உங்கள் ராசிக்கு என்ன தானம் செய்தால் யோகம் உண்டாகும்

 

உங்கள் ராசிக்கு  என்ன தானம் செய்தால் யோகம் உண்டாகும்  

 

12 ராசிகள்  மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இந்த இராசியில் சத்திரிய கிரகமான சூரியன் உச்சம் அடைகிறார். இவர்களுக்கு அஷ்டமாதிபதியும் செவ்வாயாக இருப்பதால், இரத்த தானத்தை தொடர்ந்து ஏதேனும் ஒரு செவ்வாய் கிழமையில் இவர்கள் செய்து வருவது நல்லது. காரணம் உடலில் ஓடும் இரத்தத்திற்கு செவ்வாய் தான் அதிபதி. அந்த வகையில் இவர்கள் (உடல் ஒத்துழைப்பின்) இரத்த தானம் செய்ய, இராசி அதிபதியான செவ்வாயின் அருள் இவர்களுக்குப் பூரணமாகக் கிடைக்கப் பெறும். இதனால் வாழ்க்கையில் மேன்மை பெறுவார்கள். இதை தவிர இரத்த தானம் செய்ய முடியாதவர்கள், ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களுக்குப் பயன்படும் சாதனங்களை வாங்கித் தரலாம். இரத்த சிவப்பு நிறம் கொண்ட ஆடைகளையும் கூட தானம் செய்யலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் அஷ்டமாதிபதி அல்லது அந்த அளவிற்கு நன்மை செய்யக் கூடிய கிரகம் இல்லை என்பதால் குரு அருளைப் பெற ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் அல்லது தங்களால் முடிந்த கல்வி சம்மந்தமான பொருட்களை வாங்கித் தருதல் நன்மை செய்யும். கோயில்களில் நடக்கும் உழவாரப் பணி போன்றவற்றில் கூட கலந்து கொள்ளலாம். அதன் மூலம் ஆன்மீக சேவைகளை ஆற்றி குரு அருள் பெறலாம். ஏழை பெண்களின் திருமணத்திற்கு, உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்வதால் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசிக்கு சனி பகவான் அஷ்டமாதிபதி, அவரே பாக்கியாதிபதியும் கூட. அதனால் சனிக்கிழமைகளில் கோயில் தீபங்களுக்கு இயன்ற அளவில் நல்லெண்ணெய் வாங்கித் தானம் செய்யலாம். ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு சனிக் கிழமைகளில் சைவ உணவைக் கூட வாங்கித் தரலாம். தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன் கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து வெண் பொங்கலை தானமாக கொடுங்கள். எல்லாவித செல்வமும் தேடி வரும்.

கடகம்

கடக ராசிக்கு அதிபதி சந்திரன், இந்த இராசிக்கு சனி 7 மற்றும் 8 ஆம் அதிபதியாக வருகிறார். தவிர இந்த இராசி ஜல ராசி என்பதால் தாகமாக இருப்பவர்களுக்கு தண்ணீரை தானம் செய்யலாம். இலவசமாக தண்ணீர் பந்தல் போன்றவற்றை இவர்கள் குறிப்பாக வெயில் காலங்களில் வழங்குதல் சிறப்பு. பசுமாட்டிற்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை பெருகச் செய்யும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன், இந்த ராசிக்கு சனி அளவு கடந்த தீமையை செய்வார். இதனால் இவர்கள் சனிக் கிழமைகளில் இரும்பை தானம் செய்யலாம். எள் உருண்டையை கூட தானம் செய்யலாம். ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும்.

கன்னி

கன்னி ராசிக்கு அதிபதி புதன். அத்துடன் கன்னி ராசியில் தான் புதன் உச்சம் அடைவார். ஆனால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் மேலான துன்பத்தை அளிக்கக் கூடியவர். அதனால் இவர்கள் செவ்வாய் கிழமையில் ஏழைகளுக்கு இரத்த சிவப்பு நிறம் உள்ள ஆடைகளை அல்லது வேஷ்டி சட்டைகளை வாங்கி தானம் செய்யலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும்.

துலாம்

துலா ராசி அன்பர்களுக்கு குரு பகவான் அனைத்து விதங்களிலும் கெடுப்பார். இவர்கள் இராசியில் சனி உச்சம் பெறுவது மற்றொரு சிறப்பு. எனினும் குரு பகவான் பாதகாதிபதி என்பதால் வியாழக் கிழமைகளில் மஞ்சள் நிறம் கொண்ட பொருட்களை தானம் செய்யலாம். ஏழை மாணவர்களுக்கு கல்வி சம்மந்தமான பொருட்களை வாங்கித் தரலாம். உங்களுக்கு விநாயகர் வழிபாடு கைகொடுக்கும். ஆதரவற்ற மாணவ, மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுப்பதால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு புதன் பாதகாதிபதி. அதாவது அதிக கெடுதல்களை செய்வார். இதனால் இவர்கள் மரக்கன்றுகளை தானம் செய்யலாம். புதன் கிழமையில் பச்சை நிற ஆடைகள் அல்லது பொருட்களை தானம் செய்யலாம். பச்சை பயிறு சுண்டல் செய்து கூட ஏழை எளிவர்களுக்கு தானம் செய்யலாம். தங்களால் இயன்ற அளவு மாற்றுத் திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களுக்கு சுக்கிரன் அந்த அளவிற்கு நன்மையை செய்ய மாட்டார். அதே போல சந்திரன் கூட அவ்வளவு நன்மைகளை செய்ய மாட்டார். அதனால் இவர்கள் திங்கட் கிழமைகளில் ஏழை எளியவர்களுக்கு தங்களால் இயன்ற அளவு பச்சரிசி தானம் செய்யலாம். அதுபோல, வெள்ளிக் கிழமைகளில் மொச்சையில் சுண்டல் செய்து தானம் செய்வதும் சிறப்பு.

மகரம்

மகர ராசி அன்பர்களுக்கு சூரியன் பெரிய அளவில் தீமையை செய்யும் கிரகம் எனலாம். இதனால் இவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் கோதுமை தானியத்தை முடிந்த அளவில் வாங்கி ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்யலாம். ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு சந்திரன் பெரிய தீமையை செய்யக்கூடிய கிரகம். அதனால் இவர்கள் திங்கட் கிழமைகளில் ஆலயங்களுக்கு சென்று சந்திரனின் தூப தீபமான சாம்பிராணியை வாங்கி தானம் செய்யலாம். பெளர்ணமியில் அம்பாள் கோயில்களில் வெண் பொங்கல் தானம் செய்யலாம். குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.

மீனம்

மீனம் ராசி அன்பர்களுக்கு சுக்கிரன் கெடுதலை செய்யும் கிரகம் என்பதால் வெள்ளிக் கிழமைகளில் கோயில் தெய்வங்களுக்கு வாசனை மிகுந்த வெள்ளை மலர் மாலையை வாங்கித் தரலாம். கர்ப்பவதியான பெண்களுக்கு அல்லது தாய்மார்களுக்கு அலங்கார பொருள்களை பரிசளிக்கலாம். சுக்கிரனுக்கும், புளிப்புக்கும் சம்பந்தம் உண்டு. அந்த வகையில் வெள்ளிக் கிழமைகளில் பெருமாள் கோயில்களில் புளியோதரை செய்து தானம் செய்யலாம்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சேமியா கேசரி செய்முறை

கல்யாண வீட்டு சேமியா கேசரி

சேமியா கேசரி தேவையான பொருட்கள் சேமியா – 1 கப் சர்க்கரை – 1/2  கப் நெய் – தேவையான அளவு முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு ஏலக்காய்...
மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் குருவை அதிபதியாக கொண்ட மீன லக்னகாரர்கள் அன்பும், கனிவும் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு காதல் கொள்வார்கள். இவர்கள் துடுக்குத்தனம் மிக்கவர்கள்....
இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி அசைவ உணவில் சிறியவர்  முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். பிரியாணியின் சுவையும் மணமும் தான் நாம் விரும்பி சாப்பிட ஒரு...
ஆவணியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சிம்மராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஆவணி மாதமாகும். இது தமிழ் மாதங்களில் ஐந்தாவது மாதம் ஆகும். ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும், வேங்கை மாதம் என்றும் சித்தர்கள்...
banana halwa recipe

வாயில் வைத்த உடன் கரையும் வாழைப்பழ அல்வா

வாழைப்பழ அல்வா தேவையான பொருள்கள் வாழைப்பழம் – 3 பால் – 1 கப் சர்க்கரை – ½ கப் நெய் – ¼ கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு சோள மாவு...
ஆடாதொடை இலையின் பயன்கள்

நுரையீரல் பிரச்சனைகளை தீர்க்கும் ஆடாதோடா இலை

ஆடாதோடா இலை மக்கள் ஆரோக்கியமாக வாழ நம் சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப...
இரத்தத்தை சுத்தப்படுத்துவது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள் நம் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் உடலின் செயல்பாடுகள் சரியாக நடக்கும். இரத்தம் சுத்தமில்லாமல்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.