அஷ்டமி திதி பலன்கள், அஷ்டமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

அஷ்டமி திதி

அஷ்ட என்றால் எட்டு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை நாளிலிருந்து அல்லது பவுர்ணமி நாளிலிருந்து வரும் எட்டாவது நாள் அஷ்டமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் அஷ்டமியை சுக்கில பட்ச அஷ்டமி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் அஷ்டமி தினம் கிருஷ்ண பட்ச அஷ்டமி என்றும் அழைக்கபடுகிறது.

அஷ்டமி திதியின் சிறப்புகள்

அஷ்டமி திதி பலன்கள்பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான கண்ணன் அஷ்டமி திதி நாளில் அவதரித்ததால் அந்நாள் ‘ஜென்மாஷ்டமி’ அல்லது ‘கோகுலாஷ்டமி’ என்ற பெயரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அஷ்டமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

அஷ்டமி திதியில் பிறந்தவர்கள் சமர்தியசாளிகளாக இருப்பார்கள். புத்திர செல்வம் உடையவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள், ஆரோக்கியமான உடல் மற்றும் மனவலிமை உடையவர்கள். இவர்களுக்கு காம இச்சை அதிகம் இருக்கும். செல்வ வளம் உடையவர்களாக இருப்பார்கள்.

அஷ்டமி திதியில் என்னென்ன செய்யலாம்

அஷ்டமி திதியின் தெய்வம் மஹாருத்ரன் ஆவார். இந்த திதி வரும் நாளில் ஆயுதம் எடுத்தல், எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, அரண் அமைக்க, போர் மற்றும் தற்காப்பு கலைகளை கற்றுகொள்வது போன்றவற்றை செய்யலாம். மேலும் தெய்வ காரியங்களுக்கு தீட்சை பெறுவது, மந்திரங்கள் கற்பது, ஹோமங்கள் போன்றவற்றை செய்யலாம்.

அஷ்டமி திதியில் என்ன செய்ய கூடாது

அஷ்டமி திதியில் சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக திருமணம், குடும்ப விழாக்கள், கிரஹ பிரவேசம் போன்றவை செய்ய கூடாது. வியாழன் அன்று வரும் அஷ்டமி திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

அஷ்டமி திதிக்கான பரிகாரம்

தேய்பிறை அஷ்டமி திதியில் தான் சிவபெருமான் பைரவர் அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தார். பைரவருக்கு பௌர்ணமிக்கு அடுத்து வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் சகல கஷ்டங்களும் நீங்கும். மேலும் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கவும், தொழிலில் வளர்ச்சி பெறவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கவும், செல்வ செழிப்புடன் வாழவும் தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.

தேய்பிறை அஷ்டமியில் திதியில் தான் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்று சித்தர்களும் கூறியுள்ளனர். மேலும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரின் மந்திரத்தை 330 தடவை ஜெபித்தால் ஏழரைசனி, அஷ்டமசனி, கண்டகசனி காலங்களில் சனியால் ஏற்படும் பாதிப்புகள் அகலும்.

அஷ்டமி திதிக்கான திதி சூன்ய ராசிகள்

அஷ்டமி திதிக்கான திதி சூன்ய ராசிகள் மிதுனம் மற்றும் கன்னி ஆகும்.

அஷ்டமி திதிக்கான தெய்வங்கள்

அஷ்டமி வளர்பிறை திதிக்கான தெய்வங்கள் : பைரவர், மற்றும் மகாலட்சுமி

அஷ்டமி தேய்பிறை திதிக்கான தெய்வங்கள் : ருத்திரர், மற்றும் மகாலட்சுமி

திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஷாக் அடித்தால் என்ன செய்ய வேண்டும்

முதலுதவி பெட்டி யும் அதில் இருக்க வேண்டிய முதலுதவி பொருட்களும்

முதலுதவி பெட்டி முதலுதவி செய்ய மிகவும் முக்கியம் முக்கிய பொருட்கள் நிறைந்த முதல் உதவிப் பெட்டி ஆகும். காயமடைந்தவருக்கு முதன்மையான உதவிகளை செய்வதற்காக சில அத்தியாவசிய மருத்துவப்பொருட்களை கொண்டுள்ள பெட்டியே முதலுதவிப்பெட்டி ஆகும். இது...
புத்திர தோஷம்

புத்திர தோஷம் என்றால் என்ன? புத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் என்றால் என்ன நமக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நாம் முற்பிறவியில் செய்த கர்மவினைகளை பொறுத்தே அமைகிறது. முற்பிறவியில் பெற்றோர்களை மதிக்காமல் கொடுமைபடுத்தியிருந்தால், அவர்கள் கொடுத்த சாபத்தால் இந்த ஜென்மத்தில் புத்திர தோஷம்...
ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி

ஆட்டுக்கால் சூப் வைப்பது எப்படி

ஆட்டுக்கால் சூப் தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் - 4 தனியா தூள் – 2 ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் சீரகத் தூள் - 2 ஸ்பூன் மஞ்சள் தூள் –...
பருப்பு கீரை பயன்கள்

பலவித மருத்துவ பயன்கள் கொண்ட பருப்பு கீரை

பருப்பு கீரை இந்த கீரையை பருப்புடன் சமைத்து சாப்பிடும் பழக்கம் பழங்காலத்தில் இருந்தே இருந்து வருவதால் இதற்குப் பருப்புக் கீரை என்ற பெயர் ஏற்பட்டது. பருப்பு கீரை ‘பெண்களின் கீரை’ என்றும் அழைக்கபடுகிறது. பருப்பு...

ஏலக்காய் தண்ணீர் குடிப்பதினால் உண்டாகும் நன்மைகள்

ஏலக்காய் தண்ணீர் பயன்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த ஒரு அறிய மருந்து தான் ஏலக்காய். ஏலக்காய் நம் அனைவரின் வீட்டிலும் இருக்கக் கூடிய ஒரு அறிய மருத்துவ குணம்...
கிரீன் டீ செய்முறை

கிரீன் டீ குடிப்பது நல்லதா கெட்டதா ?

கிரீன் டீ பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி ,டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கிரீன்...
நரை முடி வராமல் தடுக்க

நரை முடி கருமையாக வளர சில டிப்ஸ்

நரை முடி கருமையாக வளர சில டிப்ஸ் நமது வாழ்வியல் மாற்றங்களும் முடி நரைப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. முடி நரைப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு முக்கிய காரணமாகும். உணவு பழக்க வழக்கத்தில் சில...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.