நீங்கள் இந்த மாதத்தில் பிறந்தவரா, உங்கள் பிறந்த மாத பலன்கள் இதோ

பிறந்த மாத பலன்கள்

ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குணங்கள் இருக்கும். அது போல அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும். அந்த வகையில் எந்த ஆங்கில மாதத்தில் பிறந்தால் என்ன மாதிரியான குணங்கள் இருக்கும் என்பதை பின்வருமாறு காணலாம்.

பிறந்த மாத பலன்கள்

ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

இவர்கள் திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடி செய்து முடிக்கும் ஆற்றல் உடையவர்கள். செய்யும் செயல்களில் புதிய செயல்பாடுகள் மற்றும் புதியனவற்றை ஆராய்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். இவர்கள் மனதில் இருப்பதை அவ்வளவு எளிதில் வேறு யாரும் அறிந்து கொள்ள இயலாது.

எந்தவொரு செயலையும் வேகமாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். நிர்வாகம் செய்வதில் வல்லவர்கள். மற்றவர்களிடம் வேலை வாங்கும் திறமை உடையவர்கள். எதையும் தனது விருப்பத்தின் அடிப்படையிலேயே செய்யும் மனப்பக்குவம் உடையவர்கள். எந்த விஷயத்திலும் பிறருடைய தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்படுவதை விரும்புவார்கள்.

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

இவர்கள் உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் அதிக முக்கியம் கொடுப்பாவர்கள். தன்னிடம் அன்பாக நடந்து கொள்பவர்களிடம் எதையும் விட்டுக்கொடுத்து செல்லக்கூடியவர்கள். இவர்களின் மனம் நிலையாக இருக்காது.

எப்போதும், எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். இவர்களுடைய வாழ்க்கையில் அன்பும், காதலும் ஒரு முக்கிய பங்கை வகிக்கும்.

மார்ச் மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

இவர்கள் பொருள் ஈட்டுவதில் வல்லவர்கள். இவர்களிடம் வரவை காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும். எந்த துறையில் இருந்தாலும் அதில் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள்.
கல்வியில் சிறந்து விளங்கக்கூடியவர்கள். அனைவரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர்கள். மற்றவர்களின் ஆசை பேச்சுக்கு மயங்கி அதனால் ஏமாற்றங்களை சந்திப்பார்கள்.

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

இவர்கள் எதையும் புதிய கோணத்தில் அணுகுவார்கள். புத்திசாலித்தனமான செயல்பாடுகளை கொண்டவர்கள். தனக்கு பிடித்தவற்றை மட்டும் செய்யும் இவர்கள் பிடிக்காததை யார் வற்புறுத்தினாலும் செய்ய மாட்டார்கள். மற்றவர்களை அடக்கி ஆளும் குணம் கொண்டவர்கள்.

மற்றவர்கள் இவர்கள் மேல் கொண்ட நம்பிக்கைக்கு உண்மையாக இருப்பார்கள். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அதை தனக்கு ஏற்ற மாதிரி மாற்றி கொள்ளக் கூடியவர்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதிலும், வழிகாட்டுவதிலும் முதன்மையாக இருப்பார்கள்.

மே மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதையே விரும்புவார்கள். இவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் பெரும் புகழும், செல்வாக்கும் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் கலகலப்பான பேர்விழிகள். இதனால் நண்பர்கள் வட்டாரம் இவர்களுக்கு அதிகம் இருக்கும்.

தனக்கென தனியான கோட்பாடுகளுடன் இருக்கக்கூடியவர்கள். சமுகம் மற்றும் பொதுநலன் சார்ந்த பணிகளில் அதிக ஆர்வம் உடையவர்கள். கணிதம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.

ஜூன் மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

இவர்களுக்கு பொறாமை குணம் சிறிது உண்டு. இவர்களிடம் தன்னம்பிக்கை என்பது குறைவு. தன்னம்பிக்கை குறைவாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தமாட்டார்கள். சிறிது சந்தேக புத்தி கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். எதிர்பாலினம் மீது அதிக ஈடுபாடு உடையவர்கள். ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைபடுவார்கள்.

மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். இவர்களிடம் எதையும் மறைக்கும் குணம் கிடையாது. எதிலும் ஒளிவு மறைவின்றி நேர்மையாக நடந்து கொள்ளக்கூடியவர்கள். கற்பனை சக்தி அதிகம் கொண்டவர்கள்.

ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

இவர்களின் நடவடிக்கையும், செயல்பாடுகளையும் புரிந்துக்கொள்வது மிகவும் கடினமானதாகும். எதிலும் நேர்மை இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் மதிப்பு அளிப்பார்கள்.

அறிவும், அழகும் இவர்களிடம் இணைந்து இருக்கும். இவர்களிடம் ரகசியம் பொதிந்து கிடக்கும். சொல்லாலும், செயலாலும் யாரையும் காயப்படுத்த மாட்டார்கள். எந்த துறையாக இருந்தாலும் அதில் அறிவும், ஆர்வமும் கொண்டவர்கள். இவர்களிடம் நிதானம் என்பது குறைவு. எதிலும் அவசரமாக செயல்படக்கூடியவர்கள்.

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

இவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தலைமை பண்பு இவர்களிடம் காணப்படும். யாருக்கும், எதற்கும் பயப்பட மாட்டார்கள். எதற்கும் துணிந்து நிற்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் உடையவர்கள்.

தங்களின் நகைச்சுவையான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் கவரக்கூடியவர்கள். போட்டிகளில் வெற்றி அடையக்கூடியவர்கள். தன்னை சார்ந்து இருக்கும் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தார்கள் மீது அன்பும், அக்கறையும், கொண்டவர்கள். எந்த செயலை எடுத்தாலும் அவசரபடாமல், நிதானமாக செய்ய கூடியவர்கள். இவர்களுக்கு நண்பர்கள் வட்டம் குறைவாகவே இருக்கும்.

செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

இவர்களுக்கு ஆன்மிகம் தொடர்பான செயல்களில் அதிக ஈடுபாடு இருக்கும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். புத்திக்கூர்மை பேச்சு, நடத்தை மற்றும் சாதுர்யமான செயல்பாடுகளை கொண்டவர்கள். சூழ்நிலைக்கு ஏற்றாற்போல மற்றவர்களை அனுசரித்து செல்லும் குணமும், விட்டுக்கொடுக்கும் மனபான்மையும் கொண்டவர்கள்.

வாழ்க்கையை இப்படிதான் வாழ வேண்டும் என்ற கோட்பாடு உடையவர்கள். இவர்களுக்கு தீங்கு இழைத்தவர்களை அவ்வளவு எளிதில் மன்னிக்க மாட்டார்கள். சில நேரங்களில் தான் விரும்பியதை தான் மற்றவர்கள் செய்ய வேண்டும் என்ற குணம் உடையவர்கள். சாகச பிரியர்களான இவர்கள் வீர தீர செயல்களை செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள்.

பிறந்த மாத குணங்கள்

அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

இப்படிதான் இருக்கவேண்டும், இப்படித்தான் வாழவேண்டும் என்ற லட்சியம் மற்றும் குறிக்கோளுடன் வாழக்கூடியவர்கள். தாங்கள் ஈடுபட்டிருக்கும் துறையில் செல்வாக்கு கொண்டவர்கள். எதிலும் விடாப்பிடியாக இருந்து தனது விருப்பம் நிறைவேறும் வரை போராடக்கூடியவர்கள்.

வாக்குவாதத்தில் அடிக்கடி எதிர்ப்புகளை உருவாக்கிக் கொள்ளக்கூடியவர்கள். வஞ்சனையான எண்ணங்களையும், சிந்தனைகளையும் கொண்டவர்கள். எதிலும் வேகமாக செயல்படக்கூடியவர்கள். எதையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்கள்.

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

எதிலும், எப்போதும் உணர்ச்சிகரமாக செயல்படக்கூடியவர்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்கள். எந்தவொரு செயலை செய்வதற்கு முன்னும் ஒருமுறைக்கு இருமுறை நன்கு சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

எதிலும் நேர்மறையாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். கற்பனை சக்தி அதிகம் கொண்டவார்கள். மற்றவர்களை விட அனைத்து விஷயங்களிலும் தான் அனைவருக்கும் முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். எதிலும், எந்த சூழ்நிலையிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள்.

டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். வேலை சார்ந்த பொறுப்புகளின் மீது கவனமில்லாமல் செயல்படக்கூடியவர்கள். மார்க்கெட்டிங் சார்ந்த துறைகளின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

பெருந்தன்மையான குணநலன்களையும், யதார்த்தமான செயல்பாடுகளையும் உடையவர்கள். பொறுமை என்பது இவர்களிடம் சற்று குறைவு. வெளிப்படையாக பேசும் குணம் உடையவர்கள். சூழ்நிலைக்கேற்ப தனது செயல்பாடுகளை மாற்றியமைத்து வெற்றி பெற கூடியவர்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பஞ்சமி திதி பலன்கள்

பஞ்சமி திதி பலன்கள், பஞ்சமி திதியில் செய்ய வேண்டியவை

பஞ்சமி திதி பஞ்ச என்பது ஒரு வடமொழி சொல்லாகும். பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமியை சுக்கில...
9ம் எண் குணநலன்கள்

9ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

9ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 9ம் எண்ணின் அதிபதி செவ்வாய் பகவனாவார். 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள் 9ம் எண்ணின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். எண் கணிதத்தில் அதிக வல்லமையும்,...
ராம நவமி விரதம் இருப்பது எப்படி

ஸ்ரீராமநவமி சிறப்புகளும் வழிபடுவதால் உண்டாகும் நன்மைகளும்

ஸ்ரீராமநவமி சிறப்புகள் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதரித்த தினம் ஆகும். இந்த ஆண்டு ஸ்ரீராமநவமி...
கந்தசஷ்டி விரதம்

கந்தசஷ்டி விரதமிருப்பதன் நோக்கம்

கந்தசஷ்டி விரதமிருப்பதன் நோக்கம் முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களில் சஷ்டி விரதம் மிக முக்கியத்துவம் வயந்ததாக கருதப்படுகிற நிலையில், சஷ்டி விரதம் இருப்பது எதற்காக என்றும், அதன் பலன் குறித்தும் தெரிந்து கொள்வோம். சஷ்டி விரதத்தின் நோக்கம் ஐப்பசி...
இறால் மிளகு வறுவல்

ஸ்பைசி இறால் மிளகு தொக்கு செய்வது எப்படி

இறால் மிளகு தொக்கு தேவையான பொருட்கள் இறால் - 1 கப் வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது ) தக்காளி - 2  ( பொடியாக நறுக்கியது ) இஞ்சி பூண்டு...
மூன்று முடிச்சு போடுவதின் அர்த்தம்

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ?

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ? திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள், நம்பிக்கைகள் நிறைந்ததாகும். திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. சில சடங்குகள் ஏன், எதற்காக செய்கிறோம்...
மூச்சுத்திணறல் வர காரணம்

மூச்சிரைப்பு ஏன் ஏற்படுகிறது? அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்

மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல் நம் இதயத்துக்கு தேவையான அளவு ஆக்சிஜனை நுரையிரலால் அனுப்ப முடியாதபோது மூச்சிரைப்பு மூச்சு திணறல் போன்றவைகள் ஏற்படுகிறது. இது ஒரு வகையான ஒவ்வாமை நோய். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள சில தூசுகளால்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.