மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவவர்களாக இருப்பார்கள். கம்பீரமான தோற்றம் உடையவராக இருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். மெலிந்த தேகம், அறிவு, அழகு, மன உறுதி நிறைந்தவர்கள். எல்லோராலும் விரும்பப்படும் மனிதர்களாக இருக்க விரும்புவார்கள். முன்கோபமும், பிடிவாத குணமும் இவர்களிடம் அதிகம் இருக்கும். தாய் மேல் அதிக பாசம் கொண்டவர்கள்.

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பேச்சிலும், நடத்தையிலும் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக இருக்கக் கூடியவர்கள். எதையும் வேக வேகமாக செய்ய விரும்புவார்கள். ஆனால் இவர்களுக்கு விவேகம் குறைவாக இருக்கும். இவர்கள் நல்ல கூரிய புத்தியுடையவர்களாகவும், அறிவாளிகளாகவும் இருப்பார்கள். இவர்களிடம் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகம் இருக்கும். உணர்சிகளை கட்டுபடுத்த கூடியவர்கள். இவர்கள் மற்றவர்களை அதிகாரம் செய்யக்கூடிய பெரிய இடத்தில் இருப்பார்கள். நிர்வாக பணிகளில் சிறந்து விளங்குவார்கள்.

இவர்களில் பெரும்பாலனோர் சற்று குண்டான உடல்வாகு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சுயகௌரவத்துடன் இருப்பதை விரும்புவார்கள். சுயகௌரவத்தை எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டார்கள். இவர்கள் எப்போதுமே, புதிய கருத்துக்களையும் யோசனைகளையும் மனதில் சிந்தித்து கொண்டே இருப்பார்கள். பேச்சில் அதிகாரம் நிறைந்திருக்கும். சிறு வயதில் கஷ்டப்பட்டாலும் நடு வயதில் சகல வசதி வாய்புகளுடன் வாழ்வார்கள்.

இவர்கள் சுரங்கம், ராணுவம், காவல்துறை, பாதுகாப்பு துறை போன்றவற்றுடன் தொடர்பு உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் கடுமையான உழைப்பாளிகள். தேவை இல்லாத காரியங்களில் மூக்கை நுழைத்து பிரச்சனையில் சிக்கி கொள்வார்கள். இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வாழ்க்கை துணை அமையுமா என்பது சந்தேகமே. இவர்கள் பிறரை நம்பி ஏமாறுவார்கள். சிரித்த முகமும், சற்று குள்ள தோற்றமும் உள்ளவர்களாக இருப்பார்கள்.

புதிய விஷயங்களை கற்று கொள்வதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். தன்னை அழகுடன் காட்டி கொள்வதில் மிகுந்த விருப்பமுடையவராக இருப்பர்கள். இவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள். தான் சொல்வதே சரியென வாதிடுவார்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் இவர்களுக்கு இருக்கும். இவர்களுக்கு கலைகளில் அதிக ஆர்வம் இருக்கும். இவர்கள் தைரியம் மிகுந்தவர்கள் என்பதால் எல்லா விஷயத்தையும் சமாளித்து விடும் ஆற்றலை பெற்றிருப்பார்கள்.

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் துணை தெற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வருவார். திருமணத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம், குழந்தை பாக்கியம், நல்ல வேலைவாய்ப்பு அமையும். இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத்துணை பொருளாதாரத்தை குடும்ப முன்னேற்றுவதற்கு உறுதுணையாக இருப்பார். மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணத் தடை நீங்க மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கரிநாள் பரிகாரம்

கரிநாட்கள் என்றால் என்ன? கரிநாளில் சுபகாரியம் செய்வதை ஏன் தவிர்க்க வேண்டும்

கரிநாட்கள் என்றால் என்ன நமது கலெண்டர்களில் சில குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் கரிநாள் என்று குறிபிடபட்டிருக்கும். அப்படி கரிநாட்கள் என குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சூரிய கதிர் வீச்சின் தாக்கம் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் சற்று...
பௌர்ணமி திதி

பௌர்ணமி திதி பலன்கள், பௌர்ணமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

பௌர்ணமி திதி பௌர்ணமி திதியானது திதிகளின் வரிசையில் 15வது இடத்தை பிடிக்கிறது. திதிகளின் வரிசையில் பௌர்ணமி முக்கிய இடத்தை பிடிக்கிறது. ஆடி பௌர்ணமி, சித்திர பௌர்ணமி, ஐப்பசி பௌர்ணமி போன்றவை முக்கியமான பௌர்ணமி தினங்களாகும். பௌர்ணமி...

செட்டிநாடு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

செட்டிநாடு சிக்கன் பிரியாணி செட்டிநாடு உணவுகள் என்றாலே பாரம்பரிய சுவையும், மணமும் கொண்டதாகும். செட்டிநாடு உணவு வகைகளில் சேர்க்கப்படும் பிரத்தியேக மசாலாக்களால் உணவுகள் மிகுந்த சுவையும், மணமும், ஆரோக்கிய குணமும் கொண்டதாக இருக்கும். அந்த...
இறால் வடை செய்முறை

சுவையான இறால் வடை

இறால் வடை தேவையான பொருட்கள் இறால் - 100 கிராம் கடலைபருப்பு – 250 கிராம் வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது ) பச்சை மிளகாய் -  5 ( பொடியாக...
கனவு பலன்கள் வீடு

கட்டிடங்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

கட்டிடங்கள் கனவில் வந்தால் கனவுகள் காணாதவர் இவ்வுலகில் எவரும் இல்லை. அதற்கேற்றார் போல நாம் நம் தூக்கத்தில் எண்ணற்ற கனவுகளை காண்கிறோம். ஒரு சில சமயங்களில் அதிசயக்க வைக்கும் கனவுகளும் உண்டு. ஆனால் அந்த...
மூன்று முடிச்சு போடுவதின் அர்த்தம்

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ?

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ? திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள், நம்பிக்கைகள் நிறைந்ததாகும். திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. சில சடங்குகள் ஏன், எதற்காக செய்கிறோம்...
பற்கள் பலம் பெற

பற்கள் வெண்மையாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டுமா?

பற்கள் வெண்மையாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டுமா? நம் முகத்தோற்றத்தை அழகாக காட்டுவதில் பற்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அனைவருக்குமே பற்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். அனால் அப்படி இருப்பதில்லை. பற்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.