உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் மற்றும் கன்னி
உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன்
உத்திரம் முதல் பாதத்தின் இராசி மற்றும் அதிபதி – சிம்மம் : சூரியன்
உத்திரம் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் பாதத்தின் ராசி மற்றும் அதிபதி – கன்னி : புதன்
உத்திரம் நட்சத்திரத்தின் நட்சத்திர தேவதை : சூரியன்
உத்திரம் நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : சிவன்
உத்திரம் நட்சத்திரத்தின் நட்சத்திர குணம் : மனுஷ குணம்
உத்திரம் நட்சத்திரத்தின் விருட்சம் : அலரி
உத்திரம் நட்சத்திரத்தின் மிருகம் : ஆண் எருது
உத்திரம் நட்சத்திரத்தின் பட்சி : மரம்கொத்தி
உத்திரம் நட்சத்திரத்தின் கோத்திரம் : வசிஷ்டர்

உத்திரம் நட்சத்திரத்தின் வடிவம்

உத்திரம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 12வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘உத்தரம்’ என்ற பெயரும் உண்டு. உத்திரம் நட்சத்திரம் வான் மண்டலத்தில் கட்டில்கால் போன்ற வடிவத்தில் காணப்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிமையாக பேசுக்கூடியவர்கள். படிப்பில் நாட்டம் உடையவர்கள். அழகான முக அமைப்பு உடையவர்கள். இவர்களுக்கு சிறந்த மன வலிமையும், உண்மையே பேசும் சுபாவமும் இருக்கும். முன் கோபம் உடையவர்கள். உண்மையை பேசக்கூடியவர்கள். தெய்வ நம்பிக்கை உடையவர்கள். அழகிய நடை உடையவர்கள். தைரியமானவர்கள், தனக்கு தவறென பட்டால் நேரடியாக கேட்க கூடியவர்கள். கர்வம் நிறைந்தவர்கள். தாய் மேல் அதிக அன்பு கொண்டவர்கள். பிறருக்கு உதவி செய்யும் இயல்பு கொண்டவர்கள். பிறர் செய்த உதவியை மறக்க மாட்டார்கள். பிறருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் குணம் கொண்டவர்கள்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கருணை உள்ளம் நிறைந்தவராகவும், பொறுமை மிக்கவராகவும், நல்ல பண்பாடான நடத்தை கொண்டவராகவும், பலராலும் விரும்பி நேசிக்கப்படுபவராகவும் இருப்பார்கள். இவர்கள் பலவித கல்வி கேள்விகளில் சிறந்தவராக இருப்பார்கள். சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தங்கள் சுயமுயற்சியில் பணத்தை சம்பாதித்திடும் ஆற்றல் மிக்கவர்கள். இவர்கள் தங்கள் சொந்த சம்பாத்தியத்தில் சுகபோகமாக வாழ்க்கை நடத்துவார்கள். இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கும். இவர்கள் தங்கள் 28 லிருந்து 31 வயது வரையான காலத்தில், வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.

இவர்கள் செய்யும் காரியங்கள் அனைத்திலும், உண்மையாகவும், ஈடுபாட்டோடும் செய்வார்கள். மிகவும் சாதுர்யம் மிக்கவர்கள். பெரும்பாலும் மக்கள் தொடர்புடைய துறைகளிலேயே பிரகாசிப்பார்கள். இவர்களுக்கு இயற்கையாகவே கம்பீரமான நடையும், பெண்களை கவரும் உடலமைப்பும் இருக்கும். ஒருமுறை ஒரு விஷயத்தில் முடிவு செய்து விட்டால் அந்த முடிவை மாற்றிக் கொள்ளும் மனப்போக்கு இல்லாதவர்கள். இவர்களுக்கு அனைவரையும் கவரக் கூடிய பேச்சாற்றல் இருக்கும். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அன்பாக பழகுவார்கள். தங்கள் உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ள மாட்டார்கள்.

இவர்களுக்கு படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகமிருக்கும். சிக்கனமாக இருப்பதில் விருப்பமுள்ளவர்கள். சுயமரியாதை அதிகம் உடையவர்கள். இவர்களின் முற்பகுதி வாழ்க்கையில் முன்னேற்றம் எதிர்பார்த்த அளவு இருக்காது. மத்திம வயதுக்கு மேல்தான் சகல சௌபாக்கியங்களும் இவர்களிடம் சேரும். இவர்களின் திருமண வாழ்க்கை நல்ல விதமாகவே அமையும். இவர்கள் செய்யும் காரியங்களுக்கு சரியான காரணம் இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற போராடுவார்கள். நன்றியுணர்வு அதிகம் கொண்டவர்கள்.

உத்திரம் நட்சத்திரம் முதல் பாதம் :

இவர்களிடம் உத்திரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் பிறர் விரும்பும் வகையில் இனிமையாக பேசுவதில் வல்லவர்கள். உயர்ந்த குணம் உடையவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்கள். மனத்தூய்மை உடையவர்கள். தீய குணம் இல்லாதவர்கள். உறவினர்கள் மேல் அன்பு உடையவர்கள். கடுமையான உழைப்பாளிகள். பெற்றார்களிடமும், சகோதரர்களிடமும் பாசம் உள்ளவர்கள். கண்ணியமாக இருக்க விரும்புவார்கள்.

உத்திரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் உத்திரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் பொன், பொருள் சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். கவனக்குறைவால் பொருளை இழப்பவர்கள். பொறுமை இல்லாதவர்கள். அலைபாயும் மனதை உடையவர்கள். இவர்களிடம் சுயநலம் இருக்கும். இவர்களிடம் தலைமை தாங்கும் பண்பு அதிகம் இருக்கும். எதிலும் அவசரமாக முடிவெடுத்து விட்டு பின்னர் வருத்தபடுவார்கள்.

உத்திரம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் உத்திரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். நேர்மையானவர்கள். வெற்றிக்காக எதையும் செய்யக் கூடியவர்கள். இவர்களிடம் கர்வம் அதிகம் இருக்கும். தான் என்ற அகங்காரம் அதிகம் இருக்கும். கால்நடைகளால் இலாபம் அடைபவர்கள். ஆணவம் கொண்டவர்கள். ஆச்சாரம் உடையவர்கள். தனிமையை விரும்புபவர்கள். ஒரு செயலில் வெற்றி பெறுவதற்காக எதையும் துணிந்து செய்வார்கள்.

உத்திரம் நட்சத்திரம் நான்காம் பாதம் :

இவர்களிடம் உத்திர நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் நல்ல உழைப்பாளிகள். இவர்களிடம் நல்ல பழக்க வழக்கங்கள் இயல்பாகவே குடி கொண்டு இருக்கும். பிறர் செய்த உதவியை மறக்காதவர்கள். மற்றவர்களை மதிக்கக்கூடியவர்கள். பெருந்தன்மையான குணம் உடையவர்கள். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ தெரிந்தவர்கள். இவர்களுக்கு கல்வி கற்பதில் அதிக ஆர்வம் இருக்கும். தர்ம சிந்தனை அதிகம் இருக்கும்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தொடை கறி

ஆற்காடு தொடை கறி

ஆற்காடு தொடை கறி தேவையான பொருட்கள் மட்டன்  (தொடை கறி) - ½ கிலோ வினிகர் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மிளகுத் தூள் - 2 ஸ்பூன் ...
மனிதர்கள் பற்றிய கனவு

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் கனவு காணாத மனிதர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகளை காண்கின்றனர். ஆனால் அந்த கனவுக்கான அர்த்தம் தெரியாமல் பல்வேறு குழப்பத்துக்கு ஆளாகின்றனர். அந்த...
3ம் எண்ணின் பொதுவான குணம்

3ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

3ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 3ம் எண் தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியதாகும். 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்க எண்ணான 3ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 3ம் எண்ணில்...
அமுக்கிராகிழங்கின் மருத்துவ பயன்கள்

அமுக்கிராக்கிழங்கு என்கிற அஸ்வகந்தாவின் மருத்துவ பயன்கள்

அமுக்கிராக்கிழங்கு என்கிற அஸ்வகந்தா அமுக்கிராக்கிழங்கின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவாகும். இது அஸ்வகந்தா, அசுவகந்தம், அசுவகந்தி, அமுக்குரவு, இருளிச் செவி, அசுவம் போன்ற வேறு பல பெயர்களாலும் அழைக்கபடுகிறது. இதன் இலை, வேர்,...
சாலை விபத்து ஏற்பட்டால்

சாலை விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

சாலை விபத்து ஏற்பட்டால் முதலுதவி சாலை விபத்து எதிர்பாரதவிதமாக ஏற்படுவது. மற்ற வாகனங்களை காட்டிலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தான் அதிகம் விபத்தில் சிக்குகின்றனர். விபத்து ஏற்பட்டவுடன் என்ன செய்வது என்று பலருக்கும்...
12 ராசிகள்

உங்கள் ராசிக்கு என்ன தானம் செய்தால் யோகம் உண்டாகும்

  உங்கள் ராசிக்கு  என்ன தானம் செய்தால் யோகம் உண்டாகும்     மேஷம் மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இந்த இராசியில் சத்திரிய கிரகமான சூரியன் உச்சம் அடைகிறார். இவர்களுக்கு அஷ்டமாதிபதியும் செவ்வாயாக இருப்பதால்,...
திருமணப்பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்?

திருமணப்பெண் புகுந்த வீட்டில் முதலில் குத்துவிளக்கு ஏற்றுவது ஏன்?

திருமணப்பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்? திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் கூறுவார்கள். அதை போகிறபோக்கில் சாதரணமாக சொல்லிவிடவில்லை, அதற்கு பொருள் நிறைந்த ஆர்த்தம் உள்ளது. உதாரணத்திற்கு நெல், சோளம், பருப்பு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.