ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

சிம்மராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஆவணி மாதமாகும். இது தமிழ் மாதங்களில் ஐந்தாவது மாதம் ஆகும். ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும், வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் கூறுவார்கள்.

ஆவணியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்கள் சூரியனை போல எதிலும் தலைமை பண்பு வகிப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள் ஆவர். இவர்கள் எந்த ஒரு செயலையும் ஆராய்ந்து பல முறை சிந்தித்து செயல்பட கூடியவர்கள் ஆவர். இவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்கவே விரும்புவார்கள். இவர்கள் பெருந்தன்மையான குணம் கொண்டவர்களாகவும் பெயர், புகழ் கிடைக்க எடுத்த காரியங்களில் போராடி வெற்றி பெற கூடியவர்கள் ஆவர்.

இவர்கள் சிக்கனமாக குடும்பத்தை நடத்துவார்கள். இவர்களுக்கு பிறரிடம் கடன் வாங்கப் பிடிக்காது. இவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் பணக்காரர்களாக உயர்வு பெறுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் பெரும் செல்வந்தராகும் யோகம் உண்டு. இந்த மாதத்தில் பிறந்தவர்கள், தான் செய்வது மட்டுமே சரி, பிறர் செய்வது தவறு என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பர். வீட்டின் கடைசி மகளாகவோ அல்லது மகனாகவோ ஆவணி மாதத்தில் பிறந்திருந்தால் மிகவும் மதிப்புடன் வாழ்வர்.

இவர்கள் எந்த விதமான சிக்கலான சூழ்நிலைகளிலும் கொடுத்த வாக்கு எப்பாடுபட்டாவது காப்பாற்றுவார்கள். தான தர்மங்கள் செய்வதில் பெரும் வள்ளலாக திகழ்வார்கள். இவர்களுக்கு உதவி செய்யும் குணம் பிறவியிலேயே இருக்கும். இவர்களின் பேச்சில் எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லாமல் உண்மையாக இருக்கும். எந்த காரியத்திலும் முன்வைத்த காலை பின்வைக்காமல் ஓயாமல் போராடும் குணம் கொண்டவர்கள் இவர்கள்.

இவர்களுக்கு அனுபவ அறிவும், படிப்பறிவும் உண்டு. அரசியல் மற்றும் அதிகார பதவிகள் மூலம் இவர்களுக்கு வீடு, மற்றும் நிலபுலன்கள் சேரும். தாய்வழி மூலம், தாய்மாமன், மாமன் வர்க்கத்தினர் மூலமும் செல்வம் சேர்ப்பார்கள். இவர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்களாக இருப்பார்கள். வீட்டிற்கு வருபவர்களை நன்றாக உபசரிப்பார்கள். இவர்களுக்கு பயணம் செய்வது என்பது மிகவும் விருப்பமான ஒன்று. இவர்கள் இயற்கையை ரசிப்பதோடு அதன் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சிறந்த பக்திமான்கள், ஆன்மிகத்தில் நல்ல நிலையை அடைவார்கள்.

வாழ்க்கைத்துணையுடன் இவர்களுக்கு அவ்வப்போது ஒரு சில மனக்கசப்புகள் வந்து போகும். இவர்களின் குணத்தை புரிந்துகொண்டு ஒத்துழைக்கும் பெண் அமைந்தால் இவர்களுக்கு நிம்மதியான இல்லற வாழ்க்கை அமையும். சுக்கிரன், குரு, சனி கிரகங்கள் நல்ல பலமான அம்சத்தில் அமைந்தால் இவர்களுக்கு மனைவி வகையில் மகிழ்ச்சியும், சொத்து சேர்க்கையும் கிடைக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தார தோஷம் நீங்க

தார தோஷம் என்றால் என்ன? தார தோஷத்திற்கான பரிகாரம்

தார தோஷம் என்றால் என்ன? தாரம் என்றால் வாழ்க்கை துணையை குறிக்கும். அதாவது மனைவியையோ அல்லது கணவனையோ குறிப்பது ஆகும். ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2வது ஸ்தானத்திலோ அல்லது 7வது ஸ்தானமான கணவன்...
ஆண் உடல் மச்ச பலன்கள்

ஆண் உடல் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் உடல் மச்ச பலன்கள் எல்லோருக்கும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் மச்சங்கள் இருக்கும். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். அந்த வகையில் ஆணின் உடலில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மச்சங்களின்...
அம்மி மிதித்தல் அருந்ததி பார்த்தல்

திருமணத்தில் அம்மி மிதித்தல் சடங்கு ஏன் நடத்தபடுகிறது தெரியுமா

திருமணத்தில் அம்மி மிதித்தல் இந்து திருமணங்களில் பல்வேறு சடங்கு, சம்பிரயதயங்கள் அந்த காலம் முதல் தற்போது வரை வழக்கத்தில் உள்ளன. அவற்றில் பல சடங்கு சம்பிரதாயம் தற்போது வழக்கில் இல்லா விட்டாலும் முக்கியமான ஒரு...
பலாப்பழ பாயாசம்

கேரளா ஸ்பெஷல் பலாப்பழ பாயாசம்

பலாப்பழ பாயாசம் பலாப்பழத்தில் எண்ணற்ற உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளன. சுவையான பலாப்பழ பாயாசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள் பலாப்பழ சுளைகள் - தேவையான அளவு தேங்காய் பால் -...
நவமி திதி

நவமி திதி பலன்கள், நவமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

நவமி திதி நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஒன்பதாவது நாள் நவமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் நவமியை சுக்கில...
potato uses in tamil

உடலை உறுதியாக்கும் உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு சோலானம் டியூபரோசம் என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படுத்தபடும், ஒருவகைக் கிழங்கு வகையாகும். உருளைக்கிழங்கு தாவரம் நிழற்செடி குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம்...
மூன்று முடிச்சு போடுவதின் அர்த்தம்

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ?

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ? திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள், நம்பிக்கைகள் நிறைந்ததாகும். திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. சில சடங்குகள் ஏன், எதற்காக செய்கிறோம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.