மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன?

பெண்ணின் ஜாதகத்தில் உள்ள சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணங்களால் திருமணம் நடைபெறுவது தாமதமாகும் அல்லது அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காமல் தடையாக இருக்கும் கிரக அமைப்புகளைத்தான் மாங்கல்ய தோஷம் என்கிறார்கள். மாங்கல்ய தோஷமானது, பெண்ணின் ஜாதகத்தில் மட்டுமே இருக்கும்.

மாங்கல்ய தோஷம் பரிகாரம்

மாங்கல்ய தோஷம் இருப்பதை எவ்வாறு அறிவது?

பெண்ணின் ஜாதகத்தில் உள்ள லக்னத்தில் இருந்து 8-ஆம் இடம் தான், மாங்கல்ய ஸ்தானமாகும். இந்த 8-ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருப்பது நல்லதல்ல.

8-ஆம் இடத்தில் மேற்சொன்ன ஐந்து கிரகங்கள் இருந்து, அந்த இடம், அந்த கிரகங்களின் சொந்த வீடாக, உச்சம் பெற்று இருந்தால் மாங்கல்ய தோஷம் குறையும். அந்த இடத்தில் குரு, சுக்கிரன் போன்ற சுபர்கள் பார்வை இருந்தால், மாங்கல்ய தோஷம் விலகும்.

மாங்கல்ய தோஷம் எதனால் ஏற்படுகிறது?

முற்பிறவியில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையிலேயே, இந்தப் பிறவியில் நமது பிறப்பு மற்றும் ஜாதகக் கட்டங்கள் அமைகின்றன. முற்பிறவியில் நாம் செய்த பெரும் தவறுகளாலும் மற்றும் பெரியோர்களை மதிக்காமல் நடந்திருந்தாலும் மாங்கல்ய தோஷம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கன்னிப் பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் கழிக்கும் முறை

ஒரு புதிய தாலியை தங்கத்தில் வாங்கி அவர்களது குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தின் பாதத்தில் அந்த தாலியை வைத்து பூஜை செய்து ஒரு மஞ்சள் கயிற்றில் கோர்த்து கொள்ள வேண்டும். கோவிலிலோ அல்லது வீட்டிலோ அவர்களது இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து வழிபட்டு ஒரு சுமங்கலிப் பெண் இந்த பூஜை செய்த தாலியை திருமணம் தடைபட்டு வருகின்ற கன்னி பெண்ணிற்கு கட்ட வேண்டும்.

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

2 மணி நேரம் கழித்து தாலி கட்டப்பட்ட அந்த கன்னிப் பெண்ணின் தாலியை முன்பு தாலி கட்டிய அதே சுமங்கலிப் பெண்ணின் கையால் அந்த தாலியை அவிழ்த்து விட வேண்டும். அதன் பிறகு அந்த கன்னிப் பெண் குளிக்க வேண்டும்.

மேலும் தோஷம் கழிக்கும் போது அணிந்திருந்த இருந்த ஆடைகளை மீண்டும் அணியக் கூடாது. அதன் பிறகு அந்த கன்னிப் பெண் கழுத்தில் கட்டிய மாங்கல்யத்தை குலதெய்வம் (பெண் கடவுளுக்கு) அல்லது தங்களுக்கு இஷ்டமான பெண்கடவுளுக்கு சீர் வரிசைகளான மஞ்சள், குங்குமம், வளையல், புடவை, பழங்கள், வெற்றிலை பாக்கு, சந்தனம், இனிப்பு ஆகிய ஒன்பது மங்கள பொருட்களுடன் அந்த தாலியையும் வைத்து இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கை செய்ய வேண்டும்.

அவ்வாறு சீர்வரிசை செய்ய முடியாமல் போனால் அதற்கு பதில் அந்த தாலியை கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி விடலாம். இந்த தோஷம் கழிக்கும் நாளானது செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்ய கூடாது. இவ்வாறு மாங்கல்ய தோஷம் கழித்து விட்டால் திருமணம் ஆகாத பெண்ணுக்கு திருமணமானது விரைவில் நடைபெறும். இது மாங்கல்ய தோஷம் கழிக்கும் பொதுவான முறை ஆகும். அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப மாங்கல்ய தோஷத்தை நிவர்த்தி செய்ய தகுந்த ஜோதிடரை அணுகவும்.

மாங்கல்ய தோஷ பரிகாரம்

வன்னி மர விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளன்று மனமுருகி வழிபட்டு அன்றைய தினம் ஒன்பது கன்னி பெண்களுக்கு வஸ்திரதானம் எனப்படும் ஆடை தானம் செய்தால் மாங்கல்ய தோஷம் விலகும்.

திருமணதிற்கு பிறகு மாங்கல்ய தோஷம்

திருமணத்திற்கு பிறகு கட்டிய மாங்கல்யத்துக்கு ஆபத்து வருமோ என்று பயப்படும் பெண்கள் செவ்வாய்க்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, விரலி மஞ்சள் மாலை சூட்டி, மஞ்சள் கயிறு வைத்து, சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், பானகம், நிவேதனம் செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள் குங்குமம் கொடுத்து, பைரவரை வழிபட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வர மாங்கல்ய தோஷம் பற்றிய பயம் விலகும்.

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

மேலும் எந்த கிரகத்தினால் மாங்கல்ய தோஷம் ஏற்பட்டு உள்ளதோ அந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும். அதே போல ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சையில், நெய் விளக்கேற்றி வழிபாடு செய்து வரலாம். அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவிக்கலாம். எலுமிச்சை சாதம் படைத்து வழிபாடு செய்யலாம்.

மாங்கல்ய தோஷம் நீங்க செல்ல வேண்டிய கோவில்கள்

தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள மங்களநாதரை சென்று வணங்கினால் மாங்கல்ய தோஷத்தின் கடுமை குறையும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பிறந்த மாத பலன்கள்

நீங்கள் இந்த மாதத்தில் பிறந்தவரா, உங்கள் பிறந்த மாத பலன்கள் இதோ

பிறந்த மாத பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குணங்கள் இருக்கும். அது போல அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும். அந்த வகையில் எந்த ஆங்கில மாதத்தில் பிறந்தால் என்ன மாதிரியான குணங்கள்...
புரட்டாசி மாத வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?

புரட்டாசி சனிக்கிழமை விரதம் தமிழ் மாதங்கள் மொத்தம் 12. அதில் பெருமாளுக்கு உகந்த மாதம் என்றால் அது புரட்டாசி மாதம் தான். புரட்டாசி மாதம் தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதம் ஆகும். புரட்டாசி...

ஆட்டு தலைக்கறி குழம்பு செய்வது எப்படி

ஆட்டு தலைக்கறி குழம்பு ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகளவில் உள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் பல்வேறு வித பலன்களை தருகிறது. சிலருக்கு ஆட்டின் தலைக்கறி மிகவும் விருப்ப உணவாக இருக்கும். தலைக்கறியை சாப்பிட்டால் இதயநோய்கள்...
ரிஷப ராசி குணங்கள்

ரிஷப ராசி பொது பலன்கள் – ரிஷப ராசி குணங்கள்

ரிஷப ராசி குணங்கள் ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவானாவர். ரிஷப ராசியில் கிருத்திகை 2, 3, 4 ஆம் பாதங்களும், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்களும் அடங்கியுள்ளன. ராசிகளில், ரிஷப ராசி...
திரிபலா எப்படி சாப்பிட வேண்டும்

உடல் நோய்களை தீர்க்கும் திரிபலா

உடல் நோய்ளை தீர்க்கும் திரிபலா    நம் அன்றாட வேலைகளை திறம்பட செய்ய உடலும் உள்ளமும் எப்போதும் ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்புடன் இருப்பது மிகவும் அவசியமாகும். அதற்கு சத்தான உணவு, உடற்பயிற்சி முறையான மற்றும் கட்டுப்பாடான...
மூட்டு வலிக்கான தீர்வு

மூட்டு வலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்

மூட்டு வலி பெரும்பாலானோர் மூட்டு வலி பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டு வலி என்பது நமது தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக அமைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பலருக்கும் ஏற்படும் பாதிப்பாக அமைந்துள்ளது. மூட்டுகளில் வலி...
கிரீன் டீ செய்முறை

கிரீன் டீ குடிப்பது நல்லதா கெட்டதா ?

கிரீன் டீ பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி ,டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கிரீன்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.