கரிநாட்கள் என்றால் என்ன? கரிநாளில் சுபகாரியம் செய்வதை ஏன் தவிர்க்க வேண்டும்

கரிநாட்கள் என்றால் என்ன

நமது கலெண்டர்களில் சில குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் கரிநாள் என்று குறிபிடபட்டிருக்கும். அப்படி கரிநாட்கள் என குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சூரிய கதிர் வீச்சின் தாக்கம் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் சற்று அதிகமாக இருக்கும். இது பொதுவான விசேஷ நாட்கள் போல் இல்லாமல்  தமிழ் மாதங்களில் எப்போதும் ஒரே நாளில் தான் வரும். கலெண்டரில் கரிநாள் என்று குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சூரியனின் கதிர்வீச்சு சற்று அதிகமாக இருக்கும் என்பதால், அன்றைய தினம் நாம் வெளியில் சென்றால் நம் உடல் உள்உறுப்புகள் பாதிக்கப்படும் மற்றும் நமது மன நிலையிலும் கூட பலவித எதிர்மறை எண்ணங்கள் வரலாம். இதனால்தான் இந்த கரி நாள் எனப்படும் நாட்களில் தமிழர்கள் சுப காரியங்கள் செய்வதை அறவே தவிர்த்தனர்.

கரிநாள் பரிகாரம்

அறிவியல் சார்ந்தது

கரிநாளில் சுப காரியங்கள் செய்தால் அது சரிவராது என்பது அர்த்தமல்ல. இது ஒரு விஞ்ஞானம், 2021 பொங்கல் கரிநாளில் தான் வருகிறது, அதே போல 2021 விஜயதசமி தினம் இந்த கரிநாளில் தான் வருகிறது. அதற்காக அன்றைய தினம் புதிய செயல்கள் எதையும் செய்யக்கூடாது என்று அர்த்தமல்ல. அன்றைய தினத்தில் சூரியனின் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் ஆதலால் அதிகம் வெயிலில் அலையக் கூடாது என்பதால் சுபகாரியங்கள் செய்வதை தமிழர்கள் தவிர்த்தனர். இது முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தது. தமிழ்நாட்டில் சூரியனின் தாக்கம் அதிகம் உள்ள நாட்களைக் கணித்து கரிநாட்கள் என்று குறித்தனர். மற்ற இந்திய கலெண்டர்களில் கரி நாட்கள் என்பதே கிடையாது.

கரிநாட்கள் விவரம் தமிழ் மாதங்களின்படி

கரிநாள் என்பது என்னஎல்லா ஆண்டும் தமிழ் மாதங்களில் கரிநாட்கள் ஒரே நாளில்தான் வரும், அதன்படி,

சித்திரை 6, 15

வைகாசி 7, 16, 17

ஆனி 1, 6

ஆடி 2,10, 20

ஆவணி 2, 9, 28

புரட்டாசி 16, 29

ஐப்பசி 6, 20

கார்த்திகை 1, 10, 17

மார்கழி 6, 9, 11,

தை 1,2, 3, 11, 17

மாசி 15, 16, 17

பங்குனி 6, 15, 19

தமிழர் பஞ்சாங்கத்தில் தமிழ் மாதங்களில் மேற்படி நாட்கள் கரி நாட்களாகும் கரி நாட்கள் கணக்கீடு எனபது இந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் மட்டுமே இருக்கிறது. மற்ற இந்திய மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள பஞ்சாங்கங்களில்  கரிநாட்கள் என்ற ஒன்றே கிடையாது அதனால் பெரும்பாலும் இம்மாநிலத்தில் உள்ளவர்கள் எல்லா நாட்களிலும் சுப காரியங்கள் செய்வர்.

ஆனால், பூஜைகள் ஹோமங்கள் பரிகாரங்கள் ஆகியவற்றை கரிநாட்களில் செய்யலாம். மேலும் விருத்தியடையகூடாது என்று நாம் நினைக்கும் காரியங்களை அன்று நடத்தலாம். உதாரணமாக கடனை அடைக்கும் பணியை மேற்கொள்ளலாம். ஏனென்றால் கரிநாள் அன்று கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்கும் நிலை ஏற்படாது.

தமிழர் நிலம் மற்றும் அதன் தன்மை மற்ற மாநிலங்களில் நிலம் மற்றும் அதன் தன்மை வேறு. அதனால் தமிழகத்தில் சூரியனின் கதிர்வீச்சு அதிகம் உள்ள நாட்களில் அங்கெல்லாம் சூரிய கதிர்வீச்சு அதே அளவுகளில் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. நம் முன்னோர் செய்தது எல்லாம் மூடநம்பிக்கை அல்ல என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மாரடைபிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள்

மாரடைப்பு இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது இளம்வயதினர் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் வேலை மற்றும் குடும்ப சுழல் மற்றும் மாறி வரும் உணவு பழக்க முறையே ஆகும். ஒருவருக்கு...
மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை

திருமணத்தில் ஏழு அடி பிரார்த்தனை ஏன் செய்யபடுகிறது?

மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை திருமணத்தில் பல விதமான சடங்குகள் செய்யபட்டாலும் அதன் முழுமையான அர்த்தம் பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று தான் மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை. ஏழு அடி பிரார்த்தனை என்றால்...
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மகம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் மகம் நட்சத்திரத்தின் அதிபதி : கேது மகம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சூரியன் மகம் நட்சத்திரத்தின் நட்சத்திர தேவதை : சூரியன் மகம் நட்சத்திரத்தின் பரிகார...
உடல் எடையை குறைக்கும் தேநீர்

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ உடல் எடை அதிகரிப்பு இன்று அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாக உருவாகியுள்ளது. உடல் எடை அதிகரிப்பால் உடல் சோர்வு, மந்த நிலை, இரத்த அழுத்த்தம், சர்க்கரை...
புரட்டாசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள் புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவு மற்றும் திறமையுடன் ஞான மிக்கவராக இருப்பார்கள். இவர்கள் எளிதில் எவற்றையும் கற்கும் திறமை கொண்டவர்கள். சாமர்த்தியமாக பேசுவதில் வல்லவர்கள். இம்மாதத்தில் பிறந்தவர்கள்...
aarkadu makkan beda

ஆற்காடு மக்கன் பேடா செய்வது எப்படி

ஆற்காடு மக்கன் பேடா தேவையான பொருட்கள் மைதா - 1 கப் இனிப்பு இல்லாத கோவா - 150 கிராம் வெண்ணெய்  - 1 ஸ்பூன் சமையல் சோடா - 1 சிட்டிகை எண்ணெய்...
tamil brain games

Most intelligent riddles | puthirgal with Answers | Brain Teasers

மூளைக்கு வேலை கொடுக்கும் கேள்வி பதில்கள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.