உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ

உடல் எடை அதிகரிப்பு இன்று அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாக உருவாகியுள்ளது. உடல் எடை அதிகரிப்பால் உடல் சோர்வு, மந்த நிலை, இரத்த அழுத்த்தம், சர்க்கரை நோய் போன்ற பல நோய்கள் உருவாக உடல் எடை அதிகரிப்பும் ஒரு காரணமாக உள்ளது.

அதிகப்படியான உடல் எடையை ஒரு டீ குடிப்பதன் மூலம் நாம் கட்டுக்குள் கொண்டு வரலாம். நாம் தினசரி குறைந்தபட்சம் இரண்டு முறையாவது பால், டீ, காபி போன்றவற்றை குடிக்கிறோம். மற்ற டீ, காபி போன்றவற்றை தவிர்த்து இந்த டீயினை நாம் அன்றாடம் எடுத்துக் கொண்டால் உடல் எடையை சம அளவில் வைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

உடல் எடையை குறைக்கும் தேநீர்ஓமம் மற்றும் சீரக தேநீர் குடிப்பதின் பயன்கள்

  • சமையலில் சுவைக்காகவும், மனம் கிடைப்பதற்காகவும் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் தான் சீரகம் மற்றும் ஓமம். இவை  இரண்டும் நமது செரிமானத்திற்கு நன்னமை அளிக்கக் கூடியவை.
  • சீரகம் மற்றும் ஓமம் கொண்டு தயாரிக்கப்படும் டீயில் இருக்கும் தைமோல் என்னும் ரசாயனம் இரைப்பையின் சுரப்பிற்கு உதவுகிறது.
  • உடலில் நச்சுக்கள் உருவாவதை தடுக்கிறது. கெட்ட கொழுப்பு சேராமல் தடுக்கிறது. மேலும் உடல் எடையை குறைக்கவும் இவை உதவுகிறது.
  • அஜீரணம் மற்றும் வயிற்றுவலிக்கு சரியான தீர்வாக சீரகம் உள்ளது. உடலில் நோய் எதிர்பாற்றலை அதிகப்படுத்துவதுடன் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
  • சீரகத்தில் உள்ள இரும்பு சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்தசோகை ஏற்படாமல் தடுக்கிறது.
  • சுவாசபாதையில் உள்ள நோய் கிருமிகளை அழித்து சளி மற்றும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க காரணமாக உள்ளது.
  • கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்துவதுடன் பால் சுரப்பையும் அதிகரிக்கிறது.
  • பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சிறந்த வலி நிவாரணியாகவும் சீரகம் விளங்குகிறது.

ஓமம் மற்றும் சீராக தேநீர் தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்

சீரகம் – 1 ஸ்பூன்

ஓமம் – ½ ஸ்பூன்

தண்ணீர் – 1 டம்ளர்

செய்முறை

  • சீரகம் , ஓமம் இரண்டையும் தேவையான அளவு தண்ணீரில் முதல் நாள் இரவே போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
  • மறுநாள் காலையில் அந்த சீரகம் , ஓமம் சேர்த்து ஊற வைத்த தண்ணீரை சிறிது கொதிக்க வைக்கவும்.
  • பின்னர் வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் டீ, காபிக்கு பதிலாக குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உடல் எடை குறைய தொடங்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கனவு பலன்கள் நாய்

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால் என்ன பலன்

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால் பூனை கனவில் வந்தால் 1. வீட்டு அடுபாங்கரையில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு வந்தால் அது நல்ல சகுனம் அல்ல என்று அர்த்தம். 2. பூனை...
pudhirgal

Puzzles with Answers | Vidukathaigal with answers

மூளைக்கு வேலை தரும் வினா விடைகள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
உடல் சூட்டை குறைக்க வழிகள்

உடல் சூட்டினால் ஏற்படும் பாதிப்புகளும் அதற்கான தீர்வுகளும்

உடல் சூடு எதனால் ஏற்படுகிறது? இன்றைக்கு பலருக்கும் உடலில் பல்வேறு விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று உடலில் சூடு. உடல் குளிர்ச்சியாக இருந்தாலே பல நோய்களில் இருந்து நாம் தப்பித்து விடலாம்....
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பரணி நட்சத்திரத்தின் இராசி : மேஷம் பரணி நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பரணி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை – துர்க்கை பரணி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...
முசுமுசுக்கை கீரை பயன்கள்

சுவாச பிரச்சனைகளை நீக்கும் அற்புத சக்தி கொண்ட முசுமுசுக்கை கீரை

முசுமுசுக்கை கீரை முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக படர்ந்து வளர்ந்திருக்கும். முசுமுசுக்கை செடியின் இலை, மற்றும் தண்டுகளில் சிறிய...
கிரகமாலிகா யோகங்கள்

அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் கிரகமாலிகா யோகம்

கிரகமாலிகா யோகம் (Graha Malika Yogam) ராகு, கேதுக்களைத் தவிர மற்ற 7 கிரகங்களும் வரிசையாக 7 வீடுகளில் இருந்தால் மாலை போல அமைய பெற்று இருந்தால் அதற்கு கிரக மாலிகா யோகம் என்று...
3ம் எண்ணின் பொதுவான குணம்

3ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

3ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 3ம் எண் தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியதாகும். 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்க எண்ணான 3ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 3ம் எண்ணில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.