற்கும் அஞ்சாதவர்கள். சிறந்த குணங்களைக் கொண்டவர்கள். இவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள். நேர்மையாக வாழ்பவர்கள், பேச்சில் இனிமை, கொடுக்கல் வாங்கலில் நாணயம், உள்ளவர்கள்.

சுதந்திரப் பிரியர்கள், இவர்களுக்கு ரகசியம் காக்கத் தெரியாது. இவர்களின் மூளையே இவர்களின் மூலதனம் ஆகும். அழகான உடலைப்பை கொண்டவர்கள். பிறரை பார்த்தவுடன் வசீகரிக்கும் கண்களை கொண்டவர்கள். இவர்களுக்கு எதாவது சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். அனைவரைரையும் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி நடந்து கொள்வார்கள். விலங்குகள் மற்றும் செடி கொடிகளின் மீது அதிக பற்றுடையவர்கள். எல்லாருக்கும் நன்மை செய்ய நினைப்பார்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். இவர்களின் தோற்றத்தை வைத்து வயதை எடை போட முடியாது. அழகான சிரித்த முகத்தை கொண்டவர்கள். எந்த இடத்தில எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பார்கள். சேமிக்கும் குணத்தைக் கொண்டவர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பவர்கள்.

ரேவதி நட்சத்திரம் முதல் பாதம் :

இவர்களிடம் ரேவதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். சண்டையில் வல்லவர்கள். ஆராய்வதில் சிறந்தவர்கள். இவர்கள் தான் வகிக்கும் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள். மகிழ்ச்சியான மனநிலையை உடையவர்கள். பயனங்கள் செய்வதில் அதிக நாட்டமுடையவர்கள். தங்களுடைய செயல்பாடுகள் மூலம் மற்றவர்களை கவர்ந்து இழுப்பார்கள்.

ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் ரேவதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். பல திறமைகளை கொண்டவர்கள். செயல்திறன் கொண்டவர்கள். இவர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள். எல்லா சுகங்களையும் அனுபவிப்பவர்கள். உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். ஆடம்பர செலவுகளை விரும்பாதவர்கள். இவர்களின் மனம் அடிகடி சஞ்சலமடையும். இவர்கள் மெல்லிய உடல்வாகு கொண்டவர்கள். முன் கோபம் இவர்களின் சுபாவமாக இருக்கும்.

ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் ரேவதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். சிந்திக்காமல் செயல்படக்கூடியவர்கள். கடவுள் பக்தி நிறைந்தவராக இருப்பார்கள். சுயநலம் உடையவர்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். தன்னை போலவே மாற்றவர்களும் உண்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடிய ஆற்றல் பெற்றிருப்பார்கள்.

ரேவதி நட்சத்திரம் நான்காம் பாதம் :

இவர்களிடம் ரேவதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். எதையும் செய்யக்கூடியவர்கள். உண்மை பேசுபவராக இருப்பார்கள். சுகபோக வாழ்க்கை வாழக்கூடியவர்கள். எதிரிகளை எளிதாக வெல்வார். சத்தியத்தை பேசுபவர்கள். எதிரிகளை வெல்லக்கூடியவர்கள். இவர்கள் நீதிமான்களாக இருப்பார்கள். வீரம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். பிறரை மதிக்கக்கூடியவர்கள்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கண்களை குளிர்ச்சியாக்கும் வெள்ளரிக்காய்

கண்களுக்கு குளிர்ச்சியை தரும் சிறந்த உணவுகள்

கண்களுக்கு குளிர்ச்சியை தரும் சிறந்த உணவுகள் உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, வேலைப்பளு போன்றவற்றால் கண்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போவதால், அடிக்கடி கண்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதன் காரணமாக, சிறு வயது முதலே...
1ம் எண்ணில் பிறந்தவர்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 1ம் எண் சூரிய பகவானுக்கு உரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். முதலாம் எண்ணில்...
ஆவாரம் பூ மருத்துவ நன்மைகள்

அற்புத பலன்களை அள்ளி வழங்கும் ஆவாரம் பூ

ஆவாரம் பூ ஆவாரம் உடலுக்கு பலம் அளிக்கும் மற்றும் குளிர்ச்சி தரும். எல்லா வகை இடங்களிலும் வளரும் தன்மையுடையது. இது மஞ்சள் நிறப் பூக்களையுடையது மற்றும் மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டைத் தோல்...
மூட்டு வலிக்கான தீர்வு

மூட்டு வலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்

மூட்டு வலி பெரும்பாலானோர் மூட்டு வலி பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டு வலி என்பது நமது தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக அமைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பலருக்கும் ஏற்படும் பாதிப்பாக அமைந்துள்ளது. மூட்டுகளில் வலி...
திப்பிலி மருத்துவ குணங்கள்

திப்பிலி மருத்துவ பயன்கள்

திப்பிலி திப்பிலி ஒரு மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இது ஆங்கிலத்தில் ‘Long Pepper’ என அழைக்கபடுகிறது. இது இந்தியாவின் வெப்பமான...
ஈரல் வறுவல் செய்வது எப்படி

ஈரல் மிளகு வறுவல் செய்வது எப்படி

ஈரல் மிளகு வறுவல் தேவையான பொருட்கள் ஈரல் – ½ கிலோ பட்டை - 1 கிராம்பு - 2 வெங்காயம் – 1 கப் ( பொடியாக நறுக்கியது ) பச்சை மிளகாய்...
கந்தசஷ்டி விரதம்

கந்தசஷ்டி விரதமிருப்பதன் நோக்கம்

கந்தசஷ்டி விரதமிருப்பதன் நோக்கம் முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களில் சஷ்டி விரதம் மிக முக்கியத்துவம் வயந்ததாக கருதப்படுகிற நிலையில், சஷ்டி விரதம் இருப்பது எதற்காக என்றும், அதன் பலன் குறித்தும் தெரிந்து கொள்வோம். சஷ்டி விரதத்தின் நோக்கம் ஐப்பசி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.