கரிநாட்கள் என்றால் என்ன? கரிநாளில் சுபகாரியம் செய்வதை ஏன் தவிர்க்க வேண்டும்

கரிநாட்கள் என்றால் என்ன

நமது கலெண்டர்களில் சில குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் கரிநாள் என்று குறிபிடபட்டிருக்கும். அப்படி கரிநாட்கள் என குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சூரிய கதிர் வீச்சின் தாக்கம் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் சற்று அதிகமாக இருக்கும். இது பொதுவான விசேஷ நாட்கள் போல் இல்லாமல்  தமிழ் மாதங்களில் எப்போதும் ஒரே நாளில் தான் வரும். கலெண்டரில் கரிநாள் என்று குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சூரியனின் கதிர்வீச்சு சற்று அதிகமாக இருக்கும் என்பதால், அன்றைய தினம் நாம் வெளியில் சென்றால் நம் உடல் உள்உறுப்புகள் பாதிக்கப்படும் மற்றும் நமது மன நிலையிலும் கூட பலவித எதிர்மறை எண்ணங்கள் வரலாம். இதனால்தான் இந்த கரி நாள் எனப்படும் நாட்களில் தமிழர்கள் சுப காரியங்கள் செய்வதை அறவே தவிர்த்தனர்.

கரிநாள் பரிகாரம்

அறிவியல் சார்ந்தது

கரிநாளில் சுப காரியங்கள் செய்தால் அது சரிவராது என்பது அர்த்தமல்ல. இது ஒரு விஞ்ஞானம், 2021 பொங்கல் கரிநாளில் தான் வருகிறது, அதே போல 2021 விஜயதசமி தினம் இந்த கரிநாளில் தான் வருகிறது. அதற்காக அன்றைய தினம் புதிய செயல்கள் எதையும் செய்யக்கூடாது என்று அர்த்தமல்ல. அன்றைய தினத்தில் சூரியனின் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் ஆதலால் அதிகம் வெயிலில் அலையக் கூடாது என்பதால் சுபகாரியங்கள் செய்வதை தமிழர்கள் தவிர்த்தனர். இது முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தது. தமிழ்நாட்டில் சூரியனின் தாக்கம் அதிகம் உள்ள நாட்களைக் கணித்து கரிநாட்கள் என்று குறித்தனர். மற்ற இந்திய கலெண்டர்களில் கரி நாட்கள் என்பதே கிடையாது.

கரிநாட்கள் விவரம் தமிழ் மாதங்களின்படி

கரிநாள் என்பது என்னஎல்லா ஆண்டும் தமிழ் மாதங்களில் கரிநாட்கள் ஒரே நாளில்தான் வரும், அதன்படி,

சித்திரை 6, 15

வைகாசி 7, 16, 17

ஆனி 1, 6

ஆடி 2,10, 20

ஆவணி 2, 9, 28

புரட்டாசி 16, 29

ஐப்பசி 6, 20

கார்த்திகை 1, 10, 17

மார்கழி 6, 9, 11,

தை 1,2, 3, 11, 17

மாசி 15, 16, 17

பங்குனி 6, 15, 19

தமிழர் பஞ்சாங்கத்தில் தமிழ் மாதங்களில் மேற்படி நாட்கள் கரி நாட்களாகும் கரி நாட்கள் கணக்கீடு எனபது இந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் மட்டுமே இருக்கிறது. மற்ற இந்திய மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள பஞ்சாங்கங்களில்  கரிநாட்கள் என்ற ஒன்றே கிடையாது அதனால் பெரும்பாலும் இம்மாநிலத்தில் உள்ளவர்கள் எல்லா நாட்களிலும் சுப காரியங்கள் செய்வர்.

ஆனால், பூஜைகள் ஹோமங்கள் பரிகாரங்கள் ஆகியவற்றை கரிநாட்களில் செய்யலாம். மேலும் விருத்தியடையகூடாது என்று நாம் நினைக்கும் காரியங்களை அன்று நடத்தலாம். உதாரணமாக கடனை அடைக்கும் பணியை மேற்கொள்ளலாம். ஏனென்றால் கரிநாள் அன்று கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்கும் நிலை ஏற்படாது.

தமிழர் நிலம் மற்றும் அதன் தன்மை மற்ற மாநிலங்களில் நிலம் மற்றும் அதன் தன்மை வேறு. அதனால் தமிழகத்தில் சூரியனின் கதிர்வீச்சு அதிகம் உள்ள நாட்களில் அங்கெல்லாம் சூரிய கதிர்வீச்சு அதே அளவுகளில் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. நம் முன்னோர் செய்தது எல்லாம் மூடநம்பிக்கை அல்ல என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

செட்டிநாடு சில்லி இறால் எப்படி செய்வது

சுவையான செட்டிநாடு சில்லி இறால் – Chettinadu Chilli Iraal

செட்டிநாடு சில்லி இறால் (Chettinadu Chilli Iraal) இறாலை வைத்து செய்யப்படும் நாவு வகைகள் சுவை மிகுந்தவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறாலை விரும்பி சாப்பிட காரணம் அது சத்தானது, சுவை மிகுந்தது,...
இறால் மிளகு வறுவல்

ஸ்பைசி இறால் மிளகு தொக்கு செய்வது எப்படி

இறால் மிளகு தொக்கு தேவையான பொருட்கள் இறால் - 1 கப் வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது ) தக்காளி - 2  ( பொடியாக நறுக்கியது ) இஞ்சி பூண்டு...
களத்திர தோஷம் பரிகாரம்

களத்திர தோஷம் என்றால் என்ன? களத்திர தோஷத்திற்கான நிவர்த்தி / பரிகாரம்

களத்திர தோஷம் என்றால் என்ன? ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தாலோ அல்லது ஒன்றுடன்...
புத்திர தோஷம்

புத்திர தோஷம் என்றால் என்ன? புத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் என்றால் என்ன நமக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நாம் முற்பிறவியில் செய்த கர்மவினைகளை பொறுத்தே அமைகிறது. முற்பிறவியில் பெற்றோர்களை மதிக்காமல் கொடுமைபடுத்தியிருந்தால், அவர்கள் கொடுத்த சாபத்தால் இந்த ஜென்மத்தில் புத்திர தோஷம்...
லக்ன பலன்கள் என்றால் என்ன

லக்னம் என்றால் என்ன? லக்னம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

லக்னம் என்றால் என்ன? ஒருவரிடம் அவரின் ராசி எதுவென்று கேட்டால் எளிதாக சொல்லி விடுவார்கள். ஆனால் அவரின் லக்னம் என்னவென்று கேட்டால் திணறுவார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் 'ல' என்றும் 'ராசி' என்றும் ஜோதிடர்கள் குறிப்பிட்டு...
கொய்யா பழம் மருத்துவ குணங்கள்

கொய்யா பழம் பலன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

கொய்யா கொய்யாப் பழம் வெப்ப மண்டலங்களிலும் துணை வெப்ப மண்டலங்களிலும் பயிரிடப்படும் பழமாகும். கொய்யா மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டது. இந்தியா, இலங்கை,சீனா ,தாய்லாந்து,மியான்மர் நாடுகளில் கொய்யா...
காய்கறிகள் கனவில் வந்தால் என்னபலன்

காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன்

காய்கறிகள் கனவில் வந்தால் பலருக்கும் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விசித்திர கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது, இதற்கு அர்த்தம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.