திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?

திருமண வாழ்க்கை என்பது ஒரு மனிதனுக்கு முக்கியமான ஒன்றாகும். அதில் அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை போன்றவை இல்வாழ்க்கையில் பரஸ்பரம் கணவன், மனைவி இடையே இணைந்திருக்கும். இந்த திருமண பந்தத்தில் ஒன்றாக இணையும் மணமக்களின் திருமண விழாவுக்கு வருகை தந்து அசீர்வதிக்குமாறு உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சுற்றத்தாருக்கும் வேண்டுகோள் விடுக்கும் ஒரு அழைப்பு மடல் தான் திருமண அழைப்பிதழ் ஆகும்.

சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைத்து சமூகத்தினரும் கடைபிடிக்கக் வேண்டிய ஒரு திருமண சடங்காக திருமண அழைப்பிதழ் மற்றவர்களுக்கு வழங்குவது தொன்று தொட்டு நமது நடைமுறையில் இருந்து வருகிறது. ஒவ்வொருவரும், தங்களுடைய வசதி, வாய்ப்புக்கு ஏற்றவாறு திருமண அழைப்பிதழை வடிவமைத்து அச்சடித்து எல்லோருக்கும் வழங்குவார்கள்.

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?

அவ்வாறு திருமண அழைப்பிதழை அச்சடித்து, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் நமது சுற்றத்தில் உள்ளோருக்கும் வழங்கும்போது திருமண அழைப்பிதழ் மட்டும் இல்லாமல் அதனுடன் வெற்றிலை,பூ, பாக்கு, பழம், மற்றும் குங்குமம் ஆகியவற்றையும் வழங்கும் பழக்கம் இருக்கிறது. மேலும் சிலர் திருமண அழைப்பிதழுடன் நாணயம், புது துணிகள் போன்றவற்றை இணைத்து வழங்கும் பழக்கம் உள்ளது.

அவ்வாறு திருமண அழைப்பிதழ் கொடுக்கும்போது திருமண அழைப்பிதழ்களை வெறும் கையால் கொடுக்காமல் தாம்பூலத் தட்டுகளில் வைத்து கொடுப்பார்கள். இவ்வாறு தாம்பூலத் தட்டுகளில் வைத்துக் கொடுப்பதற்கான காரணம் என்னவென பின்வருமாறு பார்ப்போம்.

உதாரணத்திற்கு, ஒரு சிலர் திருமண அழைப்பிதழ் மட்டுமல்லாமல், ஏதேனும் ஒரு பொருளை கடனாக கொடுத்தால் கூட தட்டில் வைத்து தான் கொடுப்பார்கள். அதேபோல் ஒருவர் மற்றொவருக்கு அரிசி, நெல் முதலியவற்றை கொடுக்கும்போது முறத்தில் வைத்து கொடுப்பார்கள். இவ்வாறு கொடுப்பவரும், வாங்குபவரும் பொருளாதார நிலையில் உயர்திருந்தாலும், தாழ்ந்திருந்தாலும் வேற்றுமை எங்கள் மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே அவ்வாறு தட்டில் வைத்துக் கொடுத்தனர்.

மேலும் ஒரு பொருளைக் வெறும் கையால் கொடுத்தால், கொடுப்பவரின் கை மேலேயும், வாங்குபவரின் கை கீழேயும் இருக்கும். இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருவரின் மனதிலும் தோன்றக்கூடாது என்பதற்காக தான் எந்த பொருளை கொடுத்தாலும், நம் முன்னோர்கள் தட்டில் வைத்துக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இதன் காரணமாகவே திருமண அழைப்பிதழை கொடுக்கும்போது தாம்பூலத்தட்டில் வைத்துக் கொடுக்கின்றனர். மேலும், திருமண அழைப்பிதழ் தாம்பூல தட்டில் வைத்துக் கொடுக்கும் போது, அதனுடன் வெற்றிலை, பூ, பாக்கு, பழம், குங்குமம் போன்ற மங்கள பொருட்ளை வைத்து கொடுக்கின்றனர்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அம்மான் பச்சரிசி மருத்துவ பயன்கள்

அற்புத குணம் கொண்ட அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி அம்மான் பச்சரிசி என்றால் இது வகையான அரிசி வகை என நினைக்க வேண்டாம். இது சித்த மருத்துவத்தில் பயன்படும் ஒரு வகை மூலிகையாகும். இதன் விதைகள் அரிசி குருணை போன்று சிறிதாக...
துளசி மருத்துவ நன்மைகள்

துளசி மருத்துவ குணங்கள்

துளசி துளசி மூலிகைகளின் ராணி என அழைக்கபடுகிறது. துளசியில் உள்ள மருத்துவ குணங்களால் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசியின் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. துளசி...
வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது

வாய் துர்நாற்றம் நீங்க நிரந்தர தீர்வு

வாய் துர்நாற்றம் வாய்துர்நாற்றம் பாதிப்பு இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாகும். இதனால் தனது நெருங்கிய துணையுடன் கூட பேச முடியாமல் சங்கடத்திற்கு உள்ளாகின்றனர். சிலருக்கு வாய் சுகாதாரமாக இருந்தாலும் உண்ணும் உணவில் உள்ள...
சப்தமி திதி பலன்கள்

சப்தமி திதி பலன்கள், சப்தமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

சப்தமி திதி சப்தம் என்றால் ஏழு என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஏழாவது நாள் சப்தமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சப்தமியையை சுக்கில பட்ச சப்தமி என்றும், பௌர்ணமிக்கு...
fruits kanavil vanthal

பழங்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பழங்கள் கனவில் வந்தால் கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. தூக்கத்தில் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விடை தெரியாத கனவுகள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த...
திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?

திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?

திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்? உலகிலேயே இந்தியாவில் உள்ள மணமான பெண்கள் மட்டும் தான் மெட்டி அணியும் கலாச்சாரத்தை காலங்காலமாக வழக்கமாக வைத்துள்ளனர். மெட்டி அணிவது வெறும் திருமணம் ஆனதற்கான அடையாளம்...
ஜாதக யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #12

ஜாதக யோகங்கள் : யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது கெடு பலனையும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.