அஷ்டமி திதி பலன்கள், அஷ்டமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

அஷ்டமி திதி

அஷ்ட என்றால் எட்டு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை நாளிலிருந்து அல்லது பவுர்ணமி நாளிலிருந்து வரும் எட்டாவது நாள் அஷ்டமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் அஷ்டமியை சுக்கில பட்ச அஷ்டமி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் அஷ்டமி தினம் கிருஷ்ண பட்ச அஷ்டமி என்றும் அழைக்கபடுகிறது.

அஷ்டமி திதியின் சிறப்புகள்

அஷ்டமி திதி பலன்கள்பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான கண்ணன் அஷ்டமி திதி நாளில் அவதரித்ததால் அந்நாள் ‘ஜென்மாஷ்டமி’ அல்லது ‘கோகுலாஷ்டமி’ என்ற பெயரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அஷ்டமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

அஷ்டமி திதியில் பிறந்தவர்கள் சமர்தியசாளிகளாக இருப்பார்கள். புத்திர செல்வம் உடையவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள், ஆரோக்கியமான உடல் மற்றும் மனவலிமை உடையவர்கள். இவர்களுக்கு காம இச்சை அதிகம் இருக்கும். செல்வ வளம் உடையவர்களாக இருப்பார்கள்.

அஷ்டமி திதியில் என்னென்ன செய்யலாம்

அஷ்டமி திதியின் தெய்வம் மஹாருத்ரன் ஆவார். இந்த திதி வரும் நாளில் ஆயுதம் எடுத்தல், எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, அரண் அமைக்க, போர் மற்றும் தற்காப்பு கலைகளை கற்றுகொள்வது போன்றவற்றை செய்யலாம். மேலும் தெய்வ காரியங்களுக்கு தீட்சை பெறுவது, மந்திரங்கள் கற்பது, ஹோமங்கள் போன்றவற்றை செய்யலாம்.

அஷ்டமி திதியில் என்ன செய்ய கூடாது

அஷ்டமி திதியில் சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக திருமணம், குடும்ப விழாக்கள், கிரஹ பிரவேசம் போன்றவை செய்ய கூடாது. வியாழன் அன்று வரும் அஷ்டமி திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

அஷ்டமி திதிக்கான பரிகாரம்

தேய்பிறை அஷ்டமி திதியில் தான் சிவபெருமான் பைரவர் அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தார். பைரவருக்கு பௌர்ணமிக்கு அடுத்து வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் சகல கஷ்டங்களும் நீங்கும். மேலும் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கவும், தொழிலில் வளர்ச்சி பெறவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கவும், செல்வ செழிப்புடன் வாழவும் தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.

தேய்பிறை அஷ்டமியில் திதியில் தான் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்று சித்தர்களும் கூறியுள்ளனர். மேலும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரின் மந்திரத்தை 330 தடவை ஜெபித்தால் ஏழரைசனி, அஷ்டமசனி, கண்டகசனி காலங்களில் சனியால் ஏற்படும் பாதிப்புகள் அகலும்.

அஷ்டமி திதிக்கான திதி சூன்ய ராசிகள்

அஷ்டமி திதிக்கான திதி சூன்ய ராசிகள் மிதுனம் மற்றும் கன்னி ஆகும்.

அஷ்டமி திதிக்கான தெய்வங்கள்

அஷ்டமி வளர்பிறை திதிக்கான தெய்வங்கள் : பைரவர், மற்றும் மகாலட்சுமி

அஷ்டமி தேய்பிறை திதிக்கான தெய்வங்கள் : ருத்திரர், மற்றும் மகாலட்சுமி

திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

துருதுருவென இருக்கும் குழந்தைகளுக்கு

குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் உணவுகள்

குழந்தைகளை சுறுசுறுப்பாக்கும் உணவுகள் குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்கவும், அவர்கள் அனைத்திலும் சிறப்பாக கவனம் செலுத்தவும்,  சரியான சீரான உணவு அவசியமாகிறது. குறிப்பாக துருதுருவென சுறுசுறுப்பாக இருக்கும்  குழந்தைகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. குழந்தையின் அறிவாற்றல் மற்றும்...
கும்ப ராசி குணநலன்கள்

கும்ப ராசி பொது பலன்கள் – கும்ப ராசி குணங்கள்

கும்ப ராசி குணங்கள் கும்ப ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். கும்ப ராசியில் அவிட்டம் நட்சத்திரத்தின் 3, 4 ஆம் பாதங்களும், சதயம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், பூரட்டாதி நட்சத்திரத்தின் 1, 2,...
கனவு பலன்கள் நாய்

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால் என்ன பலன்

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால் பூனை கனவில் வந்தால் 1. வீட்டு அடுபாங்கரையில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு வந்தால் அது நல்ல சகுனம் அல்ல என்று அர்த்தம். 2. பூனை...
புத்திர தோஷம் நீங்க

புத்திர தோஷம் ஏன் ஏற்படுகிறது? புத்திர தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் திருமணமான அனைவருமே தங்களுக்கு ஒரு வாரிசு பிறக்க வேண்டும் என விரும்புவர். ஒரு சிலருக்கு திருமணமான ஒரு வருடத்திற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு சிலருக்கு சற்று தாமதமாக குழந்தை பேறு...
தொடை கறி

ஆற்காடு தொடை கறி

ஆற்காடு தொடை கறி தேவையான பொருட்கள் மட்டன்  (தொடை கறி) - ½ கிலோ வினிகர் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மிளகுத் தூள் - 2 ஸ்பூன் ...
தாரை வார்த்தல் என்றால் என்ன

திருமணத்தில் தாரை வார்த்தல் என்றால் என்ன?

தாரை வார்த்தல் என்றால் என்ன? திருமணம் செய்வதில் பல சடங்குகள் இருந்தாலும் அதில் மிகவும் முக்கியமானது தாரைவார்த்தல் சடங்காகும். ‘தாரை’ என்றால் நீர் என அர்த்தம். நீருக்குத் தீட்டில்லை. நீர் மந்திரநாத ஒலியின் அதிர்வை...

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் – 4 கால்கள் கத்திரிக்காய் - 4 புளி - ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப் ...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.