திருமணத்தில் பந்தக்கால் அல்லது முகூர்த்தகால் நடுவது ஏன்?

பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவது ஏன்?

பெரும்பாலான இந்து திருமணங்களில் திருமணதிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவார்கள். எதற்கு இந்த பந்தக்கால் நடுகிறார்கள் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. நம் முன்னோர்கள் அந்த காலத்தில் பின்பற்றிய வழிமுறையை நாமும் பின்பற்றி வருகிறோம். ஏன் பந்தக்கால் அல்லது மூகூர்தகால் நாடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பந்தக்கால் நடுதல்

ஈசான்ய மூலை

திருமணத்திற்கு முன்பு வீட்டின் முன்பு முகூர்த்தகால் அல்லது பந்தக்கால் நடுவது, மாவிலைத் தோரணம் கட்டுவது போன்றவை மரபு. இதற்கு மூங்கில் அல்லது சவுக்கு போன்ற கொம்புகளை வாங்கிவந்து அதை சுத்தம் செய்து பின்பு மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்களால் அலங்கரித்து வடகிழக்கு மூலையில் நடுவது வழக்கம். வடகிழக்கு மூலையை ஈசான்ய திசை எனப் போற்றுவர் பெரியோர். ஈசான்ய திசை சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசையாகும். நடைபெறப்போகும் திருமணம் இறை அருளாசியோடு மணமக்கள் இன்புற்று மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதைக் குறிக்கவே பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடப்படுகிறது.

வரலாற்றில் பந்தக்கால்

முற்காலத்தில் திருமணம் செய்யும்போது அந்நாட்டின் அரசனுக்கும் மரியாதை நிமித்தமாக திருமண அழைப்பிதழ் அனுப்புவார்கள். அப்படி அழைப்பு தந்த அனைவரது திருமணத்திற்கும் அரசனால் செல்ல முடியாது. எனவே அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் என்பது பிற்காலத்தில் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அத்திருமணம் அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம். அதாவது அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இந்தமுறை தொன்று தொட்டு தொடர்ந்து பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடும் முறையாக இன்று நம்மிடையே வளர்ந்து வந்துள்ளது.

நலங்கு

பந்தக்கால் முடிந்து மணமகன் மற்றும் மணமகளுக்கு நலங்கு நிகழ்ச்சி நடைபெறும். திருமணம் முடியும்வரை ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேளைகளில் மணமக்களுக்கு நலங்கு வைக்கப்படும். இது ஒரு சில குடும்ப வழக்கப்படி மாறுபடும். அந்த நாட்களில் அசைவ உணவு தவிர்க்கப்பட வேண்டும்.

பந்தக்கால் ஏன் நடுகிறார்கள்

துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது

பந்தக்கால் நட்டுபிறகு பந்தல் போடும் வேலையையும் தொடர்ந்து செய்வதில் உறவினர்களுடன் சேர்ந்து இருவீட்டாரும் அவரவர் வீட்டில் உறவினர்களுடன் விருந்து உண்டு மகிழ்வர். மற்றும் முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணம் முடியும் வரை எவ்விதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுதல் கூடாது.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பங்குனியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பனிரெண்டு தமிழ் மாதங்களில் பங்குனி மாதம் கடைசி மாதமாகும். சூரியன் மீன ராசியில் பிரவேசிக்கும் காலம் பங்குனி மாதமாகும். இந்த பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தமிழ்கடவுள்...
எலும்பு முறிவு குணமாக

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள் எலும்பு முறிவு என்பது சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் ஏற்படுகிறது. ஆய்வின்படி 10ல் 6 பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது எலும்புமுறிவு பாதிப்புக்கு...
மாசி மாதம் பிறந்தவர்களின் குணநலன்கள்

மாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

மாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சூரியன் கும்பராசியில் சஞ்சரிக்கும் காலம் மாசி மாதமாகும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தியாக மனபான்மை உள்ளவர்கள். குடும்பத்திலும், சொந்த பந்தங்களிடத்திலும் சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வார்கள். காரியங்களை திட்டம் போட்டு...
ராசிக்கல் பலன்கள்

இராசிக்கல் அணிவதால் கிடைக்கும் பலன்கள்

இராசிக்கல் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி உண்டு. ஒவ்வொரு அதிபதிக்கும் ஒவ்வொரு ராசிக்கல் உண்டு. ராசிக்கல் அணிவதால் மட்டுமே ஒருவர் வாழ்க்கையில் எல்லா வகையான மகிழ்ச்சியும் அடைய முடியும் என்பது உண்மையல்ல. ராசிக்கல் அணிந்ததால்...
மூட்டு வலிக்கான தீர்வு

மூட்டு வலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்

மூட்டு வலி பெரும்பாலானோர் மூட்டு வலி பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டு வலி என்பது நமது தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக அமைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பலருக்கும் ஏற்படும் பாதிப்பாக அமைந்துள்ளது. மூட்டுகளில் வலி...
நகங்களை பராமரிப்பது எப்படி

கை மற்றும் கால் நகங்களை அழகாக வைத்திருக்க சில டிப்ஸ்

அழகான நகங்களை பெற    நம் உடலின் மற்ற பாகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல நகங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நகங்களை அழகாக வைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும். நகங்களை பராமரிப்பதில் ஆண்களை காட்டிலும்...
ஆப்பிள் மருத்துவ பயன்கள்

ஆப்பிள் பழத்தின் மருத்துவ குணங்கள் | ஆப்பிள் பயன்கள் மற்றும் நன்மைகள்

ஆப்பிள் ஆப்பிள் அல்லது குமுளிப்பழம் குளிர்ப் பிரேதேசத்தில் வளரக்கூடிய பழமாகும். இது வருடத்திற்கு ஒரு முறை இலையுதிரும் ரோசாசிடே என்ற குடும்பத் தாவரமாகும். ஆப்பிள் பழத்தினுடைய தோல் பகுதியானது மெல்லியதாயும், பழச்சதை உறுதியானதாகவும் இருக்கும்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.