பாம்பு கடிக்கான முதலுதவி சிகிச்சைகளை எவ்வாறு மேற்கொள்வது

பாம்பு கடிக்கான முதலுதவி

அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் நாம் காடுகளை அழித்து வீடுகளாகவும், விவசாய நிலங்களாகவும் மாற்றி வருகிறோம். காடுகள் அழிக்கப்பட்டு வரும் இந்தக் காலத்தில் காட்டில் உள்ள விலங்குகள், பூச்சிகள், விஷஜந்துகள் தங்கள் வாழ்விடங்களை இழந்து மக்களின் வீடுகளை நோக்கி படை எடுக்கின்றன.

மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் பாம்புகளும் நகரங்களில் குடிபெயர்ந்து வருகிறது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்குக் காரணம் அதன் ஆளைக் கொல்லும் விஷம்தான். அப்படிப்பட்ட பாம்பு மனிதனை தீண்டினால் என்னென்ன முதலுதவிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

பாம்பு கடிக்கு செய்ய வேண்டிய முதலுதவி

மனிதனை பாம்பு கடித்துவிட்டால் அது விஷ பாம்பா, அல்லது சாதாரண பாம்பா என அறிந்து கொள்ள வேண்டும். சாதாரண பாம்பு எனில் சில முதலுதவி சிகிச்சைகள் எடுத்து கொண்டாலே போதுமானது. அதுவே விஷ பாம்பு தாமதிக்காமல் சரியான சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். தவறினால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும்.

பாம்புக் கடியை எப்படி அடையாளம் காண்பது

பாம்பு கடித்த இடத்தில் இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா? கடித்த இடம் சற்று வீங்கி இருக்கிறதா? கடுமையான வலி இருக்கிறதா? மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் அது விஷப்பாம்பு கடித்ததாகத் தான் இருக்கும்.

பாம்பு கடிக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள்

1. பாம்பு கடித்த இடத்தில் இறுக்கி கட்டுப் போட கூடாது. இறுக்கி கட்டுப் போட்டால், இறுக்கம் காரணமாக பாம்பின் விஷம் ஓரிடத்திலேயே தங்கிவிடும். இதனால் பாம்பு கடித்த பகுதி அழுகிப் போக வாய்புகள் உண்டு. அதனால் எப்போதும் லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

2. பாம்பு கடித்த இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவ வேண்டும். அந்த சமயத்தில் பாம்பால் கடிபட்டவர் பதற்றம் அடையக் கூடாது. அவர் பதற்றமடைந்தால் உடலின் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் விஷம் வேகமாக ரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் பரவும். அதனால் அந்நபருக்கு தகுந்த ஆறுதல் கூறி மன தைரியத்தை இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

3. பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்கக் கூடாது. ஏனெனில் வேகமாக நடக்கும் போது ரத்த ஓட்டம் அதிகரித்து, ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.

4. பாம்பு கடித்த இடத்தை, இதயத்தை விடத் தாழ்வாக வைக்க வேண்டும். பாம்புக் கடிக்கு ஆளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் செல்ல வேண்டும்.

பாம்பு கனவு பலன்கள்

5. தேள், பூரான், மற்றும் பல விஷஜந்துக்கள் மூலம் விஷக்கடி ஏற்பட்டவர்களுக்கு முதலில் கடிபட்ட இடத்தை நன்கு கழுவி, கொட்டுப்பட்ட இடத்திற்கு ஐஸ் ஒத்தடம் கொடுப்பது தான் சிறந்த முதல் உதவி.

பாம்பு கடிக்கு செய்யக்கூடாதவை

1. படங்களில் காட்டபடுவதை போல பாம்பு கடித்த இடத்தை வாய் வைத்து விஷத்தை உறிஞ்ச கூடாது.

2. பாம்பு கடித்த இடத்தை கத்தியை வைத்து கீற கூடாது.

3. பாம்பு கடித்தவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். ஒரு சிலர் மந்திரவாதிகளிடம் அழைத்து செல்வர். அவ்வாறு செய்ய கூடாது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

5ம் எண்ணின் குணநலன்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 5ம் எண் புதன் பகவானுக்குரிய எண்ணாகும். 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். 5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் இவர்கள் பின்னால் நடக்க போவதை முன்கூட்டியே...
tamil vidukadhaigal

Riddles with Answers | Vidukathaigal and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் விடுகதைகள்   இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
ஜாதகத்தில் யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #8

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து கணிக்கப்படுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...
தோப்புக்கரணம் பயன்கள்

தோப்புகரணம் போடுவதால் உண்டாகும் நன்மைகள் 

தோப்புகரணம் போடுவதால் உண்டாகும் நன்மைகள்  தோப்புகரணம் போடுவது இன்று உடற்பயிற்சியாக மட்டுமே உள்ளது. ஆனால் அன்றே நம் முன்னோர்கள் விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தினமும் பிள்ளையாருக்கு தோப்புகரணம் போடுவதால்...
மாங்கல்ய தோஷம் பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? பெண்ணின் ஜாதகத்தில் உள்ள சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணங்களால் திருமணம் நடைபெறுவது தாமதமாகும் அல்லது அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காமல்...
துலாம் ராசி பலன்கள்

துலாம் ராசி பொது பலன்கள் – துலாம் ராசி குணங்கள்

துலாம் ராசி குணங்கள் துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரத்தின் 3, 4 ஆம் பாதங்களும், சுவாதி நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், விசாகம் நட்சத்திரத்தின் 1, 2,...
முதலுதவியின் பயன்கள்

முதலுதவி என்றால் என்ன? முதலுதவியின் வரலாறு

முதலுதவி என்றால் என்ன முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் சிகிச்சையாகும். தேவையான முழு மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயம்பட்ட நபர்க்கு கொடுக்கபடும்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.