திருமணத்தில் பந்தக்கால் அல்லது முகூர்த்தகால் நடுவது ஏன்?

பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவது ஏன்?

பெரும்பாலான இந்து திருமணங்களில் திருமணதிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவார்கள். எதற்கு இந்த பந்தக்கால் நடுகிறார்கள் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. நம் முன்னோர்கள் அந்த காலத்தில் பின்பற்றிய வழிமுறையை நாமும் பின்பற்றி வருகிறோம். ஏன் பந்தக்கால் அல்லது மூகூர்தகால் நாடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பந்தக்கால் நடுதல்

ஈசான்ய மூலை

திருமணத்திற்கு முன்பு வீட்டின் முன்பு முகூர்த்தகால் அல்லது பந்தக்கால் நடுவது, மாவிலைத் தோரணம் கட்டுவது போன்றவை மரபு. இதற்கு மூங்கில் அல்லது சவுக்கு போன்ற கொம்புகளை வாங்கிவந்து அதை சுத்தம் செய்து பின்பு மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்களால் அலங்கரித்து வடகிழக்கு மூலையில் நடுவது வழக்கம். வடகிழக்கு மூலையை ஈசான்ய திசை எனப் போற்றுவர் பெரியோர். ஈசான்ய திசை சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசையாகும். நடைபெறப்போகும் திருமணம் இறை அருளாசியோடு மணமக்கள் இன்புற்று மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதைக் குறிக்கவே பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடப்படுகிறது.

வரலாற்றில் பந்தக்கால்

முற்காலத்தில் திருமணம் செய்யும்போது அந்நாட்டின் அரசனுக்கும் மரியாதை நிமித்தமாக திருமண அழைப்பிதழ் அனுப்புவார்கள். அப்படி அழைப்பு தந்த அனைவரது திருமணத்திற்கும் அரசனால் செல்ல முடியாது. எனவே அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் என்பது பிற்காலத்தில் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அத்திருமணம் அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம். அதாவது அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இந்தமுறை தொன்று தொட்டு தொடர்ந்து பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடும் முறையாக இன்று நம்மிடையே வளர்ந்து வந்துள்ளது.

நலங்கு

பந்தக்கால் முடிந்து மணமகன் மற்றும் மணமகளுக்கு நலங்கு நிகழ்ச்சி நடைபெறும். திருமணம் முடியும்வரை ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேளைகளில் மணமக்களுக்கு நலங்கு வைக்கப்படும். இது ஒரு சில குடும்ப வழக்கப்படி மாறுபடும். அந்த நாட்களில் அசைவ உணவு தவிர்க்கப்பட வேண்டும்.

பந்தக்கால் ஏன் நடுகிறார்கள்

துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது

பந்தக்கால் நட்டுபிறகு பந்தல் போடும் வேலையையும் தொடர்ந்து செய்வதில் உறவினர்களுடன் சேர்ந்து இருவீட்டாரும் அவரவர் வீட்டில் உறவினர்களுடன் விருந்து உண்டு மகிழ்வர். மற்றும் முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணம் முடியும் வரை எவ்விதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுதல் கூடாது.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சீத்தாபழம் மருத்துவ பயன்கள்

உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும் சீத்தாப்பழம்

சீத்தாப்பழம் சீத்தாப்பழம் அல்லது சீதாப்பழம் அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளை தாயகமாகக் கொண்டது. சீத்தாப்பழம் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், அதனுள் உள்ள சதைப்பகுதி மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் இதர...
ஆண் கால் பகுதி மச்சத்தின் பலன்கள்

ஆண் கால் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் கால்கள் மச்ச பலன்கள் உடலில் ஒவ்வொரு பாகத்தில் தோன்றும் மச்சங்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை மச்ச சாஸ்திரம் என்னும் நூல் விளக்குகிறது. அந்த வகையில் ஆணின் கால் பகுதியில் எந்த இடத்தில்...
செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம் தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ பட்டை – 1 துண்டு புளி – சிறிதளவு தனியாத் தூள் – ½ ஸ்பூன் மிளகாய்த் தூள் – ½...
பிரதோஷ சிறப்புகள்

பிரதோஷ வழிபாடும் அதன் சிறப்புகளும்

பிரதோஷம் பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை...
இரத்தத்தை சுத்தப்படுத்துவது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள் நம் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் உடலின் செயல்பாடுகள் சரியாக நடக்கும். இரத்தம் சுத்தமில்லாமல்...
திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?

திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?

திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்? உலகிலேயே இந்தியாவில் உள்ள மணமான பெண்கள் மட்டும் தான் மெட்டி அணியும் கலாச்சாரத்தை காலங்காலமாக வழக்கமாக வைத்துள்ளனர். மெட்டி அணிவது வெறும் திருமணம் ஆனதற்கான அடையாளம்...
பாம்பு கடிக்கு செய்ய வேண்டிய முதலுதவி

பாம்பு கடிக்கான முதலுதவி சிகிச்சைகளை எவ்வாறு மேற்கொள்வது

பாம்பு கடிக்கான முதலுதவி அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் நாம் காடுகளை அழித்து வீடுகளாகவும், விவசாய நிலங்களாகவும் மாற்றி வருகிறோம். காடுகள் அழிக்கப்பட்டு வரும் இந்தக் காலத்தில் காட்டில் உள்ள விலங்குகள், பூச்சிகள்,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.