மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன?

பெண்ணின் ஜாதகத்தில் உள்ள சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணங்களால் திருமணம் நடைபெறுவது தாமதமாகும் அல்லது அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காமல் தடையாக இருக்கும் கிரக அமைப்புகளைத்தான் மாங்கல்ய தோஷம் என்கிறார்கள். மாங்கல்ய தோஷமானது, பெண்ணின் ஜாதகத்தில் மட்டுமே இருக்கும்.

மாங்கல்ய தோஷம் பரிகாரம்

மாங்கல்ய தோஷம் இருப்பதை எவ்வாறு அறிவது?

பெண்ணின் ஜாதகத்தில் உள்ள லக்னத்தில் இருந்து 8-ஆம் இடம் தான், மாங்கல்ய ஸ்தானமாகும். இந்த 8-ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருப்பது நல்லதல்ல.

8-ஆம் இடத்தில் மேற்சொன்ன ஐந்து கிரகங்கள் இருந்து, அந்த இடம், அந்த கிரகங்களின் சொந்த வீடாக, உச்சம் பெற்று இருந்தால் மாங்கல்ய தோஷம் குறையும். அந்த இடத்தில் குரு, சுக்கிரன் போன்ற சுபர்கள் பார்வை இருந்தால், மாங்கல்ய தோஷம் விலகும்.

மாங்கல்ய தோஷம் எதனால் ஏற்படுகிறது?

முற்பிறவியில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையிலேயே, இந்தப் பிறவியில் நமது பிறப்பு மற்றும் ஜாதகக் கட்டங்கள் அமைகின்றன. முற்பிறவியில் நாம் செய்த பெரும் தவறுகளாலும் மற்றும் பெரியோர்களை மதிக்காமல் நடந்திருந்தாலும் மாங்கல்ய தோஷம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கன்னிப் பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் கழிக்கும் முறை

ஒரு புதிய தாலியை தங்கத்தில் வாங்கி அவர்களது குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தின் பாதத்தில் அந்த தாலியை வைத்து பூஜை செய்து ஒரு மஞ்சள் கயிற்றில் கோர்த்து கொள்ள வேண்டும். கோவிலிலோ அல்லது வீட்டிலோ அவர்களது இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து வழிபட்டு ஒரு சுமங்கலிப் பெண் இந்த பூஜை செய்த தாலியை திருமணம் தடைபட்டு வருகின்ற கன்னி பெண்ணிற்கு கட்ட வேண்டும்.

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

2 மணி நேரம் கழித்து தாலி கட்டப்பட்ட அந்த கன்னிப் பெண்ணின் தாலியை முன்பு தாலி கட்டிய அதே சுமங்கலிப் பெண்ணின் கையால் அந்த தாலியை அவிழ்த்து விட வேண்டும். அதன் பிறகு அந்த கன்னிப் பெண் குளிக்க வேண்டும்.

மேலும் தோஷம் கழிக்கும் போது அணிந்திருந்த இருந்த ஆடைகளை மீண்டும் அணியக் கூடாது. அதன் பிறகு அந்த கன்னிப் பெண் கழுத்தில் கட்டிய மாங்கல்யத்தை குலதெய்வம் (பெண் கடவுளுக்கு) அல்லது தங்களுக்கு இஷ்டமான பெண்கடவுளுக்கு சீர் வரிசைகளான மஞ்சள், குங்குமம், வளையல், புடவை, பழங்கள், வெற்றிலை பாக்கு, சந்தனம், இனிப்பு ஆகிய ஒன்பது மங்கள பொருட்களுடன் அந்த தாலியையும் வைத்து இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கை செய்ய வேண்டும்.

அவ்வாறு சீர்வரிசை செய்ய முடியாமல் போனால் அதற்கு பதில் அந்த தாலியை கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி விடலாம். இந்த தோஷம் கழிக்கும் நாளானது செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்ய கூடாது. இவ்வாறு மாங்கல்ய தோஷம் கழித்து விட்டால் திருமணம் ஆகாத பெண்ணுக்கு திருமணமானது விரைவில் நடைபெறும். இது மாங்கல்ய தோஷம் கழிக்கும் பொதுவான முறை ஆகும். அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப மாங்கல்ய தோஷத்தை நிவர்த்தி செய்ய தகுந்த ஜோதிடரை அணுகவும்.

மாங்கல்ய தோஷ பரிகாரம்

வன்னி மர விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளன்று மனமுருகி வழிபட்டு அன்றைய தினம் ஒன்பது கன்னி பெண்களுக்கு வஸ்திரதானம் எனப்படும் ஆடை தானம் செய்தால் மாங்கல்ய தோஷம் விலகும்.

திருமணதிற்கு பிறகு மாங்கல்ய தோஷம்

திருமணத்திற்கு பிறகு கட்டிய மாங்கல்யத்துக்கு ஆபத்து வருமோ என்று பயப்படும் பெண்கள் செவ்வாய்க்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, விரலி மஞ்சள் மாலை சூட்டி, மஞ்சள் கயிறு வைத்து, சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், பானகம், நிவேதனம் செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள் குங்குமம் கொடுத்து, பைரவரை வழிபட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வர மாங்கல்ய தோஷம் பற்றிய பயம் விலகும்.

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

மேலும் எந்த கிரகத்தினால் மாங்கல்ய தோஷம் ஏற்பட்டு உள்ளதோ அந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும். அதே போல ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சையில், நெய் விளக்கேற்றி வழிபாடு செய்து வரலாம். அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவிக்கலாம். எலுமிச்சை சாதம் படைத்து வழிபாடு செய்யலாம்.

மாங்கல்ய தோஷம் நீங்க செல்ல வேண்டிய கோவில்கள்

தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள மங்களநாதரை சென்று வணங்கினால் மாங்கல்ய தோஷத்தின் கடுமை குறையும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சிவராத்திரி பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மற்றும் பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் மஹா சிவராத்திரி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை மார்ச் 1 ஆம் தேதி மஹா சிவராத்திரி...
மீன் குழம்பு செய்வது எப்படி

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு தேவையான பொருட்கள் மீன் – ½  கிலோ புளி – எலுமிச்சை அளவு பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 ...

மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதம் மார்கழி மாதமாகும். மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என கூறியுள்ளார்....
பிரதோஷ சிறப்புகள்

பிரதோஷ வழிபாடும் அதன் சிறப்புகளும்

பிரதோஷம் பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை...
மஞ்சள்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தி அனைத்து வசதி வாய்ப்புகள் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் முழு மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அதனால்தான் ‘ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ‘ என்று முன்னோர்கள்...
வீட்டில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும்

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்?

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்? தீபம் ஏற்றி வழிபடுவது இந்துக்களின் வழிபாட்டில் முக்கியமான ஒன்றாகும். ஒளி நிறைந்துள்ள இடத்தில் தான் அதிக நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும். தினந்தோறும் வீட்டில் காலையும், மாலையும் விளக்கேற்றி...
பிரண்டை மருத்துவ பயன்கள்

பிரண்டை மருத்துவ குணங்கள்

பிரண்டை பிரண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் ஒரு தாவர வகையாகும். இது கொடி வகையைச் சேர்ந்த தாவரமாகும். இது பொதுவாக வெப்பம் அதிகமான இடங்களில் தானே வளரும் தன்மையுடையது. இது இந்தியா மற்றும் இலங்கை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.