மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன?

பெண்ணின் ஜாதகத்தில் உள்ள சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணங்களால் திருமணம் நடைபெறுவது தாமதமாகும் அல்லது அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காமல் தடையாக இருக்கும் கிரக அமைப்புகளைத்தான் மாங்கல்ய தோஷம் என்கிறார்கள். மாங்கல்ய தோஷமானது, பெண்ணின் ஜாதகத்தில் மட்டுமே இருக்கும்.

மாங்கல்ய தோஷம் பரிகாரம்

மாங்கல்ய தோஷம் இருப்பதை எவ்வாறு அறிவது?

பெண்ணின் ஜாதகத்தில் உள்ள லக்னத்தில் இருந்து 8-ஆம் இடம் தான், மாங்கல்ய ஸ்தானமாகும். இந்த 8-ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருப்பது நல்லதல்ல.

8-ஆம் இடத்தில் மேற்சொன்ன ஐந்து கிரகங்கள் இருந்து, அந்த இடம், அந்த கிரகங்களின் சொந்த வீடாக, உச்சம் பெற்று இருந்தால் மாங்கல்ய தோஷம் குறையும். அந்த இடத்தில் குரு, சுக்கிரன் போன்ற சுபர்கள் பார்வை இருந்தால், மாங்கல்ய தோஷம் விலகும்.

மாங்கல்ய தோஷம் எதனால் ஏற்படுகிறது?

முற்பிறவியில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையிலேயே, இந்தப் பிறவியில் நமது பிறப்பு மற்றும் ஜாதகக் கட்டங்கள் அமைகின்றன. முற்பிறவியில் நாம் செய்த பெரும் தவறுகளாலும் மற்றும் பெரியோர்களை மதிக்காமல் நடந்திருந்தாலும் மாங்கல்ய தோஷம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கன்னிப் பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் கழிக்கும் முறை

ஒரு புதிய தாலியை தங்கத்தில் வாங்கி அவர்களது குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தின் பாதத்தில் அந்த தாலியை வைத்து பூஜை செய்து ஒரு மஞ்சள் கயிற்றில் கோர்த்து கொள்ள வேண்டும். கோவிலிலோ அல்லது வீட்டிலோ அவர்களது இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து வழிபட்டு ஒரு சுமங்கலிப் பெண் இந்த பூஜை செய்த தாலியை திருமணம் தடைபட்டு வருகின்ற கன்னி பெண்ணிற்கு கட்ட வேண்டும்.

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

2 மணி நேரம் கழித்து தாலி கட்டப்பட்ட அந்த கன்னிப் பெண்ணின் தாலியை முன்பு தாலி கட்டிய அதே சுமங்கலிப் பெண்ணின் கையால் அந்த தாலியை அவிழ்த்து விட வேண்டும். அதன் பிறகு அந்த கன்னிப் பெண் குளிக்க வேண்டும்.

மேலும் தோஷம் கழிக்கும் போது அணிந்திருந்த இருந்த ஆடைகளை மீண்டும் அணியக் கூடாது. அதன் பிறகு அந்த கன்னிப் பெண் கழுத்தில் கட்டிய மாங்கல்யத்தை குலதெய்வம் (பெண் கடவுளுக்கு) அல்லது தங்களுக்கு இஷ்டமான பெண்கடவுளுக்கு சீர் வரிசைகளான மஞ்சள், குங்குமம், வளையல், புடவை, பழங்கள், வெற்றிலை பாக்கு, சந்தனம், இனிப்பு ஆகிய ஒன்பது மங்கள பொருட்களுடன் அந்த தாலியையும் வைத்து இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கை செய்ய வேண்டும்.

அவ்வாறு சீர்வரிசை செய்ய முடியாமல் போனால் அதற்கு பதில் அந்த தாலியை கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி விடலாம். இந்த தோஷம் கழிக்கும் நாளானது செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்ய கூடாது. இவ்வாறு மாங்கல்ய தோஷம் கழித்து விட்டால் திருமணம் ஆகாத பெண்ணுக்கு திருமணமானது விரைவில் நடைபெறும். இது மாங்கல்ய தோஷம் கழிக்கும் பொதுவான முறை ஆகும். அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப மாங்கல்ய தோஷத்தை நிவர்த்தி செய்ய தகுந்த ஜோதிடரை அணுகவும்.

மாங்கல்ய தோஷ பரிகாரம்

வன்னி மர விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளன்று மனமுருகி வழிபட்டு அன்றைய தினம் ஒன்பது கன்னி பெண்களுக்கு வஸ்திரதானம் எனப்படும் ஆடை தானம் செய்தால் மாங்கல்ய தோஷம் விலகும்.

திருமணதிற்கு பிறகு மாங்கல்ய தோஷம்

திருமணத்திற்கு பிறகு கட்டிய மாங்கல்யத்துக்கு ஆபத்து வருமோ என்று பயப்படும் பெண்கள் செவ்வாய்க்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, விரலி மஞ்சள் மாலை சூட்டி, மஞ்சள் கயிறு வைத்து, சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், பானகம், நிவேதனம் செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள் குங்குமம் கொடுத்து, பைரவரை வழிபட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வர மாங்கல்ய தோஷம் பற்றிய பயம் விலகும்.

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

மேலும் எந்த கிரகத்தினால் மாங்கல்ய தோஷம் ஏற்பட்டு உள்ளதோ அந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும். அதே போல ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சையில், நெய் விளக்கேற்றி வழிபாடு செய்து வரலாம். அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவிக்கலாம். எலுமிச்சை சாதம் படைத்து வழிபாடு செய்யலாம்.

மாங்கல்ய தோஷம் நீங்க செல்ல வேண்டிய கோவில்கள்

தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள மங்களநாதரை சென்று வணங்கினால் மாங்கல்ய தோஷத்தின் கடுமை குறையும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி

சத்தான கேழ்வரகு முறுக்கு செய்முறை

கேழ்வரகு முறுக்கு தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு – 500 கிராம் அரிசி மாவு - 50 கிராம் உடைத்த கடலை மாவு – 50 கிராம் சீரகம் – 1 ஸ்பூன் வெண்ணை...
மட்டன் குருமா குழம்பு வைப்பது எப்படி

மட்டன் குருமா செய்வது எப்படி

மட்டன் குருமா ஆட்டுக்கறி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது, கூடவே ஆரோக்கியமும் நிறைந்தது. மட்டனை வைத்து விதவிதமான உணவுகள் செய்யப்படுகிறது. அதில் ஒன்றுதான் மட்டன் குருமா. இந்த மட்டன் குருமா செய்வதற்கு மணமானது மற்றும் எளிதானது,...
பிறந்த மாத பலன்கள்

நீங்கள் இந்த மாதத்தில் பிறந்தவரா, உங்கள் பிறந்த மாத பலன்கள் இதோ

பிறந்த மாத பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குணங்கள் இருக்கும். அது போல அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும். அந்த வகையில் எந்த ஆங்கில மாதத்தில் பிறந்தால் என்ன மாதிரியான குணங்கள்...
துருதுருவென இருக்கும் குழந்தைகளுக்கு

குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் உணவுகள்

குழந்தைகளை சுறுசுறுப்பாக்கும் உணவுகள் குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்கவும், அவர்கள் அனைத்திலும் சிறப்பாக கவனம் செலுத்தவும்,  சரியான சீரான உணவு அவசியமாகிறது. குறிப்பாக துருதுருவென சுறுசுறுப்பாக இருக்கும்  குழந்தைகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. குழந்தையின் அறிவாற்றல் மற்றும்...
குங்குமம் வைப்பதின் நன்மைகள்

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்? திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை மேம்படுத்தும். ஆனால் திருமணம் ஆகாத பெண்கள் குங்குமத்தை வகிட்டில் இடுதல் அவசியம் அற்றது. அபத்தமானதும் கூட....
கேழ்வரகு சேமியா இட்லி

கேழ்வரகு சேமியா இட்லி செய்முறை

கேழ்வரகு சேமியா இட்லி கேழ்வரகில் மற்ற தானியங்கள், அரிசி போன்றவற்றைவிட அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற  பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) ஏற்படாமல் தடுக்க கேழ்வரகு...
ஜாதக யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #7

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து நிர்ணயிக்கபடுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில் எந்த...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.