எந்த திதிக்கு என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்

திதி என்றால் என்ன ?

இறை வழிபாடு என்பது நாம் அனைவரும் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும். இறைவழிபாடு செய்யும்போது மனம் அமைதி அடையும், மன நிம்மதி உண்டாகும், புத்தி தெளிவடையும், எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் ஏற்படும், நல்ல சிந்தனைகள் உருவாகும்.

திதியும் நெய்வேத்தியமும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு னால் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அந்தந்த தெய்வத்திற்க்கு உரிய நாளில், உரிய திதியில் வழிபடுவது அதிகப்படியான நற்பலன்களை நமக்கு அள்ளித் தரும். ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு விதமான நைவேத்தியம் உள்ளது.

பிறந்த நாள், திருமண நாள் போன்றவைகளை அதன் ஆங்கில தேதிகளை வைத்தே பலரும் கொண்டாடுவது வழக்கம். ஆனால், ஜென்ம நட்சத்திரத்தின் முக்கியத்துவம் குறித்து அறிந்தவர்கள் மட்டுமே, தங்கள் பிறந்த நாளை ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்றே கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், சிலர் பிறந்த திதியன்றும் தங்கள் பிறந்த நாளை கொண்டாடுவதுண்டு. அவ்வாறு திதியன்று கொண்டாடுகையில், அந்த திதிக்குரிய நைவேத்தியத்தை தெய்வங்களுக்கு படைத்து வழிபாடு செய்தால் வாழ்வில் சிறப்பான பலனை அடையலாம்.                                 எந்த திதிக்கு என்ன நைவேத்தியம் செய்யவேண்டும் என்று பார்க்கலாம்.

நெய்வேத்தியம் செய்யும் முறை திதியும் நெய்வேத்தியமும்

பிரதமை – நெய் படைத்து வழிபட வேண்டும்.

துவிதியை – சர்க்கரை படைத்து வழிபடலாம்.

திருதியை – நைவேத்தியமாக பால் படைக்கலாம்.

சதுர்த்தி – ஏதாவது ஒரு இனிப்பு செய்து வழிபடலாம்.

பஞ்சமி – வாழைப்பழம் வைத்து வழிபட வேண்டும்.

சஷ்டி – தேன் படைத்து வழிபட வேண்டும்.

சப்தமி – வெல்லம் படைத்து வழிபடலாம்.

அஷ்டமி – தேங்காய் நைவேத்தியம் செய்திட வேண்டும்.

நவமி – நெல் பொரி படைக்க வேண்டும்.

தசமி – கருப்பு எள் படைத்து வணங்க வேண்டும்.

ஏகாதசி – நைவேத்தியமாக தயிர் படைக்கலாம்.

துவாதசி – அவல் படைத்து வழிபடலாம்.

திரயோதசி – கொண்டைக்கடலை வைத்து வணங்க வேண்டும்.

சதுர்த்தசி – சத்து மாவு படைத்து வழிபடலாம்.

பௌர்ணமி மற்றும் அமாவாசை – பாயசம் படைத்து வழிபட வேண்டும்.

பிறந்த திதியன்று மேலே கூறப்பட்ட நைவேத்தியங்களை தெய்வங்களுக்கு படைத்து வணங்கிய பின்னர், ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும் அந்தந்த நைவேத்தியங்களை தானமாக வழங்கினாலும் மிக நல்ல பலன் கிடைக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

யோகங்கள் 27

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #5

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு...
முடக்கத்தான் பயன்கள்

மூட்டு வலியை குணப்படுத்தும் முடக்கத்தான் கீரை துவையல்

முடக்கத்தான் கீரை துவையல் முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன.  முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலக்சிக்கல், மூல நோய், பக்கவாதம்  போன்ற நோய்கள்...
கடுக்காய் மருத்துவ நன்மைகள்

கடுக்காய் மருத்துவ நன்மைகள்

கடுக்காய் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கடுக்காய் கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை நிரூபிக்கும் விதத்தில் பல்லாண்டுகளுக்கு முந்தைய சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிய மருத்துவ குறிப்புகள்...
ஆட்டுக்கால் பாயா குருமா

ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி

ஆட்டுக்கால் பாயா ஆட்டுக்கால் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் மிக பிரபலம். அதிலும் ஆட்டுகாலை வைத்து செய்யப்படும் பாயா டிபன் வகைகளுக்கு சிறந்த சைடுடிஷ் ஆகும். ஆட்டுகால் எப்படி செய்வது என்பதை பின்வருமாறு பார்ப்போம். ஆட்டுக்கால்...
பெண் கை மச்ச பலன்கள்

பெண் கை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் கை மச்ச பலன்கள் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடத்தை வைத்து பலவகையான பலன்கள் சொல்லபட்டுள்ளது. மச்சம் தோன்றும் இடத்தை பொருத்து நல்ல பலன் மற்றும் தீய பலன் போன்றவை ஏற்படுகின்றன. அந்த...
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூசம் நட்சத்திரத்தின் இராசி : கடகம் பூசம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி பூசம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சந்திரன் பூசம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை -: சூரியன் பூசம் நட்சத்திரத்தின் பரிகார...
அறுபதாம் கல்யாணம் எப்படி செய்வது

அறுபதாம் கல்யாணம் செய்வதற்கான காரணங்கள்

அறுபதாம் கல்யாணம் செய்வதற்கான காரணங்கள்  கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்த பூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர். உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.