திரிதியை திதி பலன்கள், திரிதியை திதியில் செய்ய வேண்டியவை

திரிதியை திதி

திரிதியை என்பது வடமொழி சொல்லாகும். திரிதியை என்றால் மூன்று என்று பொருள். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் மூன்றாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரிதியை சுக்கில பட்ச திருதியை என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் திரிதியை கிருஷ்ண பட்ச திரிதியை என்றும் அழைக்கபடுகிறது.

திரிதியை திதி

திரிதியை திதியின் சிறப்புகள்

சித்திரை மாதத்தில் வரும் திருதியை திதியானது, அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால் சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை திதியைதான் நாம் ‘அட்சய திருதியை’ என்ற பெயரில் கொண்டாடுகிறோம்.
‘அட்சயம்’ என்றால் ‘தேயாதது’, ‘வளர்தல்’ என்று பொருள். அதனால்தான் எல்லா நலன்களையும் குறையில்லாமல் வாரி கொடுக்கும் இந்தத் திருதியை, ‘அட்சய திருதியை’ என்று பெயர் பெற்றது.

மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தை மேற்கொண்டபோது அவர்கள் உணவுக்கு கஷ்டப்படாமல் இருக்க பகவான் கண்ணன் மூலம் சூரிய தேவனால் அட்சய பாத்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த பாத்திரத்தில் இருந்து தேவையான உணவை, அள்ள அள்ள குறையாமல் அவர்கள் பெற்று உண்டு வந்தனர். இந்த அட்சய பாத்திரமானது, பாண்டவர்களுக்கு ஒரு அட்சய திருதியை நாளில் தான் கிடைத்தது.

திரிதியை திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

உடையவர்கள், எண்ணியதை முடிப்பவர்கள், கீர்த்தி உடையவர்கள், தனவான், பயந்த சுபாவம் உள்ளவர்கள், பராக்கிரமம் உடையவன், தூய்மையானவர்கள் திருக்கோவில் வேலைகளை விருப்பமுடன் செய்பவர்கள்.

திரிதியை திதியில் என்னென்ன செய்யலாம்

இந்த திருதியை திதியின் அதிதேவதை கெளரிமாதா எனப்படும் பராசக்தி ஆவார். இந்நாளில் சிகை திருத்தம் செய்தல், முகசவரம், நகம் வெட்டுதல் முதலியன நன்மை தரும். மேலும் பிறந்த குழந்தைக்கு முதல் முதலாக உணவு ஊட்டி பழக்கலாம். சங்கீதம் மற்றும் இசை கற்றுக்கொள்ளலாம். கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்யலாம். சிற்பம் செதுக்கும் காரியங்களில் ஈடுபடலாம். அழகு சம்மந்தமான வேலைகளில் ஈடுபடலாம் அல்லது கற்றுக் கொள்ளலாம். மேலும் வீட்டில் அனைத்து வகையான சுப காரியங்களையும் செய்யலாம்.

திரிதியை திதிக்கான திதி சூன்ய ராசிகள்

திரிதியை திதிக்கான திதி சூன்ய ராசிகள் மகரம் மற்றும் சிம்மம் ஆகும்.

திரிதியை திதிக்கான தெய்வங்கள்

திரிதியை திதிக்கான வளர்பிறை தெய்வங்கள் : சிவன், மற்றும் கௌரி

திரிதியை திதிக்கான தேய்பிறை தெய்வங்கள் : குபேரன், மற்றும் சந்திரன்

திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அம்மான் பச்சரிசி மருத்துவ பயன்கள்

அற்புத குணம் கொண்ட அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி அம்மான் பச்சரிசி என்றால் இது வகையான அரிசி வகை என நினைக்க வேண்டாம். இது சித்த மருத்துவத்தில் பயன்படும் ஒரு வகை மூலிகையாகும். இதன் விதைகள் அரிசி குருணை போன்று சிறிதாக...
ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன

ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்க்க வேண்டும்

ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன? ராசி அதிபதி பொருத்தம் என்பது குடும்பம் சந்தோஷமாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் ஆகும். ராசி அதிபதி பொருத்தம் இருந்தால் குடும்பம் சுபிட்சமாக இருக்கும். பிறக்கும் பிள்ளைகள் யோகமாக...
சிக்கன் வறுவல் செய்வது எப்படி

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல்

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனில் பல வகைகள் உள்ளன. அதில் நாம் இன்று...
ஆண் கை பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்

ஆண் கை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் கை மச்ச பலன்கள் உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். மேலும், மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. ஒருவருக்கு மச்சம் இந்த இடத்தில் இருந்தால் இந்த மாதிரியான...
பாதாம் அல்வா செய்வது எப்படி

பாதாம் அல்வா செய்வது எப்படி

பாதாம் அல்வா தேவையான பொருள்கள் பாதாம் பருப்பு – 1 கப் சர்க்கரை – ¾ கப் நெய் – ¼ கப் தண்ணீர் – சிரிதளவு செய்முறை பாதாம் பருப்பை வெந்நீரில் இரண்டு மணி...
முதலுதவியின் பயன்கள்

முதலுதவி என்றால் என்ன? முதலுதவியின் வரலாறு

முதலுதவி என்றால் என்ன முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் சிகிச்சையாகும். தேவையான முழு மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயம்பட்ட நபர்க்கு கொடுக்கபடும்....
உதட்டை சிவப்பாக்க இயற்கை முறைகள்

இயற்கையான முறையில் உங்கள் உதடுகள் சிவப்பாக மாற

லிப்ஸ்டிக் போடாமல் உங்கள் உதடுகள் சிவப்பாக வேண்டுமா? பெண்கள் பயன்படுத்தும் பல அழகுசாதன பொருட்களில் லிப்ஸ்டிக் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் உதடுகளும் அழகாக இருந்தால் தான் நமது தோற்றம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.