ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

தமிழ் மாதங்களில் மூன்றாவதாக வருவது ஆனி மாதமாகும். ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள், மேலும் மிகுந்த பொறுமைசாலிகள். இவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். இவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் அதிகம் இருக்கும். வாழ்வில் முன்னேற வேண்டும் என்னும் வேகம் கொண்டவர்கள். தன் குடும்பம், மனைவி மற்றும் குழந்தைகள் மீது அதிகம் பாசமாக கொண்டவர்கள். மற்றவர்களை இவர்கள் பேச்சிலேயே மயக்கி விடுவார்கள். ஞாபக சக்தி அதிகம் கொண்ட இவர்கள் அடிக்கடி தாம் எடுக்கும் முடிவுகளை மாற்றிக்கொண்டே இருப்பர். சந்தேகப்படும் குணம் கொண்டவர்கள். இவர்களின் மனம் ஒரு நிலையாக இருக்காது.

ஆனியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

எந்த ஒரு விஷயத்தை எடுத்து கொண்டாலும் அதை எளிதில் புரிந்து கொள்ள கூடியவர்கள். இவர்களிடம் கொள்கை என்று எதுவும் கிடையாது. தங்கள் உள்ளத்தில் இருப்பதை மற்றவர்கள் அறியும் வண்ணம் வெளிப்படுத்த மாட்டார்கள். வாழ்க்கையில் சிறு கஷ்டம் ஏற்பட்டால் துவண்டு விடுவார்கள். கஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள். இவர்கள் அறிமுகமே இல்லாதவர்களிடம் கூட நீண்டநாள் பழகியவர் போல் நடந்து கொள்வார்கள்.

இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்களின் கருத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். தம்மைப் பாதிக்காமலிருக்கும் காரியங்களிலும் அதிகப் பொறுப்பு ஏற்படாமலிருக்கும் துறைகளிலும் இவர்கள் தைரியமாக இறங்குவர். இவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் புத்தி கூர்மை உடையவர்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு அதிகமான குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு.

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலனோர் பிறப்பிலேயே பெரிய செல்வம் நிறைந்த தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். தான் பெரிய தொழிலதிபராக இருக்க வேண்டும் என்று விரும்புவார்களே தவிர, சிறு சிறு தொழில்களை செய்வதற்கு தயங்குவார்கள். இவர்களின் மனது நிலையாக இருக்காது. இவர்களிடம் பேச்சுத் திறமை அதிகம் இருக்கும். இவர்கள் ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போதே அதை அப்படியே விட்டுவிட்டு மற்றொரு வேலையை செய்ய நினைத்து அதில் இறங்கி விடுவார்கள். அப்படி இல்லாமல் ஒரு வேலையை முடித்துவிட்டு அடுத்த வேலைக்கு செல்வது இவர்களுக்கு நல்லது.

இவர்கள் தொழில் காரணமாகவோ, கல்விக்காகவோ, வெளியூர் சென்று வேலைப் பார்க்கக்கூடிய சூழல் காரணமாகவோ, வீட்டில் உள்ளவர்களை பிரிய வேண்டி வந்தால், அதனால் ஏற்படும் கஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி இல்லாதவர்கள்.. இவர்களைப் பொறுத்தவரை கிளார்க் தொழில் செய்யவே அதிகமாக விரும்புவார்கள். இவர்களுக்கு மூளைதான் மூலைதனம். இந்த ஆற்றலைப் பயன்படுத்தி இவர்கள் பல தொழில் துறைகளில் ஈடுபட்டு வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

செட்டிநாடு பெப்பர் சிக்கன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி

செட்டிநாடு பெப்பர் சிக்கன் வறுவல் நம் பாரம்பரிய உணவு முறைகளில் செட்டிநாடு உணவு முறைகென்று ஒரு தனி இடம் உண்டு. செட்டிநாடு உணவுகளின் மணமும், சுவையும் இதற்க்கு சான்று. செட்டிநாடு உணவு முறைகளில் அசைவு...
தேங்காயில் குடுமி ஏன் வைக்க வேண்டும்

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா?

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா நாம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பதற்கு தேங்காய், பூ, பழம், கொண்டு முதலானவற்றைக் கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு சாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும்போது தேங்காயை...

காலை உணவை தவிர்க்கும் இல்லத்தரசிகளா நீங்கள் ?

காலை உணவை தவிர்க்கும் இல்லத்தரசிகளா நீங்கள் ? பரபரப்பான இன்றைய வாழ்க்கை சூழலில் நிற்க நேரம் இல்லாமல் நாம் அனைவரும் ஓடிக்கொண்டிருகிறோம். குடும்பத்தின் ஆணி வேராக இருப்பது குடும்பத் தலைவி தான். என்னதான் கணவன்...

ஆட்டு தலைக்கறி குழம்பு செய்வது எப்படி

ஆட்டு தலைக்கறி குழம்பு ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகளவில் உள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் பல்வேறு வித பலன்களை தருகிறது. சிலருக்கு ஆட்டின் தலைக்கறி மிகவும் விருப்ப உணவாக இருக்கும். தலைக்கறியை சாப்பிட்டால் இதயநோய்கள்...
brain games in tamil

Puthirgal with Answers | Vidukathaigal | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
இறந்தவர்கள் பற்றிய கனவு

இறந்தவர்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

இறந்தவர்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ஒருவர் திடீர் என்று தூக்கத்திலிருந்து எழுந்து அலறுவார்கள். அலறுவதர்கான காரணம் கேட்டால் யாரோ இறந்து போனமாதிரி கனவு கண்டேன், இறந்தவர்கள் கனவில் வந்தார்கள்...
துளசி மருத்துவ நன்மைகள்

துளசி மருத்துவ குணங்கள்

துளசி துளசி மூலிகைகளின் ராணி என அழைக்கபடுகிறது. துளசியில் உள்ள மருத்துவ குணங்களால் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசியின் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. துளசி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.